Thursday, March 08, 2012

மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தியா சென்று இருந்தால் கடந்த 15,20 நாட்களாக பேஸ்புக்,பதிவுலகப் பக்கமே வரவில்லை மனசுக்கு அப்படி ஒரு ரிலாக்ஸ் கிடைத்தது.என் இந்திய அனுபவங்களை பிறகு ஒரு சில பதிவுகளில் எழுதுகின்றேன்.இம்முறை மதுரை மட்டுமே செல்ல முடிந்தாலும் அங்கே கொஞ்சம் பிசியாகிவிட்டதாலும் பல பதிவர்களை சந்திக்க வேண்டும் என்ற என் எண்ணம் ஈடேரவில்லை. ஆனாலும் பதிவர் துரைடானியலுடன் போனில் பேசினேன்.சந்திக்க முடியவில்லை அடுத்த முறை போகும் போது சந்திக்க வேண்டும்.


தமிழ்வாசி பிரகாஸ் அண்ணை தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைத்தால் சந்திக்க முடிந்தது.

ஒரு அந்தி மாலை நேரம் மதுரை ராஜாத்தி பார்க்கில் பிரகாஸ் அண்ணனை சந்தித்து பேசினேன். நிறைய விடயங்கள் நட்பாக பேசினார்.நான் அவரிடம் கூறினேன் உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவை படிப்பேன் அதிகமாக கமண்ட் போடுவதில்லை பாஸ் என்று.அதே போல அவரும் என் கிரிக்கெட் பதிவுகளை விரும்பி படிப்பதாக சொன்னார்.முதன் முறையாக சந்தித்துக்கொண்ட போது ஏதோ பலகாலம் பழகிய நண்பனைப்போல பேசினார்.பதிவுலகையும் தாண்டி நிறையவிடயங்கள் பேசினோம்.மிகவும் சந்தோசமாக இருந்தது.

பாலாவின் பக்கங்கள் பாலா அண்ணாவை தொடர்பு கொள்ள முயன்றேன் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அடுத்த முறை போகும் போது,பாலா அண்ணா,பதிவர் ரமணி சார் இவர்களையும் மதுரையில் உள்ள ஏனைய  சில பதிவர்களையும் சந்திக்க வேண்டும்.

அடுத்த முறை இந்தியா போகும் போது சென்னை,பாண்டிச்சேரி,ஈரோடு உட்பட பல ஊர்களுக்கு போக ப்ளான் பண்ணியிருப்பதால் கோகுல்,தலை சி.பி அண்ணன் உட்பட நிறைய பதிவர்களை சந்திக்கலாம் என்று நினைக்கின்றேன் பார்ப்போம்.

மீண்டும் நாளை முதல் உங்கள் நண்பர்கள் தளத்தில் வழமை போல பதிவுகள் வெளிவரும்.

விருது
பதிவுலகில் நான் இல்லாத சமயத்தில் எனக்கு பதிவர் வேங்கட ஸ்ரீனிவாசன் எனக்கு ஒரு விருது வழங்கியிருந்தார்.அந்த விருதின் பெயர்  Versatile Blogger 
இது பற்றி அவர் எழுதிய பதிவை படிக்க இங்கே கிளிக்-விருதுகள்

உண்மையில் இப்படியான விடயங்கள் பதிவர்களுக்கு மேலும் உட்சாகத்தையும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்கின்றது.
மிக்க நன்றி நண்பரே.
************************************************************************************************************
பதிவுலகம் ஒரு மாயை
பதிவுலகம் என்பது ஒரு மாயை இங்கே யார் வேணும் என்றாலும் ஜெயிக்கலாம்.ஆனால் அதுக்கு பதிவுலகம் பற்றி சரியான தெளிவான புரிதல் இருக்கவேண்டும்.

ஆனால் சிலர் பதிவுலகில் சர்வாதிகாரம் நடத்துகின்றார்கள்.இதனால் புதிதாக பதிவு எழுத வரும் பதிவர்கள் இப்படியானவர்களின் சில பதிவுகளை படித்துவிட்டு பதிவுலகை விட்டே ஓடிவிடுகின்றார்கள்.பதிவுலகம் என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை.
எமது கருத்துக்களை சுகந்திரமாக பிறரிடம் எடுத்துச்செல்லும் ஒரு ஊடகம்

சில பதிவர்களுக்கு இது புரிவது இல்லை தங்களை ஏதோ பெரிய அறிவாளி என்று நினைத்துக்கொண்டு ஏனைய பதிவர்களை சாடுவது அவர்கள் இப்படி இவர்கள் இப்படி தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை இவர்களுக்கு.இவர்களை கூர்ந்து சிலகாலம் அவதானித்தால் இவர்களது வண்டவாளங்கள் எல்லாம் தெளிவாக தெரியும்.

போட்டி,பொறாமை நிறைந்த இந்த பதிவுலகில் ஜெயிப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. இதனால் எத்தனையோ பதிவர்கள் வந்த உடனே இந்த பதிவுலகில் இருந்தே காணாமல் போய்விட்டார்கள்.ஒரு சிலர் தாக்கு பிடித்து எழுதுகின்றார்கள்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல பதிவுகள் வரவேற்கப் படவேண்டும் பல நல்ல பதிவர்கள் உருவாக வேண்டும்.எனவே புதிதாக பதிவெழுத வரும் பதிவர்கள் இந்த பதிவுலக அரசியலை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ”பதிவுலக அரசியல்” என்ற தலைப்பில் ஒரு சர்சைக்குறிய தொடரை எழுத இருக்கின்றேன்.இது புதிய பதிவர்கள் பதிவுலக அரசியல் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.விரைவில் எதிர்பாருங்கள்.

மீண்டும் வழமை போல பல்சுவைப் பதிவுகளை உங்கள் நண்பர்கள் தளத்தில் எதிர் பார்கலாம்.

எனக்கு தெரிந்ததை நான் எழுதுகின்றேன் அதற்காக அங்கிகாரம் உங்கள் கைகளில்
************************************************************************************************************
ஜொள்ளு
நம்ம அவுஸ்ரேலியா அணியின் முன்னால் வெற்றிகர கேப்டன் ரிக்கி பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரே அது ஏன்?
ஹி.ஹி.ஹி.ஹி. இதுதான் பொண்டிங் ஒரு நாள் போட்டியில் இருந்து அதிரடியாக ஓய்வு பெறக் காரணமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
************************************************************************************************************

படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை.

Post Comment

31 comments:

சம்பத்குமார் said...

வணக்கம் ராஜ்

நலமா ?

welcome back

நீண்ட நாளைக்கப்பறம் வந்தாலும் உங்க ஸ்டைல் மாறவில்லை.

பிரகாசுடன் சின்ன மீட்டிங்..பழகுவதற்கு அன்பானவர்தான்.

பதிவுலக அரசியல் தொடரை எதிர்பார்க்கின்றேன் நண்பா

கலக்குங்க

K.s.s.Rajh said...

@சம்பத்குமார் கூறியது...
வணக்கம் ராஜ்

நலமா ?

welcome back

நீண்ட நாளைக்கப்பறம் வந்தாலும் உங்க ஸ்டைல் மாறவில்லை.

பிரகாசுடன் சின்ன மீட்டிங்..பழகுவதற்கு அன்பானவர்தான்.

பதிவுலக அரசியல் தொடரை எதிர்பார்க்கின்றேன் நண்பா

கலக்குங்க////
இனிய காலை வணக்கம் பாஸ்
நான் நலம்

மிக்க நன்றி பாஸ்
என்னை பல்சுவைப் பதிவராக வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் பிந்திய நன்றிகள் பாஸ்.

Unknown said...

பிரகாஷ் ஒரு அமைதியான புயல்(!)..அவரை சந்திச்சீங்க பாருங்க நீங்க நின்னுட்டீங்க மதுரைல!...

அது என்ன பதிவுலக அரசியல்..விளக்கமா போடுங்க..என்னய போல புதிய பதிர்வர்களுக்கு விழிப்புணர்ச்சி பதிவா இருக்கும்னு நெனைக்கிறேன் நன்றி!

துரைடேனியல் said...

வாங்க சகோ. உங்க ரிட்டன்சை வரவேற்கிறேன். என்னோடு நீங்கள் போனில் பேசியது மிகவும் சந்தோஷம். அடுத்த தடவை நேரில் சந்திப்போம். பதிவுலக அரசியல் பத்தி எழுதுங்க. தெரிஞ்சுக்குறோம்.

தனிமரம் said...

மதுர அழகரோ மதுர சொக்கரோ ஹீ ஹீ
மதுரையில் இருந்து வந்ததும் பதிவுலகில் புயலாக பதிவுகளை வீசுங்க ராஜ் அன்பு வணக்கத்துடன் தனிமரம்.இணைகின்றது.

தனிமரம் said...

தமிழ்வாசியைச் சந்தித்ததை தனிப்பதிவாக  தந்திருந்தால் வாசியின் இன்னொரு பண்பை அதிகம் அறிய முடிந்திருக்கும்.அவ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

தொடர் விழிப்புணர்வா?? தொடங்குங்க என் போன்ற அறிமுகப்பதிவாளர்கள் எங்களை மெருகூட்ட வசதியாக இருக்கும். 

பால கணேஷ் said...

நலமா ராஜ்? மீண்டும் பதிவில் பார்க்க சந்தோஷம். ஒரு பதிவுலக நண்பரை மட்டும்தான் இம்முறை பாத்தீங்களா... சரி, அடுத்த முறை மத்தவங்களை பாத்துடுங்க... மிஸ்டர் விக்கியுலகத்துக்கு ஜொள்ளா அதிகம்? லொள்ளுன்னு சொல்ல நினைச்சீங்களோ...

தனிமரம் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள் ராஜ் எப்போதும் நேரம் இருக்கும் போதெல்லாம் தனிமரம் கரம் கோர்க்கும் பின்னூட்டத்துடன்.ஆமா வடிவேல் படம் ஏன்????புரியவில்லை.

K.s.s.Rajh said...

@@ விக்கியுலகம் கூறியது...
பிரகாஷ் ஒரு அமைதியான புயல்(!)..அவரை சந்திச்சீங்க பாருங்க நீங்க நின்னுட்டீங்க மதுரைல!...

அது என்ன பதிவுலக அரசியல்..விளக்கமா போடுங்க..என்னய போல புதிய பதிர்வர்களுக்கு விழிப்புணர்ச்சி பதிவா இருக்கும்னு நெனைக்கிறேன் நன்றி////

நன்றி பாஸ்
என்னது நீங்க புதிய பதிவரா ஆனாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ துரைடேனியல் கூறியது...
வாங்க சகோ. உங்க ரிட்டன்சை வரவேற்கிறேன். என்னோடு நீங்கள் போனில் பேசியது மிகவும் சந்தோஷம். அடுத்த தடவை நேரில் சந்திப்போம். பதிவுலக அரசியல் பத்தி எழுதுங்க. தெரிஞ்சுக்குறோம்.
////

மிக்க நன்றி பாஸ் கண்டிப்பாக அடுத்த முறை சந்திப்போம்

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
மதுர அழகரோ மதுர சொக்கரோ ஹீ ஹீ
மதுரையில் இருந்து வந்ததும் பதிவுலகில் புயலாக பதிவுகளை வீசுங்க ராஜ் அன்பு வணக்கத்துடன் தனிமரம்.இணைகின்றது.
////

கண்டிப்பாக நாளை முதல் வீசுகின்றேன் பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
தமிழ்வாசியைச் சந்தித்ததை தனிப்பதிவாக தந்திருந்தால் வாசியின் இன்னொரு பண்பை அதிகம் அறிய முடிந்திருக்கும்.அவ்வ்வ்வ்வ்
////

இந்தியப் பயணம் பற்றிய தொடரில் தனி அத்தியாயத்தி குறிப்பிடுகின்றேன் பாஸ் மிகவும் பழகுவதற்கு இனிமையான மனிதர் தமிழ்வாசி அண்ணன்

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
தொடர் விழிப்புணர்வா?? தொடங்குங்க என் போன்ற அறிமுகப்பதிவாளர்கள் எங்களை மெருகூட்ட வசதியாக இருக்கும்.
////

ஹி.ஹி.ஹி.ஹி....சீக்கிரம் தொடங்கிட்டா போச்சி

K.s.s.Rajh said...

@ கணேஷ் கூறியது...
நலமா ராஜ்? மீண்டும் பதிவில் பார்க்க சந்தோஷம். ஒரு பதிவுலக நண்பரை மட்டும்தான் இம்முறை பாத்தீங்களா... சரி, அடுத்த முறை மத்தவங்களை பாத்துடுங்க... மிஸ்டர் விக்கியுலகத்துக்கு ஜொள்ளா அதிகம்? லொள்ளுன்னு சொல்ல நினைச்சீங்களோ...
////

ஆமா பாஸ் மாறிக்குறிப்பிட்டு விட்டேன் ஜொள்ளு என்று தான் சொல்ல வந்தேன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி பாஸ்

ஆம் இம்முறை ஒரு பதிவரை மட்டும் தான் சந்திக்க முடிந்தது அடுத்த முறை நிறைய ஊருர்களுக்கு செல்ல இருக்கின்றேன் அப்போது நிறைய பேரை சந்திக்கலாம் என்று இருக்கேன்.

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
விருதுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள் ராஜ் எப்போதும் நேரம் இருக்கும் போதெல்லாம் தனிமரம் கரம் கோர்க்கும் பின்னூட்டத்துடன்.ஆமா வடிவேல் படம் ஏன்????புரியவில்லை.
////

நன்றி பாஸ்

வடிவேல் படம் இதுவும் ஒரு பதிவுலக அரசியல் தான் அவ்வ்வ்வ்வ்வ்

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி நலமா? மீண்டும் திரும்பி பதிவுலகம் வந்தது சந்தோசம் .. அட நம்ம பிரகாசையா சந்திச்சீங்க? வாழ்த்துக்கள்..

தவறாக நினைக்காவிடில் சின்ன ஆலோசனை.. புதியவர்களை உன் பதிவுகளில் ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆலோசனை சொல்லுறேன் என்று இறங்கி சர்சைகளை தேடாதே.. கேட்காமல் செய்யும் ஆலோசனைக்கு எந்த பிரயோசனமும் இல்லை!!!!

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!இப்போதான் பார்க்கக் கெடைச்சுது.நன்னாருக்கேளா?அப்புறம் தமிழ்வாசி பிரகாஷ் கூட போட்டோ நன்னாருக்கு.ஆள் கொஞ்சம் மெலிஞ்சிருக்காப்புல தெரியுது!அப்புறம்,நீங்க கூட மதுர வெயில்ல காஞ்சு,கருவாடாப் பூட்டேள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி நலமா? மீண்டும் திரும்பி பதிவுலகம் வந்தது சந்தோசம் .. அட நம்ம பிரகாசையா சந்திச்சீங்க? வாழ்த்துக்கள்..

தவறாக நினைக்காவிடில் சின்ன ஆலோசனை.. புதியவர்களை உன் பதிவுகளில் ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆலோசனை சொல்லுறேன் என்று இறங்கி சர்சைகளை தேடாதே.. கேட்காமல் செய்யும் ஆலோசனைக்கு எந்த பிரயோசனமும் இல்லை!////

பதிவுலகில் நான் சந்தித்த அனுபவங்களை தொடராக எழுதலாம் என்று தான் நினைத்தேன்.உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கின்றேன் மாம்ஸ் மிக்க நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@வணக்கம் ராஜ்!இப்போதான் பார்க்கக் கெடைச்சுது.நன்னாருக்கேளா?அப்புறம் தமிழ்வாசி பிரகாஷ் கூட போட்டோ நன்னாருக்கு.ஆள் கொஞ்சம் மெலிஞ்சிருக்காப்புல தெரியுது!அப்புறம்,நீங்க கூட மதுர வெயில்ல காஞ்சு,கருவாடாப் பூட்டேள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!
////

ஆமா ஜயா அங்கே வெயில் ஜாஸ்த்திதான் அதைவிட தொடர் பயணங்கள் போன்றவற்றால் காய்ந்து போய்விட்டேன்.

Unknown said...

மதுரையை நல்லா சுற்றி பார்த்தீர்களா? தமிழ்வாசி பிரகாஸ் அவர்களை நீங்கள் சந்தித்தது மகிழ்சி நண்பரே! அடுத்த முறை ஈரோடு வந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்......

Anonymous said...

Welcome back...

பதிவுலக அரசியல் (???) தொடரை எதிர்பார்க்கிறேன்...

தமிழ்வாசி பிரகாஸ் உடம்புல பாதி தான் இருக்கீங்க..உடம்பை தேத்துங்க...-:)

அட்லீஸ்ட் அடி வாங்கும் போது உபயோகப்படும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நம்ம சந்திப்பை போட்டுட்டு பதிவுல அரசியலை சொல்லப் போறிங்கன்னு சொல்லி இருக்கீங்க ராஜா....

ஏன்யா இப்படி?

சென்னை பித்தன் said...

வருக ராஜ்.மதுரையை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் போயிட்டீங்க.அந்தத் தெம்புல பதிவுலக அரசியல் பற்ரி எழுதப்போறீங்க!கலக்குங்க1

K.s.s.Rajh said...

@வீடு K.S.சுரேஸ்குமார்
////மதுரையை நல்லா சுற்றி பார்த்தீர்களா? தமிழ்வாசி பிரகாஸ் அவர்களை நீங்கள் சந்தித்தது மகிழ்சி நண்பரே! அடுத்த முறை ஈரோடு வந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்....////

நிச்சயமாக அடுத்த முறைவரும் போது உங்களை தொடர்பு கொள்கின்றேன்

K.s.s.Rajh said...

@வீடு K.S.சுரேஸ்குமார்
////மதுரையை நல்லா சுற்றி பார்த்தீர்களா? தமிழ்வாசி பிரகாஸ் அவர்களை நீங்கள் சந்தித்தது மகிழ்சி நண்பரே! அடுத்த முறை ஈரோடு வந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்....////

நிச்சயமாக அடுத்த முறைவரும் போது உங்களை தொடர்பு கொள்கின்றேன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ரெவெரி கூறியது...
Welcome back...

பதிவுலக அரசியல் (???) தொடரை எதிர்பார்க்கிறேன்...

தமிழ்வாசி பிரகாஸ் உடம்புல பாதி தான் இருக்கீங்க..உடம்பை தேத்துங்க...-:)

அட்லீஸ்ட் அடி வாங்கும் போது உபயோகப்படும்...
////

பாஸ் அவருக்கு பக்கத்தில் வைத்து பார்க்கும் போது நான் அப்படி தெரிகின்றேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
நம்ம சந்திப்பை போட்டுட்டு பதிவுல அரசியலை சொல்லப் போறிங்கன்னு சொல்லி இருக்கீங்க ராஜா....

ஏன்யா இப்படி?
////

ஜயோ அண்ணே அப்படி எல்லாம் இல்லை இது நான் முன்னாடியே எழுதனும் யோசித்துவைத்து இருந்த தொடர்.இது முற்றிலும் ஒரு வேற கோணத்தில் பயணிக்கும் தொடராக அமையும் சந்திப்புக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

K.s.s.Rajh said...

@ சென்னை பித்தன் கூறியது...
வருக ராஜ்.மதுரையை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் போயிட்டீங்க.அந்தத் தெம்புல பதிவுலக அரசியல் பற்ரி எழுதப்போறீங்க!கலக்குங்க1
////
நன்றி ஜயா

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வளவு தானா ! நம்ம பிரகாஷ்-கிட்டே எவ்வளளோ இருக்குப்பா !

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails