Tuesday, August 23, 2011

தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)

வணக்கம் அன்பு நண்பர்களே நான் என்னதான் காதல்,சினிமா,மொக்கை,போன்ற பல்சுவைப்பதிவுகள் எழுதினாலும்.அதிகம் ஹிட்ஸ் ஆவது என்னமோ என் கிரிக்கெட் பதிவுகள்தான்.தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் எழுதியதால் அதற்கு கொஞ்சம் இடைவேளைவிட்டு மற்ற பதிவுகளை எழுதினேன்



.ஆனாலும் என் அருமை நண்பர்களான எனது வலைப்பதிவை படிக்கும் நண்பர்கள்.பேஸ்புக்கிலும்.மின்னஞ்சல் வாயிலாகவும் எங்க கிரிக்கெட் பதிவுகளைக்காணவில்லையே என்று உரிமையுடன் என்னிடம் கேட்டு இருந்தார்கள்.இது எனக்கே ரொம்ப அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.ஏன் என்றால் என்னை விட நன்றாக கிரிக்கெட்பதிவுகள் எழுதக்கூடிய வலைப்பதிவாளர்கள் பலர் இருக்கின்ற இந்த வலைப்பதிவுலகில்.என்னையும் ஒரு பதிவராக மதிச்சு கிரிக்கெட் பதிவுகள் கேட்கின்றார்களே இது போதும் நான் வலைப்பதிவு எழுதவந்தற்கு.ஆனாலும் நான் ஒன்று சொல்கின்றேன் கிரிக்கெட் பதிவுகள் எழுதும் பல திறமையான வலைப்பதிவாளர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் கடல் என்றால் நான் சிறுதுளி நீர்தான்.உங்கள் ஆதரவுதான் நான் இன்னும் வளர உதவும்.


சரிபதிவுக்கு வருவோம்
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 8 ஒட்டங்களால் படுதோல்வி அடைந்து 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.தோனி இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்றதன் பின் இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி இது.இப்படி ஒரு டெஸ்ட் தொடர் தோல்வியை நான் இந்திய அணியிடம் எதிர்பார்த்தேன்.அது சச்சின்,லக்ஸ்மன்,ராவிட்,போன்றோரின் ஓய்வுக்குப்பிறகு.ஆனால் அவர்கள் விளையாடும் போது இப்படி ஒரு தோல்வி ஏற்பட்டு விட்டது.குறிப்பிடத்தக்கது.
இது ஏன் ஆராய முதல் இந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்கோரை பார்த்துவிடுவோம்

இங்கிலாந்து முதல் இனிங்ஸ்
முதலில் துடுப்பெடுத்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் இடைக்கிடையே மழை குறுக்கிட்டாலும் வழமை போல் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இந்தியப்பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.இயன் பெல் 235 ஓட்டங்களைப்பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டைச்சதத்தை பூர்த்தி செய்தார்.இதற்கு முன் அவர் அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக 199 ஒட்டங்களைப்பெற்று இருந்ததே அவரது அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்கள் ஆகும்.

இவருக்கு அடுத்த படியாக கெவின் பீட்டர்சன் 175 ஒட்டங்களை விளாசினார்.
இதனால் இங்கிலாந்து அணி 591ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து டிக்கிளேயர் செய்தது.பந்து வீச்சில் நீண்ட காலத்துக்குப்பின் இந்திய அணிக்கு திரும்பிய ஆர்.பி.சிங் நல்லா வாங்கிக்கட்டினார் 34 ஓவர்கள் பந்துவீசிய அவர் 118 ஒட்டங்களைவிட்டுக்கொடுத்து எந்த விக்கெட்டுக்களைவும் வீழ்தவில்லை.
சிறிசாந்-3 விக்கெட்டுக்களையும்,பகுதி நேரப்பந்து வீச்சாளரான சுரேஸ் ரெய்னா-2 விக்கெட்டுக்களையும்,இஷாந் சர்மா-1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இன்னும் ஒரு சுழல் பந்து வீச்சாளரான அமிர்த்மிர்ஷா எந்த ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தவில்லை.
சுரேஸ் ரெய்னா வீழ்த்திய இரண்டு விக்கெட்டுக்களும் மிகவும் முக்கிய விக்கெட்டுக்கள்,235 ஒட்டங்களைப்பெற்ற இயன் பெல்லின் உடைய விக்கெட்டும்,175 ஓட்டங்களைப்பெற்ற கெவின் பீட்டர்சன் உடைய விக்கெட்டும் ஆகும்.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி செய்யப்பட்டுள்ளது.
தலையில துண்டைப்போட வச்சுட்டாங்களே பயபுள்ளைகள்

இந்திய அணி துடுப்பாட்டம் /ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி 
தொடர்ந்து தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் கம்பீர் காயம் காரணமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக விளையாடவில்லை,இதனால் சேவாக்குடன் ராகுல் ராவிட் ஆரம்பத்துடுபாட்ட வீரராக களம் இறங்கினார்.வழமைபோல இந்திய வீரர்கள் வருவதும் விக்கெட்டை தாரைவார்ப்பதுமாக இருந்தனர்.வேவாக்-8,லக்ஸ்மன் -2,சச்சின் -23,ரெய்னா-0,தோனி-17,காயம் காரணமாக பின் வரிசையில் வந்த கம்பீர்-10,ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்.இந்திய வீரர்கள் இந்திய அணியின் வெற்றியை தாரைவார்க்க தயார்ஆனார்கள்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இந்திய அணியைத் தன் தோள்களில் தாங்கும் இந்திய அணியின் சுவர்

ஆனால் வழமைபோல் இந்திய அணியை தன் தோள்களில் தாங்கும் இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படுகின்ற ராகுல் ராவிட்.தனியாக போராடி இந்திய அணியின் மாணத்தைக்காப்பாற்றினார்.
அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட சுழல் பந்து வீச்சாளர் அமிர்த்மிர்ஷா,43 ஓட்டங்களையும்,அதிரடியாக ஆடிய ஆர்.பி.சிங் 25 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.இதனால் இந்திய அணியின் முதல் இனிங்ஸ் 300 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது.இந்திய அணி பலோஒன் ஆனது.தனியாக போராடிய சுவர் ராவிட்,378 நிமிடம் களத்தில் நின்று 266 பந்துகளை சந்தித்து 20 பவுண்ரிகளுடன் ஆட்டம் இழக்காது-146 ஒட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து தரப்பில்,கிரேம் ஸ்வான் -3,பிரஸ்னன்-3,ஸ்டூவட் பிராட்-2,அண்டர்சன் -2,விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தியா பலோஒன்
இந்தியா பலோஒன் ஆகியதால்.இங்கிலாந்து கேப்டன் ஸ்ரோரஸ் இந்தியாவுக்கு பலோஒன்னை வழங்கினார்.இதனால்.291 ரன் பின்னிலையில் தொடர்ந்து இரண்டாவது இனிங்சை ஆடிய இந்திய அணி.இரண்டாவது இனிங்சிலும் சொதப்பியது.ஆரம்பத்துடுபாட்டவீரராக தொடர்ந்து களத்தில்லேயே நின்று இரண்டாவது இனிங்சையும் ஆடிய ராவிட்-13 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து விட்டார்,இந்திய அணிக்கு இருந்த ஓரே ஒரு நம்பிக்கையும் தகர்ந்தது.வழமையான தனது அதிரடியை தொடக்கிய சேவாக்-33 ரன்னில் ஆட்டம் இழந்தார்,பிறகு என்ன வழமையானதுதான் இந்திய துடுப்பாட்டவீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்,லக்ஸ்மன்24,ரெய்னா-0,தோனி-3,கம்பீர்-3.
ஆனால் ராவிட்டும் ஆரம்பத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியதனால்.தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய மாஸ்டர்(சச்சின்)91 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்-9 ஓட்டங்களால் சர்வதேசப்போட்டிகளில் தனது 100வது சதத்தை தவறவிட்டார்.ஆனால் இதற்கு கவலை அடையத்தேவைஇல்லை ஏன் என்றால் சச்சின் 90களில் ஆட்டம் இழப்பது இது முதன் முறை இல்லை.சச்சினுக்கு பக்க பலமாக செயற்பட்ட சுழல் பந்து வீச்சாளர் அமிர்த்மிர்ஷா-84 ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்.இவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் வரை இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.ஆனாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் முன்பு.இவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.கடைசியில் இந்திய அணி இரண்டாவது இனிங்சிலும்.283 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையுள் இழந்து.ஒரு இனிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.கடந்த 3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி இனிங்ஸ்தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.சகிர்கான் விளையாடாத நிலையில் அவரது இடத்தை நிரப்பிவந்த பிரவின் குமாரும் காயம் காரணமாக இந்தப்போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்புத்தான்.
பந்து வீச்சில் இங்கிலாந்து தரப்பில்-கிரேம் ஸ்வான் -6 விக்கெட்டுக்களையும்,ஸ்டூவர் பிராட்-2 விக்கெட்டுக்களையும்,அண்டர்சன் -1 விக்கெட்டையும்,பிரஸ்னன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை முழுமையாக 4-0 என்றக்கணக்கில் கைப்பற்றியது.
இந்தப்போட்டியின் ஆட்ட நாயகனாக-இயன் பெல்லும்,இந்தத்தொடரின் ஆட்ட நாயகனாக-இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவட் பிராட்டும்,இந்தியாவின் சுவர் ராகுல் ராவிட்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றிக்கூட்டணி இங்கிலாந்து வீரர்கள்


இந்திய அணியின் இந்த படுதோல்வி ஏன்
தொடரை முழுமையாக இழந்ததால், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஏற்கெனவே 3 டெஸ்ட் போட்டியில் தோற்றபோது முதலிடத்தில் இருந்து இந்திய அணி 2-வது இடத்துக்கு வந்தது. இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. இப்போது 4 போட்டியிலும் இந்திய அணிதோற்றதனால் 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 11 ஆண்டுகளுக்குப் பின்: இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒருபோட்டியைக் கூட டிரா செய்ய முடியாமல் முழுமையாக இழந்துள்ளது (வொய்ட் வாஷ்). இதற்கு முன் 2000-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் (2-0), ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் (3-0) ஆகியவற்றிலும் ஒரு டிரா கூட செய்ய முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது. இப்போது 11 ஆண்டுகளுக்குப் பின் "வொய்ட் வாஷ்' ஆனது இந்தியா.
 இந்திய அணி 79 ஆண்டுகாலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முன் 3 முறை "வொயிட் வாஷ்' ஆகியுள்ளது.
 1959-ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-5 என்ற கணக்கிலும், 1961-62-ல் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் 0-5 என்ற கணக்கிலும், 1967-68-ல் ஆஸ்திரேலியாவிடம் 0-4 என்ற கணக்கிலும் இந்தியா தொடரை முழுமையாக இழந்துள்ளது.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி செய்யப்பட்டுள்ளது


ராகுல் ராவிட் இந்ததொடரில் 3 சதங்களை விளாசி டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் 4 வது இடத்துக்கு முன்னேரினார்.

  1. சச்சின் -51
  2. ஜக்கலிஸ்-40
  3. ரிக்கெ பொண்டிங்-39
  4. ராகுல் ராவிட்-35
இவர்கள் நால் வரும் இப்போது விளையாடிக்கொண்டு இருப்பதால் இந்த வரிசை மாற்றம் அடையலாம்.



இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த அணி என்பதனை நிரூபித்துள்ளது,இன்னும் இங்கிலாந்து அணி அதிஸ்டத்தினால் தான் வென்றது,சகிர்கான் விளையாடி இருந்தால் வென்று இருக்கலாம் என்று இந்திய அணியின் தோல்வியை ஏற்க மனம் இல்லாதவர்கள் கதைத்துக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய பூரண தெளிவு இல்லை என்பதே அர்த்தம்.


இங்கிலாந்து அணியின் வெற்றியில் அவர்களது திறமை எப்படியோ,அதே போல் அவர்களது வெற்றியின் இன்னும் ஒரு காரணம்,இந்திய அணியின் மனோபலத்தை ஸ்ரோரஸ் தலைமையிலான அணி உடைத்து எறிந்து விட்டது முக்கிய காரணம்.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி செயப்பட்டுள்ளது
முதல் டெஸ்ட்டில் தோற்றதுமே இந்திய அணியினர்,தங்கள் போராட்டக்குணத்தை இழந்து விட்டனர்.இந்த இடத்தில் தான் ஒரு அணித்தலைவரின் முக்கிய கடமை இருக்கின்றது அதாவது தனது அணி மனோபலத்தை இழக்கின்றபோது அவர்களுக்கு அந்த மனோபலத்தை மீளக்கட்டி எழுப்ப வேண்டும்.இந்த விடயத்தில் கூல் கேப்டன் என்று வர்ணிக்கப்படுகின்ற தோனியின் செயற்பாடு.சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.அப்படி என்றால் தோனி சிறந்த கேப்டன் இல்லையா,அவர் உலகக்கிண்ணத்தை வென்ற கேப்டன்.ஜ.பி.எல். வென்றக் கேப்டன் என்று எல்லாம் நீங்கள் என்னுடன் விவாதிக்கலாம்.ஆனால் ஒரு வீரராக எனக்கு தோனியை ரொம்ப பிடிக்கும்,ஒரு கேப்டனாக அவர் பன்முகத்திறமை கொண்ட அணித்தலைவர் என்று சொல்ல முடியாது.
தோனி திறமையான கேப்டன் தான் ஆனால் அவர் தனது அணிக்கு போராட்க்குணத்தை கற்பிக்கத்தவறிவிட்டார்.தொடர் வெற்றிகளைக்குவிப்பதையோ இல்லை உலகிக்கிண்ணத்தை வெல்வதையோ வைத்து ஒரு அணித்தலைவர் சிறந்தவர் என்று கணிக்கமுடியாது.சில முடிவுகளை அதிரடியாக எடுக்கவேண்டும்.அத்தோடு தோல்வி அடைகின்ற போதும்.அணிக்கு தேவையான ஊக்கமான கருத்துக்களையும்,வீரர்களின் மனோபலத்தை கட்டி எழுப்பும் கருத்துக்களை கூறவேண்டியது ஒரு அணித்தலைவரின் கடமையாகும். இதில் கவனிக்க சமநேரத்தில் விளையாட்டின் கண்ணியத்தையும் மீராமல் செயற்படவும் வேண்டும்.
ஸ்ரிபன் பிளமிங்
ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி
உதாரணத்திற்கு நியூஸ்லாந்தின் முன்னால் கேப்டன் ஸ்ரிபன் பிளமிங்கை எடுத்துக்கொள்ளுங்கள்,அவரது தலைமையில் நியூஸ்லாந்து உலகக்கிண்ணத்தை வென்றதா இல்லையே,ஆனாலும்.நீயூஸ்லாந்து அணியைதனது பன்முக ஆற்றல் கொண்ட அணித்தலைமையால்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தூக்கி நிறுத்தியவர்.

தன் நம்பிக்கை ஊட்டிய தலைவருடன் இந்திய அணியின் சுவர் ராகுல் ராவிட்
ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பிராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் தாதா சவ்ரவ் கங்குலியை எடுத்துக்கொள்ளுங்கள்.இந்திய அணி சூதாட்டம் போன்ற பிரச்சனையில் சிக்கி சீரழிந்த காலப்பகுதியில் சீனியர் வீரர்கள் பலர் விளையாடமுடியாமல் போனபோதும்.நெருக்கடியான சூழ்நிலையில் இந்திய அணியின் தலைவர் ஆகி முழுவதும் இளம் வீரர்களைக்கொண்ட இந்திய அணியை.உலக அரங்கில் பல வெற்றிகளைக்குவித்தது மட்டும் இல்லாது இந்திய வீரர்களுக்கு தன்நம்பிக்கையையும் ஊட்டியவர்.இந்தகாலத்தில் கங்குலியின் தலைமைத்துவத்தை கண்டு பல கிரிக்கெட் அணிகள் அஞ்சின.என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.
எதிர் அணிகளை தன் அதிரடிமுடிவுகளால்,பன்முகத்திறமையால் கதிகலங்க வைத்தை கேப்டன் கங்குலி

அதற்காக தோனியையும் கங்குலி மாதிரி ஆக்ரோசமான அணித்தலைவராக மாறவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை.தோனி வீரர்களுக்கு முழுச்சுகந்திரம் அளித்துவிடுகின்றார்.இது பல நேரங்களில் சாதக மான விளைவுகளை ஏற்படுத்தினாலும்.இங்கிலாந்து தொடர் மாதிரி தோல்விகளையும் ஏற்படுத்திவிட்டது அல்லவா.இப்ப தோனி போய் சச்சினுக்கோ இல்லை ராவிட்டுக்கோ,சேவாக்கோ.அப்படி ஆடு இப்படி ஆக்ரோசமாக ஆடு என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.ஏன் என்றால் தோனியைவிட அவர்கள் சர்வதேசக்கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் சீனியர்கள் பல அனுபவங்களைப்பெற்ற சீனியவீரர்கள்.இதனால் தோனி தானாக சில முடிவுகளை எடுப்பதில் சிக்கல் இருக்கின்றதுதான்.இதற்கு சிறந்த உதாரணம் பங்களாதேஸ் தொடர் ஒன்றில் தோனி விளையாடாத போது அணித்தலைவராக இருந்த சேவாக்.தோனி தன்னிடம் உபதலைவர் என்ற முறையில் எந்த ஆலோசனையும் கேட்பதில்லை என்று ஒருகருத்தைக்கூறி இருந்தார்.அபோது தோனிக்கும் சேவாக்கிக்கும் இடையில் ஒரு பனிப்போர் நிலவியது குறிப்பிடத்தக்கது.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி

இந்திய அணியின் அதிரடிக்கேப்டன் கங்குலியும் & கூல் கேப்டன் தோனியும்

மற்றது தோனி இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்ற போது கிட்டத்தட்ட அணியில் உள்ள வீரர்களில் பெரும்பாலானோர்.அவரை விட பல ஆண்டுகள் சர்வதேசக்கிரிக்கெட்டில் அனுபவசாலிகளாகவே இருந்தனர்.ஒரு இளம் அணியைக்கட்டி எழுப்பவேண்டிய தேவை தோனிக்கு அப்போது இருக்கவில்லை.நான் கேப்டன் நான் சொல்வதை செய் என்ற பார்முலாவை உதரித்தள்ளிய தோனி வீரர்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டார்.இதனால் பல வீரர்களுக்கும்,பல வீரர்களின் ரசிகர்களுக்கும் தோனியை பிடிக்கத்தொடங்கியது.இதில் பலவீரர்களின் ரசிகர்கள் என்று சொல்லக்காரணம் இந்திய அணியின் ரசிகர்களில் சச்சினின் ரசிகர்கள்,ராவிட்டின் ரசிகர்கள்,கங்குலியின் ரசிகர்கள்,இப்படி நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்கள்.இந்திய அணியில் கங்குலி கேப்டனாக இருந்தால் அவர் சச்சின் தனக்கு கீழ் படிந்து நடக்கவேண்டும் என்று நினைகின்றார் என்று சச்சின் ரசிகர்கள் குழம்புவார்கள்,கங்குலியை அணியைவிட்டு நீங்கியதற்கு சச்சின் காரணம் என்று கங்குலி ரசிகர்கள் குற்றம் சுமத்துவார்கள்.ஆனால் இந்தப்பிரச்சனை தோனிக்கு வரவில்லை காரணம் அவரது கூல்தலைமைத்துவம்தான்.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி
ஒரு கேப்டன் என்பவர் வெறுமனே எதிரணிவீரர்களிடமும்,சகவீரர்களிடமும்,ரசிகர்களிடமும், நன்மதிப்பை பெற்றால் மட்டும் போதாது.
அதே நேரம் சில அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டும்.உதாரணத்திற்கு 2001ல் கொல்கத்தாவில் நடந்த அந்த அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியை சொல்லலாம்.இந்திய அணி பாலோஒன் ஆனபின்பும் அப்போது கேப்டனாக இருந்த தாதா கங்குலி லக்ஸ்மன்,ராவிட்டிடம் சென்று வருவது வரட்டும் அடித்து ஆக்ரோசமாக ஆடுங்கள் என்று சொன்னார்.விளைவு லக்ஸ்மண் 288 ஒட்டங்களை விளாசினார்.ராவிட் லக்ஸ்மன் ஜோடியைப்பிரிக்கமுடியாமல் அவுஸ்ரேலியர்கள் தினறியது.எல்லோறுக்கும் தெரிந்ததே.ஸ்ரிவோக் தன் வாழ்நாளில் இந்த டெஸ்ட் போட்டியை மறக்க மாட்டார்.அந்த அடி இந்தியவீரர்கள் அடித்தார்கள்.பின் பந்து வீச்சிலும் ஹர்பஜன்சிங்க்கு தன் நம்பிக்கையை ஊட்டிய கங்குலி.அவரை வைத்து அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டவரிசையை சிதைத்தார்.விளைவு ஹர்பஜன் கெட்ரிக்சாதனைபடைத்தது மட்டும் இல்லாமல் இந்தியா அதிரடி வெற்றியையும் பெற்றது.10 வருடங்கள் கழிந்தும் இந்தபோட்டி பேசப்படுவதற்கு காரணம் கங்குலியின் பன்முகத்திறமை கொண்ட அணித்தலைமைதான்.அந்த ஆளுமை தோனியிடம் நிச்சயமாக இல்லை.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி

ஏன் இங்கிலாந்தின் தற்போதயை கேப்டன் ஸ்ரோரஸ் ஒரு பன்முகக்திறமை கொண்ட கேப்டன் என்று சொல்லமுடியாவிட்டாலும்.சில முடிவுகளை அதிரடியாக எடுக்கக்கூடியவர்.உதாரணத்திற்கு தென்னாபிரிக்காவுடனான போட்டி ஒன்றில் தென்னாபிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது அபோது பைரன்னரைக்கோரினார் ஸ்மித் ஆனால் பைரன்னர் வழங்க ஸ்ரோரஸ் அனுமதிக்கவில்லை.அப்போது ஸ்ரோரஸ்சை பலர் விமர்சித்தாலும் ஸ்ரோரஸின் முடிவு சரியே ஏன் என்றால் ஸ்மித் நன்றாக களைத்துவிட்டார் பைரன்னர் வழங்கினால் இலகுவாக இன்னும் கொஞ்ச நேரம் நின்று ஆடி தென்னாபிரிக்காவின் ஸ்கோரை உயர்த்திவிடுவார் .இதனால் இங்கிலாந்து தோல்வி அடையவும் சந்தர்ப்பம் உண்டு.எனவே இங்கிலாந்தின் கேப்டனாக ஸ்ரோரஸ் எடுத்த முடியு சரியே.ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து கொப்பி

ஆனால் தோனி இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்டில் இயன் பெல் தனது கவணக்குறைவால் ஆட்டம் இழந்தாலும் மீண்டும் அவரை அழைத்து ஆடவைத்தார் அல்லவா?இது கண்ணியம் மிக்க செயல் என்றாலும் பெல் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களை விளாசி இருந்தால் யோசிச்சுப்பாருங்கல்.நல்லவேளை யுவராஜ் சிங் பெல்லை அவுட்டாக்கிவிட்டார் இல்லை என்றால் பெல் இன்னும் கொஞ்ச நேரம் நின்று இந்திய பந்துவீச்சாளர்களை துவசம் செய்து இருப்பார்.

இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடரில் இருந்து காயம் காரணமாக யுவராஜ் சிங்கும் விளகிய நிலையில்.இப்போது சேவாக்,மற்றும்,இஷாந் சர்மாவும் விளையாடமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.கம்பீருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அவரது காயம் குணமாகுமா இல்லையா என்று உறுதியாக தெரியாது.எனவே தோனிக்கு சனிபிடித்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது.

தோல்வியால் துவண்டு போய் இருக்கும் இந்திய அணிக்கு இப்பதேவை அவர்கள் இழந்த மனோபலத்தை மீண்டும் கொண்டுவருவதே ஆகும்
எனவே மிஸ்டர் கூல்(தோனி)உங்கள் வீரக்களின் மனோபலத்தை மீளக்கட்டி எழுப்புவது கேப்டன் என்ற முறையில் உங்கள் கைகளில்தான்

என்ன செய்யப்போகின்றார் தோனி பொறுத்து இருந்து பார்ப்போம்

முஸ்கி-அன்பு நன்பர்களே எனது முரளிதரன் பற்றிய தொடரில் சில பகுதிகள் காப்பி செய்யப்பட்டுள்ளது.எனவே நீங்கள் இனையத்தில் உலாவரும் போது எனது பதிவுகள் எங்கேயும் காப்பி செய்யப்பட்டுள்ளதைக்கண்டால் சிரமம் பாராது எனக்கு அறியத்தாருங்கள்.ஏன் என்றால் எல்லாத்தளங்களையும் என்னால் பார்க்கமுடியாதுதானே.இதை ஒரு உதவியாக உங்களிடம் வேண்டுகின்றேன்

அப்படியே நீங்கள் உங்கள் வேலையை மறக்காமல் பார்த்திட்டுப்போங்க.கருத்துரை ,ஓட்டு

Post Comment

37 comments:

ஆகுலன் said...

கொஞ்சம் பெரிசா இருக்குது எதுக்கும் வாசித்து விட்டு வாறன்...

K.s.s.Rajh said...

நீங்கதான் சின்னனா இருக்கு என்று முதல் பதிவில் கேட்டிங்க அதுக்கு ரிப்பீட்டு.ஹி.ஹி.ஹி.ஹி.ஆனால் அந்தப்பதிவு.கொஞ்சமாத்தான் எழுதுவன்

ஆகுலன் said...

//அந்தப்பதிவு.கொஞ்சமாத்தான் எழுதுவன்///

இது ரொம்ப ஓவர் இருந்தாலும் பரவயில்ல.....

ஆகுலன் said...

ஒருநாள் பொட்டிய பார்ப்பம்......
நல்லா எழுதி இருக்குறீங்க...

K.s.s.Rajh said...

@ஆகுலன் சொன்னது...

தேங்ஸ் நண்பா/
அந்தப்பதிவு ஏன்னா சில சம்பவங்களை எழுதும் போது யோசிக்க வேண்டி இருக்கு அதான் குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் பதிவிடுகின்றேன்.இருந்தாலும் முழுவதும் தர முயற்சிசெய்கின்றேன்.கொஞ்சம் அதிகமாவும் எழுதுறன்.சரியா பாஸ்.

Anonymous said...

////ஏன் இங்கிலாந்தின் தற்போதயை கேப்டன் ஸ்ரோரஸ் ஒரு பன்முகக்திறமை கொண்ட கேப்டன் என்று சொல்லமுடியாவிட்டாலும்.சில முடிவுகளை அதிரடியாக எடுக்கக்கூடியவர்./// நான் நினைக்கிறேன் ஏனைய வீரர்களை விட அதிரடி முடிவு எடுக்கும் ஆற்றல் தோனியிடம் அதிகமாகவே உள்ளது. இதற்க்கு மிக சிறந்த உதாரணம் உலககிண்ண இறுதி போட்டி..மற்றும் படி அதிரடி முடிவுகள் எல்லா நேரத்திலும் நினைத்த மாதிரியே நடந்துவிடாது. இக்கட்டான நேரங்களில் எடுக்கும் அதிரடி முடிவு என்பது வென்றால் பெரிதும் பேசப்படும், தோற்றால் தலைமைக்கே ஆப்பாக அமைந்துவிடும். மற்றும் படி நீங்கள் சொன்ன போல இப்போ அணியின் மனோபலத்தை கட்டி எழுப்ப வேண்டும். இளம் வீரர்களை கொண்ட அணி ஒருநாள் தொடரில் எப்படி ஆடுகிறது என்று பார்ப்போம்.


இது சம்மந்தமாக நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் சற்று நேரத்தில் வெளியிடுகிறேன்...

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது..

அந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோனி.யுவராஜ் சிங்கிற்கு முன்பு களம் இறங்கியதற்கு காரணம்.தோனி உலகக்கிண்ண தொடர் முழுவதும் மோசமாக ஆடி வந்தார்.யுவராஜ் சிங்கோ முழு போர்மில் இருந்தார் எவனவே தோனி யுவராஜ் சிங்கிற்கு முன்களம் இறங்கியது தான் சரி ஏன் என்றால். தோனி ஆட்டம் இழந்தாலும்.முழு போர்மில் இருக்கும் யுவராஜ் எப்படியும் சிறப்பாக ஆடுவார் என்ற ஒரு நம்பிக்கையில் தான் யுவராஜ்சிக்கு முன் களம் இறங்கினார்.அதனால் தோனிக்கு ஒரு நெருக்கடி ஏற்படவில்லை கூலாக ஆடினார்.

ஆனால் இன்னும் ஒரு உதாரனம் உள்ளது.கடந்த மேற்கு இந்திய தொடரில்.கடைசி டெஸ்ட் போட்டியில் 15 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை இருந்த போது.அதுவும் ராகுல் ராவிட்.விளையாடிக்கொண்டிருந்த போதும்.பின்னால் தோனி,ரெய்னா,போன்ற அதிரடியாக ஆடக்கூடியவர்களின் விக்கெட் இருந்த போதும்.தொடரில் இந்தியா முன்னிலை பெற்று இருந்தால் தோனி போட்டியை வெற்றி தோல்வி இன்று முடித்துக்கொள்ள சம்மதித்தார் அல்லவா.இது ஒரு தவறான முடிவே.ஏன் என்றால் 90 பந்துகளில் 80 ஓட்டங்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே.அப்படி இந்திய அணியால் எட்ட முடியாவிட்டாலும் இந்திய அணி தோல்விஅடைய சந்தர்ப்பம் இல்லை. இந்தபோட்டிக்கு பின் தோனி முன்னால் வீரர்களின் கடும் விமர்சணத்திற்குஆளானாரஅல்லவா
கங்குலி,பிளமிங்,அர்ஜுணரணதுங்க போன்ற கிரிக்கெட் கேப்டன்களுடன் ஒப்பிடும்போது தோனியின் முடிவெடுக்கும் திறன் குறைவே.

மாலதி said...

அருள் கூர்ந்து பொறுத்து கொள்ளுங்கள் எனக்கு இந்த விளையாட்டு எல்லாம் பிடிப்பது இல்லை காரணம் ஏன் இனமான உறவுகள் வீணாக தங்களின் நேரத்தை செலவிட கூடாது என எண்ணுவது தான் இதைவிட யோகா, கபடி போன்ற விளையாட்டுகளிலும் படிப்பதிலும் நாம் தமிழ கலைகளை கடை பிடிப்பதிலும் காப்பதிலும் செலவிடலாமே பிழை இருப்பின் சுட்டு காட்டுக

K.s.s.Rajh said...

@மாலதி சொன்னது…
அருள் கூர்ந்து பொறுத்து கொள்ளுங்கள் எனக்கு இந்த விளையாட்டு எல்லாம் பிடிப்பது இல்லை காரணம் ஏன் இனமான உறவுகள் வீணாக தங்களின் நேரத்தை செலவிட கூடாது என எண்ணுவது தான் இதைவிட யோகா, கபடி போன்ற விளையாட்டுகளிலும் படிப்பதிலும் நாம் தமிழ கலைகளை கடை பிடிப்பதிலும் காப்பதிலும் செலவிடலாமே பிழை இருப்பின் சுட்டு காட்டுக.//

எல்லாவிடயமும் எல்லோறுக்கும் பிடிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லைதானே சகோதரி.எனவே கிரிக்கெட் பிடிக்காட்டியும் நீங்க வந்து போவதே பெரியவிடயம்.அதைவிட நான் பல மாசாலாப்பதிவுகளும் எழுதுகின்றேன்.நேற்று கூட மறக்க முடியாத பாடசாலைநாட்கள் என்று ஒரு தொடர்பதிவு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கு.பல நண்பர்கள் என் கிரிக்கெட் பதிவுகளை ரசிக்கின்றார்கள் அவங்களுக்காகவும் எழுத்ததானே வேண்டும்.
நன்றி சகோதரி

சக்தி கல்வி மையம் said...

விரிவான அலசல்..
நம் அணி மீண்டு வரும்.

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
விரிவான அலசல்..
நம் அணி மீண்டு வரும்..

தேங்ஸ் பாஸ்.......

கோகுல் said...

டங்கன் ப்லேக்சர் பேர் பஞ்சர் ஆகும்ன்னு நினைக்கிறேன்.
நல்லா அலசி பிழிஞ்சிருக்கீங்க!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழைத்தவுடன் வந்துவிட்டேன்...


விரிவான பாதை...

திறைமைப்பற்றி சந்தேகம் இல்லை..
தோனிக்கு கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது போலும்...

அவருக்கு இருந்த நல்லநேரம்தான் இவ்வளுவு தூரத்திற்க்கு நமது அணி செல்ல வழிவகுத்தது...

தற்போதைய தோல்விகளை தவிர்த்து வெற்றி பாதையை நோக்கி வர நமது வீரர்கள் பாடுபட வேண்டும்...

கோவி said...

அய்யயோ.. IPL , Champions leagu எல்லாம் நல்லா விளையாடனும்.. ரெஸ்ட் எடுங்கப்பா..

K.s.s.Rajh said...

கோகுல் சொன்னது…
டங்கன் ப்லேக்சர் பேர் பஞ்சர் ஆகும்ன்னு நினைக்கிறேன்.
நல்லா அலசி பிழிஞ்சிருக்கீங்க

தேங்ஸ் பாஸ்.............

K.s.s.Rajh said...

@
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
அழைத்தவுடன் வந்துவிட்டேன்...


விரிவான பாதை...

திறைமைப்பற்றி சந்தேகம் இல்லை..
தோனிக்கு கெட்டக்காலம் ஆரம்பித்துவிட்டது போலும்...

அவருக்கு இருந்த நல்லநேரம்தான் இவ்வளுவு தூரத்திற்க்கு நமது அணி செல்ல வழிவகுத்தது...

தற்போதைய தோல்விகளை தவிர்த்து வெற்றி பாதையை நோக்கி வர நமது வீரர்கள் பாடுபட வேண்டும்..//

நன்றி பாஸ் உங்கள் ஆதரவைத்தொடர்ந்து தாருங்கள்

K.s.s.Rajh said...

@
கோவி கூறியது...
அய்யயோ.. IPL , Champions leagu எல்லாம் நல்லா விளையாடனும்.. ரெஸ்ட் எடுங்கப்பா....

சரியாச்சொன்னீங்க பாஸ்....

Unknown said...

அலசல் கலக்கல்!!!
விரிவாக கமென்ட் இடும் நிலையில் நான் இல்லை பாஸ்...வாசித்தேன்..ஓட்டுகளுடன்!

எட்வின் said...

ரொம்ம்ம்ம்ம்பவே விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். சனி என்று சொன்னால் சரி வருமா என தெரியவில்லை. இந்திய அணி தனது போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறது. பார்க்கலாம் ஒரு தின போட்டிகளிலாவது மீண்டு வருவார்களா என்று.

சி.கிருபா கரன் said...

ரெய்னா போன்ற T20 பிளேயர் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவை இல்லை, மீண்டும் வாசிம் ஜாபர்,பார்த்திவ் படேல் போன்ற பிளேயர்களுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம்.

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா சொன்னது…
அலசல் கலக்கல்!!!
விரிவாக கமென்ட் இடும் நிலையில் நான் இல்லை பாஸ்...வாசித்தேன்..ஓட்டுகளுடன்//

தேங்ஸ் பாஸ்.நீங்கள் கவலையில் இருந்து விடுபட பிராத்திக்கின்றேன்

K.s.s.Rajh said...

@எட்வின் கூறியது...
ரொம்ம்ம்ம்ம்பவே விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். சனி என்று சொன்னால் சரி வருமா என தெரியவில்லை. இந்திய அணி தனது போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறது. பார்க்கலாம் ஒரு தின போட்டிகளிலாவது மீண்டு வருவார்களா என்று....

தேங்ஸ் பாஸ்.சனி என்பது சும்மா காமடிக்காக வைக்கப்பட்ட தலைப்பு பாஸ்.

K.s.s.Rajh said...

@ சி.கிருபா கரன் கூறியது...
ரெய்னா போன்ற T20 பிளேயர் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவை இல்லை, மீண்டும் வாசிம் ஜாபர்,பார்த்திவ் படேல் போன்ற பிளேயர்களுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம்..

ரெய்னா அறிமுகமான காலப்பகுதியில் அவர் சொன்ன விடயம் என்ன தெரியுமா.தனது பேட்டிங் ஸ்டைல் ராகுல் ராவிட் மாதிரி இருக்கவேண்டும் என்றும்.ராவிட்டைப்போல் ஒரு வீரராக வரவேண்டும் என்றார்.ஆனால் T20 போட்டிகளின் வளர்ச்சியால் அதில் ஜ்.பி.எல்.போன்ற போட்டிகளில் கவரப்பட்ட ரெய்னாவின் பேட்டிங் ஸ்டையில் மாறிவிட்டது.

நீங்கள் சொல்வது போல் பார்த்திவ் பட்டேலுக்கு மீண்டும் வாய்பை வழங்கலாம்,அதேபோல் பவுலிங்கில் மீண்டும் இர்பான் பதானுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கலாம்.
நன்றி நண்பரே

"ராஜா" said...

வீரர்களுக்கு மனோபலம் எல்லாம் கட்டி எழுப்ப தேவை இல்லை , வீரர்கள் அனைவரும் அவுட் ஒப் ஃபார்ம் , அவ்வளவே .... அதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம் , இது கிரிக்கெட்டில் சகஜம்தான் , இன்னமும் என்னை போன்ற இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை உண்டு மீண்டும் எங்கள் அணி no1 இடத்தை கூடிய விரைவிலேயே பிடிக்கும் , அப்பொழுதும் நான் உங்களிடம் இருந்து இதே போன்ற பெரிய பெரிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் ...

K.s.s.Rajh said...

@ராஜா" சொன்னது…
வீரர்களுக்கு மனோபலம் எல்லாம் கட்டி எழுப்ப தேவை இல்லை , வீரர்கள் அனைவரும் அவுட் ஒப் ஃபார்ம் , அவ்வளவே .... அதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம் , இது கிரிக்கெட்டில் சகஜம்தான் , இன்னமும் என்னை போன்ற இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை உண்டு மீண்டும் எங்கள் அணி no1 இடத்தை கூடிய விரைவிலேயே பிடிக்கும் , அப்பொழுதும் நான் உங்களிடம் இருந்து இதே போன்ற பெரிய பெரிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .///

ஒரு அணியில் ஓட்டு மொத்த வீரர்களும் அவுட் ஓப் பார்முக்கு போய்விட்டார்கள் என்று சொல்வது தோல்வியை மறைக்க சொல்லலும் நொண்டிச்சாட்டு...நம்பர் வன் இடத்தை மீண்டும் பிடிக்கட்டும் அப்போது கண்டிப்பா பதிவு போடுவம்.

"ராஜா" said...

// ஒரு அணியில் ஓட்டு மொத்த வீரர்களும் அவுட் ஓப் பார்முக்கு போய்விட்டார்கள் என்று சொல்வது தோல்வியை மறைக்க சொல்லலும் நொண்டிச்சாட்டு..


அவர்களின் ஆட்டத்தை முழுவதும் பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள் , ஃபார்மில் இருக்கும் எந்த வீரனும் இப்படி விளையாட மாட்டான் .... இன்னொன்று மிக முக்கியமான காரணம் பிட்ச் வடிவமைப்பு இதை பற்றி விவாதிக்க இப்பொழுது நேரம் இல்லை நேரம் கிடைத்தாள் தனியே ஒரு பதிவு எழுதுகிறேன் , அங்கு வாருங்கள் விவாதிக்கலாம் ...

// நம்பர் வன் இடத்தை மீண்டும் பிடிக்கட்டும் அப்போது கண்டிப்பா பதிவு போடுவம்.

உங்கள் பேச்சில்/எழுத்தில் இருக்கும் நக்கல் புரிகிறது , நாங்கள் மீண்டு வரும் பொது இந்த நக்கல் எங்கே போக போகிறது என்பதை பார்க்கவாகினும் உங்கள் பதிவிற்க்கு அடிக்கடி வருவேன் ...

"ராஜா" said...

சரி இந்தியன் டீமை பத்தி மட்டும் பெருசு பெருசா எழுதுறீங்களே , இன்னொரு டீம் சொந்த நாட்டிலேயே உதை மேல் உதை வாங்கிக்கிட்டு இருக்கே அதை பற்றி ஏன் எழுதுவதே இல்லை ... அவர்களை பற்றி எழுதுவதற்க்கு கூட அவர்கள் வொர்த் இல்லை என்று நினைத்து விட்டீர்களோ?

K.s.s.Rajh said...

@சரி இந்தியன் டீமை பத்தி மட்டும் பெருசு பெருசா எழுதுறீங்களே , இன்னொரு டீம் சொந்த நாட்டிலேயே உதை மேல் உதை வாங்கிக்கிட்டு இருக்கே அதை பற்றி ஏன் எழுதுவதே இல்லை ... அவர்களை பற்றி எழுதுவதற்க்கு கூட அவர்கள் வொர்த் இல்லை என்று நினைத்து விட்டீர்களோ//

அப்படி இல்லை அவர்கள் இந்திய அணியைப்போல் மோசமாக தோற்கவில்லையே.3-2 என்று தான் ஒரு நாள் தொடரை இழந்து இருக்கின்றார்கள்
அப்படி அவர்கள் மோசமாக தோல்வி அடைந்தால் அதை பற்றி அந்த தோல்வி ஏன் என்று ஆராயலாம்.

மற்றது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் அணிகளில் இந்திய அணியும் ஒன்று அவர்கள் மோசமாக தோல்வி அடையும் போது.எழுதத்தோன்றுகின்றது.

K.s.s.Rajh said...

// "ராஜா" கூறியது...
// ஒரு அணியில் ஓட்டு மொத்த வீரர்களும் அவுட் ஓப் பார்முக்கு போய்விட்டார்கள் என்று சொல்வது தோல்வியை மறைக்க சொல்லலும் நொண்டிச்சாட்டு..


அவர்களின் ஆட்டத்தை முழுவதும் பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள் , ஃபார்மில் இருக்கும் எந்த வீரனும் இப்படி விளையாட மாட்டான் .... இன்னொன்று மிக முக்கியமான காரணம் பிட்ச் வடிவமைப்பு இதை பற்றி விவாதிக்க இப்பொழுது நேரம் இல்லை நேரம் கிடைத்தாள் தனியே ஒரு பதிவு எழுதுகிறேன் , அங்கு வாருங்கள் விவாதிக்கலாம் ...

// நம்பர் வன் இடத்தை மீண்டும் பிடிக்கட்டும் அப்போது கண்டிப்பா பதிவு போடுவம்.

உங்கள் பேச்சில்/எழுத்தில் இருக்கும் நக்கல் புரிகிறது , நாங்கள் மீண்டு வரும் பொது இந்த நக்கல் எங்கே போக போகிறது என்பதை பார்க்கவாகினும் உங்கள் பதிவிற்க்கு அடிக்கடி வருவேன் ..//

ராகுல் ராவிட்,கங்குலி,வேவாக்,யுவராஜ் சிங்,சகிர்கான்.இப்படி எனக்கு கிரிக்கெட் மேல் ஈடுபாடு வருவதற்கு இந்திய அணி வீரர்களின் ஆட்டமும் ஒருகாரணம்.
அதிலும் கங்குலியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்திய அணியை மட்டம் தட்டுவது எனது பதிவின் நோக்கம் இல்லை நண்பா.ஆனால் இப்படி அனைத்துவீரர்களும்.மோசமாக ஆடிய இந்திய அணியை இதுவரை நான் பாத்தது இல்லை.

இந்திய அணி தோல்விகளில் இருந்து மீண்டு எழும்போது நிச்சயமாக நான் அதை பற்றி பதிவு எழுதுவேன் நண்பரே

Anonymous said...

திடீர் அறிவிப்பு

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி முழு ஆதரவு : ஜான் லோக்பால் நிறைவேற்றப்படும் வரை எந்தவொரு போட்டியிலும் வெல்ல மாட்டோம்!

- அன்புடன் தோனி!

K.s.s.Rajh said...

@wathaash சொன்னது…
திடீர் அறிவிப்பு

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி முழு ஆதரவு : ஜான் லோக்பால் நிறைவேற்றப்படும் வரை எந்தவொரு போட்டியிலும் வெல்ல மாட்டோம்!

- அன்புடன் தோனி//

ஹி.ஹி.ஹி.ஹி

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அலசல்

K.s.s.Rajh said...

Kannan சொன்னது…
உங்கள் பதிவுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com//

தேங்ஸ் நண்பரே..

K.s.s.Rajh said...

@thalir கூறியது...
அருமையான அலசல்//

தேங்ஸ் நண்பரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விருதிற்குத் தகுதியான பதிவுதான்... வாழ்த்துக்கள்!

முற்றும் அறிந்த அதிரா said...

இதுக்க்குப் பின்னூட்டம் அனுப்பினேனே காணவில்லையே...

K.s.s.Rajh said...

@athira
////
இதுக்க்குப் பின்னூட்டம் அனுப்பினேனே காணவில்லையே../////

இல்லை காணவில்லை சகோதரி......

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails