கடந்த பதிவில்....
தன் அபிமான தான் ரசிக்கும் ஒரு பதிவருடன் கதைத்தது காயத்திரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.ஒவ்வொறு நாள் காலையிலும் அவள் வீட்டுக்கு முன்பு இருந்த டீக்கடைக்கு கோகுலன் டீ குடிக்க வருவதால் அவன் மனது எப்படி இருக்கு இன்னும் அவனுக்கு தன் மேல் காதல் இருக்கா என்று அறிய அவன் காலையில் வரும் போதெல்லாம் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று அவனை பார்ப்பாள்.காயத்திரி அவனும் ஹாய் என்று கையை காட்டிவிட்டு போவான் ஆனால் இவளை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.அப்படி ஒரு நாள் கோகுலன் வழமை போல டீ குடிக்க வரும் போது காயத்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
இனி......
கோகுலன் காயத்திரியை பார்த்துக்கொண்டே வரும் போது பின்னால் இருந்துவந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவன் மேல் மோதியது.கோகுலன் தூக்கி எறியப்பட்டான். காயத்திரி கோகுலன்!...... என்று தன்னையறியாமல் கத்தினாள்.
சனம் கூடிவிட்டது விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கப்பா! என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.மாடியில் இருந்து இறங்கிய காயத்திரி அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.
Post Comment