Saturday, October 08, 2011

(பகுதி-5)என் உயிர் நீ தானே................

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இது ஈழத்தில் ஒரு ஊரில் நடந்த கதை.கதை நடந்த ஊரின் உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

கடந்த பதிவில்-ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தியழும் சத்தம் கேட்டது



இனி.........


சுதன் அண்ணாவின் காணியில் கத்தியழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோறும் கூடிவிட்டணர்.போய் பார்த்தால் ரதியை ஒரு மரத்தில் கட்டிவைத்து மூக்காயி தும்புத்தடியால் அடித்துக்கொண்டு இருந்தார் ரதிதான் கத்திக்கொண்டு இருந்தாள்..அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன என்று கேட்ட போது மூக்காயி சொன்னால் இந்த திருட்டு முண்.......அரிப்பெடுத்து அலையுராள்.இவளுக்கு மாப்புள கேக்குதாம் ஏண்டி ஊர்மேயும் கழுதை உனக்கு அடக்கமுடியலைனா என்கிட்ட சொல்லவேண்டியதுதானே நான் ஒரு மாப்பிளை பாத்து கட்டிவைப்பன் தானே..





என்ன நடந்தது என்று விவரமா சொல்லு மூக்காயி கூட்டத்தில் ஒரு பொம்புள கேட்டுச்சி.மூக்காயி சொன்னாள் இந்த சுதன் பய மனுசி புஸ்பா தம்பி வெள்ளையன் இருக்கான்ல அவன் இவளுக்கு காதல் கடிதம் கொடுத்தான் இவளும் அதை வாங்கியிருக்கா.

ரதியோ அழுதாள் ஜயோ அவன் தான் என்னை விரும்புறதா சொன்னான் கடிதமும் தந்தான் எனக்கு எதுவும் தெரியாது நான் அவனை விரும்பவில்லை அம்மா என்மேல தேவையில்லாம சந்தேகப்படுது.

இதற்கு இடையில் புஸ்பா சொன்னால் என் தம்பி அப்படி கடிதம் எல்லாம் குடுத்து இருக்க மாட்டான் .புஸ்பா இபபடி சொன்னதும் மூக்காயி சொன்னாள் வாடி கழுத நீ என்ன யோக்கியமா சுதனை இழுத்துகிட்ட இங்க ஓடிவரல.உன் தம்பி மட்டும் என்ன நொல்லவனாவா(நல்லவன்)இருக்கப்போறான்

இந்த நேரத்தில் சுதனும்,வெள்ளையனும் வேலையால் வந்தனர்..அவர்களைக்கண்டதும் மூக்காயி கண்டபடி தகாத வார்த்தைகளால் பேசினாள்(திட்டினாள்)வெள்ளையன் சொன்னான் ஆமா நான் ரதிய விரும்புறன் அவளைத்தான் கலியாணம் முடிப்பன்.
உடனே சுதன் சொன்னார்.பிறகு என்ன மூக்காயிஅக்கா உங்கள் மகளை வெள்ளையனுக்கு தரலாம் தானே..
ஏண்டா சுதன் பொறுக்கி நீயே ஒரு பொறுக்கி..உன் மனுசி ஒரு வே.............உன் மச்சான் ஒரு மொள்ளமாறியாத்தான் இருப்பான் என் மகள அவனுக்கு கொடுக்கிறதா? உன் வண்டவாளம் எனக்கு தெரியாதுனு நெனைக்கிறியா..காம்னா கூட கூத்தடிக்குறது எல்லாம் எனக்குத்தெரியும்.

சுதன் காம்னா மேட்டரை மூக்காயி போட்டு உடைத்ததும் புஸ்பா எரிமலையாய் கொந்தளித்தாள் மூக்காயின் முடியை பிடித்து கன்னத்தில் அறைந்தால் ஏண்டி ப.........வே.........என் புருசனை பத்தி என்ன சொல்லுற
மூக்காயியும் பதிலுக்கு புஸ்பாவை அறைந்தாள் அதை என் கிட்ட ஏண்டி கேட்குற உன் புருசன் கிட்ட இல்ல காம்னா கிட்ட கேளு யோக்கியம் என்னானு தெரியும்.இந்த நேரத்தில் காம்னாவும் அந்த இடத்துக்கு வந்துவிட்டாள்.காம்னாவும் மூக்காயிடம் சண்டைபோட அந்த இடத்தில் கெட்டவார்த்தைகள் மழை போல் கொட்டியது.

கடைசியில் காம்னா சொன்னால் ஆமா நான் சுதன் கூட படுத்தன் இப்ப அதுக்கு என்ன?காம்னா இப்படி சொன்னதும் புஸ்பா தலையில் அடித்துக்கொண்டு தன் வீட்டைநோக்கிப்போனாள்...சுதன் செய்வதறியாது திகைத்து நின்றார்..சுதனையும் காம்னாவையும் எல்லோறும் திட்டி தீர்த்தனர்.

அப்போது மரத்தில் கட்டியிருந்த ரதியை வெள்ளையன் அவுத்துவிட்டான்.ரதி அவனை பார்த்துகேட்டாள் ஏண்டா நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னேனா.நீதானே எனக்கு லவ் லெட்டர் தந்த உன்னால் தானே அம்மா என்னை கட்டிவைச்சு அடிச்சிச்சி...என் முகத்திலையும் முழிக்காத போடா என்று அவனை பேசிவிட்டு..தன் வீட்டை நோக்கி ஒடினாள்.

ரதிக்கு வெள்ளையன் கடிதம் கொடுத்தானால் ஏற்பட்ட பிரச்சனை சுதன் காம்னா கள்ளத்தொடர்பை மூக்காயி அம்பலம் ஆக்கியதில் வெள்ளையன் கடிதம் கொடுத்த பிரச்சனை ஒய்ந்தது சுதன் காம்னா கள்ளத்தொடர்பு கதை அவர்கள் காணியில் இருந்தவர்களிடம் காட்டுத்தீ போல பரவியது.

புஸ்பாவும்,அவளது தம்பி வெள்ளையனும்,அவள் தங்கை,தங்கமும்,சேர்ந்து சுதனை திட்டி .வீட்ட விட்டு துரத்தினார்கள் சுதனும் கோவித்துக்கொண்டு.போய்விட்டார்.பிறகு அவர் வீட்டிற்கு முன்பாக ஒரு சின்ன கொட்டில் போட்டு அதில் தங்கினார்.
புஸ்பாவும்,அவள் அம்மாவும் சொல்லிவிட்டனர் எக்காரணம் கொண்டும் தங்கள் வீட்டிற்கு வரக்கூடாது தேவை என்றால் அந்த வே......காம்னாவை கூட்டி வந்து கூத்து அடி..சுதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தார் கிடைக்கும் சம்பளத்தை மனைவி புஸ்பாவின் வீட்ற்கு முன் கொண்டு போய்வைத்து விட்டு வருவார் அவளும் எடுத்துக்கொள்வாள் அவளுக்கு சுதனை மன்னித்து ஏற்றுக்கொள்ள விருப்பம் போல ஆனால் அவள் அம்மாவும்,தங்கையும்,தம்பியும் தடுத்தனர்.

இந்த நேரத்தில் ரதி வயல்வேலைகளுக்கு போகத்தொடங்கினாள் அதில் கிடைக்கும் பணத்தில் தன் செலவு போக மீதியை தாய் மூக்காயிடம் கொடுத்து விடுவாள்.வெள்ளையன் ரதியை விடுவதாக இல்லை..ஒரு நாள் வயல் வேலைக்குச்சென்ற ரதியை மறித்தான் இங்க பாருங்க ரதி உங்களை நான் விரும்புறன் என்னால் உங்களை மறக்கமுடியாது.எனக்கு உங்களை புடிச்சு இருக்கு உன்னை நல்லாப்பார்த்துக்கொள்வேன்
ரதி சொன்னாள் எனக்கு உன்னை புடிக்களை என் பின்னால வராத இதனால் அம்மா எனக்குத்தான் அடிக்கும்.உண்மையா என்னை நீ விரும்புனா என் பின்னாடி வராத..ரதியின் வார்த்தைகளில் உடைந்து போய்விட்டான் வெள்ளையன்.

அதுக்குப்பிறகு வெள்ளையனை சேவ் எடுக்காமல் முடிவெட்டாமல் தேவதாஸ் மாதிரி திரிந்தான்.வேலைக்கும் போவது இல்லை என்நேரமும் ஊரில் உள்ள சந்தியில் குந்தியிருப்பான். சந்தி என்றால் ஊரில் உள்ள சந்தியில் ஒரு மரம் இருக்கு அதுக்கு கீழ் ஒரு கடையிருக்கு அதில் ஊர் ஆண்கள் பின்நேரம் கூடி அரட்டை அடிப்பது வழக்கம்.அங்கதான் வெள்ளையன் என்நேரமும் இருந்தான்

வெள்ளையனை பாக்க ரதிக்கு பாவமாக இருந்தது ஒரு நாள் அவனிடம் போய் ஏன் இப்படி இருக்கிற தயவு செய்து புரிஞ்சுக்கோ வெள்ளையா..மன்னிச்சுக்கோ உன்னை பேர் சொல்லி கூப்பிட்டதுக்கு.
இல்ல பரவாயில்லடி என்னை நீ பேர் சொல்லி கூப்பிடாம யார் கூப்பிடுறது
அது இல்லை வெள்ளையா என்னை தயவு செய்து புரிஞ்சுக்கோ போய் முடியெல்லாம் வெட்டி தாடிய எடு(சேவ் பண்ணு)நான் சொன்னதை கேட்பாய் என்று நினைகுறேன் கேப்பியா.வெள்ளையனின் கண்கள் கலங்கின ரதியை பாத்து சொன்னான் நீ சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா..இப்பவே முடிவெட்டி வேவ் எடுக்கிறன்.


இந்த நேரத்தில் காம்னா ஊரில் பல பேருடன் மலர்ந்து கொண்டு இருப்பதாக அரசல் புரசலாக செய்தி கிளம்பியது..சுதனும் இடைக்கிடையில் போய்வருவதாகவும் கதை வந்தது.


இதற்கு இடையில் ரதிக்கு அவளது சொந்தக்கார ஒருத்தனை கலியாணம் கட்ட மூக்காயி ஏற்பாடு செய்தாள்.ரதிக்கு தாய் சொல்வதை தட்டமுடியாது வேண்டாம் என்றால் மூக்காயி கேவலமாக பேசி(திட்டி)அடிப்பாள் என்று தெரியும் மறுபுறம் வெள்ளையனின் காதல்..அவளுக்கும் வெள்ளையனை நினைக்க அழுகை வந்தது அவனது காதலை ஏற்றுக்கொள்வதா இல்லை.தாய் பார்க்கும் மாப்பிளையை கலியாணம் கட்டுவதா..ஒன்றுமே புரியவில்லை அந்த அபலைப்பெண்ணுக்கு.அவளால் அழத்தான் முடிந்தது.

(தொடரும்)


இன்றைய தகவல்-கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்தவர்களில் குறைந்த போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்தவர் யார் தெரியுமா?வேற யார் நம்ம தாதா கங்குலிதான் அவர் வெறும் 272 வது போட்டியிலேயே பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்தார் இது ஒரு உலக சாதனையாகும்


அந்த நாள் ஞாபகம் நக்மாவோ...நக்மா...........
என்னை ஞாபகம் இருக்கா கருத்துரை,ஓட்டு மறக்கவேண்டாம்




Post Comment

35 comments:

தனிமரம் said...

தம்பி ஒரு பால்கோப்பி சொல்லுங்க இதோ வாரன் பின்னாடி!

தனிமரம் said...

இப்படி குடும்பத்தில் கும்மியடிப்பது நியாயமா தம்பி???

தனிமரம் said...

அந்தச் சமுகத்தில் இப்படியான செந்தமிழ்(தூசனம்) ஒரு மனிதர்களை மிருகத்தனம் ஆக்கிவிடுவது சாதாரணமாக இருப்பது ஏன் என்று எனக்கும் இன்று வரை புரியவில்லை!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பி ஒரு பால்கோப்பி சொல்லுங்க இதோ வாரன் பின்னாடி////

அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி..........................

தனிமரம் said...

ஊருக்குள் சிலருக்கு சில கதைகள் தெரிந்தாள் மூக்காயி போல் பத்தவைக்கும் பாட்டிமார்களை நானும் பார்த்திருக்கின்றேன்!
ரதியைப் போல் ஒரு முடிவு எடுக்கத்தெரியாத இன்னொரு பள்ளித் தோழி என் நினைவில் வந்து போகின்றாள்!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அந்தச் சமுகத்தில் இப்படியான செந்தமிழ்(தூசனம்) ஒரு மனிதர்களை மிருகத்தனம் ஆக்கிவிடுவது சாதாரணமாக இருப்பது ஏன் என்று எனக்கும் இன்று வரை புரியவில்லை///

எனக்கும் தான் பாஸ் புரியவில்லை

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஊருக்குள் சிலருக்கு சில கதைகள் தெரிந்தாள் மூக்காயி போல் பத்தவைக்கும் பாட்டிமார்களை நானும் பார்த்திருக்கின்றேன்!
ரதியைப் போல் ஒரு முடிவு எடுக்கத்தெரியாத இன்னொரு பள்ளித் தோழி என் நினைவில் வந்து போகின்றாள்////

ஆமா பாஸ் பல இடங்களில் இப்படி பலர் இருப்பார்கள் நானும் பார்த்துள்ளேன்

தனிமரம் said...

இக்கதைத் தொடரில் கொஞ்சம் சோகரசத்தைப் கலந்து தேவதாஸ் ஞாபகத்தைத் தீண்டிவிட்டீர்கள்!
அடுத்த தொடருக்கு காத்திருக்கின்றேன்!
மறுபதிவில் சந்திக்கும் வரை உங்களைச் சிந்திக்கும் தனிமரம்!

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
இப்படி குடும்பத்தில் கும்மியடிப்பது நியாயமா தம்பி??////

அவர்கள் வாழ்க்கை முறை அப்படித்தான் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இக்கதைத் தொடரில் கொஞ்சம் சோகரசத்தைப் கலந்து தேவதாஸ் ஞாபகத்தைத் தீண்டிவிட்டீர்கள்!
அடுத்த தொடருக்கு காத்திருக்கின்றேன்!
மறுபதிவில் சந்திக்கும் வரை உங்களைச் சிந்திக்கும் தனிமரம்////

என்ன டி.ஆர்.படம் எதும் பாத்திங்களோ..அடுக்கு மொழி வசனம் எல்லாம் எடுத்துவிடுறீங்க..

Unknown said...

நல்ல கதை

Mohamed Faaique said...

பொம்புல சண்டைல வர்ர தூசனம், ஆம்புலகளால கூட பேச முடியாது போலிருக்கே!!!!

SURYAJEEVA said...

கடைசி பதிவு வரும் போது மறக்காம கடைசி பதிவுன்னு போடுங்க... அப்புறம் நக்மா படம் கன்றாவியா இருக்கு..

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
நல்ல கதை////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
பொம்புல சண்டைல வர்ர தூசனம், ஆம்புலகளால கூட பேச முடியாது போலிருக்கே!!!/////

ஆமா பாஸ் கடுமையா இருக்கும்

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
கடைசி பதிவு வரும் போது மறக்காம கடைசி பதிவுன்னு போடுங்க... அப்புறம் நக்மா படம் கன்றாவியா இருக்கு.///

கண்டிப்பா போடுறன் பாஸ் சிலர் நக்மா படம் போடச்சொல்லி விரும்பிக்கேட்டதால் போட்டேன்..ஹி.ஹி.ஹி.ஹி..

Anonymous said...

பொம்புளைங்க நல்லா தான் சண்டை புடிக்கினம் )))

M.R said...

கதை அருமை நண்பா

தமிழ் மணம் ஆறு

காட்டான் said...

வணக்கம் மாப்பிள பொம்பிளைகள் சண்டைய ரசிச்சு பாத்திருக்கீங்க யாரு யார வைச்சிருக்கிறாங்கன்னு ஹி ஹி நல்லா கொண்டு போறீங்க வாழ்த்துக்கள்..!!

சென்னை பித்தன் said...

நல்லாப் போகுது!

கோகுல் said...

அட!அழுகாச்சியா முடிச்சிட்டிங்கலே!
இருந்தாலும் சுவாரஸ்யம்!

பிரணவன் said...

சோகமான உண்மை கதை,,, சகா. . .

C.P. செந்தில்குமார் said...

நக்மா படம் ஹி...ஹி...

குறையொன்றுமில்லை. said...

தொடர் நல்லா போயிட்டு இருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் சுமுகமா தீத்துவைங்க.

kobiraj said...

going well.but unmai kathayaa #doubt

நிரூபன் said...

தொடர் சுவையாக நகர்கிறது பாஸ்..
ஒரே அக்கப் போரா இல்லே இருக்கு..

ரதியை வைச்சு மூக்காயி துவைக்க வெள்ளையனின் மானம் காற்றில் போக...

ஆனாலும் சுவை குன்றாது அப்படியே மொழி வழக்குகளை உள் இழுத்து எழுதியிருக்கிறீங்க.

தொடருங்க.

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
பொம்புளைங்க நல்லா தான் சண்டை புடிக்கினம் ))/////

ஆமா பாஸ் அவங்க சண்டை பாக்க சுவாரஸ்யமாக இருக்கும்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கதை அருமை நண்பா

தமிழ் மணம் ஆறு/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள பொம்பிளைகள் சண்டைய ரசிச்சு பாத்திருக்கீங்க யாரு யார வைச்சிருக்கிறாங்கன்னு ஹி ஹி நல்லா கொண்டு போறீங்க வாழ்த்துக்கள்..!/////

ஆமா மாம்ஸ் வேடிக்கை பாப்பது என்றால் நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி...ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நல்லாப் போகுது/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
அட!அழுகாச்சியா முடிச்சிட்டிங்கலே!
இருந்தாலும் சுவாரஸ்யம்/////

தேங்ஸ் பாஸ் சோகம் நிறைந்த கதைதான் இது

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
சோகமான உண்மை கதை,,, சகா.////

தேங்ஸ் பாஸ்..ஆம் இது எங்கள் ஊரில் நடந்த உண்மைக்கதை

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
தொடர் நல்லா போயிட்டு இருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் சுமுகமா தீத்துவைங்க/////

நான் எங்க மேடம் தீர்த்துவைப்பது இது உண்மையாக எங்கள் ஊரில் நடந்த கதை அதை அப்ப்டியே எழுதுகின்றேன்

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
going well.but unmai kathayaa #doubt///

தேங்ஸ் மச்சி..ஆமா இது எங்கள் ஊரில் வாழ்ந்தவர்களின் உண்மைக்கதை

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
தொடர் சுவையாக நகர்கிறது பாஸ்..
ஒரே அக்கப் போரா இல்லே இருக்கு..

ரதியை வைச்சு மூக்காயி துவைக்க வெள்ளையனின் மானம் காற்றில் போக...

ஆனாலும் சுவை குன்றாது அப்படியே மொழி வழக்குகளை உள் இழுத்து எழுதியிருக்கிறீங்க.

தொடருங்க//////

தேங்ஸ் பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails