எங்க பார்த்தாலும் சின்மயி பற்றிய பேச்சுத்தான்.பல பதிவர்கள் சின்மயி பிரச்சனை பற்றி எழுதுகின்றார்கள்.இந்தப்பிரச்சனையின் ஆரம்பம் என்ன?உண்மை நிலை என்ன? யார் பக்கம் தவறு என்று எனக்கு சரியாக தெரியாது எனவே இது பற்றி நான் விவாதிக்கவில்லை
இப்ப எல்லாம் பொண்ணுங்க பைக் ஓட்டிக்கொண்டு போகும் போது தாங்கள் மட்டும் தான் ரோட்டில் போகின்றோம் வேறுயாரும் போகவில்லை. மை பைக் மை பெற்றோல்,மை ரோட் என்ற நினைப்பில் தான் போறாங்க.
கொஞ்சம் கூட அவதானம் இல்லை பக்கத்தில் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம் மிகவும் கொடியது அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.மத்தியானம் சமைக்கும் சோற்றினை இரவும் சாப்பிட்டு மறுநாள் காலையிலும் சாப்பிட்டு மிகுதி இருந்தால் சுடவைத்து மறுபடியும் மத்தியானம் சாப்பிடுவது.
பதிவுலகில் பலதரப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை பிறமொழிப்படங்கள் பற்றி நான் எழுதியது இல்லை எனவே இனி நான் ரசித்த பிறமொழிப்படங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
நாங்கள் இருந்த காணியில் ஷெல் விழுந்து வெடித்ததும் எல்லோறும் பரபரப்பானோம்.ஒருவரை ஒருவர் தேடினோம் கடவுள் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை.இனி இங்கே இருக்க முடியாது வேறு இடம் போவோம் என்று முடிவாகியது. அடுத்தநாள் விடிந்ததும் மீண்டும் இடப்பெயர்வு முறுகண்டியில் இருந்து புத்துவட்டுவான் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
1996ம் ஆண்டில் இருந்து இங்கே 1998ம் ஆண்டின் இறுதிவரை எங்களுக்கு அடைக்களம் கொடுத்தது இந்த மண்.
நேற்று நடைபெற்ற 20ஒவர் உலகக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மீண்டும் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் எழுச்சி பெற்றுள்ளதற்கான அடையாளம்.
சர்வதேசகிரிக்கெட்டில் ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி
1975 ஆம் ஆண்டும் நடைபெற்ற முதலாவது 60 ஓவர் உலகக்கிண்ணத்தையும்(அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தது) இரண்டாவது கிண்ணத்தையும் மேற்கிந்த தீவுகள் அணி வென்றது.1983இல் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. அதன் பின் மெல்ல மெல்ல மேற்கிந்திய தீவுகளின் வீழ்ச்சி ஆரம்பமானது.வீழ்ச்சியில் இருந்து அவர்களால் நீண்டகாலமாக மீளமுடியவில்லை. நீண்டகாலம் என்பது 20,25 வருடங்கள்
இலங்கையின் வடபகுதியில் கிளிநொச்சி நகரத்தில் 1996 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும்.
”பரந்தனுக்கு ஆமி வந்திட்டானாம். இன்னும் என்ன செய்யுறீங்க”பக்கத்து வீட்டு மாமா சொல்லிவிட்டு விரைவாக தனது வீட்டை நோக்கி சென்றார்.
சந்தைக்கு போன அப்பாவும் பரபரப்பாக வீட்டுக்கு வந்தார் என்ன செய்யுறீங்க கையில கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளிக்கிடுங்க சொல்லிவிட்டு அப்பா முக்கியமான பொருற்களை எடுத்துக்கொண்டு இருந்தார்.
நான் பிறக்கமுன்னே என் மண்ணில் யுத்தம் இருந்தது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் யுத்தபூமியிலே வெடிகுண்டு ஓசைகள் எங்கள் தாலாட்டு, குருதி மணம் எங்கள் மண்ணின் மண்வாசம் ஆனது.
இது எல்லாம் ஏன்? ஆசியாவின் அழகிய இலங்கையில் எங்களை வன்னியில் பிறக்கவைத்த கடவுளுக்கு எங்கள் மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை என்று தெரியவில்லை.
இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவை 32 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ஆனாலும் 112 ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றதால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.அடுத்து பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் அவுஸ்ரேலியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது நேற்றய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் இருந்தது.இதனால் இந்த குறூப்பில் இருந்த தென்னாபிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியது.ஆனால் தனது கடைசிப்போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு ஒரு வாய்பு அதாவது இந்தியாவை தொடரில் இருந்து வெளியேற்ற.