Monday, February 06, 2012

பதிவர் மாயஉலகம் மாயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

மரணங்கள் மலிந்த சபிக்கப்பட்ட ஈழமண்ணில் பிறந்தவன் நான் மரணங்களும்,மரண ஓலங்களும் மலிந்துகிடந்த பூமி எங்களுடையது.மரணங்கள் நாளாந்தம் நடக்கும் நிகழ்வாக ஈழத்தில் அமைந்திருந்தால்.இதனால் பல நெருங்கிய நண்பர்கள் இறந்த போதும் நான் பெரிதாக கலங்கியது இல்லை.ஆனால் பதிவுலகில் அறிமுகமாகி முகம் தெரியாமல் பழகிய நண்பர் மாய உலகம் ராஜேஸ் அவர்கள் அன்மையில் மறைந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் மனம் ஏனோ வலிக்கின்றது.

இணைய உலகில் எமக்கு அறிமுகமாகியிருந்த நண்பர் பதிவர் ராஜேஸ் சினிமா மீதான ஆர்வத்தில் சினிமாவில் இயக்குனர் ஆகிவிடவேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் முயற்சிசெய்து.அவரது முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைத்து உதவி இயக்குனராக வெற்றி பெற்று "தேநீர் விடுதி" திரைப்படத்தில் தன் பங்களிப்பினையும் நல்கியிருந்தார். 


அவர் ஒரு பதிவில் குறிப்பிட்டது இருந்தார் சினிமாவில் வாய்ப்பு தேடுவதில் இருந்து ஒதுங்கிவிட போவதாக, நான் அவரது அந்த பதிவுக்கு போட்ட கமண்டில் எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் முயற்சியை தொடருங்கள் என்றோ ஒரு நாள் நீங்களும் சாதிப்பீர்கள் என்று சொன்னேன்.ஆனால் திடீர் என்று அவரது மரணச்செய்தி பேரிடியாக மனதில் வந்து தைத்தது.

அதே பதிவில் அவர் இன்னும் ஒரு விடயத்தையும் சொல்லியிருந்தார் இந்த உலகில் உள்ள மனிதர்கள் மரணித்தால் நமக்காக அழ ஒரு நூறு பேராவது இருக்கனும் என்று.

நண்பனே உங்களுக்காக இன்று பதிவுலகில் பலநூறு நண்பர்கள் கலங்கி நிற்கின்றோம்.

மாய உலகம் ராஜேஸ் இன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம். அன்னாரின் பிரிவால் துயருரும், குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.


பதிவர் நண்பர் அன்பு உலகம் M.R அவர்கள் ராஜேஸின் சகோதரர் என்பது இன்று நிரூபன் அவர்களின் பதிவை படித்த போதுதான் அறிந்து கொண்டேன்.சகோதரனின் மறைவால் துயருற்று இருக்கும் நண்பர் M.Rஅவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ராஜேஸின் மறைவை ஒட்டி நாளை பதிவுலக துக்க தினமாக கடைப்பிடிக்க இருக்கின்றார்கள் நாளை (7-2-2012) பதிவர்கள் பதிவு போடுவதை நிறுத்தி மாயாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள்.இது பற்றி முழுவிபரம் அறிய நிரூபன் அவர்கள் எழுதிய பதிவை படிக்க இங்கே கிளிக்-பதிவுலக துக்கதினம்

பதிவர் ராஜேஸ் மறைவு பற்றிய நிரூபன் அவர்களின் பதிவை படிக்க இங்கே கிளிக்-பதிவர் மாய உலகம் ராஜேஸ் மறைவு

எம்மை விட்டு பிரிந்து சென்ற நண்பர் மாய உலகம் ராஜேஸ் உடைய வலைத்தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்-மாய உலகம்

நாளை பதிவுலக துக்கதினம் பற்றிய பகிர்வை முடிந்த வரை பலரிடம் கொண்டு சேருங்கள் நண்பர்களே

படம்-மாயாவின் கண்ணீர் அஞ்சலிப் படம் நாற்று தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Post Comment

18 comments:

கோவை நேரம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

Thava said...

நான் மாய உலகம் ராஜேஸ் அவர்களின் வலைக்கு சென்றதாக நினைவில்லை...வருந்துகிறேன்..அவரது ஆன்மா சாந்தி பெற இறைவனை வேண்டுவோம்//

ஆமினா said...

:-(

rajamelaiyur said...

அவர் ஆன்மா சாந்தியடைய இறைவன் துணை புரிவான்

பால கணேஷ் said...

சகபதிவரின் மறைவால் வருந்துகிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த்தோட்டம் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

குறையொன்றுமில்லை. said...

என் மௌன அஞ்சலிகளும்.தெரிவிச்சுக்கரேன்.

Yoga.S. said...

கண்ணீர் அஞ்சலி!

சென்னை பித்தன் said...

துக்கதினம் அனுஷ்டித்து ராஜேஷுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைவரும் இந்த துக்கத்தில் பங்கெடுப்போம்....


எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

தனிமரம் said...

மாயா உலகம் ராஜேஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். சேர்ந்து துக்கம் அனுஸ்ரிப்போம்.

பாலா said...

என்னுடைய வருத்தங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

சொல்ல வார்த்தை ஏதுமில்லை, முகம் தெரியாத, குரல் கேட்காத அனைத்து நட்புக்களையும் கலங்க வைத்து, எம்மை விட்டுச் சென்றுவிட்ட மாயாவுக்காக பிரார்த்திப்போம்...

Yaathoramani.blogspot.com said...

நம் மனம் கவர்ந்த துடிப்பான பதிவரை இழந்தது
ஒரு உறுப்பை இழந்தது போலத்தான் உள்ளது
அவர் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திப்போம்

ராஜி said...

என் அனுதாபங்களை பதிவு செய்து கொள்கிறேன்.

காட்டான் said...

மாயாவுக்கு கண்ணீர் அஞ்சலி..;-((

Anonymous said...

நண்பர் மாய உலகம் ராஜேஸ்க்கு என் அஞ்சலி...

Anonymous said...

அஞ்சலிகள் :(

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails