Sunday, August 24, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்- இறுதிப்பகுதி

ரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் முழுவதும் ஏதோ இனம்புரியாத வலி.என்ன ராம் சோகமாக இருக்கீங்க ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீங்க நான் போறன் என்று கவலையா என்று கேட்டார்?

Post Comment

Saturday, August 23, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-7

கிருபாவின் போன் நம்பரைக்கண்டு பிடித்து கொடுத்தற்கு பிறகு ஊருக்கு போன வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் சில நாட்கள் இல்லை.நான் கூட நினைத்தேன் அவருடன் போனில் கதைக்க தொடங்கிவிட்டார் போல அதான் பிசியாகிவிட்டார் என்று.ஏதோ சந்தோசமாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு நான் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.

Post Comment

Friday, August 15, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல் -பகுதி-6

சின்ன வயதில் இருந்து குடும்ப உறவுகளிடம் இருந்து விலகியே இருந்திருக்கின்றேன் நான். குறிப்பிட்டு சொல்லப்போனால் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவுகூட உண்டதில்லை.ஆனால் வைஸ்னவி அக்காவீட்டில் தம்பி,தங்கச்சி என்று எல்லோரும் ஒரு நண்பர்களைப்போல பழகுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.நமக்கு கிடைக்காத ஒரு விடயத்தை பார்க்கும் போது ஆச்சரியம் வருவது இயல்புதானே.

Post Comment

Friday, August 01, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-5

தேடல்கள் எப்போதும் சுகமானவை அதே நேரம் தேடப்படும் காரணங்களை பொருத்து அது ரணமானதாகவும் அமைந்துவிடும்.அதுவும் நமக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தேடுவதில் கொஞ்சம் மனம் தளர்ந்தாலும் சலிப்புத்தன்மை வந்துவிடும்.வைஸ்னவி அக்காவுக்கான இந்த தேடலில் என்ன நடந்தாலும் சரி.சலிப்படையக்கூடாது.யாருமே என்னிடம் காட்டாத அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றார்.எனவே அந்த அன்பும்,பாசமும் எனக்கு வேண்டும்.எனவே அந்த அன்புக்காகவாவது கிருபாவை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியம் என் மனசில்.

Post Comment

Saturday, July 26, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-4

விசாரனைகள் புதிதல்ல பல தடவைகள் சந்தித்து இருப்பதால் மனசில் பயம் ஏதும் இல்லை ஆனால் ஏன் கிருபா என்ற நபரை ஏன் தேடுகின்றாய் என்றால் என்ன சொல்லுவது.பலவாறு சிந்தித்துக்கொண்டே அவர்கள் வரச்சொன்ன இடத்திற்கு சென்றேன்.

Post Comment

Friday, July 18, 2014

பரந்தாமனின் (சு)வாசம்- ஒரு ராதையின் தேடல்-பகுதி-3

தொடர்ந்து கிருபா பற்றி வைஸ்னவி அக்கா சொல்லத்தொடங்கினார்

நான் வணக்கும் என் தெய்வத்திற்கு சேவை புரியும் புனிதமான தொண்டு செய்யும் அவரிடம் என் பெண் மனம் தொலைந்து போய்விட்டது.

என் சுவாசங்களை களவாடிக்கொண்டு போய்விட்டான் என் கண்ணாளன்.
அந்த பத்து நாட்களும் கிருஸ்னை நினைத்து உருகிய மீராவாக என் மனம் உருகியது அவருக்காக.பத்துநாட்கள் கடந்துபோய்விட்டது.திருவிழாமுடிந்து அவர் போய்விட்டார்.மீண்டும் எப்போது அவரை பார்ப்பேன் என்று மனம் தினத்தந்தி அடித்தது.இரவுகளில் என் பெண்மையை களவாடும் கள்வனாகவும் பகலில் என் மனசை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாகவும் கனவுகளில் என்னை சுவீகரித்துக்கொண்டு இருந்தார் அவர்

Post Comment

Saturday, July 12, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-2

வைஸ்னவி அக்கா தன் கதையை சொல்லத்தொடங்கினார்.அவர் முகம் பிரகாசமாகியது அவர் கண்கள் தன் சுயத்தை இழந்து ஒளி வீசின.ஒரு வித நாணம் கலந்த தொணியில் அவர் சொல்லத்தொடங்கினார்.பெண்களின் நாணம் அழகு அதுவும் அழகான பெண்களின் நாணம் அருகில் இருந்து பார்க்கும் நொடி மிகவும் அழகு,தன் மனம் கவர்ந்தவனை பார்க்கும் போது மட்டும் அல்ல அவனை பற்றி பேசும் போதும் பெண்களிடம் நாணம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை வைஸ்னவி அக்காவின் முகம் உணர்த்திக்கொண்டு இருக்க அவரது உதடுகள் அந்தபெயரை உச்சரித்தது

Post Comment

Monday, July 07, 2014

கே.எஸ்.ரவிக்குமாருக்கு சவால் விடும் தல

தலைப்பு என்ன மார்கமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா கடைசியில் சொல்லுகின்றேன்

Post Comment

Friday, July 04, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-1

விதியின் வழியே பயணிக்கும் சராசரி சாமானியர்கள் நாம் விதியின் விளையாட்டுக்களில் பயணித்து இறுதியில் விதிப்பயன்படி நம் வாழ்கைமுடிவதற்கிடையில் தான் எத்தனை எத்தனை கஸ்டங்கள்,சந்தோசங்களை எல்லாம் தாண்டி வருகின்றோம்.அப்படி விதியின் விளையாட்டில் பயணிக்கும் சாதாரன சாமானியன் நான்.

Post Comment

Wednesday, June 04, 2014

சக்கரவர்த்தியின் கோட்டைக்கு சிற்றரசன் ஹாசிம் ஆம்லா

தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக ஆம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை ஆண்ட க்றேம் ஸ்மித் என்ற சர்கரவர்த்தியின் கோட்டைக்கு அவரது ஒய்வுக்கு பிறகு அந்த இடத்திற்கு அம்லா நியமனம் எவ்வளவு சரியானது என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.என்னைகேட்டால் ஆம்லாவைவிட ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டன் ஏ.பி.டி வில்லியர்சையே டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமித்து இருக்கலாம் இல்லை வெரும் 8 டெஸ்ட்போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருந்த 22 வயதான கிறேம் ஸ்மித்தை நியமித்தது போல புதிய ஒருவரை நியமித்து இருக்கலாம்.

Post Comment

Monday, April 07, 2014

ஆட்டோகிராப்(அலையாய் நெஞ்சில் மோதும் நினைவுகள்)-2

என் பல பதிவுகளிலும் பேஸ்புக்கிலும் மற்றும் பல இடங்களிலும் நான் சொல்லிவரும் விடயம் நண்பர்கள் உலகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.என் நட்பு வட்டாரத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.ஆனால் என்னை பற்றிய தனிப்பட்ட ரீதியில் அறிந்தவர்கள் அதாவது நான் என் கஸ்டங்களை சந்தோசங்களை பெரும்பாலும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவிரும்புவது இல்லை ஆனால் ஒரு சிலரிடம் என்னையறியாமல் பகிர்ந்துகொள்வேன் அப்படி நான் என்னைப்பற்றி தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்துகொள்பவர்கள் என் நட்பு வட்டத்தில் சிலரே இருந்திருக்கின்றார்கள் இருக்கிறார்கள்.

Post Comment

Saturday, March 29, 2014

ஆட்டோகிராப்(அலையாய் நெஞ்சில் மோதும் நினைவுகள்)-1

வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களின் பின் பதிவுலகில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி நீண்ட இடைவெளிக்கு பின் அதுவும் ஒரு தொடர்மூலம் சந்திப்பது மகிழ்ச்சி.

ஆட்டோகிராப்
இது சுயசரிதை இல்லை சுயசரிதை எழுதும் அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லை.என் இருபத்து ஜந்து வருட வாழ்கைப்பயணத்தில் நட்பு,காதல்,சோகம்,மகிழ்ச்சி என்று என்னைக் கடந்து சென்ற மறக்கமுடியாத மனிதர்களின் நினைவுப் பகிர்வு.ஆனால் என் வாழ்கைபயணத்தில் மறக்கமுடியாத எல்லோறையும் பற்றி இந்த தொடரில் குறிப்பிடப்போவது இல்லை காரணம் அவர்கள் சார்ந்து அவர்களுக்கு என்னால் ஏதும் கஸ்டங்கள் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக.இதனால் சிலரை பற்றிய நினைவுகளை இந்த தொடரில் முழுமையாக தவிர்த்துவிடுகிறேன்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails