Thursday, June 28, 2012

பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்-பதிவுலக அரசியல்-2


நான் பதிவுலகில் சந்தித்த பல விடயங்களை பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரில் எழுதி வருகின்றேன்.இந்த தொடர் யாருக்கும் உள்குத்து கிடையாது.இதுவரை நான் யாருக்கும் உள்குத்து பதிவுகள் போட்டது கிடையாது. எனவே இந்த தொடரில் யாரையும் குறிப்பிட்டு சொல்லப் படமாட்டாது பொதுவாக பதிவுலக அரசியல் பற்றி இந்த தொடர் இருக்கும்



யார் மனதையும் புண்படுத்துவது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்படுமாயின் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.

ஓவ்வொறு புதன் கிழமைகளிலும் இந்த தொடர் வெளிவரும் கடந்த வாரம் வெளியான பகுதியை படிக்க இங்கே கிளிக்-பிரபல பதிவர்கள் இலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

இந்த வாரம்-பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்

பதிவுலகில் உள்குத்து பதிவு என்பது சகஜமான ஒன்று. ஒரு பதிவரின் கருத்து பிடிக்கவில்லை,அவரின் பதிவு பிடிக்கவில்லை எனில் மறைமுகமாக அவரை குறிப்பிட்டு ஒரு பதிவு போடுதல் உள்குத்து பதிவாகும்.பல நேரங்களில் இந்த உள்குத்து பதிவுகள் பதிவுலகில் பல பெரிய பிரச்சனைகளை தோற்றுவித்த்திருக்கின்றன.சில பதிவர்கள் பதிவெழுத ஏதும் மேட்டர் கிடைக்கவில்லை எனில் உடனே உள்குத்து பதிவு ஒன்று தாயார் செய்து போடுவார்கள். அதுக்கு யாரைப்பற்றி உள்குத்து பதிவு போடப் பட்டுள்ளதோ அந்தப் பதிவரின் அல்லக்கை பதிவர்கள்(அல்லக்கை பதிவர்கள் என்றால் யார் என்று இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்)உடனே போய் உள்குத்து பதிவு போட்ட பதிவரின் தளத்தில் கமண்ட் போட்டுவார்கள். உடனே உள்குத்து பதிவு எழுதியவரும் இவர்களுக்கு பதில் கமண்ட் போட்டு இப்படியே மாறி மாறி கமண்ட் போட்டு மொக்கை பதிவான அந்த உள்குத்து பதிவை பிரபலமாக மாற்றிவிடுவார்கள்.


பிறகு முதலில் உள்குத்து பதிவு வாங்கிய பதிவரின் அல்லக்கை பதிவர்கள் பதிலுக்கு தாங்கள் உள்குத்து பதிவு போடுவார்கள்.இப்படி மாறி மாறி உள்குத்து பதிவு சமாச்சாரம் சில காலம் ஓடும். பிறகு யாராவது ஒரு பதிவர் இந்த சண்டையை தீர்த்துவைக்கின்றேன் என்று சமாதானம் பேசி இருதரப்பையும் சமாதானம் செய்வார்....பிறகு சமாதானம் செய்த அந்த பதிவரே வேறுயாருக்கும் உள்குத்து பதிவு போட்டு அவரும் தன் பங்கிற்கு யாரிடமும் சண்டை போடுவார்...இப்படி பதிவு எழுத சரக்கு கிடைகலையா எழுது உள்குத்து பதிவை என்று பதிவர்கள் இதை ஒரு ஸ்டைலாகவே வைத்திருந்தார்கள் ஒரு காலத்தில்(இப்ப எல்லாம் உள்குத்து பதிவுகளின் எண்ணிக்கை பதிவுலகில் வெகுவாக குறைந்துவிட்டது இது வரவேற்கதக்க விடயம்)

அடுத்து சில பதிவர்கள் இருக்காங்க இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் யாராவது ஒரு பதிவர் தப்பி தவறி ஏதும் சர்சையான விடயத்தை எழுதிவிட்டால் போது அவரின் தளத்தில் போய் ஏதோ தான் தான் பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு வாதாடுவார். தான் சொல்வதுதான் சரி என்று ஏனையவர்களின் கருத்துக்களை ஏற்கமாட்டார்.இவருக்கு துணையாக சில இவரின் வாலு பதிவர்கள் இருப்பார்கள்(வாலு பதிவர்கள் பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்)கடைசியில் அந்த சர்சையான பதிவை எழுதிய பதிவர் அடுத்த அடுத்த பதிவுகளை எழுதிக்கொண்டு போய்கிட்டே இருப்பார் 

ஆனால் இந்த அறிவாளி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் பதிவர்களும் அவரின் வாலுபதிவர்களும் அந்த விடயத்தை விடவே மாட்டார்கள் அதைவைத்தே பல நாட்களுக்கு தங்கள் தளத்தில் மாறி மாறி உள்குத்து பதிவு போட்டோ இல்லை தங்களின் பேஸ்புக் குழுமங்களிலோ விவாதித்துக்கொண்டேயிருப்பார்கள்.
இத்தனைக்கும் இவர்கள் நல்ல பல சிறந்த பதிவுகளை எழுதிய பதிவர்களாக இருப்பார்கள் ஆனால் இவர்கள் எதுக்காவது பிற பதிவர்களுடன் சண்டை பிடித்துகொண்டே அவர்களுக்கு உள்குத்து பதிவு போட்டுக்கொண்டேயிருப்பார்கள்......


அடுத்து சில பதிவர்கள் தாங்கள் உள்குத்து பதிவுகள் எதுவும் போடமாட்டார்கள். ஆனால் பிறபதிவர்களை உசுப்பேத்தி அவர்களை உள்குத்து பதிவு போடச்சொல்லியோ இல்லை தங்கள் வாலுப்பதிவர்கள் போடும் உள்குத்து பதிவுகளுக்கு சப்போட் பண்ணச்சொல்லியோ தங்கள் சக பதிவர்களை கட்டாயப் படுத்துவார்கள். அவர் அப்படி சப்போட் பண்ண்வில்லையாயின். உடனே சப்போட் பண்ணாதவரை ஏதோ துரோகி ரேஞ்சுக்கு வெறுத்து ஒதுக்குவார்கள்..ஏதோ இவர்கள் தான் பதிவுலகத்தை நடத்துவது போலவும் இவர்கள் இல்லை என்றால் பதிவுலகில் ஜெயிக்க முடியாதது போலவும் இவர்கள் கருத்து இருப்பதுதான் செம காமடி.....

இன்னும் சில பதிவர்கள் இருக்கின்றார்கள் அதாவது ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு ரசிகராக இருப்பார்கள் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் ஏனைய நடிகர்களை கலாய்ப்பார்கள். ஆனால் அவர்கள் ரசிகர்களாக இருக்கும் நடிகரை யாரும் கலாய்த்தால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள்.கடைசியில் அது பெரும் சண்டையாக மாறிவிடும்.மாறி மாறி உள்குத்து பதிவுகள் சராமாறியாக வெளிவரும். கடைசியாக அதை ஒரு பதிவர் வந்து சமாதானம் செய்துவைப்பார்...

உள்குத்தில் இன்னும் ஒரு வகை இருக்கின்றது அதாவது உள்குத்துக்கு என்று தனியான ஒரு ப்ளாக்கே தொடங்கி அதில் குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் ரவுண்டு கட்டி அடிப்பது....இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் அந்த பதிவர்களின் அல்லக்கை பதிவர்களாகத்தான் இருப்பார்கள்.இது பெரும்பாலும் அந்த பிரபல பதிவர்களுக்கே தெரியாது தன்னை ரவுண்டு கட்டி அடிப்பது தனது அல்லக்கைகள் என்று


இல்லை பிரபல பதிவரின் பிரபல்யம் பிடிக்காத சில பொறாமை பிடித்த பதிவர்களாகவோ இருப்பார்கள்

ஸ்................ஸப்பா என்ன கண்ணைக் கட்டுதா? ஒரு பதிவராக இந்த பதிவுலகில் எம்புட்டு கஸ்டங்களைதாங்கனும் தெரியுமா? ஸ்....ஸப்பா.....

அடுத்த வாரம்-அல்லக்கை பதிவர்கள்,வாலுபதிவர்கள் இன்னும் பல பதிவர்களின் வகைகள் பற்றி பார்ப்போம்..


************************************************************************************************************

நான் ஆச்சரியமுடன் பார்க்கும் ஒரு மனிதன் என் சிறுவயது முதல் இன்றுவரை இவர் மீதான அபிமானம் மட்டும் குறையவே இல்லை. அது இவர் சறுக்கிய போதும் சரி ஒரு துளிகூட இவர்மேலான மதிப்பு குறையவில்லை.எனக்கு மட்டும் இல்லை அனைத்து தாதா ரசிகர்களுக்கும் தாதா மீதான அபிமான என்றும் ஒரு துளியேனும் குறையாது. 





விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் ”வரலாற்றை மாற்றிய தாதா”கங்குலி பற்றிய தொடர் இது என் கனவுத்தொடராகும் நான் வலைப்பதிவு எழுதவந்ததே இவர் பற்றிய ஒரு தொடர் எழுதத்தான் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் அமைகின்றது.கங்குலி ரசிகர்கள் இல்லாத கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொறுவரையும் இந்த தொடர் நிச்சயம் கவரும் விரைவில் எதிர்பாருங்கள்
























Post Comment

25 comments:

Unknown said...

ஹிஹிஹி ஆமா ஆமா நானும் மணி அண்ணனும் முந்தி ஹன்சிகா பத்தி "உள்"குத்து பதிவு போட்டு ஜாலியா இருந்தம் :P

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா
வாங்க பாஸ் நீண்டநாளைக்கு அப்பறம்

ஆமா...ஆமா............நாங்க எல்லாம் ஜாலியா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தோம் ஹி.ஹி.ஹி.ஹி.............

Unknown said...

இப்ப பதிவு போடவே ஆள் இல்லை! இதுல எங்க உள்குத்து போடுவது......

Unknown said...

அய்யா உள்குத்து பதிவு எழுதுவது எப்படி விவரிக்கவும்...நான் ரொம்ப மக்குங்க...தெரிஞ்சிக்க தான் கேக்குறேன்!

K.s.s.Rajh said...

@வீடு சுரேஸ்குமார்
ஆமா பாஸ் இப்ப எல்லாம் பதிவுலகில் பல பதிவர்கள் பதிவு எழுதுவதை குறைச்சிட்டாங்க

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்

ஹி.ஹி.ஹி.ஹி........................

Yaathoramani.blogspot.com said...

வீடு சுரேஷ் அவர்கள் சொல்வது போல
இப்ப படிக்கக் கூட பதிவுகள் இல்லாத நிலைதான் உள்ளது
அதனால்தான் இப்போது உள்குத்து வெளிக்குத்து
அதிகம் இல்லை என நினைக்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

Unknown said...

நல்ல ஆய்வு! வர வர பதிவு உலகம்
ஆர்வமாக இல்லை என்பதே உண்மை

சா இராமாநுசம்

த ம ஓ 5

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாதான் போயிகிட்டு இருக்கு....

தனிமரம் said...

ஸ்...ஸ்சப்பா இந்த உள்குத்து அல்லக்கைகள் ம்ம்ம் அப்புறம் வாலுகள் செய்யும் செயல்கள் எல்லாம் ஏனோ பதிவுலகில் பேசவேண்டிய விடயங்களை பேசாமல் வேற உலகம் போல நினைப்பைத் தரும் செயலில் இருக்கும் செயலைச் சொல்ல தனியாக பல பதிவுகள் வாந்தி/நீ லூசா  சாரி சாரி  பொது இடத்தில் இப்படி படிக்காத நான் பேசுவதற்கு ஹீ ஹீ பந்தி பந்தியாக பிரிச்சு மேயலாம்!:))) 

தனிமரம் said...

அடுத்து சில பதிவர்கள் தாங்கள் உள்குத்து பதிவுகள் எதுவும் போடமாட்டார்கள். ஆனால் பிறபதிவர்களை உசுப்பேத்தி அவர்களை உள்குத்து பதிவு போடச்சொல்லியோ இல்லை தங்கள் வாலுப்பதிவர்கள் போடும் உள்குத்து பதிவுகளுக்கு சப்போட் பண்ணச்சொல்லியோ தங்கள் சக பதிவர்களை கட்டாயப் படுத்துவார்கள். அவர் அப்படி சப்போட் பண்ண்வில்லையாயின். உடனே சப்போட் பண்ணாதவரை ஏதோ துரோகி ரேஞ்சுக்கு வெறுத்து ஒதுக்குவார்கள்..ஏதோ இவர்கள் தான் பதிவுலகத்தை நடத்துவது போலவும் இவர்கள் இல்லை என்றால் பதிவுலகில் ஜெயிக்க முடியாதது போலவும் இவர்கள் கருத்து இருப்பதுதான் செம காமடி.....
//நிஜம் ராச்  எல்லாம் அதிகாரம் ஜானதிபதி போல நினைப்புத் தான் சிலருக்கு ஹீ அவரே உயிர் அச்சுறுத்தல் இருக்கும் நிலை புரியாத பெரும் வள்ளல்கள் வாழ்க இவர்களின் துரோகிப்பட்டம் ! தொடர்க பல அர்ச்சனைகள்!ஹீ போடாங்கோ கவுண்டர் ஸ்டைலில்!:)))

தனிமரம் said...

உண்மையில் உள்குத்து வரும் போதுதான் விழிப்பும் கூடவே ரோசமும் வருகின்றது .வேட்டி போனாலும் வாக்கு அரசியல் செய்ய இது என்ன அரசியல் கட்சியா பதிவு உலகம் ?விரும்பியதை தம்தம் பார்வையில் சொல்லும் ஒரு சிறந்த ஊடகம் ஆனால் சின்னச்சின்ன விடயங்களை எல்லாம் பெரிதாக்கி தங்களின் பாண்டித்தியத்தை சில பேரறிஞர்கள் உள்குத்தாக்கி வலையிலும்/முகநூலிலும் உதைக்கும் செயலை/சீச்சீ மண் அள்ளித்தூற்றி வாந்தி வாந்தியா ஹீ சாரி சாரி ஸ்பெலிங்க மிஸ்டேக் ஹீ  உண்மையில் நானும்  உள்குத்து வாங்கிப் பார்த்து ரசித்தேன்!ஹீ 

தனிமரம் said...

இதுவும் கடந்து போவோம் என்பதே என் நிலை அது பிரிந்தும் போவோம் பிடிக்கவில்லை என்றால் என்றும் இரு பொருள்படும் ராச்!ஹீ ஒரு பின்னூட்டம் தன் பதிவை திசை மாற்றும் என்றால் ஏன் அதை கண்டுக்காமல் விடமுடியும் தானே 100 பின்னூட்டம் வரும் போது ஒரு பின்னூட்டம் ஒன்றும் செய்யாது என்றுவிட்டுப் போகும் குணம் இருக்க
வேண்டும் அதைவிடுத்து பின்னூட்டம் போட  மற்றவர்களின் பின் நிலை புரிய வேண்டும் !  மிச்சம் இரவு வாரன் சூடாக ஒரு பால்க்கோப்பி தயாராக வை வருவேன்!machi.

CS. Mohan Kumar said...

:))

பால கணேஷ் said...

உள்குத்துன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தெளிவாத் தெரிஞ்சுக்க வெச்சுட்டீங்க ராஜ். நாமல்லாம் ஒரே குத்துதான். ஹி... ஹி... தாதா மேல இருக்கற அபிமானத்துலதான் ப்ரொபைல் படம் கூட அவரையே வெச்சுட்டீங்களோ...

பால கணேஷ் said...

உள்குத்துன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தெளிவாத் தெரிஞ்சுக்க வெச்சுட்டீங்க ராஜ். நாமல்லாம் ஒரே குத்துதான். ஹி... ஹி... தாதா மேல இருக்கற அபிமானத்துலதான் ப்ரொபைல் படம் கூட அவரையே வெச்சுட்டீங்களோ...

திண்டுக்கல் தனபாலன் said...

இதிலே இவ்வளவு பிரச்சனை இருக்கா ? கொஞ்ச நேரத்திற்கு முன் தான் மனிதனின் பிரச்சனைக்கு காரணம் என்ன ? என்னும் பதிவை publish செய்தேன். எங்கேயும் எப்போதும் - பிரச்சனை !

”தளிர் சுரேஷ்” said...

பதிவுலக அரசியலை படம் பிடிக்கும் பதிவு! வாழ்த்துக்கள் ராஜ்!

Manimaran said...

உள்குத்துப்பதிவைப் பற்றி ஒரு உள்ளுள் குத்து பதிவு..

Manimaran said...

நல்லா குத்தியிருக்கீங்க பாஸ்....தாதாவைப்பற்றி தொடர் விரைவிலே எதிர்பார்க்கிறோம்...

அருள் said...

ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_29.html

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Athisaya said...

இப்பிடி எல்லாம் வேற இருக்கா........?

Unknown said...

இது யாருக்கு உள்குத்து கிஸ் ராஜா? :P
பதிவில் உள்ள எல்லாம் நிஜம் :)

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails