Saturday, February 11, 2012

தமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய சந்தர்ப்பம்-விடைபெறுகின்றேன் நண்பர்களே

தமிழக பதிவர்களுக்கு அரியசந்தர்ப்பம் என்ன என்று கேட்கிறீங்களா?பதிவில் சொல்கின்றேன் தொடர்ந்து படிங்க.
அதற்கு முதன் இதுவரை பதிவுலகில் என் எழுத்துக்களுக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய என்னை ஊக்கப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
பதிவுலகில் இருந்து சிலகாலம் விடைபெறுகின்றேன் நண்பர்களே.நான் பதிவுலகில் அறிமுகமான காலப்பகுதியில் என் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன் என் தந்தையை அவரது சொந்த ஊரிற்கு அழைத்து போகவேண்டும் என்று இது என் ஆசையாக இருந்தது.அது தற்போது நிறைவேறுகின்றது. ஆம் என் தந்தையை இந்தியாவிற்கு அழைத்துச்செல்ல இருப்பதால் பதிவுலகில் இருந்து தற்காலிகமாக விடைபெருகின்றேன்.

எங்களுக்காக உழைத்து எங்கள் சந்தோசத்துக்காக வாழும் எனது தந்தையை அவரது சொந்த ஊருக்கு கூட்டிபோகவேண்டும் என்பது என் ஆசையாகும்.அதற்காக பொருளாதார ரீதியுல் சில பிரச்சனைகள் முன்பு இருந்த படியால் முன்பு அது ஒரு கனவாக எனக்கு இருந்தது..
இது பற்றி முன்பு நான் எழுதிய “மறக்க முடியாத பாடசாலை நாட்கள்” என்ற தொடரின் கடைசிப்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன் அதை படிக்க இங்கே கிளிக்-(பகுதி-8)மறக்க முடியாத பாடசாலை நாட்கள்

எங்கள் பூர்வீகம் இந்தியாதான். இந்தியாவின் மதுரை தான் எங்கள் ஊர்.என் தந்தை வழி உறவினர்கள் எல்லோறும் அங்குதான் இருக்கின்றார்கள்.அவர்களை பார்வையிடுவதற்காக பல வருடங்களுக்கு பின் என் தந்தையை அழைத்துச்செல்கின்றேன்.இதைவிட ஒரு சந்தோசம் என் வாழ்நாளில் எனக்கு தேவையில்லை.இதனால் சிலகாலம் பதிவுலகில் இருந்துவிடைபெருகின்றேன்.

இந்தப் பயணத்தின் போது பதிவுலகில் எனக்கு அறிமுகமாகிய சகோதரர்களாக,நண்பர்களாக பழகும் நம் பதிவுலக நண்பர்கள் பலரையும் சந்திக்கவேண்டும் என்பதும் என் ஆசையாகும்.எனவே என்னை சந்திக்க தமிழக பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வாய்ப்பு.ஹி.ஹி.ஹி.ஹி இதைத்தான் தமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய வாய்பு என்று உல்ட்டாவா குறிப்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்.

எனவே தமிழக பதிவுலக நண்பர்களே எனக்கு உங்களின் பலரின் முகவரி தெரியாது எனவே முடிந்தளவு நண்பர்கள் பலரை சந்திக்க முயற்சி செய்கின்றேன். நண்பர்கள் nanparkal@yahoo.com என்ற என் மின்னஞ்சலுக்கு உங்களை தொடர்பு கொள்வது எப்படி என்று சொன்னீர்கள் என்றால்.எனக்கு பல நண்பர்களை சந்திக்க உதவியாக இருக்கும்.முடிந்தளவு பலரை சந்திக்க முயற்சி செய்கின்றேன். அப்படி பலரை சந்திக்க முடியாவிட்டாலும் ஒரு சிலரையாவது சந்திக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

எனவே அன்பு நண்பர்களே இதுவரை என் தளத்திற்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி.நான் பதிவுலகில் ஒரளவு அறியப் பட்ட பதிவராக இருப்பதற்கு காரணம் பதிவுலக நண்பர்கள் பலரின் ஆதரவினால் தான்.ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது எனவே நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி நண்பர்களே.

இந்தியாவில் இருந்து திரும்பி வந்ததும் மீண்டும் பதிவுலகில் சந்திப்போம் நண்பர்களே. முடிந்தால் அங்கிருந்து சில பதிவுகள் போடுகின்றேன்.மீண்டும் நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.


எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

Post Comment

59 comments:

Thava said...

தங்களது எதிர்க்காலம் சுகமாக அமைந்திட வாழ்த்துக்கள் நண்பரே..நீங்கள் விரைவில் பதிவுலகத்துக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசை...நன்றி.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!சென்று வருக!வென்று வருக!உறவுகளைக் கண்டு வருக!(அப்படியே ............. பார்த்து கூட்டி வருக,ஹ!ஹ!ஹா!!!!)காத்திருப்போம்!

இராஜராஜேஸ்வரி said...

சென்று வருக..
வென்று வருக..
வாழ்த்துகள்..

பால கணேஷ் said...

தமிழகத்துக்கு வரும் ராஜ்க்கு நல்வரவு. நானும் மதுரைக்காரன் தான். இப்போது சென்னையில் வசிக்கிறேன். அப்பாவுக்காக நீங்கள் செய்வது மிக மகிழ்ச்சி தரும் செயல்.உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

ஏலேய் மாப்ள இங்க தான் வரியா வாடி வா.... வா...

கூடல் பாலா said...

வருக வருக என்று இந்தியாவுக்கு வரவேற்கிறோம் ....வரும்போது எமெர்ஜென்சி லைட்டும் கொண்டு வாங்க ....

K.s.s.Rajh said...

@Kumaran
////தங்களது எதிர்க்காலம் சுகமாக அமைந்திட வாழ்த்துக்கள் நண்பரே..நீங்கள் விரைவில் பதிவுலகத்துக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசை...நன்றி.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!சென்று வருக!வென்று வருக!உறவுகளைக் கண்டு வருக!(அப்படியே ............. பார்த்து கூட்டி வருக,ஹ!ஹ!ஹா!!!!)காத்திருப்போம்!

நன்றி ஜயா

////(அப்படியே ............. பார்த்து கூட்டி வருக,ஹ!ஹ!ஹா!!!!)காத்திருப்போம்!
//// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ இராஜராஜேஸ்வரி கூறியது...
சென்று வருக..
வென்று வருக..
வாழ்த்துகள்..
////
நன்றி மேடம்

தனிமரம் said...

சென்று வாருங்கள் உறவுகளுடன் சந்தோஸ சங்கமத்தில் சங்கமித்து தந்தையின் அன்பை அழகான நாட்கள் ஆக்கி பதிவாக மீண்டும் கொண்டு வாருங்கள் காத்திருக்கின்றேன்!

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
தமிழகத்துக்கு வரும் ராஜ்க்கு நல்வரவு. நானும் மதுரைக்காரன் தான். இப்போது சென்னையில் வசிக்கிறேன். அப்பாவுக்காக நீங்கள் செய்வது மிக மகிழ்ச்சி தரும் செயல்.உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Sasikumar கூறியது...
ஏலேய் மாப்ள இங்க தான் வரியா வாடி வா.... வா...
////

ஏன் பாஸ் மெரட்டுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

மதுரைக்குப் போகும் மாப்பிள்ளை வரும் போது மல்லிகைப்பூ வாங்கி வாங்க அப்படியே மதுரை மீனாட்சியையும் ஒரு வணக்கம் வையுங்க அண்ணன் கேட்டார் என்று.ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@
koodal bala கூறியது...
வருக வருக என்று இந்தியாவுக்கு வரவேற்கிறோம் ....வரும்போது எமெர்ஜென்சி லைட்டும் கொண்டு வாங்க ....
////

வாங்க பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு என் தளத்திற்கு வந்திருக்கிறீங்க மிக்க நன்றி பாஸ்

////வரும்போது எமெர்ஜென்சி லைட்டும் கொண்டு வாங்க ....////
ஹி.ஹி.ஹி.ஹி.....

Unknown said...

உங்களின் எண்ணம் ஈடேரியத்தில் மிக்க மகிழ்ச்சி மாப்ள...நல்ல விதமா சென்று வருக!

K.s.s.Rajh said...

@தனிமரம்
மிக்க நன்றி பாஸ் கண்டிப்பாக போய் வந்து ஒரு பதிவு போடுகின்றேன்

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
உங்களின் எண்ணம் ஈடேரியத்தில் மிக்க மகிழ்ச்சி மாப்ள...நல்ல விதமா சென்று வருக!
////

நன்றி பாஸ்

ராஜ நடராஜன் said...

பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

பயண அனுபவங்களை மீண்டும் பகிருங்கள்.

Yoga.S. said...

koodal bala கூறியது...

வருக வருக என்று இந்தியாவுக்கு வரவேற்கிறோம் ....வரும்போது எமெர்ஜென்சி லைட்டும் கொண்டு வாங்க.////கூடல் பாலா சொன்னதன் பொருள் புரியவில்லைப் போலும்!அவர்,மின்வெட்டைச் சொன்னார்,ராஜ்!!!!!!!

Yaathoramani.blogspot.com said...

ஊருக்கு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி
நானும் மதுரைக்காரன்தான்
என்னுடைய இ.மெயிலுக்கு
தங்கள் வரவு நாட்களையும்
தங்களுக்கு வசதிப்படும் நாட்களையும் தெரிவித்தால்
நானே நேரடியாக தங்களைச் சந்திக்கிறேன்
பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள்....!

கோகுல் said...

வாங்க மச்சி,வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் சந்திப்போம்.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி.. சென்று வருக அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.. !!

இந்தியாவை பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்பதை விட நேரில் பார்ப்பதே மகிழ்சி அதுவும் எனக்கு பிடித்த மதுரைப்பக்கம்.. கட்டாயம் நீங்கள் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றது தமிழ்நாடு மட்டுமே பார்க்க எங்கள் ஆயுசு போதாது என்பேன். நிறைய நாள் நின்று வாருங்கள்..!!

K.s.s.Rajh said...

@ ராஜ நடராஜன் கூறியது...
பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

பயண அனுபவங்களை மீண்டும் பகிருங்கள்.
////
கண்டிப்பாக பகிர்கின்றேன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

K.s.s.Rajh கூறியது...
@ Yoga.S.FR கூறியது...
koodal bala கூறியது...

வருக வருக என்று இந்தியாவுக்கு வரவேற்கிறோம் ....வரும்போது எமெர்ஜென்சி லைட்டும் கொண்டு வாங்க.////கூடல் பாலா சொன்னதன் பொருள் புரியவில்லைப் போலும்!அவர்,மின்வெட்டைச் சொன்னார்,ராஜ்!!!!!!!
////

எனக்கு புரிந்தது ஜயா
வரும் போதே லைட் கொண்டுவர சொன்னதும் அதுதான் சிரிப்பு வந்துவிட்டது

K.s.s.Rajh said...

@ Ramani கூறியது...
ஊருக்கு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி
நானும் மதுரைக்காரன்தான்
என்னுடைய இ.மெயிலுக்கு
தங்கள் வரவு நாட்களையும்
தங்களுக்கு வசதிப்படும் நாட்களையும் தெரிவித்தால்
நானே நேரடியாக தங்களைச் சந்திக்கிறேன்
பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்
////

மிக்க நன்றி பாஸ் நிச்சயமாக சந்திப்போம்

K.s.s.Rajh said...

@ Ramani கூறியது...
Tha.ma 4////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
வாழ்த்துகள்....!
////

நன்றி தலைவா

K.s.s.Rajh said...

@ கோகுல் கூறியது...
வாங்க மச்சி,வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் சந்திப்போம்.
////

கண்டிப்பாக சந்திப்போம் பாஸ்

K.s.s.Rajh said...

காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி.. சென்று வருக அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.. !!

இந்தியாவை பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்பதை விட நேரில் பார்ப்பதே மகிழ்சி அதுவும் எனக்கு பிடித்த மதுரைப்பக்கம்.. கட்டாயம் நீங்கள் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றது தமிழ்நாடு மட்டுமே பார்க்க எங்கள் ஆயுசு போதாது என்பேன். நிறைய நாள் நின்று வாருங்கள்..!!////

nanri mama

மகேந்திரன் said...

தந்தைக்கு மகனாற்றும் கடமை.
அழகுற நிறைவேற்றுங்கள்.
பயணம் இனிதாக அமைந்திட
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

தந்தைக்கு மகனாற்றும் கடமை.
அழகுற நிறைவேற்றுங்கள்.
பயணம் இனிதாக அமைந்திட
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
தங்களின் பயணங்கள் யாவும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்! நம்ம தமிழ்வாசியும் மதுரையில் தான் இருக்காரு! சான்ஸ் கிடைச்சா பார்க்க மறந்திடாதீங்க.

அப்புறம் ஹன்சிகாவை பார்க்க போவதாக இருந்தாலும் ட்ரை பண்ணுங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பாலா said...

நம்ம ஊருக்கு வருகிறீர்கள். உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். எனக்கு கூப்பிடு தூரம்தான். உங்களை கண்டிப்பாக வந்து சந்திக்கிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

சந்தோசமாகப் போயிட்டுவாங்கோ ராஜ். அப்படியே உங்கட கனவுக்கன்னியையும் முடிந்தால் கடத்திட்டு வாங்களேன்(வேறுவழியில்லையல்லவா?:)).

MaduraiGovindaraj said...

வாங்க நண்பா வரவேற்கிறேன் நானும் மதுரை தான் நேரில் சந்திப்போம் எனது இமெயிலில் தகவல் தரவும் மெயில் அனுப்புகிறேன் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாங்க ராசா... வாங்க.... நம்ம ஊருக்கு வறீங்க, வரவு நல்வரவாகுக....

எப்போ மதுரைக்கு வறீங்கன்னு சொல்லலியே...?.

இருந்தாலும் தொடர்பு கொள்கிறேன்....

ஆமினா said...

நல்லபடியா வாங்க ராஜ்..

வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

அப்பாவின் நெடுநாள் கனவை நிறைவேற்றும் அன்பு மகன்!
உங்க அப்பா ரொம்ப அதிர்ஸ்டசாலி. சந்தோசமாக சென்று உங்கள் அன்பு உறவுகளை பார்த்து வாருங்கள்.
வென்று வருக என்று வாழ்த்த என்ன போருக்கா புறப்படுறிங்க. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

மதுரைக்கு போறிங்க கையோட உங்க மீனாட்சியையும் கூட்டிவாற எண்ணமோ?

Mahan.Thamesh said...

பயணம் சிறப்புடன் சென்று வாருங்கள் .நண்பா

K.s.s.Rajh said...

@மகேந்திரன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,
தங்களின் பயணங்கள் யாவும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்! நம்ம தமிழ்வாசியும் மதுரையில் தான் இருக்காரு! சான்ஸ் கிடைச்சா பார்க்க மறந்திடாதீங்க.

அப்புறம் ஹன்சிகாவை பார்க்க போவதாக இருந்தாலும் ட்ரை பண்ணுங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////

கண்டிப்பாக அவரை பாக்காமலா(தமிழ்வாசி பாஸை)

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நம்ம ஊருக்கு வருகிறீர்கள். உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். எனக்கு கூப்பிடு தூரம்தான். உங்களை கண்டிப்பாக வந்து சந்திக்கிறேன்.
////

கண்டிப்பாக சந்திப்போம் பாஸ்

K.s.s.Rajh said...

@ athira கூறியது...
சந்தோசமாகப் போயிட்டுவாங்கோ ராஜ். அப்படியே உங்கட கனவுக்கன்னியையும் முடிந்தால் கடத்திட்டு வாங்களேன்(வேறுவழியில்லையல்லவா?:)).
////

அக்கா வை திஸ் கொலை வெறி அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ வா.கோவிந்தராஜ், கூறியது...
வாங்க நண்பா வரவேற்கிறேன் நானும் மதுரை தான் நேரில் சந்திப்போம் எனது இமெயிலில் தகவல் தரவும் மெயில் அனுப்புகிறேன் நன்றி
////

மிக்க நன்றி பாஸ் உங்கள் மெயில் ஜடி அனுப்புங்க தொடர்பு கொள்கின்றேன்.கண்டிப்பாக சந்திப்போம்

K.s.s.Rajh said...

@ ஆமினா கூறியது...
நல்லபடியா வாங்க ராஜ்..

வாழ்த்துக்கள்
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
அப்பாவின் நெடுநாள் கனவை நிறைவேற்றும் அன்பு மகன்!
உங்க அப்பா ரொம்ப அதிர்ஸ்டசாலி. சந்தோசமாக சென்று உங்கள் அன்பு உறவுகளை பார்த்து வாருங்கள்.
வென்று வருக என்று வாழ்த்த என்ன போருக்கா புறப்படுறிங்க. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ அம்பலத்தார் கூறியது...
மதுரைக்கு போறிங்க கையோட உங்க மீனாட்சியையும் கூட்டிவாற எண்ணமோ?
////

பாஸ் வை திஸ் கொலை வெறி?அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ Mahan.Thamesh கூறியது...
பயணம் சிறப்புடன் சென்று வாருங்கள் .நண்பா
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@@
தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
வாங்க ராசா... வாங்க.... நம்ம ஊருக்கு வறீங்க, வரவு நல்வரவாகுக....

எப்போ மதுரைக்கு வறீங்கன்னு சொல்லலியே...?.

இருந்தாலும் தொடர்பு கொள்கிறேன்....
////

இந்தக் கிழமை வருவேன் பாஸ் கண்டிப்பாக சந்திப்போம்.

முத்தரசு said...

சென்று வாருங்கள் - உறவுகளை கண்டு வாருங்கள் - வாழ்த்துக்கள்

Yoga.S. said...

அம்பலத்தார் கூறியது...
வென்று வருக என்று வாழ்த்த என்ன போருக்கா புறப்படுறிங்க. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.////மன்னிக்கவேண்டும்!அது வந்து,போறது தான் போறாரு கொஞ்சம் தென்பாப் போய்வரட்டுமேன்னு தான்..............................................!ஹ!ஹ!ஹா!!!!!!!

துரைடேனியல் said...

வாங்க சகோ. மதுரை பக்கம் தான் எங்க ஊரு. என் தளத்திலேயே என் மொபைல் நம்பர் இருக்கு. கால் பண்ணுங்க. சந்திப்போம்.

Anonymous said...

அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றியதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்...

பயணம் இனிதாக அமைந்திட
வாழ்த்துக்கள்...

பயண அனுபவங்களை பகிருங்கள்...

Have a blast...n...come back soon...

kaialavuman said...

ராஜா, விரைவில் பதிவுலகிற்குத் தாங்கள் திரும்ப வர வாழ்த்துகள்.

இப்பொழுது, உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html, நேரம் கிடைக்கும் பொழுது, வந்து ஏற்றுக்கொள்ளவும்.

சுதா SJ said...

மச்சி..... பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் :) சீக்கிரம் திரும்பி வா மச்சி..... வைட்டிங் உனக்காக... :(

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

பல்சுவை பதிவர்கள்

K.s.s.Rajh said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
////

மிக்க நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails