Friday, October 21, 2011

(பகுதி-7)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது.



கடந்த பதிவில்-
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.


அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.

இனி.......


சுதனுக்கும்,காம்னாவுக்கும் இடையிலான தொடர்பு சுதன் மனைவி புஸ்பாவுக்கு முன்புதெரிந்ததனால் கொஞ்சநாள் சுதன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான்..இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக...மீண்டும்...இப்போது காம்னாவுடன்...





வெள்ளையன்,ரதி மீது அளவுக்கு அதிகமான பாசம்வைத்திருந்தான்..சுதனின் செட்டில் அவன் வேலைசெய்தான்.சுதன் இல்லாதா நேரங்களில் வெள்ளையன் தான் கங்கானியாக இருந்து..வேலையாட்களை வழிநடத்தினான்.


பல முதளாலிமார்களின் நன்மதிப்பை பெற்று.சுதனும்,வெள்ளையனும் தமது தொழிழில் வெகுவாக முன்னேறிக்கொண்டு இருந்தனர்..


புஸ்பாவுக்கு சுதன் மேல இருந்த கோபம் குறையவில்லை..அவனை அவள் கண்டு கொள்ளவேயில்லை....
புஸ்பா சுதனுடன் கதைப்பது இல்லை வீட்டில் சாப்பாடு எல்லாம் புஸ்பாவின் தங்கையும் தாயும் தான் சுதனுக்கு பரிமாறுவார்கள்..இதனால் புஸ்பாவிம் தங்கையில் சுதனுக்கு ஓரு ஈர்ப்பு வந்துவிடவே தன் விருப்பத்தை அவளிடம் நேரடியாகச்சொன்னான்..


அந்தப்பெண்ணும் தன் அக்காவின் கணவன் என்று கூட சிந்திக்காமல் சுதனை காதலிப்பதாக சம்மதம் சொனாள்...ஆனால் காம்னா போல உடனே எல்லாவற்றுக்கும் அவள் அனுமதிக்கவில்லை....ஓடிப்போய் கலியாணம் கட்டுவம் பிறகு..எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வோம் என்றாள் தங்கம்


ஆனால் சுதனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை ...எனவே கொஞ்சம் சோகமாக அவளிடம் சொன்னான்.இப்ப நானும் நீயும் ஓடிப்போனால் .ஊரில் பல மாதிரிகதைப்பார்கள்..உன் அக்காவின் வாழ்க்கையும் நாசம் ஆகிவிடும் எனவே நாங்கள் இப்படியே யாருக்கும் தெரியாமல்..நம்ம காதலைத்தொடருவோம்.என்றான்.. தங்கமும்...அவனது பேச்சில் மயங்கி தன்னை அவனிடம் முழுமையாக ஓப்படைத்தாள்


மீண்டும் அதே கழிவாறு..அதே கூடல் ஆனால் முதல் காம்னா,இப்போது புஸ்பாவின் தங்கை..தங்கம்....
காம்னா,புஸ்பாவின் தங்கை...என சுதன் தன் லீலைகளைத்தொடர்ந்து கொண்டிருந்தான்....


அந்த முறை சுதன் வேலை செய்யத காணிகளில் நல்ல விளைச்சல் கிடைத்தனால் மகிழ்ந்த முதளாலிமார்கள்..சுதனிற்கு சன்மானமாக ஓரு தொகைப்பணத்தை கொடுத்தனர்..இப்படி சில முதளாலிமார்களிடம் இருந்து கிடைத்த பணத்தைக்கொண்டு..தானும் சேர்த்துவைத்திருந்த பணத்தையும் சேர்த்து ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கினான்.


புஸ்பாவிடம் போய் தான் காம்னாவுடன் ஓரு முறைதவறு செய்தது உண்மைதான் என்னை மன்னித்து விடு என்று சொன்னான்
புஸ்பாவும அவன் மேல் உள்ள பாசத்தால் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டாள்.....


இதற்கிடையில் புஸ்பாவின் தம்பி வெள்ளையனின் மனைவி ரதி கர்ப்பமானாள்.ஏற்கனவே மனைவி மீது அன்புமழை பொழிந்த வெள்ளையன்.இப்போது அவளுடனே என்நேரமும் இருந்தான் வேலைக்கு கூட போகவில்லை..ரதி அவனை செல்லமாக கோபித்துக்கொண்டாள் நீ வேலைக்கு போ வெள்ள.என்றாள்..


நாட்டில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த காலம் அது..வன்னியில்.யுத்தமழை பொழியத்தொடங்கியது.....ஆங்காங்கே நெருக்கடியான சூழல்கள் பல ஏற்பட்டு இருந்தது......வன்னியில் புலிகள் தங்கள் அமைப்புக்கு ஆட்களைச்சேர்க்கும் பணியில்..தீவிரமாக ஈடுபட்டனர்.....


ஆங்காங்கே விமானக்குண்டு வீச்சுக்கள் பரவலாக வன்னியில் நடந்து கொண்டிருந்தால்..ஆண்கள் மட்டுமே வேலைக்குச்சென்று கொண்டிருந்தனர்..பெண்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்தனர்...
முதளாலிமார்களும் வயல் செய்வதை குறைத்துவிட்டதால் வயல்வேலைகளும் முன்புபோல இருக்கவில்லை..
சுதனின் குடும்பத்திலும் முன்பு சுதன் செட்டுடன் வயல் வேலைக்குச்சென்ற.புஸ்பாவின் அம்மா,புஸ்பாவின் தங்கை..போன்றோர் வேலைக்குப்போகவில்லை..கிடைக்கும் வயல்வேலைகளைச்செய்யும் சுதனின் வருமானத்தில் குடும்பச்செலவுகள் ஓடியது...


இந்த சூழலில் புஸ்பாவுக்கும் சுதனுக்கும் இரண்டாவதாகவும் ஓரு பெண்குழந்தை பிறந்தது....சுதன் பெரிதும் மகிழ்ந்தான்..ஆனாலும் அவனால்..காம்னாவுடனான உறவையோ இல்லை புஸ்பாவின் தங்கையுடனான உறவையோ...துண்டிக்கமுடியவில்லை..

மனைவிக்குத்தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.


ஓரு நாள் வேலைக்குப்போன வெள்ளையனைக்காணவில்லை காலையில் போனவன் இரவாகியும் இன்னும் வரவிலை என்ன நடந்தது எங்க போய்ட்டானோ என்று எல்லோறும் தேடிக்கொண்டிருந்தனர்.ரதி அழுது கொண்டிருந்தாள். அப்போது........
(தொடரும்)


முன்னைய பகுதிகளைப்படிக்க




இன்றைய தகவல்-இந்திய அணியில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் கங்குலிதான் 49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமைதாங்கி அதில் 21 போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார்..இந்திய டெஸ்ட் கேப்டன்களில் இது ஒரு சாதனையாகும்.



முஸ்கி-கடந்த கடாபி பற்றி பகிர்ந்த பதிவில் நான் தகவல்களை காப்பி செய்தாக ஓரு நண்பர் பெயரைக்குறிப்பிடாமல் கருத்துரையிட்டிருந்தார்..நண்பரே நீங்கள் பெயரைக்குறிப்பிடாமல் கடுமையான சொல்லை பிரயோகித்திருந்தபடியால் நான் அந்தக்கருத்துரையை நீக்கிவிட்டேன்..நீங்கள் உங்கள் முகத்தை மறைக்காமல் கடுமையான வார்த்தை பிரயோகிக்காமல் என்னிடம் கேள்விகேட்டு இருந்தால் நான் பதில் சொல்லியிருப்பேன் கருத்துரையையும் நீக்கியிருக்க மாட்டேன்.இப்படி முகத்தை மூடிக்கொண்டு பேசுபவர்களுடன் நான் எப்பவும் விவாதிப்பது இல்லை..


ஆனாலும் நான் தகவல்களை காப்பி செய்தேன் என்று நீங்கள் கூறியபடியால்.நான் உங்களுக்கு..பதில் வழங்குகின்றேன்..அந்தப்பதிவை நான் எங்கையும் காப்பி செய்யவில்லை..தகவல்களை செய்தித்தளங்களில் வாசித்து சேகரித்துதான் நான் அதை பகிர்ந்திருந்தேன்.ஒருவருடைய வரலாற்றை சேகரித்து எழுதும் போது அது ஓரே மாதிரிதான் இருக்கும் இது உங்களுக்குத்தெரியாதா?..உதாரணத்திற்கு கடாபியின் மகன்கள் அவரது ஆட்சியில் என்ன பதவி வகித்தார்கள் என்று குறிப்பிடும் போது..அது வேறுதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதற்காக என் தளத்தில் மாற்றிக்குறிப்பிட முடியாதுதானே?
விமர்சணங்களை நான் எப்பவும் நான் வரவேற்பவன் ஆனால் முகத்தை மறைத்துக்கொண்டு பெயரைக்குறிப்பிடாமல் விமர்சிப்பவர்களின் கருத்தை நான் கண்டு கொள்வது இல்லை.
உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி நண்பரே.






Post Comment

30 comments:

செங்கோவி said...

’என்’விடுமுறை நாட்களில் இத்தொடர் வருவதால், படிக்க முடியவில்லை..சீக்கிரம் முழுதும் படிக்க முயல்கிறேன்...தொடருங்கள்.

Yoga.S. said...

இரவு வணக்கம்! நன்றாக எழுதுகிறீர்கள். உண்மைக்கதை என்பதால்,கொஞ்சம் விரசம் கலந்திருக்கும் தான்!கடாபி குறித்த விளக்கம் அருமை.வரலாறை இலங்கை அரசு போல் திரிக்கச் சொல்கிறார்களே?

தனிமரம் said...

தம்பி அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி கிடைக்குமா???

தனிமரம் said...

சுதன் ஒரு மல்லுவேட்டி மைனர் என்ற நினைப்பில் வாழ்பவர் இப்படியான சிலர் சமுகத்தில் இருப்பது உண்மையில் மீளமுடியாத பல குடும்பங்களை மீளவும் கொத்தடிமை சமுகம் ஆக்கும்.

தனிமரம் said...

இந்தக்கதை ஊடாக இன்னொரு உலகம் மறைந்து இருக்கு போர் நடக்கும் பூமியில் சாதாரன பெண்பித்தர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் சராசரி மனித இயல்புகள் மாறிவிடவில்லை என்பதே ஆகும்.

தனிமரம் said...

புஸ்பா போன்ற பெண்கள் விடும் மன்னிப்பு இன்னும் பலருக்கு முன்னுதாரனம் துனிந்து( எந்த செக்கிலும் நக்குவதற்கு)  பிறர் மாதரை நாட தெளிவான குடும்பப் பார்வை இல்லாத வாழ்வு இப்படித்தான்!

தனிமரம் said...

முகத்தை மூடிவரும் முண்டங்களுக்கு எல்லாம் ஏன் தம்பி பயம் .கருத்துக்களை தெளிவாக வைக்கட்டும் விவாதிக்கலாம்.துனிந்து எழுதுங்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ் நல்ல நித்திரைபோல இருக்கே:).

உண்மைக்கதை அழகாகப் போகிறது, தொடர்ந்து படிக்கும் ஆவல் அதிகமாகிவிட்டது. அடுத்தது வர நானும் வருகிறேன்.

K.s.s.Rajh said...

@செங்கோவி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
இரவு வணக்கம்! நன்றாக எழுதுகிறீர்கள். உண்மைக்கதை என்பதால்,கொஞ்சம் விரசம் கலந்திருக்கும் தான்!கடாபி குறித்த விளக்கம் அருமை.வரலாறை இலங்கை அரசு போல் திரிக்கச் சொல்கிறார்களே?/////

நன்றி ஜயா அந்த நபர் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்கின்றார்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பி அண்ணனுக்கு ஒரு பால் கோப்பி கிடைக்குமா??//////

அண்ணனுக்கு ஓரு பால் கோப்பி....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சுதன் ஒரு மல்லுவேட்டி மைனர் என்ற நினைப்பில் வாழ்பவர் இப்படியான சிலர் சமுகத்தில் இருப்பது உண்மையில் மீளமுடியாத பல குடும்பங்களை மீளவும் கொத்தடிமை சமுகம் ஆக்கும்/////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இந்தக்கதை ஊடாக இன்னொரு உலகம் மறைந்து இருக்கு போர் நடக்கும் பூமியில் சாதாரன பெண்பித்தர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் சராசரி மனித இயல்புகள் மாறிவிடவில்லை என்பதே ஆகும்/////

அது சரி...

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
புஸ்பா போன்ற பெண்கள் விடும் மன்னிப்பு இன்னும் பலருக்கு முன்னுதாரனம் துனிந்து( எந்த செக்கிலும் நக்குவதற்கு) பிறர் மாதரை நாட தெளிவான குடும்பப் பார்வை இல்லாத வாழ்வு இப்படித்தான்?/////

ஆம் பாஸ் இதான் பிரதான காரணம்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
முகத்தை மூடிவரும் முண்டங்களுக்கு எல்லாம் ஏன் தம்பி பயம் .கருத்துக்களை தெளிவாக வைக்கட்டும் விவாதிக்கலாம்.துனிந்து எழுதுங்கள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

அன்புக்குறிய பெயர் இல்லாதவரே..

நீங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு விதண்டாவாத கமண்ட் போட்டால் அதை நிச்சயம் நான் வெளியிட மாட்டேன்..

நீங்கள் சொல்லும் தளத்தில் இருந்து நான் காப்பி செய்யவில்லை..அதைவிட நான் கடாபிபற்றிய தகவல்களை பகிர செய்திஊடகங்களை வாசித்த போது நீங்கள் சொன்ன தளத்தை நான் பார்க்ககூட இல்லை..நேற்று நீங்கள் லிங் அனுப்பியதும் தான் போய்ப்பார்த்தேன்.நீங்கள் சொல்லும் தளத்தில் மட்டும் இல்லை எல்லாதளங்களிலும் கடாபியின் வரலாறு ஓரே மாதிரியாகத்தான் இருக்கும் அது எங்கையும் மாறாது...இதை புரிந்து கொண்டு நீங்கள் கருத்துரையை இடுங்கள் நிச்சயம் நான் அதை வெளியிடுகின்றேன்.

உங்கள் கருத்துரையை வெளியிடாவிட்டால் ஏனைய பதிவர்களின் தளத்தில்..நான் காப்பி செய்ததாக கமண்ட் போடுவதாக சொல்லியுள்ளீர்கள்..அது உங்கள் விருப்பம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை ஏன் என்றால் நீங்கள் அப்படி குறிப்பிட்டால் அதை பார்த்துவிட்டு என் தளத்திற்கு யாரும் வந்தால் தளத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் இதுவும் எனக்கு நன்மையே....

உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன் ஆனால் இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீனான கமண்ட் போட்டால் உங்கள் கருத்துரையை வெளிடமாட்டேன்.

என் பதிவுகள் பலதை இனையதளங்கள் காப்பி செய்து போட்டுள்ளன..நாங்கள் பதிவர்களுக்கிடையில் கலாய்க்க எழுதின பதிவை கூட காப்பி செய்து போட்டன..என் பதிவை மட்டும் இல்லை பல பதிவர்களின் பதிவுகளை காப்பி செய்துள்ளன......இதுகளை நீங்கள் பார்த்து இல்லையா?

கடாபியின் வரலாற்றை இணையத்தில் தேடிப்பாருங்கள் எல்லாதளங்களிலும் ஓரே மாதிரியாகத்தான் இருக்கும் அது எங்கையும் மாறாது..இதை புரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

நண்பரே இதற்குமேல் உங்களுடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.

மாய உலகம் said...

இந்த கதையை முதல் முறை படிக்கிறேன் நண்பா... எடுத்தவுடன் பகுதி - 7 ஐ படித்துவிட்டேன்.. கதை நகர்ந்த விதம் அருமை... பழைய 6 பகுதிகளையும் பிறகு வந்து படிக்கிறேன்.. வாழ்த்துக்கள் பாஸ்

Unknown said...

super story

K said...

வணக்கம் மச்சான் சார்! இனிய சனிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

இருங்கோ ஃபர்ஸ்ட் ஐ ஆம் ரீடிங் ஆஃப்டர் கம்மிங்!

K said...

மச்சான் சார், கதை அப்படி, இப்படி மேடு பள்ளமெல்லாம் ஏறி இறங்குதே! ஹி ஹி ஹி இருந்தாலும் சுவையான கதை தொடருங்கள்! வாழ்த்துக்கள்!!

M.R said...

அருமை நண்பரே ,கதை நடை அழகு.
கதை போட்டியில் கலந்து கொள்ளலாமே

Mohamed Faaique said...

கதைல ஏகப்பட்ட டுவிஸ்டு இருக்கு பாஸ்.

(கடாபி பற்றிய அதே பதிவை உங்கள் பதிவுக்கு முன் வேறெங்கோ நானும் படித்தேன். சொல்லலாம்’னு நினைத்து விட்டு விட்டு விட்டேன்..)

அம்பலத்தார் said...

வணக்கம் ராஜா, தாமதமாகத்தான் இந்தத்தொடரை படிக்க ஆரம்பித்தேன் கதை சுறுசுறுப்பாகப் போகிறது தொடருங்கள். தொடர் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

///
Mohamed Faaique கூறியது...
கதைல ஏகப்பட்ட டுவிஸ்டு இருக்கு பாஸ்.

(கடாபி பற்றிய அதே பதிவை உங்கள் பதிவுக்கு முன் வேறெங்கோ நானும் படித்தேன். சொல்லலாம்’னு நினைத்து விட்டு விட்டு விட்டேன்..////

ஆமாம் பாஸ் கடாபியின் வரலாறு பற்றி பல பதிவுகள் வந்திருக்கின்றது நானும் பலதை படித்தேன் அதில் ஓன்றை பார்த்துவிட்டுதான் நான் காப்பி பண்ணியதாக ஓரு நண்பர் சொல்லியிருக்கின்றார்.

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
வணக்கம் ராஜா, தாமதமாகத்தான் இந்தத்தொடரை படிக்க ஆரம்பித்தேன் கதை சுறுசுறுப்பாகப் போகிறது தொடருங்கள். தொடர் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்/////

நன்றி சார்

நிரூபன் said...

மச்சி, கதை சுவாரஸ்யமாக நகர்கிறது
சுதனை இயக்கம் பிடித்து விட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.
அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மச்சி, கதை சுவாரஸ்யமாக நகர்கிறது
சுதனை இயக்கம் பிடித்து விட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.
அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்////

வெயிட் பண்ணுங்க பண்ணுங்க....

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி
இந்த பதிவையும் இன்றய பதிவையும் படித்துவிட்டேன் இரண்டுக்கும் ஓட்டு உடனேயே போட்டுவிட்டேன்யா.., ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லையப்பு..

கடாபியின் பதிவைப்பற்றி ஒருவர் கூறியதால்தான் இந்த பின்னூட்டம் போடவேண்டியுள்ளது கடாபியை அனேகர் அறிந்துள்ளதால் அவரைப்பற்றி அதிக பதிவு வந்துள்ளது.. அதில் உங்கள் பதிவும் ஒன்று நான் நிச்சயமாக நம்புகின்றேன் நீங்கள் கொப்பி செய்யவில்லைன்னு யாரோ உங்களுக்கு தெரிந்தவர்தான் அந்த பெயரிலின்னு நான் நம்புகின்றேன் கொப்பி பேஸ்சை எதிர்கும் நீங்கள் கட்டாயம் அப்படி செய்திருக்கமாட்டீர்கள் எனக்கு இரண்டு பிள்ளைகள்ன்னா எல்லாருக்கும் இரண்டு பிள்ளைகள்ன்னு சொல்லாமல் மாற்றி மாற்றியா சொல்லமுடியும் உங்கள் கதையில் வரும் சுதன் போல்  கவலையை விடுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ்..
நான் காப்பி செய்யவில்லை ஆனால் ஒரு நண்பர்..ஓருலிங்கை அனுப்பி நான் காப்பி செய்தாக சொல்லியிருந்தார்..நான் அங்க போய்ப்பார்த்தேன் அங்கே கடாபியின் வரலாறு எழுதப்பட்டு இருந்தது...

நான் எனக்கு கமண்ட் போட்டவ்ருக்கு அதை நான் காப்பி செய்யவில்லை என்று கூறியது..அடுத்த நாள் அந்த பதிவின் தலைப்பை மாற்றி கிட்டதட்ட எனது பதிவின் தலைப்பை போல இருந்தது..இதில் இருந்து புரிந்து விட்டது எனக்கு...

நான் பல ஊடகங்களில் வாசித்த தகவல்களைத்தான் தொகுத்திருந்தேன் இதன் போது அவர் சொன்ன தளத்தை நான் பார்க்ககூடஇல்லை......
இப்படியான பெயரை சொல்லாமல் விமர்சிப்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை..

நன்றி மாம்ஸ்

Unknown said...

உண்மை என்ற நிலையில்
சற்று உள்ளம் வருந்தவே
செய்கிறது!


புலவர் சா இராமாநுசம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails