Friday, December 30, 2011

(பகுதி-3)அன்பைத் தேடும் இதயம்

கலியாண வீடு கலகலப்பாக இருந்தது. காயத்திரி மனதில் கோகுலன் மேல் காதல் அரும்பியிருந்தது ஆனால் அதை சொல்லாமா வேண்டாமா என்று பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள்.பார்த்த இரண்டு நாளில் காதல் என்றால் ஏற்றுக்கொள்வானா என்ற சந்தேகம்.அவனிடம் காதலை சொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

Post Comment

Wednesday, December 28, 2011

இந்த வருடம்,சினிமா,பதிவுலகம்,கிரிக்கெட்,என்னை கவர்ந்தவை

2011 வருடம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கின்றன.புதிய வருடம் 2012 வரவேற்க நாம் தயாராகிக்கொண்டு இருக்கின்றோம் இந்த 2011 ம் ஆண்டில்  எனக்கு மிகவும் பிடித்த சினிமா,கிரிக்கெட்,பதிவுலகம்,போன்றவற்றில் என்னை கவர்ந்த மனதை பாதித்த விடயங்களை இந்த பதிவின் மூலம் அலசுவோம்.

Post Comment

Monday, December 26, 2011

(பகுதி-2)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்

அந்த பெயரைக்கேட்டதும் காயத்திரி ஒரு கணம் திகைத்துப் போனாள் கோகுலனா இவன் நம்பவே முடியவில்லை அதுதான் எங்கோ பார்தது போல இருந்தது ஏன் இவன் என்னை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை.ஒரு வேளை மறந்திட்டானா இல்லை அப்படி இருக்காது மறந்து இருக்க மாட்டான்.என்று பலவாறு எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

முன்பு யார் அவன் என்று தெரியாமல் அவஸ்தை இருந்தது இப்ப அவன் யார் என்று ஓரளவு அறிந்த பின்னும் அவஸ்தை இருந்தது. அவனா இல்லை வேறு யாருமா ஏன் கோகுலன் என்று ஒருவனுக்குத்தான் பெயர் இருகனுமா என்று நினைத்தாள்.அப்பறம் இல்லை இவனை பார்த்த ஞாபகம் இருக்கு பெயரும் கோகுலன் என்று சொல்கின்றான் அப்ப அவன்தான் இவன்.
நாளைக்கு எப்படியும் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும் இவன் அந்தக் கோகுலனா என்று கேட்க வேண்டும். என்று நினைத்துக்கொண்டாள்.

இனி..........

அன்று இரவு காயத்திரியின் தூக்கம் பறி போனது.நேற்றைவிட இன்று அவன் முகம் அதிகமாக தொல்லை படுத்தியது இவன் தான் அந்த கோகுலன் என்று முடிவுக்கு வந்தாள். எப்படியும் இன்று அவனிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் வழமையாக படிக்கும் அவளின் அபிமான பதிவர் ”வன்னி”யின் பதிவுகளை கூட படிக்கவில்லை அவள் மனம் அலைபாய்ந்தது.காலையில் சீக்கிரம் எழுந்து தன் வீட்டு வாசலில் காத்து இருந்தாள்.

Post Comment

Friday, December 23, 2011

அன்பைத் தேடும் இதயம்-(பகுதி-1)

காயத்திரியின் மனதில் அவன் உருவம் மீண்டும் மீண்டும் வந்து சஞ்சலப்படுத்திக்கொண்டு இருந்தது.அவளுக்கு அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனால் எங்க என்று ஞாபகம் வரவில்லை ஏன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான் இன்றும் பார்ப்பானா?யார் அவன்? பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். 

Post Comment

Thursday, December 22, 2011

அன்பைத் தேடும் இதயம் புதிய தொடர் அறிமுகம்

வணக்கம் நண்பர்களே உங்கள் நண்பர்கள் தளத்தில் நாளை முதல் அன்பைத் தேடும் இதயம் என்ற ஒரு புதிய தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.இந்த தொடர் பற்றிய ஒரு அறிமுகம்.

Post Comment

Wednesday, December 21, 2011

கங்குலி பாடிய தமிழ் பாடல்கள்

குட்டிச்சுவர்க்கம் வலைப்பதிவின் ஓனர் ஆமினா அக்கா ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார் அதன் தலைப்பு நீயின்றி நானா?(தொடர்பதிவு) அதாவது இதில் ஒரு கதை எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை சேர்கவேண்டும் இதுதான் அந்த தொடர் பதிவின் சாராம்சம்.எனக்கு சிறுகதை எல்லாம் எழுத வராது.எனவே என் ஸ்டைலில் ஒரு பதிவு எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை இணைக்கின்றேன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஆமினா அக்காவுக்கு நன்றி.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


Post Comment

Tuesday, December 20, 2011

புரியாத மொழி பேசிய பெண்ணுடன் ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் தான் வேலையில் நிற்பதாகவும் ஒரு ரயில் டிக்கெட் புக் செய்து தரும் படி கேட்டுக்கொண்டான்.அதன் படி நானும் ரயில் டிக்கெட் முற்பதிவு செய்ய போயிருந்தேன்.அங்கே சகோதர மொழியைச்சேர்ந்த டிக்கெட் வழங்குனர் ஒருவர் டிக்கெட்டுக்களை வழங்கிக்கொண்டு இருந்தார்.

Post Comment

Monday, December 19, 2011

நான் ரசித்த சச்சின் டெண்டுல்கரின் சில புகைப்படங்கள்

எனக்கு சச்சினை பெரிதாக பிடிப்பது இல்லை அதற்காக அவரை விமர்சிப்பவனும் இல்லை.ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவர் மேல் மிகுந்த மரியாதை இருக்கின்றது.இந்தப்பதிவில் நான் ரசித்த சச்சினின் சில புகைப்படங்களை தொகுத்து தந்துள்ளேன்.

Post Comment

Thursday, December 15, 2011

விஜய்-அஜித்-யார் படம் பெஸ்ட் ஒரு பார்வை( தொடர் பதிவு)

அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அதாவது அஜித்,விஜய் நடித்த படங்களில் மிகவும் கவர்ந்த அஜித் படம் ஒன்றை பற்றியும் விஜய் படம் ஒன்றைப்பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். நான் கிட்டதட்ட விஜய்,அஜித் நடித்த எல்லாப்படங்களும் பார்த்திருக்கின்றேன் அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து எழுதுவது கடினம் ஆனாலும் இன்றுவரை இருவரின் படங்களில் மனசில் நிற்கும் இரண்டு படங்களை பற்றி எழுதுகின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)

Post Comment

Tuesday, December 13, 2011

தனிமையில் இனிமை காண முடியுமா?

என் தனிமையின் சோகங்கள்,சந்தோசங்களை கொட்டும் இடம் தான் எனது இந்த நண்பர்கள் வலைப்பதிவு.நான் வலைப்பதிவு எழுத வந்த போது என் நண்பர்கள் யாரும் அதை ஊக்குவிக்கவில்லை ஏன் உனக்கெல்லாம் இந்த வேலை என்று தூற்றினார்கள் இப்ப கூட என் நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் இது எல்லாம் ஒரு வேலையா பிரயோசனமாக எதையாவது செய் என்கின்றார்கள்

Post Comment

Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும் ரஜனிகாந் என்று

இன்று(December-12) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் அவர்களின் 62வது பிறந்த நாளாகும்.அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Post Comment

Friday, December 09, 2011

வீரேந்தர் சேவாக் ஒரு மாஸ்-என்னைக்கவர்ந்த பிரபலங்கள்

இன்றைய என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் இந்தவாரம் ஒரு சினிமாப்பிரபலம் பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன் ஆனால் நேற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய கேப்டனும் அதிரடி நாயகனுமான வீரேந்தர் சேவாக் ஒரு நாள் போட்டிகளில் புதிய வரலாறு படைத்தார் எனவே என்னை மிகவும் கவர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றி அவரின் சாதனை பற்றி பேசுவோம்

Post Comment

Thursday, December 08, 2011

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…அன்பே


என் உயிரில் ஓடிவரும் ஓசை நீ தான்
உன் அன்பை நாடிவரும் ஜீவன் தான்
என் முகத்தில் தாடி வரும் காரணம் நீதான்
ஆனால் நீ மட்டும் உன் டாடியை அனுப்பி
என்னை தேடி வர சொல்லாதே என் லேடி
அப்பறம் நான் ஓடிவிடுவேன் ஓடி

Post Comment

Tuesday, December 06, 2011

வயது அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தப்பா?

வணக்கம் நண்பர்களே ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் எங்களைவிட வயசு அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தவறா?ஏன் பொதுவாக வயசு குறைந்த பொண்ணுங்களைத்தானே ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள் அப்ப பெண்ணைவிட ஆணுக்கு வயது அதிகம் இருக்கும் போது ஏன் பெண்கள் மட்டும் வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்யக்கூடாது?

Post Comment

Monday, December 05, 2011

மாத்தியோசி:நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அதை ஏன் விமர்சிக்கவேண்டும்?

பதிவர் அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் ஆரம்பித்த பதிவர்களுக்கிடையில் நட்புறவை மேலும் மேம்படுத்த மாத்தியோசி என்னும் தலைப்பில் ஒரு பதிவரின் தளத்தின் இன்னும் ஒரு பதிவர் ஒரு பதிவெழுதுதல் என்ற செயற்திட்டத்தில் வரோ அண்ணரின் கோரிக்கைக்கு இனங்க நான்,துஷி,மதுரன்,ஆமினா அக்கா,ஆகியோர் இதை ஏற்றுக்கொண்டு பதிவு எழுதினோம் அந்த வகையில் வரோ அண்ணனின் தளத்தில் ஆமினா அக்கா பதிவு ஒன்று எழுதினார்.மதுரனின் தளத்தில் நான் ஒரு பதிவு எழுதினேன் துஷியின் தளத்தில் வரோ அண்ணன் ஒரு பதிவு எழுதினார் அந்த வகையில் இன்று என் தளத்தில் துஷியின் பதிவு பிரசுரமாகின்றது....

Post Comment

Friday, December 02, 2011

என்னைக் கவர்ந்த பிரபலங்கள் இந்தவாரம் ஒரு தேசத்தின் சூரியன் யார் அவர்?

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் நிகரில்லா தலைவர் என்னை மிகவும் கவர்ந்த ஒரு தலைவர்.கியூபாவின் விடுதலைப்போராளி ரியல் ஹீரோ.

Post Comment

Wednesday, November 30, 2011

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா

கடந்த சில நாட்கள் கொஞ்சம் மனதில் வலியிருந்தது எப்பவும் மனதில் இருக்கும் வலிகளை கண்டு நான் சோர்வது இல்லை காரணம் வலிகள் இருக்கும் போதுதான் தன் நம்பிக்கை பிறக்கின்றது.மனம் வலிகளை எதிர்த்து போராடுகின்ற போதுதான் வாழ்க்கை வலிமை பெறுகின்றது.

அப்படித்தான் சில மனக்கஸ்டங்களால் பதிவுலகில் கடந்தசில நாட்களாக சீராக இயங்கமுடியவில்லை நண்பர்களின் தளங்களுக்கும் வரமுடியவில்லை.
நண்பன் ஒருவன் கேட்டான் வா ராஜ் ஊர்ப்பக்கம் போய்ட்டு வருவோம் என்று சரி என்று எங்கள் ஊர்பக்கம் போனோம்...ஊருக்கு வந்ததும் மனதில் தானாக உட்சாகம் பிறந்தது கவலைகள் மறந்தது.

Post Comment

Monday, November 28, 2011

பிறந்த நாள் எப்படி கொண்டாடுவார்கள்!!

வணக்கம் இது ஒரு மொக்கை பதிவு,முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல
நம்ம ஈழத்துப் பதிவர் ஒருவருக்கு வரும் 1-12-2011 இல் பிறந்த நாள் வருது அதை வைத்து அவர் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவார்கள் எப்படி நம்ம பதிவர்கள் வாழ்த்துவார்கள் என்று ஒரு மொக்கை....ஓக்கே ரெடி ஸ்டாட்....

Post Comment

Friday, November 25, 2011

என்னைக்கவர்ந்த பிரபலங்கள்....இந்த வாரம் ஆளுமையின் சிகரம் யார் அவர்?


இந்தத்தொடர் மூலம் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி அவர்கள் ஏன் என்னைக்கவர்ந்தார்கள் என்பது பற்றியும் பேசலாம் என்று நினைக்கின்றேன் ஓவ்வொறு வெள்ளிக்கிழமையும் இனி என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசுவோம்....இந்தப்பகுதியில் கிரிக்கெட்,சினிமா,அரசியல்,போன்ற பல்வேறு துறைகளில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேச இருக்கின்றேன்.

ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் ஓருவருக்கு பிடிப்பவர்களை இன்னும் ஒருவருக்கு பிடிக்காது..ஒவ்வொறு மனிதனுக்கும் ஒவ்வொறு ரசனை.அந்த வகையில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசும் தொடர் இது...

Post Comment

Thursday, November 24, 2011

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் என்னைப்பார்த்து பாடிய பொண்ணு

நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒரு பெண்காதலித்தாள் ஆனால் அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அவளைப்பற்றிய பதிவுதான் இது. ஏற்கனவே இந்தப்பதிவை என் தளத்தில் எழுதியுள்ளேன்.நான் புதிய பதிவராக இருந்த போது எழுதியது.அப்போது எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாக போடலாம் என்று எண்ணியபோது இந்தப்பதிவு கண்ணில் பட்டது எனவே இதை மீள் பதிவாகத்தருகின்றேன்...

எனக்கு முதல் காதல் என் பாடசாலைக்காலத்தில் வந்தது.அதற்கு பிறகு காதல் என்பதை பற்றி நான் சிந்திப்பது இல்லை சொல்லப்போனால் காதல் என்ற சொல்லே எனக்கு மறந்து விட்டது எனலாம்.இந்த காலப்பகுதியில் என்னை ஒரு பெண்காதலித்தாள் (அவளுக்கு அது முதல் காதலாக இருந்திருக்களாம்). அவளைப்பற்றிய பதிவு இது.அவளது பெயர் தனுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நான் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி அழகான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய வாழ்க்கை.

நகரத்து வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம் குறிப்பாக கிணற்றில் குளிப்பது என்ற ஒன்று நம்மிடையே மறந்து போகின்ற விடயமாக மாறியுள்ளது .என்னதான் குளியல் அறைகளில் குளித்தாலும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா.நீச்சல் தாடாகத்தில் நீந்துகின்ற போது ஊரில்ஆற்றில் நீந்துவதற்கு ஈடாகாது.மாலை வேளைகளில் அயலவர்களுடன் மரநிழலில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருப்பது.இப்படி எத்தனை சின்னச்சின்ன சந்தோசங்களை நாம் நகரவாழ்க்கையில் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்


எனது சித்தப்பாவின் வீட்டிற்கு போன முதல் நாள் தனுஜா எனக்கு அறிமுகமானாள்.எனது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்)நண்பருடைய மனைவியின் தங்கைதான் தனுஜா அவர்கள் குடும்பத்துடன் எனது சித்தப்பாவின் காணியில் இருந்த இன்னும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள்.பெருப்பாலும் தனுஜாவின் குடுப்பம் சித்தப்பாவீட்டில் தான் இருப்பார்கள் சிலவேளை எல்லோறும் ஒன்றாகவே சமைத்து உண்பார்கள்.அவள் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் நான் பார்த்தால் வேறுபக்கம் பார்ப்பது போல பாவனை செய்வாள்.எனக்கு ஒரு சந்தேகம் இவள் ஏன் என்னைப் பார்க்கின்றாள். 

தனுஜா பேரழகி என்று சொல்ல முடியாவிடாலும் ஒருமுறை பார்த்தாள் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகு.ஒரு நாள் என்னிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் .நான் ராஜ் என்றேன் அதற்கு அவள் முழுப்பெயர் என்னவென்றாள் நான் ராஜ்தான் என்று சொன்னேன்(ராஜ் என்றே எல்லோறும் அழைப்பதால் எனது முழுப்பெயர் எனக்கே மறந்து போச்சு ஹி.ஹி.ஹி.ஹி)அடுத்த நாள் ஒரு பேப்பரை என்னிடம் தந்து(சுடர் ஒளி வார இதழ் என நினைக்கின்றேன்)வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.நான் அதை வாங்கிப்பார்த்த போது அதில் I Love you  என்று எழுதப்பட்டிருந்தது.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பேப்பரை தூக்கி போடுவிட்டு நான் பேசாமல் போய்விட்டேன்.அடுத்தநாள் என்னிடம் தயங்கி தயங்கி வந்தாள் ராஜ் நான் நேத்து தந்ததுக்கு என்ன பதில் என்றாள்.உடனே நான் என்ன சொல்லுறது என்னை உங்களுக்கு ஒரு கிழமையாகத்தான் தெரியும். அதற்குள் காதல் என்றாள் என்னால் நம்பமுடியவில்லை என்னால் உங்களை காதலிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டேன்.அவளைப்பார்க்க பாவமாக இருந்தாலும் பொதுவாக எனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவது என் பழக்கம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை பேசாமல் போய்விட்டாள்.அதற்கு பிறகு சித்தப்பாவீட்டிற்கு வருவாள்.நான் அவள் வந்தாள் வெளியில் போய்விடுவேன். 

பிறகு சித்தியை மாமி(அத்தைஎன்றும்) அண்ணியை அக்கா என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.இது பற்றி ஒரு நாள் அண்ணி என்னிடம் கேட்டார் என்ன ராஜ் தனுஜா இப்படி கூப்பிடுறாள் என்றார் .அண்ணி என்னிடம் அப்படி கேட்டதற்கு காரணம் உள்ளது எனது சித்தப்பாவின் பிள்ளைகள் எல்லோறும் திருமணம் செய்தும் தொழில் நிமித்தமாகவும்  வேறு இடத்தில் இருக்கிறார்கள்.ஒரு அண்ணா மட்டுமே சித்தப்பாவுடன் இருக்கிறார் அவரும் திருமணம் முடித்துவிட்டார்.அண்ணி அப்படி கேட்டதும் நான் சொன்னேன் கண்ணன் அண்ணாவை(சித்தப்பாவின் மகன்) இரண்டாவது திருமணம் செய்யப்போறாள் போல உங்கள் பதவி காலி என்றேன்.அதற்கு அண்ணி ராஜ் ஜோக் அடிக்காமல் சொல்லு என்றார்.

பிறகு நான் அண்ணியிடம் சொன்னேன் என்னை லவ் பன்னுவதாக தனுஜா சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி பேசி(திட்டி)அனுப்பிவிட்டேன் .அதுதான் அவள் சித்தியை மாமி என்றும் உங்களை அக்கா என்றும் கூப்பிடுறாள் போல என்றேன்.அண்ணி சிரித்துக்கொண்டே போய்விடார். அதற்கு பிறகு அண்ணா,அண்ணி,சித்தி சித்தப்பா எல்லோறுக்கும் என்னை கலாய்ப்பதுதான் வேலை.

இதற்கு இடையில் வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த தனுஜாவின் அண்ணன் வந்து இருந்தான்.அவன் என்னுடன் நல்ல நண்பனாகிவிட்டான். ஆனால் தனுஜா என்னை விடுவதாக இல்லை கவிதைகள் எழுதுவதும் என்னால் உங்களை மறக்க முடியாது ராஜ் அப்படி இப்படினு என்னிடம் சொல்லுவாள் அவளை பார்க்க பாவமாக இருக்கும். 

சித்தப்பாவீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பன் (நான் சித்தப்பாவீட்டிற்கு போயிருந்த போது நல்ல நண்பனாகி விட்டான்).தனுஜா குடும்பம் சித்தப்பாவின் காணியில் வசிக்க வந்ததில் இருந்து தனுஜாவை ஒருதலையாக காதலித்து வருகின்றானாம். அவனுக்கு தனுஜா என்னைகாதலிப்பது தெரிந்ததும் என்னிடம் கேட்டான். ராஜ் தனுஜாவை நான் லவ் பண்ணுறன் அவள் உங்களை லவ் பன்னுகின்றாள் என்றான் அதற்கு நான் சொன்னேன் டேய் அவள்தாண்டா என்னை லவ் பண்ணுறாள் நான் லவ் பண்ணலை அத்துடன் நான் சித்தப்பாவீட்ட வந்திருக்கேன் பிறகு எனது ஊருக்கு போய்விடுவன்.நீதான் இங்க இருக்கிற எனவே நீ தாராளமாக லவ் பண்ணு என்றேன். 

அனால் தனுஜா அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை.சொல்லப்போனால் தனுஜா என்னை விடுகிறமாதிரி இல்லை. அப்போது நான் நினைத்துக்கொண்டேன் பொண்ணுங்க நாங்களாக தேடிப்போய் காதலித்தாள் பந்தா பன்னுவார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவனை பிடித்து விட்டால் எவ்வளவு இறங்கி வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டேன்
யாரடி நீ மோகினி படத்தில் தனுசை ஓரு தலையாக காதலிக்கும் சரன்யா மோகனிடம் இருந்து தப்பிக்க தனுஸ் ஓடுவாரே அப்படி இருந்தது என் நிலமை




 தனுஜா ஒரு நாள் என்னிடம் கேட்டாள் ஏன் ராஜ் என்னை லவ் பண்ண மாட்டேன் என்கிறீங்க சொல்லுங்க என்றாள்.நான் உடனே பெரிய ஹீரோ கணக்கா அப்படி இல்லை தனுஜா எனக்கு காதல் பிடிக்காது அப்படி இப்படினு அவுத்து விட்டேன்.அதற்கு அவள் என்றைக்காவது நீங்கள் என்னை லவ் பண்ணுவீங்க என்றாள்.நான் சொன்னேன் உங்களை ஒருத்தன் லவ் பண்ணுறான் தானே(பக்கத்து வீட்டு நண்பன்) ஏன் அவனை நீங்க லவ் பண்ணலாம்தானே என்றேன்.அதற்கு அவள் காதல் எப்ப யார்மேல வரும் என்று சொல்லிட்டு வருவதில்லை என்னை தன்னால் மறக்க முடியாது என்று சொன்னாள் (நிறைய சினிமாப்படம் பார்ப்பாள் போல).

தனுஜாவின் காதலை நான் ஏற்றுக்கொள்ளாதற்கு பிரதான காரணம் அப்போது காதல் பற்றி சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை(இப்பவும் அப்படித்தான்) அதைவிட எனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதலின் வலி மனதில் இருந்ததால்(அப்போது இருந்தது இப்ப இல்லை)



மற்றது அவள் தனது காதலை சொன்ன போது அவளது அண்ணனை எனக்கு தெரிந்திருக்காவிட்டாலும் பிறகு நல்ல நண்பன் ஆகிவிட்டான் இந்த உலகில் எனக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னால் முதலில் நான் கூறுவது நண்பர்களின் தங்கச்சியை(சகோதரி) காதலிப்பது இப்படி பட்டவர்களை எனக்கு பிடிக்காது.எனவே தனுஜாவின் காதலை ஏற்றுக்கொள்ளாதற்கு இதுவும் ஒருகாரணம்.



மற்றது தனுஜாவை ஒருதலையாக காதலித்த நண்பனின் காதல் ஏன் என்றாள் ஒரு தலைக்காதலின் வலி எனக்கு நன்றாக தெரியும்.

இப்படி சில காரணங்களால் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை


ஆனாலும் அவளை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.பிறகு நான் சித்தப்பா வீட்டில் இருந்து வரும் போது அவளிடம் போய்ட்டு வாறன் என்று சொன்ன போது அவள் அழுது விட்டாள்.எப்பவும் உங்களை என்னால் மறக்க முடியாது ராஜ் என்றாள்.கடைசிவரை அவளது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு நான் சித்தப்பாவின் வீட்டில் இருந்து வந்து விட்டேன்.நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலைகளால் இப்போது சித்தி ,சித்தப்பா,அண்ணா அண்ணி எல்லோறும் வேற ஊரில் வசிக்கின்றார்கள். இப்ப தனுஜாவின் குடுப்பம் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மீள் பதிவு
படங்களில் இருப்பது-தூத்துக்குடி,மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்த கருவாப் பையா கருவாப் பையா பாட்டு புகழ் நடிகை கார்த்திகா
படங்கள்-கூகுள்

************************************************************************************************************
தவறுக்கு வருந்துகின்றேன்-
மன்னிக்கவேண்டும் நண்பர்களே நான் முன்பு
எழுதிவெளியிட்ட என் 100வது பதிவான. சச்சின், கலீஸ் பிரட்மனுடன் ஒப்பிடலாமா?

என்ற பதிவு.இன்று மீண்டும் பல நண்பர்களின் டாஷ்போட்டில் தோன்றியதால் பலர் அதற்கு கமண்ட் போட்டு கேட்டு இருந்தார்கள்..



இன்று என் தளத்தை எடிட்டிங் செய்யும் போது ரீட் மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்டிங் செய்யும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதனால்தான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் அந்தப்பதிவு மீண்டும் தோன்றியிருக்கு என்று நினைக்கின்றேன் தவறுக்கு வருந்துகின்றேன் நண்பர்களே.....

தவறுதலாக மீண்டும் அந்தப்பதிவு பப்ளிஸ் ஆனதுக்கு மன்னிக்கவும்

************************************************************************************************************




Post Comment

Wednesday, November 23, 2011

சமூக அமைப்பில் வரதட்சனை ஓழியவேண்டும்

ஜந்து பெண்களைப்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஒரு பழமொழியை நம்மாளுகள் அந்தக்காலத்தில் சொல்லியிருப்பார்கள் இது ஏன் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் பெண்குழந்தை என்றால் அவளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கும் வரை தாய் தந்தைக்கு மிகவும் கஸ்டம். பொருளாதார ரீதியில் அதாவது வரதட்சனை என்ற ஒரு விடயம் மிகவு தாக்கம் செலுத்துவதால்.இப்படி ஒரு பழமொழியை சொல்லியிருக்கின்றார்கள் போலும் அந்தக்காலத்தில்.இது ராஜ் இன் ந

Post Comment

Monday, November 21, 2011

சொன்னா புரியாது சொல்லாட்டி தெரியாது நீங்க எல்லாம் என் மேல வைச்ச பாசம்..

அனைவருக்கும் வணக்கம் எனது நண்பர்கள் தளம் சொந்த டொமைனுக்கு மாறியுள்ளது இதுவரை www.cricketnanparkal.blogspot.com என்று இருந்த என் தளத்தின் முகவரி நேற்று முதல்-www.nanparkal.com என சொந்த டொமைனுக்கு மாறியுள்ளேன்.என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றேன்

சொந்த டொமைனுக்கு மாறியதும் பாலோவர் விட்ஜெட்டை காணவில்லை திரும்ப ஒரு மாதிரி அட்பண்ணிவிட்டேன்.தளத்தில் கொஞ்சம் எடிட்டிங் வேலை செய்தால் இரண்டு நாட்களாக சீராக பதிவிட முடியவில்லை..

Post Comment

Saturday, November 19, 2011

மஞ்சனத்து மரத்துகட்ட மைய வைச்சு மயக்கிப்புட்ட(ஒரு காதல் கடிதம்)


நான் சில பதிவுகளில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதல்களை சாடியுள்ளதை படித்திருப்பீர்கள்.என் நண்பன் ஒருவன் கேட்டான் நீ இப்படி காதலை சாடுகின்றாய் உனக்கு காதலைப்பற்றி என்ன தெரியும்.ஓரு காதல் கடிதம் எழுத முடியுமா?என்று சவால் விட்டான்
நமக்கு சவாலை சந்திப்பது ரொம்ம புடிக்கும் என்பதால் சரி காதல் கடிதம் எழுதலாம் என்று களத்தில் இறங்கினேன்.....இரவிரவாக சிந்தித்தும் கடிதம் எழுத வரவேயில்லை எனவே ஆனந்தம் படத்தில் மளிகைக்கடைக்காரரிடம் காதல் கவிதை எழுத சொல்லும் போது அவர் மளிகை கடையில் உள்ள பொருற்களை வைத்து கவிதை எழுதுவார் தானே

Post Comment

Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது(என் பார்வையில் தொடர் பதிவு)

தற்போது வலையுலகில் மழலை உலகம் மகத்தானது என்று தொடர்பதிவுகளை பதிவர்கள் எழுதிவருகின்றார்கள்.
தொடர் பதிவு என்றால் என்ன என்று அறியாத பதிவர் இல்லாத வாசகர்களுக்காக சின்ன விளக்கம்.ஒரு பதிவர் தன் தளத்தில் ஒரு பதிவை எழுதி அதே பதிவை இன்னும் ஓரு பதிவரின் பார்வையில் எழுதச்சொல்லி அழைப்பது தொடர் பதிவாகும்.

Post Comment

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா பாடலும் என் நண்பனும்

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா இந்தப்பாடல் ஓரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடலில் சில்க் ஸ்மிதாவின் நடனம் அந்தக்காலத்தில் பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கும்...தலைமுறைகளை தாண்டிய ஹிட் பாடல்.இந்தப்படம் வெளிவந்த போது நான் பிறக்ககூட இல்லை.

Post Comment

Monday, November 14, 2011

என்றும் நினைவில் நிற்கும் ஓரு நண்பியும் நானும்

என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர்,பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் .தற்போது என் வலைப்பதிவை படித்து பல பொண்ணுங்க என்னுடன் நண்பர்களாகிவிட்டார்கள் அது வேற கதை



Post Comment

Sunday, November 13, 2011

காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்

அன்புள்ள காதலர்களுக்கு வணக்கம்
நான் தான் காதல் கடிதம் இன்று உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நான். ஒரு காலத்தில் காதலர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். எத்தனை காதலர்களின் காதல்கள் என்னால் வாழ்து இருக்கின்றது, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

Post Comment

Friday, November 11, 2011

(பகுதி-10)என் உயிர் நீ தானே....


கடந்த பதிவில்-
சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
இனி.....
சுதன் குணமாகி முகாமுக்கு வந்து சேர்ந்தார்,கொஞ்சக்காலம் முகாம் வாழ்க்கை பிறகு வன்னியில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்திய போது சுதனும்,புஸ்பாவும்,அவர்கள் முன்பு இருந்த காணியில் குடியேரவில்லை.அங்கே புஸ்பாவின் அம்மா,வெள்ளையன்,ரதி,மூக்காயி போன்றோர் மட்டும் அங்கே மீளக்குடியேறினர்,சுதனும்,புஸ்பாவும்,தங்கள் குழந்தைகளுடன்,சுதனின் உறவினர் ஓருவரின் காணியில் வேறு ஓரு ஊரில் அதாவது சுதனின் சொந்த ஊரிற்கு அருகில் இருக்கு ஓரு ஊரில் வசிக்கத்தொடங்கினர் 

Post Comment

Wednesday, November 09, 2011

சச்சின் என்ற ஜாம்பவானின் சாதனைகளில் நேற்று மேலும் ஓரு மணிமகுடம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இனிங்சில் டெஸ்ட்போட்டிகளில் 15000 ஓட்டங்களைக்கடந்த முதல் வீரராக சாதனை படைத்தார்...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் க

Post Comment

Tuesday, November 08, 2011

ஓரு பதிவர் பேசுகின்றார்.


இன்று என்பதிவின் ஊடாக பதிவுலகம் பற்றி பேசுகின்றேன்




அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
இன்று (8-11-2011) நண்பர்கள் தளம் ஆரம்பிக்கப்பட்டு ஓரு வருடங்கள் பூர்த்தியாகின்றது 8-11-2010 அன்று என் தளத்தை ஆரம்பித்து முதலாவது
பதிவு வை எழுதினேன்...நான் பதிவெழுத வந்த இந்த ஓரு வருடத்தில் இதுவரை 108 பதிவுகள் எழுதியிருக்கின்றேன்.3488 கருத்துரைகள் கிடைத்திருக்கின்றன..திரட்டிகளில் என் பல பதிவுகள் பிரபல்யமாகியிருக்கின்றன,விகடனில் குட்ப்ளாகில் என் தளம் தேர்வுவாகியிருந்தது.தமிழ்மணத்தில் டாப்-20 பதிவர்களில் பல வாரங்கள் இடம்பிடித்திருக்கின்றேன்.அதிகபட்சமாக 4வது இடம் கிடைத்து..
தமிழ்விருதின் சிறந்த கிரிக்கெட் பதிவருக்கான விருது கிடைத்தது.

Post Comment

Monday, November 07, 2011

சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல் எனக்குப்பிடித்த டாப்-20 கமல் படங்கள்

இன்று(November-7) கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் 57 வது பிறந்தநாளாகும்,சினிமாவை நேசித்து சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல்.இவரை பற்றி சொல்வதற்கு ஓரு பதிவு போதாது.எனவே இந்தப்பதிவு கமல் நடித்த படிங்களில் எனக்கு பிடித்த டாப்-20 படங்களை பட்டியில இட்டுள்ளேன்.

Post Comment

Saturday, November 05, 2011

(பகுதி-9)என் உயிர் நீ தானே


கடந்த பதிவில்-இருந்தாலும் வயிறு என்று ஓன்று இருக்கின்றதே....எனவே
இடம்பெயர்கின்றவர்களின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிடும் வேலையை தொடங்கினார்கள் சுதனும்,வெள்ளையனும்,கடுமையான ஷெல்கள் விழுகின்ற போதும்..,உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்தனர்....இனி......



அவர்கள் இருந்த ஊரில் கடுமையாக ஷெல் விழத்தொடங்கியதால் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர்..இப்படி மாறி மாறி கடைசியில் புது மாத்தளன் என்னும் இடத்தில் வந்து விட்டனர்...இனி போவதற்கு அடுத்தது முள்ளிவாய்க்கால் என்ற ஓரு இடம் மட்டும்தான் இருக்கு....

Post Comment

Thursday, November 03, 2011

எனக்குப்பிடித்த டாப்-10 கிரிக்கெட் கேப்டன்கள்

கிரிக்கெட் மீதான என் காதல் மட்டும் குறையவே மாட்டேன் என்கின்றது....எனது தளம் ஆரம்பத்தில் வெறும் கிரிக்கெட் பதிவுகளை மட்டுமே எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன் பின்பு பலதரபட்ட விடயங்களை கலந்து கட்டி எழுதி இன்று பல்சுவைப்பட்ட பதிவுகளுடன் வாசகர்களின் ரசனையை பூர்த்தி செய்யும் தளமாக என் தளம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி..

Post Comment

Wednesday, November 02, 2011

வலிகள் நிறைந்த வாழ்க்கை தன்நம்பிக்கை பெண் கங்கா

நான் சின்னவயதில் எங்கள் ஊரில் கண்ட ஓரு அக்காவின் சோகக்கதைதான் இது..அவர் பெயர் கங்கா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பல விவசாயிகளின் வயல்களில் வேலைசெய்து செய்து தமது குடும்பத்தை ஓட்டும் ஓரு கூலித்தொழிலாளியின் மகள்தான் கங்கா நல்ல அழகானவர்.
மூன்று பெண் சகோதரிகளும்,ஓரு சகோதரனும் இவருக்கு உண்டு.
சகோதரன் திருமணம் செய்து வேறு இடத்துக்கு போய்விட்டார்

Post Comment

Tuesday, November 01, 2011

என் பார்வையில் 7ம் அறிவு,இது விமர்சனம் இல்லை

தீபாவளிக்கு வந்த படங்களில் 7ம் அறிவு தாமதமாகத்தான் பார்க்கமுடிந்தது.
7ம் அறிவு பற்றி பலர் விமர்சனம் செய்ததால் நான் விமர்சனம் எழுதவில்லை படத்தை பற்றி.சின்ன பார்வை.


1600 வருடங்களுக்கு முட்பட்ட காலத்தில் போதி தர்மர்..என்ற இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட ஓரு ஞானி சீனாவுக்கு சென்றுஅங்கு ஒரு கிராமத்தில் தனது தற்பாதுகாப்பு கலைகள்,மருத்துவம் போன்றவற்றை கற்பிக்கின்றார். கொடிய தொற்று நோயில் இருந்து அந்த மக்களைக்காக்கின்றார்

Post Comment

Sunday, October 30, 2011

(பகுதி-8)என் உயிர் நீ தானே

கடந்த பகுதியில்-
ஓரு நாள் வேலைக்குப்போன வெள்ளையனைக்காணவில்லை காலையில் போனவன் இரவாகியும் இன்னும் வரவிலை என்ன நடந்தது எங்க போய்ட்டானோ என்று எல்லோறும் தேடிக்கொண்டிருந்தனர்.ரதி அழுது கொண்டிருந்தாள். அப்போது........
இனி.........

அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஓருவர் வந்து சொன்னார் வெள்ளையன் புதுக்குடியிருப்புக்கு பஸ்சில் போய்க்கொண்டிருப்பதை கண்டதாக...

Post Comment

Friday, October 28, 2011

காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டா?

காதல் என்பது என்ன?அது ஓரு அற்புதமான உணர்வு..ஓரு தடைவைதான் காதல் வரும்..என்பது எல்லாம் காதலர்கள்..சொல்லும் .சுத்தப்பொய்...


Post Comment

Wednesday, October 26, 2011

ஒரு வரியில் வேலாயுதம் விமர்சனம்...

வேலாயுதம் பற்றி பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவார்கள் எனவே இன்னு நானும் விமர்சனம் எழுதலாம் என்று வேலாயுதம் பார்த்தேன்...ஆனால் நான் இப்போது விமர்சனம் எழுதவில்லை..காரணம் வேலாயுதத்தை ஓரு வரியில் விமர்சிக்கலாம்..இதோ வேலாயுதம் விமர்சனம்

வழமையான விஜய் படம்...

அவ்வளவுதான் வேலாயுதம் விமர்சனம் முடிஞ்சுது கெளம்புங்க.
கோபப்படாதீங்க உண்மைதான் வழமையான விஜய் படம்.இருந்தாலும் கீழே விமர்சனம் பாருங்க..

Post Comment

Monday, October 24, 2011

(100வது பதிவு)சச்சின்,கலீஸ், பிரட்மனுடன் ஒப்பிடலாமா? சிறப்புப்பார்வை

இந்திய ஜாம்பவான் லிட்டில் மாஸ்டர் சச்சினை பிரட்மனுடன் ஓப்பிட்டு பலர் பேசிவருகின்றார்கள் சில பிரட்மனைவிடவும் சச்சின் சிறந்த வீரர் என்றும்,சிலர் இல்லை பிரட்மனுக்கு கிட்டையும்சச்சின் வரமுடியாது என்றும் பல கருத்துக்களை சொல்லிவருகின்றனர்..எனவே தற்போது விளையாடும் வீரர்களில் பிரட்மனுடன் ஓப்பிடக்கூடியவர் யார் என்றால்?பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கைகள் சுட்டிக்காட்டுவது சச்சின் என்ற சாதனையாளரைத்தான்.

Post Comment

Saturday, October 22, 2011

(பகுதி-5)எனக்குப்பிடித்த பெண்கள்

நிறைவுப்பகுதி
முன்னைய பகுதிகளை வாசிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

41)கல்பனா சாவ்லா

Post Comment

Friday, October 21, 2011

(பகுதி-7)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது.



கடந்த பதிவில்-
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.


அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.

இனி.......


சுதனுக்கும்,காம்னாவுக்கும் இடையிலான தொடர்பு சுதன் மனைவி புஸ்பாவுக்கு முன்புதெரிந்ததனால் கொஞ்சநாள் சுதன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான்..இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக...மீண்டும்...இப்போது காம்னாவுடன்...

Post Comment

இரும்பு மனிதன் கேணல் கடாபி ஒரு பார்வை

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டின் அதிபர் முகமர்கடாபி 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிகாரத்தை தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்தார் இவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் எட்டுப் பிள்ளைகள் உள்ளனர் அதில் ஏழுமகன்களும்,ஒரு மகளும்..உள்ளனர்

Post Comment

Thursday, October 20, 2011

(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்

இந்தத்தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது..எனக்குப்பிடித்த 100 பெண்களை குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன் இப்போது அதை 50 உடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
முன்னய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3

Post Comment

Wednesday, October 19, 2011

(பகுதி-2)என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.



இதன் முதல் பகுதியை படிக்க இங்கே
என் பார்வையில் சில திரைப்படங்கள்(பகுதி-1)

Post Comment

Tuesday, October 18, 2011

ஒரு அறிவிப்பு,வேதனைகள்,நன்றிகள், வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நிரூபன் என்ற பெயர் அனேகமாக எல்லோறுக்கும் தெரிந்திருக்கும் நாற்று தளத்தின் ஓனர் பதிவுலகில் தன் எழுத்துக்களால் நிறைய வாசகர்களை கட்டிப்போட்டவர்..இவரின் பதிவுகள் பல்சுவையானவை பலதரப்பட்ட விடயங்களை கலந்து கட்டி பதிவுஎழுதுவதில் இவருக்கு நிகர் இவர்தான்.
நான் நினைக்கின்றேன் விளையாட்டு தவிர ஏனைய அனைத்து விடையங்களையும் இவர் தன் பதிவுகளின் ஊடாக அலசியிருக்கின்றார்.

நேற்று இவரது பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்..இது இவரது வாசகர்களுக்கு நிச்சயம் மனவேதனையே

Post Comment

Monday, October 17, 2011

(பகுதி-6) என் உயிர் நீ தானே.......

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது

Post Comment

Saturday, October 15, 2011

தோனி தோனிதான் தோல்வியில் இருந்து மீண்டது இந்தியா ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது கடந்த இங்கிலாந்து தொடரில் இருந்து தோல்விகளை சந்தித்துவந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி பெரும் உட்சாகத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Post Comment

Thursday, October 13, 2011

நண்பர்களிடம் சில கேள்விகள்.. எனக்கு ஒரு சந்தேகம்...

இன்று ஒரு வித்தியாசமான பதிவு(அதை படிச்சிட்டு நாங்க சொல்லனும் என்று திட்டுவது புரிகின்றது..ஹி.ஹி.ஹி.ஹி..)

என்னிடம் சில கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்க நண்பர்களே?

சில கேள்விகள்

கேள்வி 1-பொதுவா பொண்ணுங்க ஒரு பையன் நல்ல மாதிரிகதைத்தால் உடனே ஏன் அண்ணா போட்டு கூப்பிடுகின்றார்கள்?

Post Comment

Wednesday, October 12, 2011

என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.

ரஜனி,கமல் இவர்கள் இணைந்து பல படங்கள் நடித்து இருக்கின்றார்கள் எனவே இவர்கள் இணைந்து நடித்த ஒரு சிலப்படங்களைக்குறிப்பிடுகின்றேன்

Post Comment

Tuesday, October 11, 2011

(பகுதி-3)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது
முன்னைய பகுதிகளை படிக்க

21)மிதாலி ராஜ்


Post Comment

Monday, October 10, 2011

(மொக்கை)நவீன நாட்டாமை நல்லதம்பி பஞ்சாயத்தில் ஹன்சிகா.

மொக்கையாக பல விடயங்களை மொக்கை போட என்னால் உருவாக்கப்பட்டதுதான் இந்த காமடிப்பஞ்சாயத்து இது ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து கூடியது..முதல் பஞ்சாயத்தை பார்க்க-
முதல் பஞ்சாயத்து இங்கே


முஸ்கி-இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்


இது இரண்டாவது பஞ்சாயத்து.இதை கூட்டியிருப்பவர் மஞ்சனத்து மரத்து கட்ட குண்டுப்பூசனி ஹன்சிகா

Post Comment

Saturday, October 08, 2011

(பகுதி-5)என் உயிர் நீ தானே................

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இது ஈழத்தில் ஒரு ஊரில் நடந்த கதை.கதை நடந்த ஊரின் உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

கடந்த பதிவில்-ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தியழும் சத்தம் கேட்டது

Post Comment

Friday, October 07, 2011

தோனி சொன்னது சரியா?

சாம்பியன் லீக் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விரைவில் தோற்று வெளியேரியது நல்லதுதான் ஏன் என்றால் அடுத்துவரும் இங்கிலாந்து தொடருக்கு தயாராக இது உதவுமாம்.

Post Comment

Thursday, October 06, 2011

என்றும் அன்புடன்.....................


நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.

Post Comment

Monday, October 03, 2011

(பகுதி-2)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது கடந்த பகுதியில் முதல் 10 பேரை சொல்லியிருந்தேன் இந்தப்பகுதியில் 11ல் இருந்து தொடர்கின்றது.
முன்னைய பகுதிய வாசிக்க
(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

Post Comment

Saturday, October 01, 2011

(பகுதி-4)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

Post Comment

Friday, September 30, 2011

கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?

வணக்கம் இன்று ஒரு மேட்டரை கையில் எடுகின்றேன் இதில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

எமது பிறப்பை நாம் தீர்மாணிப்பது இல்லை.நாம் பிறக்கமுன் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவேண்டும் வெள்ளையாகப்பிறக்கவேண்டு,அழகாகப்பிறக்கவேண்டும்,இந்த தாய்,தந்தைக்குப்பிறக்கவேண்டு,இப்படி எல்லாம் நமது விருப்பத்தில் நாம் பிறப்பது இல்லை.

Post Comment

Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்

Post Comment

Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே

Post Comment

Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

Post Comment

Sunday, September 25, 2011

(கில்மா)முதன் முதலாக முதன் முதலாக...

முஸ்கி-காப்பி அடிக்கும் கனவான்களே.இது எனது தனிப்பட்ட பதிவு..இதை காப்பி அடித்து மொக்கை ஆகவேண்டாம்

முஸ்கி-நண்பர்களே பதிவை முழுவதும் வாசியுங்கள் முழுவதும் வாசித்தால்தான் உண்மை புரியும் எனவே பதிவை முழுமையாக வாசிக்காமல் கும்ம வேண்டாம்..

நான் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த கால கட்டம்.
அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்ககூடியது..கண்டியில் பேரதெனியா என்னும் இடத்தில் பிரதித்தி பெற்ற பேரதனியா பார்க்(பேரதெனியா பூங்கா)உள்ளது .

Post Comment

Saturday, September 24, 2011

(பகுதி-2)என் உயிர் நீதானே...உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது


முதல் பகுதியை வாசிக்க இங்கே-(பகுதி-1)என் உயிர் நீதானே

கடந்த பதிவில்-.ஆனால் கல்யாணம் முடிந்து...தங்க ஒரு இடமும் கிடைத்தால் சரியாகிடுமா?இல்லையே..அடுத்து வாழ்வதற்கு இந்த வாழ்க்கையுடன் போராடுவதற்கு.....வேலை வேனும்..சுதன் அண்ணாவிடம் இருந்த 1500 ரூபா காசைவைத்து எத்தின நாளைக்கு வாழ்கையை ஓட்டுவது..
அடுத்து அடுத்துதான் அவர்களுக்கு சோதனைகள் காத்து இருந்தன.
இனி.......

Post Comment

Friday, September 23, 2011

என் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது


விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட அந்தக்கிராமத்தில் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை விவசாயத்தை சார்ந்தே அமைந்திருக்கும்..அதாவது..அங்கு...பல..ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்யும் முதலாளிமார்கள்..இருப்பார்கள்..அவர்களது வயல்களில் வேலைசெய்யும்.வேலையாட்கள் பெரும்பாலும் அந்த முதலாளிமார்களின் காணிகளில் குடிசை அமைத்து வாழ்வார்கள்..காலம் காலமாக பல விவசாயிகளின் காணிகளில் அப்படி மக்கள் வாழ்ந்துவருவார்கள்..வேலைதேடி வரும் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கிராமம் யார் வந்தாலும்,,விவசாய நிலங்களில் வேலை செய்து தமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளக்கூடிய..பூமி.அது.

Post Comment

Thursday, September 22, 2011

பதிவுகளுக்கு கருத்துரை,ஓட்டு,வரவில்லையா..கவலையை விடுங்கள்

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே..இதையும் காப்பி அடித்து பல்ப்பு வேண்டவேண்டாம் இதைகாப்பி அடித்தால் உங்களை மாதிரி ஒரு பல்பை உலகத்தில் எங்கும் கானமுடியாது.

வணக்கம்.இந்த பதிவு...புதிய பதிவர்களுக்காக என் பதிவுலக அனுபவத்தில் இருந்து...(இது என் 75 வது பதிவு)

Post Comment

Tuesday, September 20, 2011

டாகுத்தர் படம் இயக்கிய பதிவர்கள்

முஸ்கி-எதையும் வாசிக்காமல் பதிவை காப்பி அடிக்கும் கனவான்களே...இதையும் காப்பி அடித்துவிடாதீங்க..ஏன்னா இது நண்பர்களுக்கிடையில் கலாய்த்து எழுதின பதிவு.எனவே இது ஒரு மொக்கை..இதை காப்பி அடித்தால் உங்களைபோல மொக்கைகள் உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
எச்சரிக்கை-டாகுத்தர் ரசிகர்களே...நீங்கள் கொஞ்சம்..கூலா எதும் குடிச்சிட்டு உள்ளே போகலாம்...

Post Comment

Sunday, September 18, 2011

ஒரு ரசிகனின் மனதில் ராகுல் ராவிட்..

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இது ஒரு கிரிக்கெட் ரசிகனான எனது அனுபவம் மட்டுமே எனவே இதை காப்பி செய்து பல்ப்பு ஆகிவிடாதீங்க.....


ராகுல் ராவிட் இந்தப்பெயர் எனக்கு 2000ம் ஆண்டுகளின் கடைசியில் அறிமுகமானது.ஆனால் இவரது பெயர் தெரியமுதலே நான் இவரது ஆட்டத்தை பார்த்து இருக்கின்றேன்..ஆம் 1996 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன் .

Post Comment

Friday, September 16, 2011

அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்...


முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இந்தப்பதிவையும் காப்பி அடிக்காதீங்க ஏன் என்றால் இது தனிப்பட்ட பதிவு இதை காப்பி அடித்தால்...ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களும் உங்கள் தளமும் பல்ப்பு வாங்கிடுவீங்க......


நிற்க-இது ஒரு காதல் கதை இல்லை...அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதில் உள்ள சுகமே தனி...அப்படி......எங்களுடன் கல்லூரியில் படித்த சகோதரமொழி(சிங்களம்)பொண்ணை சைட் அடித்த நினைவுதான் இந்தப்பதிவு.சைட் அடிப்பது என்றால் என்ன என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு நம்ம தத்துவ மேதை.நண்பர்.மைந்தன் சிவா சொல்கின்றார்..காதலின் முதல் படிகளில் ஒன்றுதான் சைட் அடிப்பதாம்-இது பற்றி விரிவாக பார்க்க அவர் பதிவையே பாருங்க-இதான் சைட் அடித்தப் பற்றி தலைவர் எழுதின பதிவு கிளிக்(என் பதிவை வாசிட்டு அப்பறம் இங்க போங்கபா.ஹி.ஹி.ஹி.ஹி)

Post Comment

Wednesday, September 14, 2011

தோனி பெற்றுத் தந்த விருது....நன்றி தமிழ் விருது

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி செய்யும் இனையதளங்களே தலைப்பை பார்த்துவிட்டு இந்தப்பதிவை பாய்ந்து அடித்துக்கொண்டு காப்பி செய்தால் நீங்க பல்ப்பு ஆகிடுவீங்க.....அப்படி காப்பி செய்து போட்டாலும் எனக்கு சந்தோசம் எங்களுக்கு விருது கிடைத்ததை நீங்கள் விளம்பரப்படுதுவதாக ஆகிவிடும்.


தலைப்பை பார்த்துவிட்டு நீங்க எல்லோறும் திட்டுவது புரிகின்றது விடயத்துக்குவாரன்.அதாவது தமிழ்விருது என்ற தளம் பதிவர்களுக்கு விருதுவழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாம்.நேற்று அதன் முதலாவது விருதை அறிவித்து இருந்தார்கள்.அதில் எனக்கு சிறந்த கிரிக்கெட் பதிவர் என்ற விருது கிடைத்துள்ளது நான் எழுதிய தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)என்ற பதிவிற்குத்தான் விருது கிடைத்துள்ளது இப்ப சொல்லுங்கள் எனக்கு விருது பெற்றுக்கொடுத்தது தோனிதானே.ஹி.ஹி.ஹி.

Post Comment

Tuesday, September 13, 2011

தோல்வி தோனிக்கு ஒரு மடல்..

ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĬıľèīĴĩĻĻąêĻĭĸĩĺĩļķĺêèĻļŁĴĭąêīĴĭĩĺĂèĪķļİăèļĭŀļõĩĴıįĶĂèīĭĶļĭĺăêĆÒĄĩèİĺĭĮąêİļļĸĂ÷÷ùöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õğĬĜěŀijĝıęĽĉ÷ĜĵþāĚĠĒđIJĶđ÷ĉĉĉĉĉĉĉĉĉıĕ÷ħĒħĿýġŀĽğĪĿ÷Ļùþøø÷ĬİķĶıħùüùĀúĀĀīöIJĸįêèıĵĩįĭĩĶīİķĺąêùêèĻļŁĴĭąêĵĩĺįıĶõĴĭĮļĂèùĭĵăèĵĩĺįıĶõĺıįİļĂèùĭĵăêĆĄıĵįèĪķĺĬĭĺąêøêèİĭıįİļąêùāāêèĻĺīąêİļļĸĂ÷÷ùöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õğĬĜěŀijĝıęĽĉ÷ĜĵþāĚĠĒđIJĶđ÷ĉĉĉĉĉĉĉĉĉıĕ÷ħĒħĿýġŀĽğĪĿ÷Ļûúø÷ĬİķĶıħùüùĀúĀĀīöIJĸįêèĿıĬļİąêûúøêè÷ĆĄ÷ĩĆĄ÷ĬıľĆÒĄĪĺè÷ĆÒ౤ಆ౸ಕౝಕౝ౫ಕ౧ಇ౺ಕè౲ಇ౹౰ಕ౬ಈ౸ಉô

Post Comment

Monday, September 12, 2011

டீன் ஏஜ் கலாட்டா என் நண்பனின் நினைவுகள்

முஸ்கி-என்ன பதிவு.என்று வாசிக்காமலே காப்பி அடிக்கும் இனையதளங்களே..இந்தப்பதிவையும் வாசிக்காமல் காப்பி அடித்து போட்டுவிடாதீர்கள்..நீங்கள் மொக்கையாக ஆகிவிடுவீர்கள்.இது என் நண்பன் ஒருவன் எழுதிய அவனது பாடசாலை கால நினைவு.


முற்குறிப்பு-இது நான் எழுதிய பதிவு இல்லை.என் நண்பன் திலீப்குமார் தனது பாடசாலை டீன் ஏஜ் காலாட்ட சிலதை பேஸ்புக்கில் எழுதி இருந்தான்.அதை இங்கே நான் பதிவாக தருகின்றேன்..ஏன் எனில் சுவாரஸ்யமான இந்தக்குறிப்பு பலபேரைச்சேரவேண்டும் என்பதால்..
எனவே உங்கள் கருத்துரைகள் வாழ்த்துக்கள் அனைத்தும் அவனது எழுத்துக்களுக்கே போய் சேரட்டும்.

Post Comment

Friday, September 09, 2011

கேவலம்.... tamilcnn.com,newyarl.com,kusumbu.com தளங்களின் வண்டவாளம் என் பதிவை காப்பி அடித்துவிட்டன

வணக்கம்
நான் எழுதிய பதிவை http://tamilcnn.com/http://newyarl.com /,kusumbu.com இந்த இனைய தளங்கள்அனுமதி இன்றி காப்பி(copy)செய்து தங்களின் தளத்தில் வெளியிட்டுள்ளன.ஒரு கிரிக்கெட் பதிவையோ இல்லை ஒரு பிரயோசனமான பதிவையோ காப்பி பன்னி இருந்தால் ஒரளவு ஏற்றுக்கொள்ளாம்.ஆனால் நாங்கள் பதிவர்களுக்கு இடையில் கலாய்ப்பதற்கு எழுதிய (கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு.கிசு. இந்தப்பதிவை கொஞ்சமும் அறிவு இல்லாமல் மண்டையில் மூளை இல்லாமல் காப்பி செய்து தங்கள் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்....அறிவு ஜீவிகளே இது சினிமா கிசு.கிசு என்று நினைத்து காப்பிசெய்த உங்கள் மூளையை முதலில் சலைவை செய்யுங்கள்..இது பதிவர்கள் எங்களுக்கு இடையில் காலாய்க்க எழுதிய காமடிப்பதிவு..

Post Comment

Thursday, September 08, 2011

(கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு..கிசு......

சரன்யா பற்றிய ஒரு பதிவுதான் எழுதலாம் என்று இருந்தன்
ஆனால் இப்ப இந்த பதிவை எழுத அவசியம் வந்துடுச்சி(என்ன அவசரம் என்ன குடியா மூழ்கிடுச்சினு நீங்கள் கேட்கலாம் பதிவை வாசிங்க புரிஞ்சி கொள்ளுங்கள்)உங்களை மாதிரியே சரன்யாவும் முறைச்சிச்சு அடுத்த பதிவை சரன்யா பற்றி எழுதுறன் என்று சொல்லியாச்சு சரின்னு சொல்லிட்டாங்க ஹி.ஹி.ஹி.ஹி.................

Post Comment

Wednesday, September 07, 2011

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?

Post Comment

Tuesday, September 06, 2011

(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?

கடந்த சில வாரங்களாக என் வலைப்பதிவில் பிரியா என்ற அலை அடித்து ஒய்ந்து இருக்கின்றது.விதி என்னும் நாடகத்தில் கடவுள் சுவாரஸ்யமான சம்பவங்களை ஏற்படுத்தினால்.எனது நண்பர்களான உங்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி பதிவுக்கு வருவோம்
எச்சரிக்கை-இது கில்மா மேட்டர்கள் சம்மந்த மான பதிவு 

Post Comment

Tuesday, August 23, 2011

தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)

வணக்கம் அன்பு நண்பர்களே நான் என்னதான் காதல்,சினிமா,மொக்கை,போன்ற பல்சுவைப்பதிவுகள் எழுதினாலும்.அதிகம் ஹிட்ஸ் ஆவது என்னமோ என் கிரிக்கெட் பதிவுகள்தான்.தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் எழுதியதால் அதற்கு கொஞ்சம் இடைவேளைவிட்டு மற்ற பதிவுகளை எழுதினேன்

Post Comment

Saturday, August 20, 2011

வயாகரா,ஆண்மைக்குறைவு,ஹோமியோபதி,

துளித்துளியாய் சில தகவல்கள்





Post Comment

Wednesday, August 17, 2011

காதல் வந்தால் கவிதை வரும் என்பது உண்மையா?





காதலித்தால் கவிதைவரும் கண்டு கொண்டேன் உன்னாலே
என்று ஒரு சினிமாப்பாடல் கூட இருக்கின்றது.
காதல் வந்தால் கவிதைவரும் என்பது உண்மையா?
இதை நீண்ட நாட்களாக நான் ஆராய்ந்து வந்தேன்.ஆனாலும் எனக்கு புரியவில்லை எப்படி காதல் வந்தால் கவிதை வருகின்றது.
கவிதைக்கு அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத என் நண்பர்கள் சில பேர் இருந்தார்கள் ஆனால் காதலில் விழுந்ததும்.விழுந்து விழுந்து கவிதை எழுதியதை கண்டு உள்ளேன்.

Post Comment

Saturday, August 13, 2011

தோனி உங்கள் அணி நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ஏன் என்னாச்சு?(3வது டெஸ்டிலும் இந்திய அணி படுதோல்வி சிறப்புப்பார்வை)

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 242 ஒட்டங்களால் படுதோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இழந்து.டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தையும் இழந்து விட்டது.

Post Comment

Wednesday, August 10, 2011

என்ன நடந்தது இந்திய அணிக்கு?சுடச்சுட ஒரு பதிவு ஆறப்போகுது விரைவா வாசிங்க.

முதலில் 6 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் அரங்கிற்கு மீண்டும் திரும்பிய ஸிம்பாவே அணி பங்களாதேஸ்க்கு எதிரான ஸிம்பாவேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான வெற்றி ஒன்றை பெற்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று உணவு இடைவேளை முடிந்து இப்போது போட்டி ஆரம்பமாகி விட்டது ஆனால் இந்திய அணி 100ஒட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறுகின்றது

Post Comment

ரிப்பீட்டு-பதிவர் நண்பர் வேடந்தாங்கல்-கருன்/இனிதொடர்பதிவையாரும் யோசிக்கவே கூடாது.

நண்பர் வேடந்தாங்கல்- கருன்.அழைத்ததற்கு அமைய இந்த தொடர்பதிவு
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

ஏனையோருக்கும் விளங்கும் வகையில்
அவர் அழைத்த தொடர்பதிவு இதோ...
மவனே மாட்டிங்களா?இனி தொடர்பதிவை யோசிக்கவே கூடாது?
 
.
.
.
.

Post Comment

(50வது பதிவு)மரணம் உடல்களைப்பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை



வணக்கம் நண்பர்களே பதிவுக்கு போகமுன் கொஞ்சம் இதையும் படிங்க.
இது எனது 50வது பதிவாகும்.பதிவுலகில் நான் தடம் பதித்து கிட்டத்தட்ட 9மாதங்கள் ஆகிவிட்டது கடந்த ஆண்டின் இறுதியில் பதிவுலகில் நுழைந்தாலும்.பதிவுலகம் பற்றி எனக்கு பெரிதாக தெரியாத படியால் ஆரம்பத்தில் என் பதிவுகள் பலரைச்சென்று சேரவில்லை.இந்த ஆண்டில் தான் எனக்கும் பதிவுலகில் ஒர் அங்கிகாரம் கிடைத்தது.இப்ப நிறையவாசகர்கள் என் வலைப்பதிவை படிக்கின்றார்கள்.இது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும். ஆரம்பத்தில் நான் பதிவுலகில் அடையாளம் காணப்படவில்லை என்று எனக்குள்ளே ஒரு வருத்தம் இருந்தது. தேடிப்போய் நான் கருத்துரை போட்டாலும்.எனக்கு கருத்துரைகள் வருவது குறைவாகவே இருந்தது.இதனால்.நான் சரியாக எழுதவில்லையோ என்று எனக்கு கவலை இருந்து கொண்டே இருந்தது. நான் எழுதி பெரிய அளவில் கவனிக்கப்படாத பதிவுகள் சிலவற்றை இந்தப்பதிவின் இறுதியில் பட்டியல் இட்டு உள்ளேன்.அவை பெரிதாக கவனிக்கப்படாவிட்டாலும்.நல்லபதிவுகளாக எனக்குத்தோன்றியவை.

Post Comment

Monday, August 08, 2011

இப்படியும் ஆங்கிலம் கற்கலாம்.ஒரு சுவையான பதிவு


Post Comment

Saturday, August 06, 2011

நவீன நாட்டாமை நல்லதம்பி(காமடிப் பஞ்சாயத்து-1)

அனைவருக்கு வணக்கம் நவீன நாட்டாமை நல்லதம்பி என்ற காமடிப் பஞ்சாயத்து தொடர் ஆரம்பம் ஆகின்றது..இது தொடர்பதிவாக இருந்தாலும் பஞ்சாயத்துக்கு யாரும் வந்து பஞ்சாயத்து பன்ன கூப்பிட்டால்தான் இந்தப் பஞ்சாயத்து கூடும்.எப்படியும் கிழமைக்கு ஒரு பஞ்சாயத்தாவது கூடும்.வழமையான எனது பதிவுகளுக்கு ஆதரவு அளித்துவரும் அனைவரும் இந்தத்தொடருக்கும் ஆதரவு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றார் நம்ம நாட்டாமை நல்லதம்பி.

Post Comment

Friday, August 05, 2011

ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்

என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாசகர்களே.


பாடசாலைக்காலங்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலோடு கவிதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எல்லாம் காதல் கவிதைகளே இதுவரை நான் காதல் தவிர்த்து வேறு எந்தக்கவிதைகளும் முழுமையாக எழுதியது கிடையாது.பாடசாலைக்காலத்திற்கு பிறகு கவிதையும் எழுதுவது இல்லை காதல் செய்வதும் இல்லை.

Post Comment

Wednesday, August 03, 2011

பேஸ்புக்கில் போலியாக பெண்கள் பெயரில் உலாவருபவர்களை ஊக்குவிப்பதை தவிர்க்கலாமே.


பேஸ்புக்கில் உலாவரும் போது நான் ரொம்ப நாளாகவே ஒன்றை அவதானித்து வந்துள்ளேன். இது உங்களில் பல பேரும் அவதானித்து இருப்பீர்கள். அதாவது பெண்கள் பெயரில் இருக்கின்ற பேஸ்புக்பக்கத்தில் இது சிலவேளை உண்மையாக பெண்கள் வைத்திருக்கும் பேஸ்புக் பக்கமாக இருக்கலாம். இல்லை போலியாக பெண்கள் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கமாக இருக்கலாம்.

Post Comment

Tuesday, August 02, 2011

அதிஸ்டகரமான கேப்டன் டோனிக்கு அழிவுகாலம் ஆரம்பமாகின்றதா?மீண்டும் இந்திய அணிக்கு தோல்வி(சிறப்புப்பார்வை)


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது அதுவும் ஒருநாள் ஆட்டம் முழுமையாக எஞ்சிஉள்ளபோதும் 4ம் நாளிலேயே போட்டி முடிந்துவிட்டது.319 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிதோல்வி கண்டுள்ளது.இந்தத் தோல்வி சொல்லும் செய்தி என்ன இந்தப்போட்டி பற்றி பார்க்க முன் ஸ்கோர்ரை முதலில் பார்ப்போம்.

Post Comment

Monday, August 01, 2011

(பகுதி-8)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

வணக்கம் இந்தப்பகுதியுடன் இந்தத்தொடர் நிறைவு பெறுகின்றது.சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனை முதன் முதல் நான் சந்தித்த நினைவுகளை ஒரு பதிவாகத்தான் முதல் எழுதினேன். பிறகு முரளிதரன் பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் அவர் பற்றிய சிலகுறிப்புக்களை தொடர்பதிவாக எழுதலாம் என சிந்தித்து இத்தத்தொடரை எழுதினேன் ஆனால் இதில் முரளிதரனின் முழுகிரிக்கெட் வாழ்க்கையினையும் எழுதவில்லை.கிரிக்கெட்டில்,சோதனைகளைத்தாண்டி சாதனை படைத்த,அவரது சாதனைகள்,அவரது தன்நம்பிக்கை இப்படி சில குறிப்புக்களை இந்தத்தொடரில் பதிவிட்டுள்ளேன்.சுழல் சக்கரவர்த்தி சாதனை நாயகன் முத்தையா முரளிதரனுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம்.எனது இந்தத்தொடரை தொடர்ந்து வாசித்து கருத்துரைகளை கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Post Comment

Tuesday, July 26, 2011

(சிறப்பு பார்வை)டோனி அணியை லோர்ட்ஸ்சில் துவைத்து எடுத்த இங்கிலாந்து அணி.


சர்வதேச அளவில் நடை பெற்ற 2000வது டெஸ்ட்போட்டி(இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 100வது டெஸ்ட்போட்டி)பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி ஆரம்பமாகியது.குறிப்பாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார்.

Post Comment

Monday, July 25, 2011

(பகுதி-7)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

இந்தத்தொடரின் பகுதி-6 வாசிக்க இங்கே கிளிக்பன்னவும்-(பகுதி-6)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

Pallekele International Cricket Stadium /Muttiah Muralitharan International Cricket Stadium
முரளியின் பெயர் சூட்டப்பட்ட பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம்

Post Comment

Friday, July 22, 2011

(பகுதி-6)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

வணக்கம் தொடர்ந்து எனது இந்தமுரளி பற்றிய தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கடந்த பதிவில்(பகுதி-5)ல் அனைவருக்கும் விரிவாக நன்றி தெரிவித்து இருந்தாலும் மீண்டும் நன்றிகள்(பகுதி-5 வாசிக்காதவர்கள் அவசியம் வாசியுங்கள்)

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails