Tuesday, April 24, 2012

பதிவுலகில் இருந்து விடைபெறுகின்றேன் நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே பதிவுலகில் இருந்து விடைபெறுகின்றேன்.எனக்கு இதுவரை ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்,என் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்த்த திரட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


”பிறக்கும் போது தாயின் கருப்பையில் ஆரம்பிக்கும் பிரிவு உடலைவிட்டு உயிர் பிரியும் வரை இந்த மனிதவாழ்க்கையில் தொடர்கின்றது”.எனவே பிரிவு என்ற சொல்லை மனிதவாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாது,

என் தளத்தை ஊக்குவித்து என் எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கிய அனைத்து உள்ளங்களிடம் இருந்தும் விடைபெறுவது மனதில் வலியை ஏற்படுத்தினாலும் என்றோ ஒரு நாள் மீண்டும் பதிவுலகிற்கு திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன் ஒருவேளை நான் பதிவுலகிற்கு மீண்டும் திரும்பி வராவிட்டாலும்.பதிவுலகில் இருந்த இனிய நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும் என் அன்பு நண்பர்களே.

வாசகர்கள் என்ற நிலையை தாண்டி நண்பர்களாக என்னுடன் பழகிய அனைத்து பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை சொல்லிக்கொள்கின்றேன்.இந்தப் பதிவிற்கான உங்கள் பின்னூட்டங்களுக்கு பதிவுலளிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் நண்பர்களே.எனக்கு பதிவுலகில் ஆதரவு வழங்கிய நிறைய பேருக்கு தனித்தனியாக நன்றி சொல்லவேண்டும் ஆனால் அதற்கு ஒரு பதிவு போதாது எனவே பொதுவாக அனைவருக்கும் நன்றி என் இனிய நண்பர்களே.



எனக்கு தெரிந்ததை நான் எழுதினேன் அதற்கான அங்கிகாரத்தை நீங்கள் தந்தீர்கள் 
மீண்டும் ஒரு நாள் பதிவுலகில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது
உங்கள் நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்



Post Comment

16 comments:

Anonymous said...

யோவ்...என்ன திடீர்னு...

அப்பப்பம் எழுதுங்க நண்பரே....

வாழ்த்துக்கள் உங்கள் எல்லாக்கனவும் மெய்ப்பட...

Anonymous said...

Good Decision!!

பாலா said...

நண்பரே நீங்கள் பதிவுலகை விட்டு தற்காலிகமாக விடைபெறுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் நிரந்தரமாக விடைபெறவேண்டும் என்று அர்த்தம் அல்ல. என்ன வேலை இருந்தாலும் அவ்வப்போது இங்கே தலை காட்ட மறக்காதீர்கள். நீங்கள் ஈடுபட்டுள்ள செயலில் உங்களுக்கு வெற்றி கிடைக்க இறைவன் துணை இருப்பான்.

என்றும் உங்கள் நண்பன் நான் உங்களை மறக்க மாட்டேன். நீங்களும் மறக்காதீர்கள். நன்றி

பால கணேஷ் said...

என்னய்யா இது...? கொஞ்ச நாள் இந்தியாவுக்கு வரேன்னு ஒதுங்கின..! இப்ப வலையுலகிற்கு விடை கொடுக்கறேன்கற... (மேரேஜ் ஃபிக்ஸாயிடுசசோ?) சரி... எதுவா இருந்தாலும் மனசும் நேரமும் ஒத்துழைக்கும் போது எப்ப வந்தாலும் நாங்கல்லாம் காத்துட்டிருக்கோம். ஓ.கே.!

ராஜி said...

இதெல்லாம் நல்லதுக்கில்லை தம்பி. யாராவது உங்க மனசை காயப்படுத்தி இருந்தால் காயம் ஆறும் வரை பொறுத்திருந்து பதிவெழுத வந்தாகனும். இல்லாட்டி உரிமையோடு சண்டைக்கு வருவேன்.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!புரிகிறது,ஆனாலும் வாரமொரு முறையாவது/மாதமொரு முறையாவது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள்.இனிமேல் அதுவும் இல்லை என்கிறபோது மனவருத்தம் தான்!என்ன செய்ய ?வெளியே சொல்ல முடியாத நிலை உங்களுக்கு.நன்றி ராஜ்!!!!!

தனிமரம் said...

அதிற்ச்சியில் இருக்கின்றேன் நாளை மனம் திறக்கின்றேன்...எது எப்படி என்றாலும் உன் எதிர்காலம் சிறப்பாக இருக்க என் வாழ்த்துக்கள்..
இப்படிக்கு அண்ணன் தனிமரம் நேசன்.

Unknown said...

என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க

ராஜ நடராஜன் said...

என்னாச்சு!எப்பொழுதாவது வரலாமில்ல?

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் வாங்க நண்பரே !

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் வாங்க நண்பரே !

செங்கோவி said...

அன்புத் தம்பி கிஸ்ராஜா பதிவுலகைவிட்டு விலகியதில் வருத்தம்தான்..ஆனாலும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

என்ன ஆச்சு ஏன் இந்த திடீர் முடிவு! உங்கள் முடிவை பரிசீலனை செய்யுங்கள் நண்பரே!

முற்றும் அறிந்த அதிரா said...

விடை பெறுவது மனதுக்கு வருத்தத்தைத் தருகிறது ராஜ்....

முடியாததென எதுவும் இலை, எதற்காக இதை நிறுத்துகிறீங்களோ.. அதை நிறைவுசெய்துவிட்டு மீண்டும் திரும்பி வாருங்கள்... அப்போ நம்மில் எத்தனைபேர் வலைப்பூவை மூடியிருப்போமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திடீரென இப்படி முடிவெடுத்தது வருத்தமே. மற்றபடி தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்........

Athisaya said...

தங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்..!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails