Saturday, August 25, 2012

பதிவருனா கல்யாணம் நடக்காதா?

தலைப்பை பார்த்து விழுந்தடித்து ஓடிவரும் கல்யாணம் ஆகாத பதிவர்களே ரிலாக்ஸ் பீளீஸ் மேட்டரை சொல்லுறன்.

நம்ம பதிவுகளில் பல விடயங்களை எழுதுகின்றோம்.அதிலும் என்னைபோல சில பதிவர்கள் நடிகைகள் மேல் எங்களுக்கு இருக்கும் ரசனை,அவங்கள் மேல இருக்கும் பீலிங்ஸ் ஹீஹீ எல்லாம் ஓப்பினா சொல்லிவிடுறம்.அதைவிட பாடசாலைக்காலத்தில் அங்க இங்கனு டாவடித்த பொண்ணுங்கள் பற்றியும் ஓப்பினா சொல்லிவிடுறோம்.அன்மையில் கூட நான் ஜஸ்வர்யா ராய் பற்றி ஒரு ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் போட்டு இருந்தேன்.


"தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்"


என்ன ஒரு ரசனை வைரமுத்துவுக்கு 
ஜுன்ஸ் பட பாடல் ஜஸ்வர்யா ராயை எம்புட்டு ரசிச்சிருந்தால் இந்தப் பாடலை எழுதியிருப்பார்#தீர்த்தம் என்ன நான் எல்லாம் மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு பதிலாக குடிப்பேன் ஜஸ்வர்யா ராய் மேடம் மேல அம்புட்டு ரசனை ஹி.ஹி.ஹி.ஹி........
*********************************************************************************
நேற்று ஒரு ஸ்டேடஸ் போட்டு இருந்தேன்

2004 ஆண்டில் ஆட்டோகிராப் படம் வந்தபோது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்அப்போது படம் பார்கமுடியவில்லை ஏனோ இன்றுவரை பார்க்கமுடியாமல் போய்விட்டது.ஒருவேளை அப்போது பாத்திருந்தால் சும்மா ஒரு படம் பார்பதை போல உணர்வு இருந்திருக்கும். 

ஆனால் இப்போது பார்கின்ற போது சேரனுடன் சேர்ந்து நானும் அந்த பள்ளிக்கால முதல்காதல் நினைவுகளுடன் கரைந்து போகின்றேன்# நானும் திருமணம் செய்யும் போது எனக்கு வந்த முதல் காதலின் சொந்தக்காரிக்கு பத்திரிகை வைக்கனும் என்று தோனுகின்றது.ஆனால் அவங்க எங்க இருக்கிறாங்க என்று தெரியவில்லை
*********************************************************************************
இன்னும் சில என் பேஸ்புக் ஸ்டேட்டஸ்கள்
கட்டினா சரன்யாவை கட்டனும் இல்லாட்டி சன்னியாசியா போயிடனும்


*********************************************************************************


லேசா லேசா முதல் மங்காத்தா வரை மேடத்தின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு(எல்லாப் படங்களும் ஹி.ஹி.ஹி.ஹி....) தலைவி சிம்ரனுக்கு பிறகு தமிழ் திரையுலகில் எனக்கு பிடித்த நடிகைகளில் த்ரிஷா மேடம் முதன்மையானவர்.
*********************************************************************************

ஏக்கம் கலந்த உன் பார்வையால் ஏங்கித் தவிக்கின்றேன் அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
*********************************************************************************
இப்ப என்ன பிரச்சனை என்றால் ஒரு நலன்விரும்பி(ஹி.ஹி.ஹி.ஹி) சொல்லுறார் என்ன ராஜ் இப்படி ஓப்பினா சொல்லுறீங்களே இப்படி பதிவுகளிலும்,பேஸ்புக்கிலும் சொன்னால் நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் என்று வரும் போது ஏதாவது சிக்கல் வராதா?இப்படி போடுவதால் உங்கள் மேல் பொண்ணுங்களுக்கு உங்கள் மீது தவறான அபிப்பிராயம் வந்துவிட்டால் என்ன செய்வீங்க என்று என் நலன்விரும்பினார்.அவ்வ்வ்வ்வ்.

யோவ் என்னய்யா சொல்லுறீங்க இதுல இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?சொல்லவேயில்லை. ஆனால் இது எனக்கு தவறாக தெரியவில்லை எனக்கு ஜஸ்வர்யா ராய் மேல ரசனை அஞ்சலி மேல பஜனை(அவ்வ்வ்வ்வ்) சரன்யா மேல செம லவ்வு.த்ரிஷாவை அவ்வளவு பிடிக்கும்,தேவயானிக்கு கல்யாணம் ஆனப்போ சின்னப்பையனாக இருந்தாலும் தேம்பி தேம்பி அழுதவன்.ஹி.ஹி.ஹி...இதை ஏன் நான் மறைக்கவேண்டும்.

அடுத்து எல்லோறும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதல் வயப்பட்டு இருப்போம் இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கு இல்லை பாடசாலை காலங்களில் எனக்கும் காதல் வந்திருக்கு என் மனசில் இருக்கும் சுகமான நினைவுகளை நான் பதிவு செய்கின்றேன்.அதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்த்தி அவ்வளவுதான்.சேரன் ஆட்டோகிராப் படத்தில் சொன்னது போல உங்கள் இதயத்தை திறந்து பாருங்கள் உங்கள் ஒவ்வொறுவருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் இருக்கும்.

சோ இது எனக்கு தவறாக தெரியவில்லை என் ரசனைகளை என் உணர்வுகளை நான் மறைப்பது இல்லை.எதிர்காலத்தின் என் வாழ்க்கையில் ஒரு பெண் வரும் போது முதல் வேலையாக நான் செய்வது என் தளத்தினனை படிக்க சொல்லுவதுதான்.


என்னை புரிந்துகொள்ளும் பெண் கிடைத்தாள் கிடைக்கின்றால் இல்லாட்டி போகட்டும் பேசாம சாமியாரா போயிடுவோம் ஹி.ஹி.ஹி.ஹி.




Post Comment

23 comments:

தனிமரம் said...

ம்ம் மறைத்து என்ன இலாபம் வரப்போகுது ரசிப்பது தவறு இல்லை ருசிக்க வெளிக்கிட்டாள் தான் தவறு நம்ம அர்ஜின் சொன்னது!ம்ம் எனக்கும் தான் சினேஹா பிடிக்கும்!ஹீ ஏனோ தெரியல!ஹீ

அருள் said...

குடியால் அழியுமா பதிவுலகம்?
பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

Yoga.S. said...

என்னைப் புரிந்து கொள்ளும் பெண் கிடைத்தால் கிடைக்கின்றாள்,இல்லாட்டிப் போகட்டும் "பேசாம" சாமியாராப் போயிடுவம்!////ஏன் "பேசிப்" போட்டே போங்கோ!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!

K.s.s.Rajh said...

@தனிமரம்

சரியாக சொன்னீங்க பாஸ்

K.s.s.Rajh said...

@அருள்

என் பதிவு பற்றி எதாவது கருத்து சொல்லியிருக்கலாமே பாஸ்

K.s.s.Rajh said...

@Yoga.S.

பேசாமல் போனால் தான் நமக்கு புடிச்ச நடிகைகள் எல்லாம் பக்த்தை ஆவாங்க ஹி.ஹி.ஹி.ஹி......

MARI The Great said...

//
எதிகாலத்தில் என் வாழ்கையில் ஒரு பெண் வரும் போது முதல் வேலையாக நான் செய்வது என் தளத்தினை படிக்க சொல்வதுதான்
//

தப்பித்தவறி யாராவது உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாலும் நீங்களே அதை கெடுத்திப்பீங்க போல இருக்கே :D

K.s.s.Rajh said...

@வரலாற்று சுவடுகள்

ஹி.ஹி.ஹி.ஹி.......அதுக்குத்தான் சாமியாரா போயிடலாம் என்று ஒரு ஆப்சன் இருக்கே பாஸ்.

அப்பறம் நமக்கு பிடித்த நடிகைகள் எல்லாம் நமக்கு பக்தைகள் தான் ஹி.ஹி.ஹி.ஹி............

Athisaya said...

என்னப்பா இது.அடப்போப்பா..,இதுக்கு பயப்பிடக்கூடாது.கொண்டாடணும் பாஸ்......!வாழ'த'துக்கள் சாமியாராகிப்போக.அங்கே சந்திப்போம்.

K.s.s.Rajh said...

@Athisaya
////

என்னப்பா இது.அடப்போப்பா..,இதுக்கு பயப்பிடக்கூடாது.கொண்டாடணும் பாஸ்......!வாழ'த'துக்கள் சாமியாராகிப்போக.அங்கே சந்திப்போம்////

அப்ப நீங்களும் என் பக்தையாக மாறப்போறீங்களா

Prem S said...
This comment has been removed by the author.
Prem S said...

அந்த அஞ்சலி படம் கலக்கல் பாஸ் உங்கள தான் இப்படி ஏக்கமா பாக்குராங்களா

K.s.s.Rajh said...

@Prem Kumar.s

அவ்வ்வ்வ்வ்வ்வ் ஆமா தல ஹி.ஹி.ஹி.ஹி.......

ராஜ நடராஜன் said...

நீங்க கவலையே படாதீங்க!பிரெஞ்சுக்காரி யாராவது மாட்டாமலா போயிடுவாங்க!இல்லறத்துக்கு இல்லறம்.பிளாக்குக்கு பிளாக்:)

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ்.. நிறைய விஷயங்கள் எனக்கு எழுத வருது, ஆனா எழுத முடியவில்லை, ஏனெனில் நீங்க கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிப்போடக்கூடியதாக வைத்தால் மட்டுமே, ஒவ்வொன்றையும் கொப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டுக் காட்டி எழுத முடியும், இது ரைப்பண்ணக் கஸ்டமாக இருக்கு.

பெண்களாஇப் பற்றி எல்லாம், பயப்பிடாமல் வெளிப்படையாக அவவைப் பிடிக்கும் இவவைப் பிடிக்கும் எனச் சொல்லும் நீங்க, ஏன் கொப்பி பண்ண முடியாதபடி செய்து வைத்திருக்கிறீங்க, தைரியமாகத் திறந்து விடுங்கோ.... அதனாலென்ன.

சரி அது உங்கள் விருப்பம்.

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல நகைச்சுவையாக அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.... ஆனா மூன்று நேரமு ஐஸ்வர்யா குளிச்ச தண்ணியைக் குடிப்பேன் என்றதுதான் கொஞ்சம் ஓவர்:) எண்டெல்லாம் சொல்ல மாட்டேன்ன்:).. ஏனெண்டால் எனக்கும் அவவைப் பிடிக்கு, அவவின் குட்டியையும் ரொம்பப் பிடிக்கும்...(குழந்தை).

முற்றும் அறிந்த அதிரா said...

உங்களுக்கு என ஒரு பெண் வரும்போது, உங்கட தளத்தைப் படிக்கச் சொல்லுவீங்க அது சரியானதே, ஆனா அதுக்கு முன், மாப்பிள்ளை பார்க்கும்போது, பெண்ணின் பெற்றோர் சகோதரர்கள் எல்லோ புளொக்கை படிக்க வெளிக்கிடுவினம், அங்கதானே சிக்கலே இருக்கே:)).

முற்றும் அறிந்த அதிரா said...

என்னைப் புரிந்து கொள்ளும் பெண் கிடைத்தால் கிடைக்கின்றாள்,இல்லாட்டிப் போகட்டும் "பேசாம" சாமியாராப் போயிடுவம்!///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப உடம்பில் ஓடும் இள ரத்தம் இப்படிக் கதைக்க வைக்குது.. காலநேரம் வந்து, சாமியாராகும் நிலை வந்தால்தான் அருமை தெரியும்:))..

மீண்டும் வருகிறேன்ன்ன்.. இப்போதைக்கு எஸ்கேப்ப்ப்..

K.s.s.Rajh said...

@ராஜ நடராஜன்
////
நீங்க கவலையே படாதீங்க!பிரெஞ்சுக்காரி யாராவது மாட்டாமலா போயிடுவாங்க!இல்லறத்துக்கு இல்லறம்.பிளாக்குக்கு பிளாக்:////

அதுதானே பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@athira
////
ராஜ்.. நிறைய விஷயங்கள் எனக்கு எழுத வருது, ஆனா எழுத முடியவில்லை, ஏனெனில் நீங்க கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிப்போடக்கூடியதாக வைத்தால் மட்டுமே, ஒவ்வொன்றையும் கொப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டுக் காட்டி எழுத முடியும், இது ரைப்பண்ணக் கஸ்டமாக இருக்கு.

பெண்களாஇப் பற்றி எல்லாம், பயப்பிடாமல் வெளிப்படையாக அவவைப் பிடிக்கும் இவவைப் பிடிக்கும் எனச் சொல்லும் நீங்க, ஏன் கொப்பி பண்ண முடியாதபடி செய்து வைத்திருக்கிறீங்க, தைரியமாகத் திறந்து விடுங்கோ.... அதனாலென்ன.

சரி அது உங்கள் விருப்பம்////

கொப்பி பண்ணமுடியாமல் செய்ததுக்கு காரணம் ஒரு காலத்தில் என் பதிவுகளை சில இணையதளங்கள் கொப்பி பண்ணி தங்கள் தளத்தில் தொடர்ச்சியாக போட்டுவந்தன கஸ்டப்பட்டு நாங்கள் பதிவு எழுத அவர்கள் இலகுவாக கொப்பி செய்து தங்கள் தளத்தில் போட்டுவிடுவார்கள் அக்கா அதுதான் கொப்பி பண்ணமுடியாமல் செய்தேன்.

இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கவேண்டும் அக்கா

K.s.s.Rajh said...

@012 3:22:00 AM
athira said...
நல்ல நகைச்சுவையாக அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.... ஆனா மூன்று நேரமு ஐஸ்வர்யா குளிச்ச தண்ணியைக் குடிப்பேன் என்றதுதான் கொஞ்சம் ஓவர்:) எண்டெல்லாம் சொல்ல மாட்டேன்ன்:).. ஏனெண்டால் எனக்கும் அவவைப் பிடிக்கு, அவவின் குட்டியையும் ரொம்பப் பிடிக்கும்...(குழந்தை)////

ஹி.ஹி.ஹி.ஹி.......எனக்கும் தான் ஆனால் ஒரு ஆசை அவங்க மகள் நடிக்க வரும் போதும் நான் அவங்க மகளின் ரசிகனாக இருக்கனும் இருப்பேன்.

K.s.s.Rajh said...

@ athira said...
உங்களுக்கு என ஒரு பெண் வரும்போது, உங்கட தளத்தைப் படிக்கச் சொல்லுவீங்க அது சரியானதே, ஆனா அதுக்கு முன், மாப்பிள்ளை பார்க்கும்போது, பெண்ணின் பெற்றோர் சகோதரர்கள் எல்லோ புளொக்கை படிக்க வெளிக்கிடுவினம், அங்கதானே சிக்கலே இருக்கே:)).
////

ஆமால்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
athira said...
என்னைப் புரிந்து கொள்ளும் பெண் கிடைத்தால் கிடைக்கின்றாள்,இல்லாட்டிப் போகட்டும் "பேசாம" சாமியாராப் போயிடுவம்!///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப உடம்பில் ஓடும் இள ரத்தம் இப்படிக் கதைக்க வைக்குது.. காலநேரம் வந்து, சாமியாராகும் நிலை வந்தால்தான் அருமை தெரியும்:))..

மீண்டும் வருகிறேன்ன்ன்.. இப்போதைக்கு எஸ்கேப்ப்ப்.////

என்ன அக்கா அப்பாவி பெண்ணா இருக்குறீங்களே
இப்ப சாமியார்களுக்குதான் மவுசு அதிகம் செய்திகள் பார்பது இல்லையா ஹி.ஹி.ஹி.ஹி......

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails