Saturday, October 01, 2011

(பகுதி-4)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க




கடந்த பதிவில்-
புஸ்பாவின் அம்மா,தங்கைச்சி,தம்பி,வந்ததில் இருந்து சுதனின் வீட்டில் சந்தோசம் இரட்டிப்பானது ஆனால் அடுத்து ஒரு புதிய பிரச்சனை இருந்தது.
அது என்ன
இனி...........


காம்னாவுடன் ஏற்பட்ட அந்த சம்பவங்களை சுதன் நினைத்துப்பார்த்தார்
காமம் தலைக்கேறிய போது சரியாக தெரிந்த அந்த சம்பவம் இப்போது தவராக தெரிந்தது தன்னை நம்பி வந்த புஸ்பாவுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி அவரை வாட்டியது...இனி காம்னாவை திரும்பிக்கூட பாப்பது இல்லை என்று முடிவுக்கு வந்தார்.....


சுதனின் குடும்பத்தில் முன்பு இரண்டு பேர் மாத்திரம் என்ற படியால் அவரது உழைப்பு போதுமானதாக இருந்தது இப்போது புஸ்பாவின் அம்மா,தம்பி,தங்கை எல்லோறும் வந்தால் சுதனின் உழைப்பு போதுமானதாக இருக்கவில்லை
ஆதனால்.இளைஞனான புஸ்பாவின் தம்பி வெள்ளையனும் சுதனுடன் சேர்ந்து வேலைக்குப்போகத்தொடங்கினான்.புஸ்பாவின் அம்மாவும்,தங்கையும்,சுதன் செட்டில் சேர்ந்தே வயல்களில் வேலை செய்தார்கள்

புஸ்பாவின் தங்கைக்கு தங்கத்திற்கு புஸ்பாவை விட இரண்டு வயதுதான் குறைவு.அவ்வளவு அழகு இல்லை என்றாலும்..அவளிலும் எதோ ஒரு வசிகரம் இருந்தது.
இதற்கு இடையில் சுதன் முன்பு 1500 ரூபாவுக்கு வாங்கிய சைக்கிள் உடைந்துவிட்டது(பழுதாகி)இதனால் அதை திருத்த நிறைய காசு தேவை என்பதால் அவர் திருத்தாமல் விட்டு விட்டார்.இதனால் ஒரு ஆத்திர அவசரத்துக்கு கூட(அவசரமான நேரங்களில்)பக்கத்துவீட்டுல சைகிள் இரவல் வாங்கிக்கொண்டுதான் போக வேண்டி இருந்தது

புஸ்பா சொன்னாங்க ஏன் சுதன் ஒரு சைக்கிள் வாங்குங்கவன்.என்ன கதைக்கிற புஸ்பா சைக்கிள் இப்ப என்ன விலை 5500 ரூபா 6000 ரூபா வரும் அவ்வளவு காசுக்கு நான் இப்ப எங்க போவது.
இந்த நேரத்தில் சுதனின் அண்ணன் முறையிலான உறவிணர் ஒருவர்..சுதனைப்பார்க்க வந்து இருந்தார் அவர் சுதனுக்கு ஒரு புதுச்சைக்கிள் வாங்கிக்கொடுத்தார்.5500 ரூபாவுக்கு அப்ப ஹீரோ ரோயல் என்று இந்தியன் தயாரிப்பில் ஒரு சைக்கிள் அப்ப வந்தது அதைத்தான் வாங்கிக்கொடுத்தார்.

சுதன் கங்கானியாக இருக்கும் செட்டில் மூக்காயி என்று ஒரு பெண் வேலைசெய்தாள் அவளும் சுதன் இருக்கும் காணியில் தான் இருந்தார்கள் அந்தப்பெண்ணின் எல்லாப் பிள்ளைகளும் கலியாணம் முடித்துவிட்டார்கள்.கடைசி மகள் ரதி மட்டும்தான் படித்துக்கொண்டு இருந்தாள்.நல்ல அழகான பெட்டை(பொண்ணு)அந்தக்காணியில் இருந்த பொண்ணுங்களில் மிகவும் அழகானவள் என்றால் அது ரதிதான்.இதனாலே அந்தக்காணியில் இருந்த பல வாலிபப்பசங்களுக்கு அவளில் ஒரு கண்.

ரதி 10ம் பகுப்பு வரை படித்தும் மூக்காயி அவள் படிப்பை நிப்பாட்டி விட்டார்
படித்தது போதும் வீட்டில இரு எப்படியும் உனக்கு ஒரு கலியாணத்தை கட்டி வைத்துவிட வேனும்.இதான் மூக்காயி அடிக்கடி ரதியிடம் சொல்லும் வார்த்தை

ரதிமேல் மூக்காயிக்கு சந்தேகம் அவள் கடைக்குபோனால் அந்தக்காணியில் இருக்கும் இளைஞர்கள் ரதியை ஏதும் பார்த்து சொன்னால்(கதைத்தால்)உடனே மூக்காயி ரதி வீட்டிற்கு வந்ததும் தும்புத்தடியால் அடிப்பாள்
ரதி எவ்வளவு கெஞ்சினாலும் அவன்கள் வந்து கதைத்தால் நான் என்ன செய்வது அம்மா.நான் கடைக்குத்தானே போனேன் நான் ஒரு பிழையும் செய்யலை அம்மா இப்படி ரதியின் தாயிடம் கதறினாலும் மூக்காயி கேட்பது இல்லை உனக்கு என்னடி கடைக்கு போகவேண்டிய தேவையிருக்கு..பேசாம சாமத்தியப்பட்ட உடனே(வயசுக்கு வந்த)சனியனைக்கட்டிக்கொடுத்து இருந்தாள் இப்படி பிரச்சனை எல்லாம் வராது.இது மூக்காயின் புலம்பல்

உண்மையில் இங்கே ரதி தவறு எதும் செய்வது இல்லை காணியில் உள்ள இளைஞர்கள் அவள்மேல் காதல் கொண்டு திரிந்தாள் அதற்கு இந்த அபலைப்பெண் என்ன செய்வாள் அழகாக பிறந்தது இவள் செய்த குற்றமா?
இதை மூக்காயி உணர்ந்து கொள்ளவில்லை.

ஊரில் எங்கள் சித்தப்பாவீட்டில் படம் போடுவார்.சுதன் அண்ணாவின் காணியில் இருக்கும் பெரும்பாலாண குடும்பங்கள் சித்தப்பா வீட்டில்தான் படம் பார்ப்பார்கள் ஏன் என்றால் ஊரில் தியேட்டர்கள் எதுவும் இல்லை எங்கள் ஊரில் மட்டும் இல்லை வன்னியில் யாழ்ப்பாணத்தில்தான் தியேட்டர்கள் உண்டு .கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் தியேட்டர்களே இல்லை ஆனால் மினி என்று சொல்லப்படும் டீவியில் அல்லது சின்ன அளவு திரைகளில் படம் காட்டும் தியேட்டர்கள் இருந்தன.அதற்கு 15 ரூபா டிக்கெட் அப்ப ஆனால் புதுப்படங்கள் வராது பழய படங்கள்தான் வரும்.ஒரு படம் ரிலீஸ் ஆகி வன்னிக்கு வர நீண்ட நாட்கள் ஆகும்
அதுவும் திரைப்படங்களில் வரும் சில காட்சிகள்,பாடல்கள் சென்சார் பண்ணியே வெளியிடப்படும் வன்னியில்அப்போது இதான் நடை முறை.

ஊருக்குள் சித்தப்பா வீட்டில் படம் போடுவதால் சுதன் அண்ணாவின் காணியில் இருந்த பலர் ஒன்று சேர்ந்து படக்கொப்பி எடுபார்கள்(வீடியோ கேசட்)அப்ப படக்கொப்பி ஒன்றின் ஒரு நாள் வாடகை 50 ரூபா.
ஒரு இரவுக்கு இரண்டு மூன்று படங்கள் ஓடும்.அதிலும் படங்களில் வடிவேல் கவுண்டமணி,போன்றோர் நகைசுவை அதிகம் உள்ள படங்கள் தான் அனேகரின் தெரிவு.
நாள் பூராகவும் வயல்களில் உழைத்து களைத்த மக்கள் சந்தோசமாக இருப்பது இப்படி படங்கள் பார்ப்பதில்தான்.

படம் பார்க்க வந்தாலும் மூக்காயி ரதியை கவனித்துக்கொண்டுதான் இருப்பார் அவள் யாருடனும் கதைக்கின்றாளா என்று.

ஊரில் பெரும்பாலும் எல்லோறும் கல்வியில் பின் தங்கியவர்கள் தான்..எங்கள் ஊரில் அப்போது பாடசாலைகளில் படித்துக்கொண்டு இருந்தது சிலர் மட்டும்தான் அதற்கு காரணம் எங்கள் ஊரில் நாலைந்து குடும்பங்களைத்தவிர மற்ற அனைவரும் பெரும்பாலும் வயல் நிலங்களில் கூலி வேலை செய்து வாழும் மக்கள் அவர்கள் அவர்கள் பிள்ளைகளை படிக்கவைப்பது இல்லை.

ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தி அழும் சத்தம் கேட்டது
(தொடரும்)


பிற்குறிப்பு -இந்தத்தொடரின் நோக்கம் இதில் வரும் மக்களை புண்படுத்துவது இல்லை..இவர்களிடையே பல பிரச்சனைகளுக்கு காரணம் இவர்கள் கல்வியில் பின் தங்கியிருந்ததே ஆகும்.ஆனால் இன்று இந்த குடும்பங்களில் இருந்தும் பல குழந்தைகள் பாடசாலைக்கு போகின்றார்கள் இவர்களது வாழ்க்கை முறை கொஞ்சம் மாறியுள்ளது.இவர்களின் குழந்தைகள் கல்வியில் வளரவேண்டும் இவர்கள் வாழ்க்கை முறை மாறவேண்டும் என்பதே என் விருப்பம்.


இன்றைய தகவல்-இளையதளபதி விஜயும் அஜித்தும் இதுவரை இணைந்து நடித்துள்ள ஒரே திரைபடம் ராஜாவின் பார்வையிலே.இந்தப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவும் நடித்து இருப்பது மேலும் சிறப்பம்சம்.ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ விஜய்தான் அஜித் சில காட்சிகளில் நடித்து இருப்பார்


இந்தப்பந்தி பதிவர்களுக்கு மட்டும் 
நண்பர் பதிவர் துஷி கேட்டு இருந்தார் ஏன் சரன்யாவை மட்டும்தான் கூட்டி வந்து கருத்துரை,ஓட்டு கேட்பியா தேவயானி எல்லாம் கூட்டி கொண்டு வந்து கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவ அப்படி இப்படி என்று கன்னாப் பின்னமாக கொந்தளிச்சி இருந்தார்.இதோ அவருக்காக தேவயாணி மேடத்தை கூட்டி வந்தாச்சி என்ன அவங்க தனியா வரமாட்டாங்களாம் குடும்பத்துடன் தான் வருவாங்களாம்


துஷியின் அழைப்பின் பேரில் வந்தாச்சு கருத்துரை,ஓட்டு மறக்கவேண்டாம்.








Post Comment

74 comments:

Mohamed Faaique said...

vadai..

Mohamed Faaique said...

இருங்க படிச்சுட்டு வர்றேன்

Mohamed Faaique said...

எப்படி பாஸ் அசராம தொடர் கதையெல்லாம் எழுதுறீங்க... என்னால நினைத்துக் கூட பார்க்க முடியாதுப்பா...
பாத்திரங்களின் அறிமுகம் நன்றாக இருந்தது..

K.s.s.Rajh said...

@ Mohamed Faaique கூறியது...
vadai..////

வைச்சுக்கோங்க...

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
இருங்க படிச்சுட்டு வர்றேன்////

வாங்க வாங்க...........

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
எப்படி பாஸ் அசராம தொடர் கதையெல்லாம் எழுதுறீங்க... என்னால நினைத்துக் கூட பார்க்க முடியாதுப்பா...
பாத்திரங்களின் அறிமுகம் நன்றாக இருந்தது./////

தேங்ஸ் பாஸ் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்தே பல கதை எழுதலாம் பாஸ்..

விடுங்க தொடர்கதை எழுதுவது எப்படினு ஒரு பதிவு போட்டா போச்சி........

SURYAJEEVA said...

கடைசி பாகத்தை எதிர்பார்த்து

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர் சுவாரஸ்யம்....

மேலும் தகவல்களுக்கு நன்றி...

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
கடைசி பாகத்தை எதிர்பார்த்து/////

ஏன் பாஸ் கதை பிடிக்கலையா.முழுமையாக இந்தக்கதையை எழுதவேண்டும் என்பதால் கொஞ்சம் நீளமாக இருக்கும் மன்னித்து பொறுமையாக படிக்கவும்.

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
தொடர் சுவாரஸ்யம்....

மேலும் தகவல்களுக்கு நன்றி..////

தேங்ஸ் பாஸ்

சுதா SJ said...

யோவ்.... இது அநியாயம், அக்கிரமம்..
தேவதை தேவயானிய கூட்டிட்டு வாயா என்றா.. தேவயானியுடன் நான்சன்ஸ் சாரி சாரி ராஜகுமாரனையுமா..! கூட்டிட்டுவாறே..
அவங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுது என்று குத்தி காட்டுறேலோ... இதுக்கு எல்லாம் நாங்க அசரமாட்டோம்...  எனக்கு ஒரு டவுட்டிய்யா... நீர் அவரு..(ராஜகுமாரன்) ஆளோ....??? எப்புடி எல்லாம் பழி வாங்கிறாங்கையா.... அவ்வ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.... இது அநியாயம், அக்கிரமம்..
தேவதை தேவயானிய கூட்டிட்டு வாயா என்றா.. தேவயானியுடன் நான்சன்ஸ் சாரி சாரி ராஜகுமாரனையுமா..! கூட்டிட்டுவாறே..
அவங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுது என்று குத்தி காட்டுறேலோ... இதுக்கு எல்லாம் நாங்க அசரமாட்டோம்... எனக்கு ஒரு டவுட்டிய்யா... நீர் அவரு..(ராஜகுமாரன்) ஆளோ....??? எப்புடி எல்லாம் பழி வாங்கிறாங்கையா.... அவ்வ்//////

அவருதான் கூடவே வந்தாரு தன் காதல் மனைவிமேல அம்புட்டு பாசமாம்...ஹி.ஹி.ஹி.ஹி..இதில் உள்குத்து ஒன்றும் இல்லை....ஹி.ஹி.ஹி.ஹி

காட்டான் said...

ராசுக்குட்டி இன்னைக்கு உனக்கு மைனஸ் ஓட்டு நிச்சயம்...!!!!! ஹி ஹி பின்ன தேவயானி போட்டோ போட்டீங்க சரி ஏன்யா ராஜகுமாரனையும் சேர்த்து போட்டீங்க..!!?? இப்ப மருமோன் கடுப்பாகப் போறான்யா...!!!?))))

சுதா SJ said...

கதை விறு விறுப்புத்தான் பாஸ்  ஆனா இந்த அத்தியாயம் தான் கொஞ்சம் இழுவை....  தொடர்ந்து கலக்கலா கொண்டு போவீங்க என்று நம்புறேன்...

செக்ஸ் அண்டி காம்னாவை இந்த அத்தியாயத்தில் காட்டாமைக்கு என் வண்மையான கண்டனங்கள்.

கதையின் நடை எதார்தம் பாஸ்.. 

ஒவ்வொரு கதாபத்திரத்தையும் உயிரோட்டமாய் அறிமுகம் செய்து அவர்களை கண் முன் நிறுத்துகிறீர்கள்.

இத்தொடர்
பல அத்தியாயங்கள் வந்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

காட்டான் said...

பாத்தியாடா அதுக்குள்ள வந்திட்டான்யா அப்ப நான் சொன்னது சரியாதான் போச்சு...ஹி ஹி

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

விடுங்க பாஸ் தேவையானி பொண்ணு இன்னும் கொஞ்ச காலத்துல நடிக்க வந்தால் அவங்க ரசிகர் ஆகிட்டா போச்சு...

சுதா SJ said...

யா.. யா....
காட்டான் மாமா சொன்னது போல் மைனஸ் ஓட்டு நிச்சயம்...

தேவயானிக்கு பக்கத்தில் அந்தாளை பார்க்க பார்க்க என் வயிறு எரியுதையா........
அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
ராசுக்குட்டி இன்னைக்கு உனக்கு மைனஸ் ஓட்டு நிச்சயம்...!!!!! ஹி ஹி பின்ன தேவயானி போட்டோ போட்டீங்க சரி ஏன்யா ராஜகுமாரனையும் சேர்த்து போட்டீங்க..!!?? இப்ப மருமோன் கடுப்பாகப் போறான்யா...!!!?)))//////

இதுவரை எனக்கு ஒரே ஒரு மைனஸ் ஓட்டுதான் வந்து இருக்கு....நீங்க சொல்லுறதைப்பாத்தா துஷி அந்த பட்டியலில் சேர்ந்துடுவாரோ...ஹி.ஹி.ஹி.ஹி...

காட்டான் said...

எப்பிடியோ எக்கச்சக்க பொட்டைகள கதையில சேர்த்துக்கொண்டு வாராய் இது எல்லாம் கில்மா வேலைக்குதான்னு நினைக்கிறேன்..!!!! இப்பிடியே போனா உன்னை கில்மா பதிவர்ன்னு சொல்லிடுவாங்கையா கவனம்... ஹி ஹி

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
கதை விறு விறுப்புத்தான் பாஸ் ஆனா இந்த அத்தியாயம் தான் கொஞ்சம் இழுவை.... தொடர்ந்து கலக்கலா கொண்டு போவீங்க என்று நம்புறேன்...

செக்ஸ் அண்டி காம்னாவை இந்த அத்தியாயத்தில் காட்டாமைக்கு என் வண்மையான கண்டனங்கள்.

கதையின் நடை எதார்தம் பாஸ்..

ஒவ்வொரு கதாபத்திரத்தையும் உயிரோட்டமாய் அறிமுகம் செய்து அவர்களை கண் முன் நிறுத்துகிறீர்கள்.

இத்தொடர்
பல அத்தியாயங்கள் வந்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்////

தேங்ஸ் பாஸ்

ஏன் இந்த அத்தியாயம் கொஞ்சம் இழுவை என்றால் முழுமையாக அனைத்தையும் உள்ளடக்கவேண்டும் என நினைத்தேன் இனி கவனத்தில் எடுக்கிறேன்.........

அப்பறம் காம்னா கதையில் மிகமுக்கிய பாத்திரம் அவங்க இல்லாமலா வருவாங்க வெயிட்டிங்

சுதா SJ said...

தேவயானி பொண்ணுங்க

இனியா & பிரியங்கா வுக்கு இப்பவே நான் துண்டை போட்டுட்டேன்...  ஜடியா மணி கவனிக்கா  ( இந்தாளிட்ட இருந்து பொண்ணுங்களை காப்பாற்றுறதுதான் பெரிய வேலையய்யா... அவ்)

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
பாத்தியாடா அதுக்குள்ள வந்திட்டான்யா அப்ப நான் சொன்னது சரியாதான் போச்சு...ஹி ஹி////

ஆமா மாம்ஸ் துஷி கோபமாத்தான் வந்து இருக்காரு

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
யா.. யா....
காட்டான் மாமா சொன்னது போல் மைனஸ் ஓட்டு நிச்சயம்...

தேவயானிக்கு பக்கத்தில் அந்தாளை பார்க்க பார்க்க என் வயிறு எரியுதையா........
அவ்வ்வ்வ்////

விடுங்க பாஸ் அவங்க பொண்ணு நடிக்க வரும் போது..அவங்களை ரசிக்களாம்.

சுதா SJ said...

நன்பா.. ராஜ்,
நீ தேவயானியை கூட்டி வந்த தால அந்த சரண்யா புள்ள சதி செய்யுது போல..
தமிழ் மணம்  இட்ணி  ஓட்டு போட முடியவில்லை கவனியுங்க பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
எப்பிடியோ எக்கச்சக்க பொட்டைகள கதையில சேர்த்துக்கொண்டு வாராய் இது எல்லாம் கில்மா வேலைக்குதான்னு நினைக்கிறேன்..!!!! இப்பிடியே போனா உன்னை கில்மா பதிவர்ன்னு சொல்லிடுவாங்கையா கவனம்... ஹி ஹி///

ஆமா பாஸ் கடந்த சில பதிவுகளில் கொஞ்சம் ஓவரா போய்ட்டன் போல

ஆனால் இதில் அறிமுகமான பொண்ணு ரதி கதையில் முக்கிய பாத்திரம்....

அவர்களின் வாழ்க்கையை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன் அதனால்தான் எல்லாப்பாத்திரங்களையும் உள்ளே கொண்டுவாரன்

Anonymous said...

சுதனுக்கு மறுபடியும் ஒண்ணு பிக்கப் ஆகிடிச்சா ???)))

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
தேவயானி பொண்ணுங்க

இனியா & பிரியங்கா வுக்கு இப்பவே நான் துண்டை போட்டுட்டேன்... ஜடியா மணி கவனிக்கா ( இந்தாளிட்ட இருந்து பொண்ணுங்களை காப்பாற்றுறதுதான் பெரிய வேலையய்யா... அவ்///

ஆமா பாஸ் ஜடியா மணி முந்திடப்போறார்

Anonymous said...

தொடர்ந்து எழுது மச்சி ...

சுதா SJ said...

ஹும்.......
நடிகைங்க எல்லாம் தான் கல்யாணம் கட்டுது...  நடிகைங்க எல்லாம் தான் புருஷன் கூட சண்டை போடுது... நடிகைங்க எல்லாம் தான் புருஷன டிவோர்ஸ் பண்ணுது... நடிகைங்க எல்லாம் தான் மறு திருமணம் செய்யுது...
இது எல்லாம் நடந்தும் என்ன பிரயோஷனம்....   நம்ம ஆளு அசருது இல்லையே..... அவ்வ்

இருந்தாலும் இன்னும் நம்பிக்கையுடன் இளவுகாத்த கிளியாக நான்..

என் ஆசை ஒரு நாள் நிறைவேறுமையா....

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
நன்பா.. ராஜ்,
நீ தேவயானியை கூட்டி வந்த தால அந்த சரண்யா புள்ள சதி செய்யுது போல..
தமிழ் மணம் இட்ணி ஓட்டு போட முடியவில்லை கவனியுங்க பாஸ்///

பாஸ் இண்ட்லியை கிளிக் பண்ணினால் அது அடுத்த பக்கம் ஓப்பின் ஆகி ஓட்டு தானா சேர்ந்திடும்,தமிழ் மணம் என்ன பண்ணுதுனு தெரியலை பாக்குறன் பொறுங்க...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
சுதனுக்கு மறுபடியும் ஒண்ணு பிக்கப் ஆகிடிச்சா ???))///
இல்லை பாஸ் ரதிக்கு வேற ஒரு கதையிருக்கு..

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
தொடர்ந்து எழுது மச்சி ..////

தேங்ஸ் பாஸ்

சுதா SJ said...

இனி வரும் அத்தியாயங்களில்
ரதி கொடி தான் பறக்கும் என்று நினைக்கிறேன்..

நான் இப்பவே ரதிக்கு துண்டை போட்டுட்டேன்.. ஹீ ஹீ
நாம எல்லாம் உசாரைய்யா...

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ஹும்.......
நடிகைங்க எல்லாம் தான் கல்யாணம் கட்டுது... நடிகைங்க எல்லாம் தான் புருஷன் கூட சண்டை போடுது... நடிகைங்க எல்லாம் தான் புருஷன டிவோர்ஸ் பண்ணுது... நடிகைங்க எல்லாம் தான் மறு திருமணம் செய்யுது...
இது எல்லாம் நடந்தும் என்ன பிரயோஷனம்.... நம்ம ஆளு அசருது இல்லையே..... அவ்வ்

இருந்தாலும் இன்னும் நம்பிக்கையுடன் இளவுகாத்த கிளியாக நான்..

என் ஆசை ஒரு நாள் நிறைவேறுமையா...///

ஏன்யா குடும்பத்தில் கும்மி அடிக்க பாக்குறீங்க...அவங்க காதலுக்கு மரியாதை கொடுப்பவங்க..

சுதா SJ said...

அப்போ என் காதலுக்கு என்னைய்யா... மரியாதை..?????????

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
இனி வரும் அத்தியாயங்களில்
ரதி கொடி தான் பறக்கும் என்று நினைக்கிறேன்..

நான் இப்பவே ரதிக்கு துண்டை போட்டுட்டேன்.. ஹீ ஹீ
நாம எல்லாம் உசாரைய்யா.////

நீங்க எல்லாத்திலும் லேட் ரதியும் உங்க தேவயானி மாதிரித்தான்(அழகில் இல்லை)நானும் அழகில் தேவயானியை விட்டு கொடுக்க மாட்டன்..ஹி.ஹி.ஹி.ஹி

சுதா SJ said...

யோவ்..... நீ ராஜகுமாரன் ஆளையா, நல்லா தெரிஞ்சு போச்சு...... அவ்வ்


மச்சான் வேலைக்கு டைம் ஆச்சு..
மிச்சத்துக்கு இரவுக்கு வாறேன்...
ஓட்டும் இரவுதான் மச்சி 
இப்போ போனில் இருக்கேன் 
சோ பாய் மச்சான்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அப்போ என் காதலுக்கு என்னைய்யா... மரியாதை..????????////

யோய் கொஞ்சம் அடக்கி வாசிங்க உங்க ஆளு எதும் நம்ம பதிவை படிச்சி இந்த கமண்ட் எல்லாம் படித்தா அப்பறம்...உங்கள் நிலைமையை யோசிச்சு பாருங்க...ஹி.ஹி.ஹி.ஹி

அடுத்த ஜென்மம் என்று ஒன்னு இருந்தா தேவயானியை பாப்போம் சாரி..சாரி பாருங்க

சுதா SJ said...

என்னது ரதியும் நமக்கு அல்வா தர போறாலா.. அவ்வ்வ்

அப்புறம்..
தேவயானி மேலே நீரும் ஒரு இதாத்தான் இருகீர் என்று எனக்கும் ஒரு புலனாய்வு தகவல் கிடைச்சு இருக்கு,
பேஸ்வுக்கில் எல்லாம் தேவயானிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறீராமே...!!

மக்கா... எனக்கு ராஜகுமாரன் என்று ஒரு வில்லன் தான் என்று நினைச்டுட்டு இருக்கேன்.... வேணாம் இப்பவே சொல்லீட்டேன்.. பிச்சுப்புடுவேன் பிச்சு 

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்..... நீ ராஜகுமாரன் ஆளையா, நல்லா தெரிஞ்சு போச்சு...... அவ்வ்


மச்சான் வேலைக்கு டைம் ஆச்சு..
மிச்சத்துக்கு இரவுக்கு வாறேன்...
ஓட்டும் இரவுதான் மச்சி
இப்போ போனில் இருக்கேன்
சோ பாய் மச்சான்////

ஓக்கே பாஸ் இரவுக்கு வாங்க..நமக்கு நடுச்சாமமாக இருக்கும்..
நான் ராஜகுமாரன் ஆள் இல்லை நம்புங்கப்பா...

சக்தி கல்வி மையம் said...

தகவலுக்கு நன்றிகள்...

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
என்னது ரதியும் நமக்கு அல்வா தர போறாலா.. அவ்வ்வ்

அப்புறம்..
தேவயானி மேலே நீரும் ஒரு இதாத்தான் இருகீர் என்று எனக்கும் ஒரு புலனாய்வு தகவல் கிடைச்சு இருக்கு,
பேஸ்வுக்கில் எல்லாம் தேவயானிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறீராமே...!!

மக்கா... எனக்கு ராஜகுமாரன் என்று ஒரு வில்லன் தான் என்று நினைச்டுட்டு இருக்கேன்.... வேணாம் இப்பவே சொல்லீட்டேன்.. பிச்சுப்புடுவேன் பிச்சு////

தேவயானி பிறந்த நாள் அன்றுதான் டாகுத்தருக்கும் பிறந்த நாள் அவருக்கு வாழ்த்து போடும் போது தேவயானிக்கும் போட்டேன் யோவ் அன்னைக்கு நீங்க தேவயானி பத்தி எழுதின பதிவை பகிர்ந்தும் இருக்கேன் பாருங்க....

நீங்க அப்ப எனக்கு அறிமுகம் கூட இல்லை உங்கள் பதிவுகளை நான் படிக்கத்தொடங்கியது அந்தப்பதிவுக்கு பிறகுதான்யா சுருக்கமாக சொன்னா தேவயானிதான் நம்மளை இணைச்சு இருக்காங்க..ஹி.ஹி.ஹி.ஹி..

M.R said...

கதை அருமை நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
தகவலுக்கு நன்றிகள்..////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கதை அருமை நண்பரே ,பகிர்வுக்கு நண்பரே////

தேங்ஸ் பாஸ்

Mathuran said...

போற போக்க பார்த்தா சுதன் கிருஷ்னன் ஆகிடுவார் போல இருக்கே

Mathuran said...

@துஷ்யந்தன்
துஷி.. பிரான்ஸில நெட்வேர்க் கட்டோ... ஹி ஹி

தனிமரம் said...

யோ ராச் நீ முதலில் ராஜவின் பார்வையில் ஒழுங்காப் பாத்தியா முதலில் பாரு இரவு வாரன் கும்மியடிக்க உனக்கு தல கண்ணுக்குத் தெரியல மைனஸ் ஓட்டு நிச்சயம் இப்ப வேலையில் பிஸி பின்னான் வாரன் தனிமரம் சும்மாவிடாது பிச்சுப்போடுவன் பிச்சு!

தனிமரம் said...

அழகான தொடர் கதை இதன் தாற்பரியத்துடன் அங்காங்கே நிகழ்லும் கிராமிய நடைமுறைச் சிக்கல்களை விறுவிறுப்பாக சொல்லும் நடை சிறப்பானது ராச்!

தனிமரம் said...

நீங்கள் சொல்லும் கிராமத்தை இன்னும் சீரலித்ததில் இந்த திரைப்படங்களும் ஒரு காரணி!

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
போற போக்க பார்த்தா சுதன் கிருஷ்னன் ஆகிடுவார் போல இருக்கே////

நீங்களா ஏன்யா முடிவு பண்ணுறீங்க..பொறுமை பொறுமை...

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
@துஷ்யந்தன்
துஷி.. பிரான்ஸில நெட்வேர்க் கட்டோ... ஹி.ஹி////

ஆமா பாஸ் அவரு ஓடிட்டாரு...

தனிமரம் said...

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கின்றேன்!

 டாக்குத்தர் இந்தப்படத்தில் நடித்தாலும் கதையைத் தாங்கி கதைப் போக்கை நிர்னைக்கும் பாத்திரம் அஜித்குமாரின் நடிப்பு அழகான இசை ராசாவின் அம்மன் கோயில் வாசல் எல்லாம் மறக்கமுடியாத பாடல்!

Mathuran said...

யோவ்,, அந்த படத்தில் அஜித் 15 நிமிசம்தான் வருவார். அதுவும்..... வேணாம் விட்டிருங்க

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
யோ ராச் நீ முதலில் ராஜவின் பார்வையில் ஒழுங்காப் பாத்தியா முதலில் பாரு இரவு வாரன் கும்மியடிக்க உனக்கு தல கண்ணுக்குத் தெரியல மைனஸ் ஓட்டு நிச்சயம் இப்ப வேலையில் பிஸி பின்னான் வாரன் தனிமரம் சும்மாவிடாது பிச்சுப்போடுவன் பிச்சு////

பாஸ் நான் பார்த்துட்டன்..நீங்க டாகுத்தரை கும்ம நினைச்சு என்னை படம் பாக்க சொல்லவேண்டாம் டாகுத்தர் படம் எல்லாம் ஒரு தடவை பாக்குறதே பெரிய விடயம் இன்னும் ஒரு தடவை பாக்க முடியாது..ஹி.ஹி.ஹி.ஹி

மேல பாருங்க விஜயும் அஜித்தும் நடிச்ச படம் என்றுதான் போட்டு இருக்கேன் அதைவிட அந்தப்படத்தில் டாகுத்தர் தான் ஹீரோ..தல கிட்டத்தட்ட 20 நிமிடம்கள் தான் வருவார்..படத்தில் ஒரு பெண்ணைக்காதலிச்சு இறந்து போகும் பாத்திரத்தில் பிரமாதமாக நடிச்சு இருப்பார்..வடிவேல் டீச்சரை லவ் பண்ணும் மாணவராக நடிச்சு இருப்பார்...
இந்த டீட்டேல் போதுமா ஹீ.ஹீ.ஹீ.ஹீ..

நான் டாகுத்தர் ரசிகனும் இல்லை தல ரசிகனும் இல்லை(ஸ்சப்பா தப்பிச்சாச்சு)

டாகுததர் பெயரை எடுத்தாலே என்னாமா கொந்தளிக்குறாங்க....அவ்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
யோவ்,, அந்த படத்தில் அஜித் 15 நிமிசம்தான் வருவார். அதுவும்..... வேணாம் விட்டிருங்க////

ஆமா பாஸ் நான் படம் பாக்கலை என்று சொல்லுறார் பாருங்க...

K.s.s.Rajh said...

@, 2011 7:28 pm


தனிமரம் கூறியது...
அடுத்த பாகத்திற்கு காத்திருக்கின்றேன்!

டாக்குத்தர் இந்தப்படத்தில் நடித்தாலும் கதையைத் தாங்கி கதைப் போக்கை நிர்னைக்கும் பாத்திரம் அஜித்குமாரின் நடிப்பு அழகான இசை ராசாவின் அம்மன் கோயில் வாசல் எல்லாம் மறக்கமுடியாத பாடல்///

ஆமா சார் அருமையான் பாடல் ஆனால் டாகுதர்தான் ஹீரோ ஏற்றுக்கொள்ளத்தான் வேனும் இதனால் நான் டாகுத்தர் ரசிகன் இல்லை உங்களுக்கே தெரியும்..ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அழகான தொடர் கதை இதன் தாற்பரியத்துடன் அங்காங்கே நிகழ்லும் கிராமிய நடைமுறைச் சிக்கல்களை விறுவிறுப்பாக சொல்லும் நடை சிறப்பானது ராச்.////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நீங்கள் சொல்லும் கிராமத்தை இன்னும் சீரலித்ததில் இந்த திரைப்படங்களும் ஒரு காரணி////

உண்மைதான் பாஸ்

சென்னை பித்தன் said...

அருமையாப் போகுது!

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
அருமையாப் போகுது/////

நன்றி ஜயா.

குறையொன்றுமில்லை. said...

தொடர் சுவார்சியமா போகுது. தொடருங்க.

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
தொடர் சுவார்சியமா போகுது. தொடருங்க/////

தேங்ஸ் மேடம்

தனிமரம் said...

மதுரன் "(பகுதி-4)என் உயிர் நீ தானே....." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்: 

யோவ்,, அந்த படத்தில் அஜித் 15 நிமிசம்தான் வருவார். அதுவும்..... வேணாம் விட்டிருங்க 

ஒரு கருத்துரையை சேர் 

இந்த இடுகைக்கான கருத்துரைகளிலிருந்து குழு சேர்தலை நீக்கு. 

1 அக்டோபர், 2011 7:39 pm அன்று nanparkal/நண்பர்கள் இல் மதுரன் ஆல் உள்ளிடப்பட்டது//  
யோ மதுரா நீ திருட்டு வீசிடி பார்த்திருக்கிறார் தல படத்தில் 17 நிமிடல் 37 செக்கன் வருவார் இடையில்  திருட்டு தம் அடிக்கப் போனால் இப்படித்தான் மாப்பூ!
 ராச் படத்தில் உங்கடாக்குத்தர் சேற்றில் விழும் சீன் மறந்திடலைத்தானே! ஹீ

நிரூபன் said...

பாஸ்..

கதை சுவாரஸ்யமாக நகர்ந்திருக்கிறது,

சஸ்பென்ஸ் வைத்து இந்தப் பாகத்தை முடித்திருக்கிறீங்க.

மூக்காயிக்கு ஏதும் ஆகியிருக்கும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

அடுத்த பாகத்தில் பார்ப்போம்...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பாஸ்..

கதை சுவாரஸ்யமாக நகர்ந்திருக்கிறது,

சஸ்பென்ஸ் வைத்து இந்தப் பாகத்தை முடித்திருக்கிறீங்க.

மூக்காயிக்கு ஏதும் ஆகியிருக்கும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

அடுத்த பாகத்தில் பார்ப்போம்..//////

வெயிட்டிங்...வெயிட்டிங்..............

மாய உலகம் said...

ஹா ஹா என்னய்யா தேவயாணிய குடும்பத்தோட கூப்பிட்டு வந்திருக்க.. ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுதன் மறுபடி களத்துல இறங்கிட்டாரு போல?

Yoga.s.FR said...

கதை தெளிந்த நீரோடை போல் அழகாகச் செல்கிறது.வாழ்த்துக்கள்!

F.NIHAZA said...

கதை நல்லா இருக்கு...
பிற்போக்கு சமுகமொன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி நல்லது சகோ...

கூற்றுக்களுக்கு...மேற்கோள் இட்டால் இன்னும் நன்றாக இருக்கும்...

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
ஹா ஹா என்னய்யா தேவயாணிய குடும்பத்தோட கூப்பிட்டு வந்திருக்க.. ஹா ஹா/////

துஷி அசைப்பட்டார் அதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சுதன் மறுபடி களத்துல இறங்கிட்டாரு போல////

அவரு அப்படித்தான்..

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
கதை தெளிந்த நீரோடை போல் அழகாகச் செல்கிறது.வாழ்த்துக்கள்/////

நன்றி ஜயா..

K.s.s.Rajh said...

@
F.NIHAZA கூறியது...
கதை நல்லா இருக்கு...
பிற்போக்கு சமுகமொன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி நல்லது சகோ...

கூற்றுக்களுக்கு...மேற்கோள் இட்டால் இன்னும் நன்றாக இருக்கும்..//////

நன்றி சகோதரி கவனத்தில் எடுக்கின்றேன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails