Friday, September 16, 2011

அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்...


முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இந்தப்பதிவையும் காப்பி அடிக்காதீங்க ஏன் என்றால் இது தனிப்பட்ட பதிவு இதை காப்பி அடித்தால்...ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களும் உங்கள் தளமும் பல்ப்பு வாங்கிடுவீங்க......


நிற்க-இது ஒரு காதல் கதை இல்லை...அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதில் உள்ள சுகமே தனி...அப்படி......எங்களுடன் கல்லூரியில் படித்த சகோதரமொழி(சிங்களம்)பொண்ணை சைட் அடித்த நினைவுதான் இந்தப்பதிவு.சைட் அடிப்பது என்றால் என்ன என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு நம்ம தத்துவ மேதை.நண்பர்.மைந்தன் சிவா சொல்கின்றார்..காதலின் முதல் படிகளில் ஒன்றுதான் சைட் அடிப்பதாம்-இது பற்றி விரிவாக பார்க்க அவர் பதிவையே பாருங்க-இதான் சைட் அடித்தப் பற்றி தலைவர் எழுதின பதிவு கிளிக்(என் பதிவை வாசிட்டு அப்பறம் இங்க போங்கபா.ஹி.ஹி.ஹி.ஹி)



மீண்டும் நிற்க-நீ எப்படி தமிழனாக இருந்து கொண்டு..சகோதரமொழிப்பொண்ணை (சிங்களம்)சைட் அடிக்கலாம் என்று..என்னை கும்ம தயாராகும் நண்பர்களே.....அழகை ரசிக்க.மொழி,இனம்,மதம் எல்லாம் தேவையில்லை,அதைவிட இதில் அந்தப்பொண்ணை நம்ம நண்பன் தான் கடுமையாக சைட் அடித்தான்(அப்பா நான் தப்பிச்சேன்)நானும் இடைக்கிட....இதையும் மீறி..இல்லை...சகோதரமொழிப்பெண்ணை(சிங்களம்)சைட் அடித்தது பிழை என்று கும்ம நினைத்தால் நீங்க போய்ட்டு ..அடுத்த பதிவுக்கு வாங்க.............ஹி.ஹி.ஹி.ஹி


இடம் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது...


ஒரு தனியார் கல்லூரியில் நானும் என் நண்பன் ஒருவனும் படித்துக்கொண்டு இருந்தோம்.முதல் நாள் கல்லூரியில் பதிவு செய்வதற்காக போய் இருந்தபோது......

எக்ஸ் கியூஸ் மீ....ஆர் யூ ஹட் ஸ்டுடண்ஸ்..?

குரல் கேட்டு நானும் என் நண்பனும் திரும்பினோம்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
சிவப்பு நிற டீ.சேட்டில் கருப்புகலர் ஜீன்சில்..ஒரு தாஜ்மகாலிடம் இருந்துதான் அந்தக்குரல் வந்தது........காதோரம் சுருண்டமுடி அவளது...கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு இருந்தது.....அழகாக அதை கோதிக்கொண்டே மீண்டும் கேட்டாள்..கலோ...ஆர் யூ ஹட் ஸ்டுடண்ஸ்?

யா...யா.....தட்டுத்தடுமாறி......சொன்னோம்..அவள் அழகு எங்கள் பேச்சை நிறுத்திவிட்டது.....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
வெல்.திஸ் இஸ் யூவர் கிளாஸ் ரூம்..என்று ஒரு கிளாஸ் ரூமைக்காட்டிவிட்டு....சென்றாள்..........நடையா..இது நடையா.......ஒரு நாடகம் அன்றோ நடக்கிறது........................
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.


என் நண்பன் கேட்டான் மச்சான் யார்ரா குட்டி சூப்பரா இருக்கு(குட்டி என்பது எங்கள் ஊரில் பொண்ணுங்களைச்சொல்லும் வார்த்தை இது பற்றி மேலும் அறிய..நண்பர் நிரூபன் எழுதிய பதிவுகளைப்பார்க்கவும்)

நான் சொன்னே சும்மா இருடா படிப்பிக்கும் டீச்சரா இருக்கப்போகுது..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
ரெண்டு பேரும் அவள் காட்டிய கிளாஸ் ரூமில் போய் அமர்ந்தோம்..அங்கே சில நண்பர்கள் அமர்ந்து இருந்தார்கள்...நாங்கள்..போய் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்...அவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்...எங்கள் வகுப்பில் இருந்த அனைவரும் தமிழ்மாணவ்ர்கள்தான்...ஒரு சகோதர மொழி(சிங்களம்)நண்பர்கள் கூட இல்லை...அதைவிட ஒரு பொண்ணுங்க கூட வகுப்பில் இல்லை..
நண்பன் என்னிடம் கேட்டான் என்னடா மச்சி ஒரு பொண்ணைக்கூட கானவில்லையே........வகுப்பு சுத்த போறாக இருக்கப்போகுது என்றான்....
எனக்கு மனசுக்குள் கவலைதான் அனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை..ஹி.ஹி.ஹி.ஹி

வகுப்பு ஆரம்பமாகியது அப்போது இரண்டு பொண்ணுங்கள் வகுப்புக்கு வந்தாங்க.(அப்பாடா....................பெருமூச்சிவிட்டான் நண்பன்)அதில் ஒன்று எங்களிடம் கிளாஸ் ரூமைகாட்டிய அந்த தாஜ்மஹால் தான்..என் நண்பனுக்கோ மிகுந்த சந்தோசம்...(எனக்கும்தான்.ஹி.ஹி)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
முதல் நான் கிளாஸ் என்றபடியால் எல்லோறும் அவர்களை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்...அப்போதுதான் அவளது பெயரைதெரிந்து கொண்டோம்..அப்போதும் அவள் சிங்களப்பொண்ணு என்பது தெரியவில்லை காரணம் அந்தப்பெயர் தமிழிலும் நிறைய பேருக்கு உண்டு என்பதால்.

எங்கள் பெயரையும் ஊரையும் சொன்ன போது எல்லோறும் எங்களையே பார்த்தார்கள்.அதில் இருந்து அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மீது ஒரு பாசம் மிகுந்த அன்பாக பழகுவார்கள்...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.


கிளாஸ் இடைவேளைகளின் போது அந்தப்பொண்ணு மற்ற நண்பர்களுடன் கதைத்துக்கொண்டு இருக்கும்(ஆங்கிலத்தில்)அவளுக்கு எங்கள் ஊரை கேள்விப்பட்டதில் இருந்து எங்களுடன் பேசவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டதை அவளது செயற்பாட்டை பார்க்கும் போது எனக்கு தெளிவாகப்புரிந்துவிட்டது..அவளா வந்து கதைக்கட்டும் என்று இருந்தேன்..என் நண்பனோ அவளின் தீவிர ரசிகன் ஆகிவிட்டான்..ரூமில் கூட அவளைப்பற்றியே கதைச்சு கொண்டு இருப்பான்..ரூமில் உள்ள மற்ற கல்லூரிகளில் படிக்கும் என் நண்பர்கள் எல்லோம் சேர்ந்து அவனுக்கு நக்கல் அடிபோம்..மச்சான் வேற எதாவது கதை என்று
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
ஒருநாள் வகுப்ப்பு சுத்த போறாக போய்க்கொண்டு இருந்தது...மதியம் 1 மணிக்கு எங்கள் வாத்தியார்..படிப்பிச்சு கொண்டு இருந்தார்...ஒன்றுமே விளங்கவில்லை..அத்துடன்அவர் தமிழர்.தழிழில் எதும் பசங்க திட்டினால் அவருக்கு புரிந்துவிடும் சிங்களத்திலும் திட்டமுடியாது..அவருக்கு சிங்களமும் தெரியும்..(பாடத்திட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் படிப்பதால்.தழிழர்,சிங்களவர்,என்று அனைத்து ஆசிரியர்களும் படிப்பித்தார்கள்)

பசங்க எல்லோரும் எப்ப கிளாஸ்முடியும் என்று கடுப்பாக இருந்தாங்க...எனக்கு நித்திரைதான் வந்தது,.......என்ன செய்யலாம் என்று யோசிச்ச போது....அருமையான ஜடியா வந்தது அந்தப்பொண்னை சைட் அடிக்கலாம் என்று....கடைக்கண்ணால் அவளை நோட்டம் இட்டேன்..என் நித்திரை பறந்தது......அவள் அழகில் என் உணர்வுகள் மண்டியிட்டது......இதுவரை பிரியாவை மட்டுமே அழகியாக நினைத்த என் மனதை......குப்பையில் போடு என்று அவளது அழகு வதனம் என்னிடன் சொல்லிக்கொண்டு இருந்தது..

என் நண்பனைப்பார்த்தேன் அவன் ஆல் ரெடி....இதைத்தான் செய்து கொண்டு இருந்தான்..........ஹி.ஹி.ஹி.ஹி

திடீர் என் அவள் பார்வையை என்பக்கம் திருப்பினாள்.....நான் அவளை சைட் அடித்துக்கொண்டு இருப்பதை அவள் கண்டுவிட்டாள்..அந்த ஒரு நொடி..அவளது விழியை நேருக்கு நேர் சந்தித்தேன்...ஆனால் என்னதான் அவள் அழகியாக இருந்தாலும்...பிரியாவின் பார்வையில் இருந்த அந்த பவர் இல்லை(காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு..ஹி.ஹி.ஹி.ஹி)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
ஒரு நாள் கிளாஸ்க்கு போகும் வழியில் அவள் எதிர்ப்பட்டாள்..எங்களைக்கண்டுவிட்டு...எக்ஸ் கி யூஸ் மீ...கா(கே)ன் ஜ ஸீபீக்?
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
அவள் அப்படி கேட்டதும்...நான் -தாராளமாக என்றேன்...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
அவள்-சிங்களத்தில் மொக்கத என்றால்(என்ன)?
(நான் அப்பதான் நினைச்சேன் அட தமிழ் அவளுக்கு விளங்கவில்லை இவள் சிங்கப்பொண்ணா?)

நான்-யா வை நாட் ..யூ கா(கே)ன்.டோக்கிங்....
தாங்ஸ் என்றாள்
அவள் கேட்டாள் -ஓயா கம கோய்த(உங்கள் ஊர் எது)
நான் -வவுனியா
அவள்-ஓ வவுனியாவ...மட்ட வவுனியா தன்ன.(வவுனியா எனக்கு வவுனியா தெரியாது)
அவள்-ஓயா சிங்கள தன்னவத?(உங்களுக்கு சிங்களம் தெரியுமா?)
நான் -சுட்டாக்..சுட்டாக்(கொஞ்சம்.கொஞ்சம்)
நான் -ஒயா தமிழ் தன்னவத?(உங்களுக்கு தழிழ் தெரியுமா?)
அவள்-தமிழ் தன்ன(தமிழ் தெரியாது)


(விட்டா சிங்கள மொழிகற்பது எப்படினு பதிவு போயிடும்போல பிறகு நீங்கள்பின்னூட்டத்தில் கும்மிடுவீங்க...அதனால் சுருக்கமாக மேட்டரை சொல்லுறன்.)


இப்படியாக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது
பிறகு வகுப்புக்கு போய்விட்டோம்....

என் நண்பனுக்கு சிங்களம் சுத்தமாக கதைக்கவராது(பதிவருக்கு அதிஸ்டத்தை பாரு என்று நீங்க நினைக்கலாம்.ஆனால் இண்டர் நேசினல் லாங்விச் ஆங்கிலம் இருக்கே...நண்பனுக்கு கைகொடுக்க.ஹி.ஹி.ஹி.ஹி).இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.

அவள் என்ன சொன்னாள் என்று கேட்டுகொண்டே இருந்தான்..
நான் சொன்னேன் ஊர் எது என்றுகேட்டாள் சிங்களம் தெரியுமா என்று கேட்டாள்...கிளாஸ் எப்படி போகுது புடிச்சு இருகா(கவனிக்க கிளாஸ்)இப்படித்தான் கதைத்தாள் என்று சொன்னேன்..அவன் நம்பவில்லை இல்லை எனக்கு சிங்களம் தெரியாது என்பதால் நீ எதோ கதைவிடுற என்றான்
.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
அதுக்கு ஏற்றமாதிரி மறுநாள் ஒரு சம்பவம் நடந்தது கிளாஸ் இடவேளையின் போது...நானும் நண்பனும் அமர்ந்து இருக்கும் போது..அவள் என்னிடம் கேட்டாள்...உங்கள் புத்தகத்தை(நோட்ஸ் எழுதும் புத்தகம்) தாருங்க என்று சிங்களத்தில் கேட்டாள்.நானும் கொடுத்துவிட்டு சொன்னேன்(ஆங்கிலத்தில்)
என்னாலே என் எழுத்தை வாசிக்கமுடியாது..உங்களால் முடிந்தால் முயற்சிசெய்து பார்கவும்...அவள் சிரித்துக்கொண்டே......வாங்கினாள்....
என் நண்பனோ என்னை முறைத்துப்பார்த்தான்...

கிளாஸ்விட்டு வரும் போது கேட்டுக்கொண்டே வந்தான் ஏன் நானும் பக்கத்தில் தானே இருந்தேன் என் புத்தகத்தை வாங்கி இருக்கலாம் தானே ஏன் உன்கிட்ட வாங்கினாள் என்று...நான் சொன்ன்னேன் மச்சி அண்டைக்கு நான் தானே கதைச்சன் நீ பேசாமல் தானே இருந்த ஒருவேளை அதனால் என்னிடம் கேட்டு இருக்கலாம் என்றேன்.அவன் நம்பவில்லை

..ரூமுக்கு வந்து மற்ற கல்லூரிகளில் படித்த எங்கள் ஊர் நண்பர்களுடன் சேர்நது இவனைக்காலாய்த்தோம் மச்சி இவன் அந்த பொண்ணை நூலுவிட்டான் அவள் சிங்களப்பொண்ணு என்று தெரிந்ததும்...நொந்து போயிட்டான் அவள் என்கூட கதைப்பதை இவனுக்கு கடுப்பா இருக்கு என்று..கும்மு கும்மென்று கும்மிநோம் பாவம் நண்பன்....அப்பறம் தீவிரமாக சிங்களம் படித்தான் அதுவேற கதை.ஹி.ஹி.ஹி.
பிறகு வழமைபோல எங்கள் கிளாஸ்களை கட்டும் அந்தப்பொண்ணை சைட்டடித்துகொண்டே இருப்போம் நண்பன் கொஞ்சம் அடங்கிவிட்டான்.
அவளும் சகஜமாக கதைப்பாள்..இந்த கல்லூரிகாலம் எனக்கு பல நண்பர்களை. பெற்றுத்தந்தது......இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.

பிறகு இடையில் குடும்ப சூழ்நிலைகாரணமாக எனது படிப்பு தடைப்பட்டுவிட்டது..
என் நண்பனும்...படிப்பை நிறுத்தி வேலைசெய்து கொண்டு இருக்கின்றான்

அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதிலும் இருக்கும் சந்தோசத்தை வார்தைகளால் வர்ணிக்கமுடியாது..அதுவும் நாம சைட் அடிப்பது அவங்களுக்கு தெரிஞ்சால் பொண்ணுங்க மேலும்.மேலும் தன்னை பார்க்கட்டும் என்று ஸ்டைலாக தலையைக்கோதுவது.....நைசாக நம்மை கடைக்கண்ணால் பார்ப்பதும்..என்ன ஒரு அழகு....இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாக எடுக்கப்பட்ட பதிவு.
பின்குறிப்பு-இன்று இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன்.ஒரு நாள்போடிகளில் இருந்து இந்தியாவின் சுவர்(ராகுல்ராவிட்)ஓய்வு பெறுகின்றார்..தோல்வியால் துவண்டுபோய்யுள்ள இந்திய அணிவெற்றியுடன் ராவிட்டை விடைகொடுக்குமா?இல்லை இந்திய அணியை தன் தோள்களில் தாங்கிய வீரருக்கு..தோல்வியுடன் கடைசி ஒருநாள் போட்டிஅமையுமா? தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ராவிட்டின் ஆட்டத்த நான் காணலாம்..ராகுல் ராவிட் பற்றி ஒரு விரிவான தனிப்பதிவில் சந்திபோம்.எனக்கு மிகவும் பிடித்த வீரரான ராகுல் ராவிட் வெற்றியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்துவிடைபெற அவரது ரசிகனாக வாழ்த்துக்கள்.

வந்துட்டேன் வந்துட்டேன்.......................................
இரண்டு மூன்று பதிவுக்கு நான் இல்லை என்ன நடக்குது இங்க.........அதான் வந்துட்டேன்..இனிபாப்பம்................நீங்கள் உங்கள் வேலையை மறக்கவேண்டாம்,கருத்துரை,ஓட்டு












Post Comment

92 comments:

SURYAJEEVA said...

நிற்க
மீண்டும் நிற்க
என்று சொல்லி
நானும் அடிக்கடி நின்று கால் வலிக்குது சாமியோ

Anonymous said...

வணக்கம் நான் ஒரு புதுப்பதிவருங்கோ ஒவ்வொறு தளமாக போய் ஆதரவு தேடிவாரனுங்கோ.அப்படி..ஜடியாமணிதளத்திற்கு போனப்போ..உங்கள் தளத்தை பார்க்க முடிஞ்சதுங்கோ......அழகான பொண்ணை சைட் அடித்த தலைப்பை பார்த்துட்டு பாய்ந்து அடித்து ஒடிவந்தனுங்கோ......சூப்பர்..என் தளத்துக்கும் வந்து ஆதரவைத்தாங்கோ

K said...

அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்... ///////

வணக்கம் மச்சான் சார்! இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!

இந்த வெள்ளிக்கிழமை நீங்கள் போகும் கோயிலுக்கு, அழகான.......... ஐயர் வரணும்னு வாழ்த்துறேன்! ஹி ஹி ஹி !!!!

K said...

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இந்தப்பதிவையும் காப்பி அடிக்காதீங்க ஏன் என்றால் இது தனிப்பட்ட பதிவு இதை காப்பி அடித்தால்...ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களும் உங்கள் தளமும் பல்ப்பு வாங்கிடுவீங்க....../////////

சார், ஒரு பல்ப்பு என்னவிலை சார்?

K said...

நிற்க-இது ஒரு காதல் கதை இல்லை...அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதில் உள்ள சுகமே தனி.../////////

சார், சை அடிக்குறதுன்னா, ஒரு பொண்ணோட சைட்டுல , அதாவது தோள் பக்கத்தில இருந்து, நாரிப் பக்கம் வரை, அடிக்கறதா சார்?

K said...

எங்களுடன் கல்லூரியில் படித்த சகோதரமொழி(சிங்களம்)பொண்ணை சைட் அடித்த நினைவுதான் இந்தப்பதிவு./////////

சரியாப் போச்சு!

K said...

நம்ம தத்துவ மேதை.நண்பர்.மைந்தன் சிவா சொல்கின்றார்..காதலின் முதல் படிகளில் ஒன்றுதான் சைட் அடிப்பதாம்-இது பற்றி விரிவாக பார்க்க அவர் பதிவையே பாருங்க-இதான் சைட் அடித்தப் பற்றி தலைவர் எழுதின பதிவு கிளிக்(என் பதிவை வாசிட்டு அப்பறம் இங்க போங்கபா.ஹி.ஹி.ஹி.ஹி)/////

அடடா, அவரு இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறாரா? நல்லா அனுபவம் உள்ளவர் போல!

K said...

மீண்டும் நிற்க-நீ எப்படி தமிழனாக இருந்து கொண்டு..சகோதரமொழிப்பொண்ணை (சிங்களம்)சைட் அடிக்கலாம் என்று..என்னை கும்ம தயாராகும் நண்பர்களே.....///////

மச்சான் சார், அதுல என்ன தப்பு இருக்கு? அரசியல் வேற, அழகு வேற! அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களது துணைவியும் ஒரு சிங்களப் பெண்ணே!

ஆக, ஒன்றை இனொன்றோடு, முடிவதும் , குழப்புவதும் அழகல்லவே!

K said...

இடம் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது...//////

இது அநியாயம் சார்! பிரியா மேட்டருல பேரை மாத்தினீங்க ஓகே!

இது சிங்களப் பொண்ணுதானே! சும்மா சொல்லுங்க!

K said...

சிவப்பு நிற டீ.சேட்டில் கருப்புகலர் ஜீன்சில்..ஒரு தாஜ்மகாலிடம் இருந்துதான் அந்தக்குரல் வந்தது.....//////

தாஜ்மஹால் வெள்ளையாத்தானே இருக்கும்? டவுட்###

K said...

விட்டா சிங்கள மொழிகற்பது எப்படினு பதிவு போயிடும்போல பிறகு நீங்கள்பின்னூட்டத்தில் கும்மிடுவீங்க...அதனால் சுருக்கமாக மேட்டரை சொல்லுறன்.)///////

யோவ் மச்சன் சார், மொழி மீது நமக்கென்ன கோபம்! கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை படிச்சுப் பார்த்தேன்! எப்புடித்தான் பேசுறாய்ங்களோ?

K said...

கலகலப்பான சூப்பர் பதிவு மச்சான் சார்!

தனிமரம் said...

தம்பி ராச் வாழ்த்துக்கள் உனக்கு!
ஏன் தெரியுமா  இதுவரை நான் சகோதரமொழி என்று கூறுகின்றன் என்று செம்பு நெளித்தவர்களுக்கு நண்பன் வந்து இருக்கின்றான் என்று இனிக் காட்டலாம்!
நிற்க ஏன் சிங்களம் என்று எழுதனும் சகோதமொழி என்று எழுதிப்பாருங்கள் ஒர் ஒற்றுமை தெரியும் மொழியில்!

காட்டான் said...

மாப்பிள தலைவரின் லிங்கை கொடுத்து செம்பு நெளிவதில் இருந்து தப்பீட்டீங்க.. இதில வேற நிரூபனையும் மாட்டி விட்டுட்டீங்க.. பிழைக்கதெரியாதவனாய் இருக்கிறான் என்ர ராசுக்குட்டின்னு கவலைப்பட்டேன்... இனி தேறிடுவீங்க.. ஹி ஹி வாறேன்யா அடுத்த கொமொண்டோடு..

தனிமரம் said...

மல்லி அரகெல்லகே நமக் மட்டவித்தரக் கியண்டக் கோ!  மமத் கமத்திவெனவா எயத்தெக்க யாலுவெண்ட !முடியுமா தம்பி!ஹீ ஹீ

காட்டான் said...

சரியா போச்சுடா.. சகோதர மொழிக்காரனும் உன்னோட சேர்ந்திட்டானாய்யா.. அப்ப இண்டைக்கு செம்பு நெளியாதுன்கிறீங்க.. காப்பாத்த ஒருத்தர் இருக்கிறாரேய்யா...!!?? 

தனிமரம் said...

ஒயாவ மம அமத்தக்கவென்னா ! ஹரி லச்சன கொள்ளோ இப்படி எல்லாம் சொல்லி உங்க பார்சை காலியாக்கலையா பாஸ்!

தனிமரம் said...

தம்பி சகோதரமொழியைக் கற்காமல் இருந்த உங்களின் நண்பனின் நிலை போல் பலர் இறுதியில் மனதில் இருக்கும் ஆசையைக் கூட அட்லிஸ்ட் நட்பைக்கூட உணர்த்த முடியாத வலிகள் பலதைப் பார்த்தவன் நான்!

தனிமரம் said...

இடையில் பாருங்கள் மைந்தன் பதிவை நிறுத்தி விட்டார்,நிரூபனுக்கு வைத்தீர்கள் பாருங்கள் சைட் கேப்பில் சங்கு நீ பெரியாளுதாப்பா பதிவுலகில்!

காட்டான் said...

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியாகனும் சிக்கள அரசியல்வாதிகளை மனசில் வைத்து பார்காமல் இதை வாசித்தால்.. தமிழர்களை விட சகோதர மொழிக்காரர்கள் மொழிக்கு அப்பாற்பட்டு நட்பு பாடாட்டுவார்கள்...!!!பாழாய் போன இந்த பேரினவாதத்தை தூக்கி பிடிப்போரால்தான் பிரச்சனையே..

தனிமரம் said...

உண்மையில் வாழ்த்துக்கள் ராச் நமக்குள் இருக்கும் சில மொழி அறிவுகளை மற்றவர்கள் ஏதும் நினைப்பார்கலோ என்று பதிவுலகில் ஒதுங்காமல் நம் இயல்பான விடயங்களை சுவைபட எழுத்துருவாக்குவதற்கு! சகோதரமொழி நங்கைகளுடன் எனக்கு எப்போதும் அதிக நட்பு இருக்கு அதையும் பதிவு செய்திருக்கின்றேன்! 
மற்றமொழிகளைக் கற்றதால் தாண்டு போனவன் யாரும் இல்லை!
இன்று செம்பு நிறையப் பால்தான் மகே மல்லிட்ட எளக்கிரி தே அதனவா!

தனிமரம் said...

எப்போதும் தனிமரத்தை வம்பில் மாட்டிவிடும் காட்டான். இன்று  சொல்லி இருப்பதை நானும் வழிமொழிகின்றேன் இனவாத அரசியலில் இந்தப்பதிவையும் சேர்த்துவிடாதீர்கள்!

செங்கோவி said...

இடம், பெயரை மாத்தியாச்சா..வெரிகுட்!

செங்கோவி said...

காட்டான் மாமா, நேசனின் கருத்துகள் அருமை.

காட்டான் said...

என்னத்த சொல்ல ராசுக்குட்டி...பெருமூச்சு விடதான்யா முடியுது என்னால..!!!!!!)))ஹி ஹி

காட்டான் said...

 செங்கோவி கூறியது...
காட்டான் மாமா, நேசனின் கருத்துகள் அருமை.
ஹா ஹா ஹா.. இந்த ஒருவிஷயத்திலதான்யா இந்தாளோட நான் ஒத்து போறேன் மாப்பிள.. 

Nirosh said...

சும்மா சொல்லப்போடாது, அடியேனுக்கும் இதே அனுபவங்கள் உண்டு. நானும் கொழும்பில் வந்து படிக்கும் காலத்தில் இதே வேலையாத்தானே இருந்தோம்.. அத்தனையும் கண்முன்னே வந்தபடி உங்கள் பதிவை படித்து முடித்தேன் அருமை நண்பா...!

K.s.s.Rajh said...

@ suryajeeva கூறியது...
நிற்க
மீண்டும் நிற்க
என்று சொல்லி
நானும் அடிக்கடி நின்று கால் வலிக்குது சாமியோவ்.////

என்ன பன்னுறது பாஸ் இப்படி எல்லாம் கேட்ட போட்டாத்தான்..நெம்புநெளியாம தப்பமுடியும்...

K.s.s.Rajh said...

@ ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் கூறியது...
வணக்கம் நான் ஒரு புதுப்பதிவருங்கோ ஒவ்வொறு தளமாக போய் ஆதரவு தேடிவாரனுங்கோ.அப்படி..ஜடியாமணிதளத்திற்கு போனப்போ..உங்கள் தளத்தை பார்க்க முடிஞ்சதுங்கோ......அழகான பொண்ணை சைட் அடித்த தலைப்பை பார்த்துட்டு பாய்ந்து அடித்து ஒடிவந்தனுங்கோ......சூப்பர்..என் தளத்துக்கும் வந்து ஆதரவைத்தாங்கோ///

தரளாம் ஆதரவை ஆனால் எனக்கு உங்களில் டவுட்டு..உங்களைப்பாத்தா புதுப்பதிவர் மாதிரிதெரியலை...ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்... ///////

வணக்கம் மச்சான் சார்! இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!

இந்த வெள்ளிக்கிழமை நீங்கள் போகும் கோயிலுக்கு, அழகான.......... ஐயர் வரணும்னு வாழ்த்துறேன்! ஹி ஹி ஹி !!!///

தேங்ஸ் மச்சான் சார்..

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இந்தப்பதிவையும் காப்பி அடிக்காதீங்க ஏன் என்றால் இது தனிப்பட்ட பதிவு இதை காப்பி அடித்தால்...ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களும் உங்கள் தளமும் பல்ப்பு வாங்கிடுவீங்க....../////////

சார், ஒரு பல்ப்பு என்னவிலை சார்?///

எல்லாம் கட்டுபுடியாகும் விலைதான்

தனிமரம் said...

நன்றி  செங்கோவி ஐயா நீங்களும் தனிமரத்துடப் ஒத்துப்போவதில் !பாவம் இந்தப்பிள்ளையின் செம்பை யாரும் இதுவரை நெளிக்கவில்லை//ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நிற்க-இது ஒரு காதல் கதை இல்லை...அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதில் உள்ள சுகமே தனி.../////////

சார், சை அடிக்குறதுன்னா, ஒரு பொண்ணோட சைட்டுல , அதாவது தோள் பக்கத்தில இருந்து, நாரிப் பக்கம் வரை, அடிக்கறதா சார்?////

உங்கள மாதிரி ஆக்களுக்குத்தான் நண்பன் மைந்தன் சிவாவின் பதிவின் லிங் இனைச்சு இருக்கன் போய் வாசிச்சிட்டு வாங்க

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
எங்களுடன் கல்லூரியில் படித்த சகோதரமொழி(சிங்களம்)பொண்ணை சைட் அடித்த நினைவுதான் இந்தப்பதிவு./////////

சரியாப் போச்சு///

ஏன் சார் தப்பா?

காந்தி பனங்கூர் said...

நட்பே, படித்துவிட்டு நாளை கமெண்ட் போடுறேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. நன்றி.

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நம்ம தத்துவ மேதை.நண்பர்.மைந்தன் சிவா சொல்கின்றார்..காதலின் முதல் படிகளில் ஒன்றுதான் சைட் அடிப்பதாம்-இது பற்றி விரிவாக பார்க்க அவர் பதிவையே பாருங்க-இதான் சைட் அடித்தப் பற்றி தலைவர் எழுதின பதிவு கிளிக்(என் பதிவை வாசிட்டு அப்பறம் இங்க போங்கபா.ஹி.ஹி.ஹி.ஹி)/////

அடடா, அவரு இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறாரா? நல்லா அனுபவம் உள்ளவர் போல////
போய் வாசிச்சு பாருங்க சார் அவர்தான் எங்க எல்லோறுக்கும் முன்னோடி...

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
மீண்டும் நிற்க-நீ எப்படி தமிழனாக இருந்து கொண்டு..சகோதரமொழிப்பொண்ணை (சிங்களம்)சைட் அடிக்கலாம் என்று..என்னை கும்ம தயாராகும் நண்பர்களே.....///////

மச்சான் சார், அதுல என்ன தப்பு இருக்கு? அரசியல் வேற, அழகு வேற! அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களது துணைவியும் ஒரு சிங்களப் பெண்ணே!

ஆக, ஒன்றை இனொன்றோடு, முடிவதும் , குழப்புவதும் அழகல்லவே////

அதுசரி எனக்கு இந்த மேட்டர் தெரியாது சார்..ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
இடம் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது...//////

இது அநியாயம் சார்! பிரியா மேட்டருல பேரை மாத்தினீங்க ஓகே!

இது சிங்களப் பொண்ணுதானே! சும்மா சொல்லுங்க/////

உண்மையா சிங்களப்பொண்னுதான் சார்..

K.s.s.Rajh said...

///
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
சிவப்பு நிற டீ.சேட்டில் கருப்புகலர் ஜீன்சில்..ஒரு தாஜ்மகாலிடம் இருந்துதான் அந்தக்குரல் வந்தது.....//////

தாஜ்மஹால் வெள்ளையாத்தானே இருக்கும்? டவுட்##////

அதான்யா..அவள் உடுப்பு கலரைச்சொன்னேன் அவள் கலர்தான் தாஜ்மஹால் போல பளிங்கு...அதான் தாஜ்மஹால் என்று சொன்னன்..இனி என்ன என்ன கலர் என்று எல்லாத்தையும் விலாவாரியா சொல்ல்னுமா?புரிஞ்சுகிட்டு போங்கப்பா..

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
விட்டா சிங்கள மொழிகற்பது எப்படினு பதிவு போயிடும்போல பிறகு நீங்கள்பின்னூட்டத்தில் கும்மிடுவீங்க...அதனால் சுருக்கமாக மேட்டரை சொல்லுறன்.)///////

யோவ் மச்சன் சார், மொழி மீது நமக்கென்ன கோபம்! கஷ்டப்பட்டு அந்த வார்த்தைகளை படிச்சுப் பார்த்தேன்! எப்புடித்தான் பேசுறாய்ங்களோ?////

நீங்களா இந்த வார்த்தை பேசுறது....என்னால் நம்பவே முடியலை..

சகோதரமொழி மிகவும் அழகான மொழி மணிசார் பார்கத்தான் கஸ்டமான வார்த்தைகளாக இருக்கும் ஆனால் இலகுவில் கதைக்க கற்றுக்கொள்ளக்கூடிய மொழி

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
கலகலப்பான சூப்பர் பதிவு மச்சான் சார்//

தேங்ஸ் மச்சான் சார்..நான் கூட நினைச்சன் நெம்ப நெளிக்கப்போறாங்கனு .தப்பியாச்சு

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
தம்பி ராச் வாழ்த்துக்கள் உனக்கு!
ஏன் தெரியுமா இதுவரை நான் சகோதரமொழி என்று கூறுகின்றன் என்று செம்பு நெளித்தவர்களுக்கு நண்பன் வந்து இருக்கின்றான் என்று இனிக் காட்டலாம்!
நிற்க ஏன் சிங்களம் என்று எழுதனும் சகோதமொழி என்று எழுதிப்பாருங்கள் ஒர் ஒற்றுமை தெரியும் மொழியில்///

தாராளமாக காட்டுங்கள் பாஸ்..நான் இருக்கேன்

அப்பறம் ஏன் சகோதரமொழி என்று எழுதிவிட்டு அடைப்புக்குள் சிங்களம் என்று போட்டேன் என்றால் நிறைய நாட்டில் உள்ளவர்கள் நம் வலைப்பதிவை படிப்பாங்கதானே அவங்களுக்கு சகோதரமொழி என்றால் விளங்காதுதானே அதான் அடைப்புக்குள் சிங்களம் என்று போட்டேன்.

சகோதரமொழி என்று சொல்வதில் எவ்வளவு ஒற்றுமை தெரிகின்றது மொழியில்.

தனிமரம் said...

நண்பா நேரம் இருந்தால் இந்தப் பதிவையும் பார்த்து பின்னூட்டம் போடுங்கள்http://nesan-kalaisiva.blogspot.com/2011/06/blog-post_5454.html?m=1

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள தலைவரின் லிங்கை கொடுத்து செம்பு நெளிவதில் இருந்து தப்பீட்டீங்க.. இதில வேற நிரூபனையும் மாட்டி விட்டுட்டீங்க.. பிழைக்கதெரியாதவனாய் இருக்கிறான் என்ர ராசுக்குட்டின்னு கவலைப்பட்டேன்... இனி தேறிடுவீங்க.. ஹி ஹி வாறேன்யா அடுத்த கொமொண்டோடு////

வாங்க மாமா...என்ன செய்வது சிலர் எழுதும் பதிவுக்கு உணர்சிவசப்பட்டு கமண்டுகளை போட்டுவிடுவேன்..இனி அதல்லாம் இல்லை...எல்லோறும் போறவழியில் போவம் என்று இறங்கீட்டன்..இனி அசத்துவன் பாருங்க...

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
மல்லி அரகெல்லகே நமக் மட்டவித்தரக் கியண்டக் கோ! மமத் கமத்திவெனவா எயத்தெக்க யாலுவெண்ட !முடியுமா தம்பி!ஹீ .ஹீ/////

யோவ் பாஸ்..இப்ப தெரிஞ்சி கொண்டு என்ன செய்யப்போறீங்க.....ஆனாலும் நீங்க கேட்பதால் என் போன பதிவை வாசிங்க அதைல சொல்லி இருக்கேன் அடுத்தது என்ன பதிவு எழுதப்போறன்னு.அதில
கெல்லோ நம தீனவா.......

மற்றது இப்படி சம்பவங்கள் எழுதும்போது யாருக்கும் எதையும் சொல்லப்படாது என்று மாமா காட்டானும்.செங்கோவியரும் கடுமையா மிரட்டிவைச்சு இருக்காங்க.

நல்லவேளை நீங்க கேட்டது அவங்களுக்கு விளங்களை இல்லாட்டி நெம்பை நெளிச்சு இருப்பாங்க..ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
சரியா போச்சுடா.. சகோதர மொழிக்காரனும் உன்னோட சேர்ந்திட்டானாய்யா.. அப்ப இண்டைக்கு செம்பு நெளியாதுன்கிறீங்க.. காப்பாத்த ஒருத்தர் இருக்கிறாரேய்யா...!!??///

ஹி.ஹி.ஹி.அதான் மாமா முதல்லே கேட்டை போட்டு இருக்கன்..ஆனாலும் பயம்தான் நெளிச்சுடுவாங்களோனு அண்ணன் இருக்கார் பிரச்சனை இல்லை..

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
ஒயாவ மம அமத்தக்கவென்னா ! ஹரி லச்சன கொள்ளோ இப்படி எல்லாம் சொல்லி உங்க பார்சை காலியாக்கலையா பாஸ்////

சொனாள் சிக்குவமா சிக்குவமா நாங்க....... எப்புடி கரைக்டா சொல்லுறீங்க நிறைய அனுபவம் போல...ஹி.ஹி.ஹி.ஹி

இதைவிட இன்னும் ஒன்றும் சொன்னாள்...

.”கொச்சரகால( B)பலாப்பொருத்தி இன்னவா”

ஹி.ஹி.ஹி...நான் சிக்கலையே...

இதை பதிவில் எடிட் பன்னிவிட்டன் நீங்க (தி)ரான்சிலேட் பன்னி சொல்லிடாதீங்க...நமக்குள்ளே இருக்கட்டும்.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
தம்பி சகோதரமொழியைக் கற்காமல் இருந்த உங்களின் நண்பனின் நிலை போல் பலர் இறுதியில் மனதில் இருக்கும் ஆசையைக் கூட அட்லிஸ்ட் நட்பைக்கூட உணர்த்த முடியாத வலிகள் பலதைப் பார்த்தவன் நான்////

உண்மைதான் பாஸ் மொழி என்பது எமக்கு எங்கும் தேவையான ஒன்று..

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
இடையில் பாருங்கள் மைந்தன் பதிவை நிறுத்தி விட்டார்,நிரூபனுக்கு வைத்தீர்கள் பாருங்கள் சைட் கேப்பில் சங்கு நீ பெரியாளுதாப்பா பதிவுலகில்///

ஹி.ஹி.ஹி.ஹி ஏன் பாஸ் கோத்துவிடுறீங்க.............

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியாகனும் சிக்கள அரசியல்வாதிகளை மனசில் வைத்து பார்காமல் இதை வாசித்தால்.. தமிழர்களை விட சகோதர மொழிக்காரர்கள் மொழிக்கு அப்பாற்பட்டு நட்பு பாடாட்டுவார்கள்...!!!பாழாய் போன இந்த பேரினவாதத்தை தூக்கி பிடிப்போரால்தான் பிரச்சனையே///

உண்மைதான் மாமா..அதான் முதலிலேயே கேட்டைப்போட்டு பதிவைத் தொடங்கினேன்..சகோதரமொழி நண்பர்கள் உண்மையில் மிகுந்த நட்போடு பழகுவார்கள்....

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
உண்மையில் வாழ்த்துக்கள் ராச் நமக்குள் இருக்கும் சில மொழி அறிவுகளை மற்றவர்கள் ஏதும் நினைப்பார்கலோ என்று பதிவுலகில் ஒதுங்காமல் நம் இயல்பான விடயங்களை சுவைபட எழுத்துருவாக்குவதற்கு! சகோதரமொழி நங்கைகளுடன் எனக்கு எப்போதும் அதிக நட்பு இருக்கு அதையும் பதிவு செய்திருக்கின்றேன்!
மற்றமொழிகளைக் கற்றதால் தாண்டு போனவன் யாரும் இல்லை!
இன்று செம்பு நிறையப் பால்தான் மகே மல்லிட்ட எளக்கிரி தே அதனவா///

உண்மைதான் பாஸ்..நான் பயந்து பயந்துதான் எழுதினன் செம்பை நெளிப்பார்கள் என்று அதான் முதலில் பலமான கேட்டைப்போட்டேன் ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் இதுவை யாரும் நெம்பை நெளிக்கவில்லை...
தேங்ஸ் ஜயே...

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
எப்போதும் தனிமரத்தை வம்பில் மாட்டிவிடும் காட்டான். இன்று சொல்லி இருப்பதை நானும் வழிமொழிகின்றேன் இனவாத அரசியலில் இந்தப்பதிவையும் சேர்த்துவிடாதீர்கள்///

இதைத்தான் நானும் கேட்கின்றேன்...

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
இடம், பெயரை மாத்தியாச்சா..வெரிகுட்///

எல்லாம் உங்கள் பாடம்தான் பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
காட்டான் மாமா, நேசனின் கருத்துகள் அருமை///

உண்மைதான் பாஸ் என் செம்பு நெளியாமல் தப்பிவிட்டது..

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
என்னத்த சொல்ல ராசுக்குட்டி...பெருமூச்சு விடதான்யா முடியுது என்னால..!!!!!!)))ஹி ஹி///

எனக்கும் பெருமூச்சிதான் இதுவரை யாரும் செம்பை நெளிக்கவில்லை..இனி வராவங்க எப்படியோ............

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
செங்கோவி கூறியது...
காட்டான் மாமா, நேசனின் கருத்துகள் அருமை.
ஹா ஹா ஹா.. இந்த ஒருவிஷயத்திலதான்யா இந்தாளோட நான் ஒத்து போறேன் மாப்பிள///

ஹி.ஹி. இதுலையாவது ஒத்துப்போகுதே விடுங்க...

K.s.s.Rajh said...

Nirosh கூறியது...
சும்மா சொல்லப்போடாது, அடியேனுக்கும் இதே அனுபவங்கள் உண்டு. நானும் கொழும்பில் வந்து படிக்கும் காலத்தில் இதே வேலையாத்தானே இருந்தோம்.. அத்தனையும் கண்முன்னே வந்தபடி உங்கள் பதிவை படித்து முடித்தேன் அருமை நண்பா...///

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
நன்றி செங்கோவி ஐயா நீங்களும் தனிமரத்துடப் ஒத்துப்போவதில் !பாவம் இந்தப்பிள்ளையின் செம்பை யாரும் இதுவரை நெளிக்கவில்லை//ஹீ ஹீ///

ஏன் பாஸ் யாரும் நெளிக்கனும் என்று எதிர்பாகிறீங்களா..நீங்களே எடுத்துக்கொடுபீங்க போல...

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
நட்பே, படித்துவிட்டு நாளை கமெண்ட் போடுறேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. நன்றி///

நீங்க நேரம் கிடைகும் போது வாங்க நண்பரே

K.s.s.Rajh said...

@
Nesan கூறியது...
நண்பா நேரம் இருந்தால் இந்தப் பதிவையும் பார்த்து பின்னூட்டம் போடுங்கள்http://nesan-kalaisiva.blogspot.com/2011/06/blog-post_5454.html?m=///

இதோவாரன் பாஸ்

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
இடம் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது...//////

இது அநியாயம் சார்! பிரியா மேட்டருல பேரை மாத்தினீங்க ஓகே!

இது சிங்களப் பொண்ணுதானே! சும்மா சொல்லுங்க///

இப்ப பெயரை தெரிஞ்சுகிட்டு என்ன பன்னப்போறீங்க...போங்க மச்சான் சார்..ஏற்கனே இப்படி சம்பவங்கள் எழுதும்போது பெயர் ஊர் எல்லாம் மாத்தனும் என்று காட்டான் மாமாவும்செங்கோவி பாஸ்,சொல்லி இருக்காங்க...........ஹி.ஹி.ஹி. ஆனாலும் என் போனபதிவை வாசிங்க அதில பெயர் இருக்கு...

சுதா SJ said...

சைட் அடிக்கிறது மட்டும் அல்ல

சைட் அடிச்சதை கேட்டுக்கும் சுகம் கூட அலாதிதான் ஹீ ஹீ

மணி , காட்டான் , நேசன் கமெண்ட்ஸ் அருமை உங்க பதிவை போல

கொஞ்சம் பிஸி பாய் பாஸ்

காட்டான் said...

வாங்க மாமா...என்ன செய்வது சிலர் எழுதும் பதிவுக்கு உணர்சிவசப்பட்டு கமண்டுகளை போட்டுவிடுவேன்..இனி அதல்லாம் இல்லை...எல்லோறும் போறவழியில் போவம் என்று இறங்கீட்டன்..இனி அசத்துவன் பாருங்க...

அப்பிடி இல்ல மாப்பிள உணர்சிவசபடாம உங்க கருத்துக்கள கட்டாயம் சொல்ல வேண்டும்.... ஆமாம் சாமி போடத்தேவையில்ல.. சிலபேர்களுடைய பதிவுகளில் உங்களுக்கெதிரான கருத்துக்கள சொல்லி இருக்கிறேன்.. ஆனாலும் உங்க பதிவுக்கு வருகிறேன்தானே..எதிர் கருத்துக்கள் அந்தந்த பதிவை பொறுத்தே...

அடுத்து பொருளாதார காரணங்களுக்கா கல்வியை இடை நிறுத்தினீர்கள் என்கிறீர்கள் வருத்தமாய் இருக்கின்றது... யுத்தத்தால் கல்வியை இடை நிறுத்துவதை எம்மால் ஒன்றும் செய்யமுடியாது ஆனால் பொருளாதார காரணங்களுக்காக இப்பிடி இடை நிறுத்துபவர்களை இனங்கண்டு மதி சுதாவை போல் எழுதினால் சிலர் உதவலாம் முயற்சி செய்யுங்கள்....

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
சைட் அடிக்கிறது மட்டும் அல்ல

சைட் அடிச்சதை கேட்டுக்கும் சுகம் கூட அலாதிதான் ஹீ ஹீ

மணி , காட்டான் , நேசன் கமெண்ட்ஸ் அருமை உங்க பதிவை போல

கொஞ்சம் பிஸி பாய் பாஸ்////

தேங்ஸ் மச்சி நேரம் கிடைக்கும் போதுவாங்க..............

K.s.s.Rajh said...

@காட்டான் கூறியது...
நீங்கள் சொல்வது மிகச்சரி மாமா.உங்களைபோன்றவர்களின் ஆசி இருந்தால் நான் நிச்சயம் பதிவுலகில் கலக்குவேன்.எனக்கு நம்பிக்கை இருக்கு.

நானும் இது பற்றியோசித்தேன் யுத்தம் காரணமாக அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் கல்வியை இடைநிறுத்தியவர்களுக்கு எதாவது செய்யவேண்டும் அவர்களைப்பற்றி பதிவு ஒன்று எழுதினால் பலர் படிக்கின்ற போது அவர்களுக்கு உதவ சந்தர்ப்பம் இருக்கு..ஆனால் ஆரம்பத்தில் என்பதிவுகளை பலர் படிப்பது இல்லை..அப்படி இருக்க நான் எழுதினால் எப்படி படிப்பார்கள்.அதான் பேசாமல் விட்டுவிட்டேன்.
இப்ப நிறைய வாசகர்கள் என் பதிவை படிக்கின்ற படியால் நிச்சயமாக முயற்சி செய்கின்றேன்...இதனால் பலர் நன்மை அடைந்தால் சந்தோசம்தானே.ஆனால் இப்படி கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் சரியாக இனம்காணப்படவேண்டும்..
முயற்சிசெய்கின்றேன் பார்ப்போம்.

Anonymous said...

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…

மீண்டும் நிற்க-நீ எப்படி தமிழனாக இருந்து கொண்டு..சகோதரமொழிப்பொண்ணை (சிங்களம்)சைட் அடிக்கலாம் என்று..என்னை கும்ம தயாராகும் நண்பர்களே.....///////

மச்சான் சார், அதுல என்ன தப்பு இருக்கு? அரசியல் வேற, அழகு வேற! அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களது துணைவியும் ஒரு சிங்களப் பெண்ணே!

ஆக, ஒன்றை இனொன்றோடு, முடிவதும் , குழப்புவதும் அழகல்லவே!
//////////// அதெப்படி மணி சார் நான் சொல்ல நினைத்ததை லபுக்குன்னு சொல்லிப்புட்டிங்க )))

Anonymous said...

உங்களுக்கு மச்சம் பாஸ் )))

Anonymous said...

பட்டிங்கில் இந்தியா கலக்குது பார்ப்போம் பவுலிங் நம்ப முடியாது )))

கோகுல் said...

என்ன பிரியா வின் அழகை குப்பையில் போடும் அளவிற்கு இன்னொருவர் வந்து விட்டாரா?
ஆஹா!அடுத்த பாட சாலை நாட்கள் எப்போ?

M (Real Santhanam Fanz) said...

அருமை அருமை... பல மொழிகள் கற்றால் இப்பிடியெல்லாம் லாபம் இருக்கும்போல, இதுதான் கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்புங்குறதோட முழு அர்த்தமா?

K.s.s.Rajh said...

@ கந்தசாமி. கூறியது...
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw சொன்னது…

மீண்டும் நிற்க-நீ எப்படி தமிழனாக இருந்து கொண்டு..சகோதரமொழிப்பொண்ணை (சிங்களம்)சைட் அடிக்கலாம் என்று..என்னை கும்ம தயாராகும் நண்பர்களே.....///////

மச்சான் சார், அதுல என்ன தப்பு இருக்கு? அரசியல் வேற, அழகு வேற! அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களது துணைவியும் ஒரு சிங்களப் பெண்ணே!

ஆக, ஒன்றை இனொன்றோடு, முடிவதும் , குழப்புவதும் அழகல்லவே!
//////////// அதெப்படி மணி சார் நான் சொல்ல நினைத்ததை லபுக்குன்னு சொல்லிப்புட்டிங்க ))///

என்னமோ ஏதோ.......

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
உங்களுக்கு மச்சம் பாஸ் ))////

போங்க....பாஸ்...எனக்கு வெட்கம்..வெட்கமா.....வருது.

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
பட்டிங்கில் இந்தியா கலக்குது பார்ப்போம் பவுலிங் நம்ப முடியாது ))///

இந்தா தோத்து புட்டாய்ங்க.........

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
என்ன பிரியா வின் அழகை குப்பையில் போடும் அளவிற்கு இன்னொருவர் வந்து விட்டாரா?
ஆஹா!அடுத்த பாட சாலை நாட்கள் எப்போ?////

பாஸ் இது தொடர் இல்லை இத்தோட முடிஞ்சுட்டு.........

K.s.s.Rajh said...

@
Real Santhanam Fanz கூறியது...
அருமை அருமை... பல மொழிகள் கற்றால் இப்பிடியெல்லாம் லாபம் இருக்கும்போல, இதுதான் கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்புங்குறதோட முழு அர்த்தமா?/////

ஹி.ஹி.ஹி.ஹி

kobiraj said...

பதிவு சூப்பர் .நாங்களும் இப்ப பல்கலையில் சிங்கள பெண்களை சைட் அடித்து கிட்டுதான் இருக்கோம் .அந்த சுகமே தனி

kobiraj said...

அப்புறம் எங்கே அண்ணா சிங்களப் பெண்ணோடு படித்தீங்க .சொல்ல கூடாதா .

kobiraj said...

உங்களிடம் ஒரு கேள்வி இன்று என் பதிவில் வந்து பார்த்து விட்டு விடையை சொல்லுங்கள்

kobiraj said...

சரி எல்லாவற்றிருளும் ஓட்டு போட்டாச்சு வரட்டுமா

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
பதிவு சூப்பர் .நாங்களும் இப்ப பல்கலையில் சிங்கள பெண்களை சைட் அடித்து கிட்டுதான் இருக்கோம் .அந்த சுகமே தனி///

நடத்துங்க...நடத்துங்க.........

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
அப்புறம் எங்கே அண்ணா சிங்களப் பெண்ணோடு படித்தீங்க .சொல்ல கூடாதா ////

ஹி.ஹி.ஹி.ஹி........ஊர்பெயர் எல்லாம் சொல்லப்படாது......உங்களுக்கு தனியா சொலுறன்..ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
உங்களிடம் ஒரு கேள்வி இன்று என் பதிவில் வந்து பார்த்து விட்டு விடையை சொல்லுங்க///

சொல்லியாச்சு..சொல்லியாச்சு......

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
சரி எல்லாவற்றிருளும் ஓட்டு போட்டாச்சு வரட்டுமா////

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்...////

அப்போ அடுத்து அட்டு பெண்ணை சைட் அடித்த நினைவுகள் போட போறீங்களாண்ணே?

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்...////

அப்போ அடுத்து அட்டு பெண்ணை சைட் அடித்த நினைவுகள் போட போறீங்களாண்ணே////

வாங்க தலைவரே நீங்க என் தளத்திலா நம்பவே முடியவில்லை....போடுவம்.....சந்தர்ப்பம் கிடைத்தால் எழுதுவம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வாங்க தலைவரே நீங்க என் தளத்திலா நம்பவே முடியவில்லை..../////

ஏன்யா இப்படி, நான் என்ன கோர்ட்டா... ஜட்ஜா...? பிச்சிபுடுவேன் பிச்சி......!

M.R said...

அனுபவ பதிவு அருமை நண்பரே

M.R said...

தமிழ் மணம் ஒன்பது

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வாங்க தலைவரே நீங்க என் தளத்திலா நம்பவே முடியவில்லை..../////

ஏன்யா இப்படி, நான் என்ன கோர்ட்டா... ஜட்ஜா...? பிச்சிபுடுவேன் பிச்சி......////

ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
அனுபவ பதிவு அருமை நண்பரே////

தேங்ஸ் நண்பா

நிரூபன் said...

அடப் பாவி,

தூக்கம் வந்தால் பொண்ணுங்களைச் சைட் அடித்தால் தூக்கம் போயிடுமா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சுவாரஸ்யமான நினைவுகளைப் பதிவாக்கியிருக்கிறீங்க.

விரிவாகப் பின்னூட்டம் எழுத முடியலை.

வீக்கெண்ட் பிசியாகிட்டேன்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails