Showing posts with label அனுபவப்பகிர்வுகள். Show all posts
Showing posts with label அனுபவப்பகிர்வுகள். Show all posts

Monday, September 09, 2013

ராஜ் இருக்கிறான் இன்னும்

வணக்கம் நண்பர்களே எப்படி சுகம்? நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.திசைமாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை பயணத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை அப்படி இருக்க இந்த வலைப்பதிவு மட்டும் எப்படி நிரந்தரமாக முடியும்.நிரந்தரமாக வலைப்பதிவு எழுதுவதை நிறுத்திவிடுவது என்ற முடிவில் தான் இந்தப்பக்கம் வரவில்லை.ஆனால் என் கஸ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் சந்தோசங்களை கொண்டாடவும்.என் மனசுக்கு பெரிய ஆறுதலாகவும் இருந்த இந்த வலைப்பதிவை மூடிவிட மனசு கேட்கவில்லை.

Post Comment

Sunday, December 02, 2012

2012 வலிகள் நிறைந்த வருடம்

2012ம் ஆண்டு வாழ்க்கை பயணத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் என்னை மிகவும் துவண்டுவிடச்செய்த வருடம்.

Post Comment

Wednesday, May 16, 2012

ப்ளீஸ் இதை யாரும் படிக்கவேண்டாம்

வணக்கம் நண்பர்களே என்ன பதிவுலகை விட்டு போகின்றேன் என்று சொல்லிட்டு போனவன் மீண்டும் வந்திருக்கேன் என்று பாக்கிறீங்களா?
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் நிலையானது எது? எனவே எனது பதிவுலகைவிட்டு போகும் முடிவை வாபஸ் வாங்கிவிட்டு மீண்டும் வந்துவிட்டேன். நிலையற்ற பொருளாதார தேடலில் தொலைந்து போகின்ற சாதாரன சாமானியன் நான் எனவே கிடைக்கும் நேரங்களில் என் எழுத்துக்களையும் மதித்து என்னையும் பதிவுலகில் தூக்கிவிட்ட வாசகர்களுக்காக மீண்டும் பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

Post Comment

Friday, January 27, 2012

காதலிக்க என்ன தகுதி வேண்டும்?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விதான் இந்த பதிவை எழுத தூண்டியது.என் நண்பன் ஒருவனின் அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் பெயர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அவனை நான் கிட்ட தட்ட 10 வருடங்களாக அறிவேன் என்னுடன் பாடசாலையில் கூடப்படித்த நண்பன்.எங்கள் வகுப்பில் பலருக்கு அவன் மேல் செம காண்டு. காரணமே தெரியாத கோபம் அவன் மேல் பலருக்கு.

Post Comment

Monday, January 23, 2012

காதலிப்பவர்கள் போடும் மொக்கைகள்.காதலில் விழுந்த நண்பர்களின் மொக்கைகளால் பதிவராக மாறிய பதிவர்

இந்த காதலில் விழுந்தவங்க இருக்காங்களே அதாங்க காதலிச்சுகிட்டு இருப்பவங்க அவங்க காதல் என்கிற போர்வையில் போடும் மொக்கைகள் தாங்க முடியாது.அதுவும் ரொம்ப நெருங்கின நம்ம ப்ரண்ஸ் காதலில் விழுந்திட்டாங்கனா அவனுங்க பண்ணும் இம்சை தாங்காது பாவம் நம்மள மாதிரி அப்பாவி ப்ரண்டுகள்.

Post Comment

Saturday, January 21, 2012

ஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையா?ஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களா?பட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.

வணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா? பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவறாக ஒன்றும் இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி....

Post Comment

Thursday, January 12, 2012

நண்பன் படமும் பல்பு வாங்கிய நானும்.

பொதுவாக நான் சினிமா விமர்சனம் எழுதுவது இல்லை.ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவதுண்டு.நான் பதிவுலகில் முதன் முதலில் எழுதிய விமர்சனம் வேலாயுதத்துக்குத்தான் அதன் பின் 7ம் அறிவுக்கு எழுதினேன்.இப்ப நண்பன் படத்துக்கு எழுதலாம் என்று நினைத்தேன்.

Post Comment

Wednesday, December 28, 2011

இந்த வருடம்,சினிமா,பதிவுலகம்,கிரிக்கெட்,என்னை கவர்ந்தவை

2011 வருடம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கின்றன.புதிய வருடம் 2012 வரவேற்க நாம் தயாராகிக்கொண்டு இருக்கின்றோம் இந்த 2011 ம் ஆண்டில்  எனக்கு மிகவும் பிடித்த சினிமா,கிரிக்கெட்,பதிவுலகம்,போன்றவற்றில் என்னை கவர்ந்த மனதை பாதித்த விடயங்களை இந்த பதிவின் மூலம் அலசுவோம்.

Post Comment

Tuesday, December 13, 2011

தனிமையில் இனிமை காண முடியுமா?

என் தனிமையின் சோகங்கள்,சந்தோசங்களை கொட்டும் இடம் தான் எனது இந்த நண்பர்கள் வலைப்பதிவு.நான் வலைப்பதிவு எழுத வந்த போது என் நண்பர்கள் யாரும் அதை ஊக்குவிக்கவில்லை ஏன் உனக்கெல்லாம் இந்த வேலை என்று தூற்றினார்கள் இப்ப கூட என் நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் இது எல்லாம் ஒரு வேலையா பிரயோசனமாக எதையாவது செய் என்கின்றார்கள்

Post Comment

Wednesday, November 30, 2011

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா

கடந்த சில நாட்கள் கொஞ்சம் மனதில் வலியிருந்தது எப்பவும் மனதில் இருக்கும் வலிகளை கண்டு நான் சோர்வது இல்லை காரணம் வலிகள் இருக்கும் போதுதான் தன் நம்பிக்கை பிறக்கின்றது.மனம் வலிகளை எதிர்த்து போராடுகின்ற போதுதான் வாழ்க்கை வலிமை பெறுகின்றது.

அப்படித்தான் சில மனக்கஸ்டங்களால் பதிவுலகில் கடந்தசில நாட்களாக சீராக இயங்கமுடியவில்லை நண்பர்களின் தளங்களுக்கும் வரமுடியவில்லை.
நண்பன் ஒருவன் கேட்டான் வா ராஜ் ஊர்ப்பக்கம் போய்ட்டு வருவோம் என்று சரி என்று எங்கள் ஊர்பக்கம் போனோம்...ஊருக்கு வந்ததும் மனதில் தானாக உட்சாகம் பிறந்தது கவலைகள் மறந்தது.

Post Comment

Monday, November 28, 2011

பிறந்த நாள் எப்படி கொண்டாடுவார்கள்!!

வணக்கம் இது ஒரு மொக்கை பதிவு,முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல
நம்ம ஈழத்துப் பதிவர் ஒருவருக்கு வரும் 1-12-2011 இல் பிறந்த நாள் வருது அதை வைத்து அவர் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவார்கள் எப்படி நம்ம பதிவர்கள் வாழ்த்துவார்கள் என்று ஒரு மொக்கை....ஓக்கே ரெடி ஸ்டாட்....

Post Comment

Thursday, November 24, 2011

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் என்னைப்பார்த்து பாடிய பொண்ணு

நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒரு பெண்காதலித்தாள் ஆனால் அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அவளைப்பற்றிய பதிவுதான் இது. ஏற்கனவே இந்தப்பதிவை என் தளத்தில் எழுதியுள்ளேன்.நான் புதிய பதிவராக இருந்த போது எழுதியது.அப்போது எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாக போடலாம் என்று எண்ணியபோது இந்தப்பதிவு கண்ணில் பட்டது எனவே இதை மீள் பதிவாகத்தருகின்றேன்...

எனக்கு முதல் காதல் என் பாடசாலைக்காலத்தில் வந்தது.அதற்கு பிறகு காதல் என்பதை பற்றி நான் சிந்திப்பது இல்லை சொல்லப்போனால் காதல் என்ற சொல்லே எனக்கு மறந்து விட்டது எனலாம்.இந்த காலப்பகுதியில் என்னை ஒரு பெண்காதலித்தாள் (அவளுக்கு அது முதல் காதலாக இருந்திருக்களாம்). அவளைப்பற்றிய பதிவு இது.அவளது பெயர் தனுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நான் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி அழகான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய வாழ்க்கை.

நகரத்து வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம் குறிப்பாக கிணற்றில் குளிப்பது என்ற ஒன்று நம்மிடையே மறந்து போகின்ற விடயமாக மாறியுள்ளது .என்னதான் குளியல் அறைகளில் குளித்தாலும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா.நீச்சல் தாடாகத்தில் நீந்துகின்ற போது ஊரில்ஆற்றில் நீந்துவதற்கு ஈடாகாது.மாலை வேளைகளில் அயலவர்களுடன் மரநிழலில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருப்பது.இப்படி எத்தனை சின்னச்சின்ன சந்தோசங்களை நாம் நகரவாழ்க்கையில் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்


எனது சித்தப்பாவின் வீட்டிற்கு போன முதல் நாள் தனுஜா எனக்கு அறிமுகமானாள்.எனது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்)நண்பருடைய மனைவியின் தங்கைதான் தனுஜா அவர்கள் குடும்பத்துடன் எனது சித்தப்பாவின் காணியில் இருந்த இன்னும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள்.பெருப்பாலும் தனுஜாவின் குடுப்பம் சித்தப்பாவீட்டில் தான் இருப்பார்கள் சிலவேளை எல்லோறும் ஒன்றாகவே சமைத்து உண்பார்கள்.அவள் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் நான் பார்த்தால் வேறுபக்கம் பார்ப்பது போல பாவனை செய்வாள்.எனக்கு ஒரு சந்தேகம் இவள் ஏன் என்னைப் பார்க்கின்றாள். 

தனுஜா பேரழகி என்று சொல்ல முடியாவிடாலும் ஒருமுறை பார்த்தாள் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகு.ஒரு நாள் என்னிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் .நான் ராஜ் என்றேன் அதற்கு அவள் முழுப்பெயர் என்னவென்றாள் நான் ராஜ்தான் என்று சொன்னேன்(ராஜ் என்றே எல்லோறும் அழைப்பதால் எனது முழுப்பெயர் எனக்கே மறந்து போச்சு ஹி.ஹி.ஹி.ஹி)அடுத்த நாள் ஒரு பேப்பரை என்னிடம் தந்து(சுடர் ஒளி வார இதழ் என நினைக்கின்றேன்)வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.நான் அதை வாங்கிப்பார்த்த போது அதில் I Love you  என்று எழுதப்பட்டிருந்தது.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பேப்பரை தூக்கி போடுவிட்டு நான் பேசாமல் போய்விட்டேன்.அடுத்தநாள் என்னிடம் தயங்கி தயங்கி வந்தாள் ராஜ் நான் நேத்து தந்ததுக்கு என்ன பதில் என்றாள்.உடனே நான் என்ன சொல்லுறது என்னை உங்களுக்கு ஒரு கிழமையாகத்தான் தெரியும். அதற்குள் காதல் என்றாள் என்னால் நம்பமுடியவில்லை என்னால் உங்களை காதலிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டேன்.அவளைப்பார்க்க பாவமாக இருந்தாலும் பொதுவாக எனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவது என் பழக்கம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை பேசாமல் போய்விட்டாள்.அதற்கு பிறகு சித்தப்பாவீட்டிற்கு வருவாள்.நான் அவள் வந்தாள் வெளியில் போய்விடுவேன். 

பிறகு சித்தியை மாமி(அத்தைஎன்றும்) அண்ணியை அக்கா என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.இது பற்றி ஒரு நாள் அண்ணி என்னிடம் கேட்டார் என்ன ராஜ் தனுஜா இப்படி கூப்பிடுறாள் என்றார் .அண்ணி என்னிடம் அப்படி கேட்டதற்கு காரணம் உள்ளது எனது சித்தப்பாவின் பிள்ளைகள் எல்லோறும் திருமணம் செய்தும் தொழில் நிமித்தமாகவும்  வேறு இடத்தில் இருக்கிறார்கள்.ஒரு அண்ணா மட்டுமே சித்தப்பாவுடன் இருக்கிறார் அவரும் திருமணம் முடித்துவிட்டார்.அண்ணி அப்படி கேட்டதும் நான் சொன்னேன் கண்ணன் அண்ணாவை(சித்தப்பாவின் மகன்) இரண்டாவது திருமணம் செய்யப்போறாள் போல உங்கள் பதவி காலி என்றேன்.அதற்கு அண்ணி ராஜ் ஜோக் அடிக்காமல் சொல்லு என்றார்.

பிறகு நான் அண்ணியிடம் சொன்னேன் என்னை லவ் பன்னுவதாக தனுஜா சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி பேசி(திட்டி)அனுப்பிவிட்டேன் .அதுதான் அவள் சித்தியை மாமி என்றும் உங்களை அக்கா என்றும் கூப்பிடுறாள் போல என்றேன்.அண்ணி சிரித்துக்கொண்டே போய்விடார். அதற்கு பிறகு அண்ணா,அண்ணி,சித்தி சித்தப்பா எல்லோறுக்கும் என்னை கலாய்ப்பதுதான் வேலை.

இதற்கு இடையில் வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த தனுஜாவின் அண்ணன் வந்து இருந்தான்.அவன் என்னுடன் நல்ல நண்பனாகிவிட்டான். ஆனால் தனுஜா என்னை விடுவதாக இல்லை கவிதைகள் எழுதுவதும் என்னால் உங்களை மறக்க முடியாது ராஜ் அப்படி இப்படினு என்னிடம் சொல்லுவாள் அவளை பார்க்க பாவமாக இருக்கும். 

சித்தப்பாவீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பன் (நான் சித்தப்பாவீட்டிற்கு போயிருந்த போது நல்ல நண்பனாகி விட்டான்).தனுஜா குடும்பம் சித்தப்பாவின் காணியில் வசிக்க வந்ததில் இருந்து தனுஜாவை ஒருதலையாக காதலித்து வருகின்றானாம். அவனுக்கு தனுஜா என்னைகாதலிப்பது தெரிந்ததும் என்னிடம் கேட்டான். ராஜ் தனுஜாவை நான் லவ் பண்ணுறன் அவள் உங்களை லவ் பன்னுகின்றாள் என்றான் அதற்கு நான் சொன்னேன் டேய் அவள்தாண்டா என்னை லவ் பண்ணுறாள் நான் லவ் பண்ணலை அத்துடன் நான் சித்தப்பாவீட்ட வந்திருக்கேன் பிறகு எனது ஊருக்கு போய்விடுவன்.நீதான் இங்க இருக்கிற எனவே நீ தாராளமாக லவ் பண்ணு என்றேன். 

அனால் தனுஜா அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை.சொல்லப்போனால் தனுஜா என்னை விடுகிறமாதிரி இல்லை. அப்போது நான் நினைத்துக்கொண்டேன் பொண்ணுங்க நாங்களாக தேடிப்போய் காதலித்தாள் பந்தா பன்னுவார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவனை பிடித்து விட்டால் எவ்வளவு இறங்கி வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டேன்
யாரடி நீ மோகினி படத்தில் தனுசை ஓரு தலையாக காதலிக்கும் சரன்யா மோகனிடம் இருந்து தப்பிக்க தனுஸ் ஓடுவாரே அப்படி இருந்தது என் நிலமை




 தனுஜா ஒரு நாள் என்னிடம் கேட்டாள் ஏன் ராஜ் என்னை லவ் பண்ண மாட்டேன் என்கிறீங்க சொல்லுங்க என்றாள்.நான் உடனே பெரிய ஹீரோ கணக்கா அப்படி இல்லை தனுஜா எனக்கு காதல் பிடிக்காது அப்படி இப்படினு அவுத்து விட்டேன்.அதற்கு அவள் என்றைக்காவது நீங்கள் என்னை லவ் பண்ணுவீங்க என்றாள்.நான் சொன்னேன் உங்களை ஒருத்தன் லவ் பண்ணுறான் தானே(பக்கத்து வீட்டு நண்பன்) ஏன் அவனை நீங்க லவ் பண்ணலாம்தானே என்றேன்.அதற்கு அவள் காதல் எப்ப யார்மேல வரும் என்று சொல்லிட்டு வருவதில்லை என்னை தன்னால் மறக்க முடியாது என்று சொன்னாள் (நிறைய சினிமாப்படம் பார்ப்பாள் போல).

தனுஜாவின் காதலை நான் ஏற்றுக்கொள்ளாதற்கு பிரதான காரணம் அப்போது காதல் பற்றி சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை(இப்பவும் அப்படித்தான்) அதைவிட எனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதலின் வலி மனதில் இருந்ததால்(அப்போது இருந்தது இப்ப இல்லை)



மற்றது அவள் தனது காதலை சொன்ன போது அவளது அண்ணனை எனக்கு தெரிந்திருக்காவிட்டாலும் பிறகு நல்ல நண்பன் ஆகிவிட்டான் இந்த உலகில் எனக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னால் முதலில் நான் கூறுவது நண்பர்களின் தங்கச்சியை(சகோதரி) காதலிப்பது இப்படி பட்டவர்களை எனக்கு பிடிக்காது.எனவே தனுஜாவின் காதலை ஏற்றுக்கொள்ளாதற்கு இதுவும் ஒருகாரணம்.



மற்றது தனுஜாவை ஒருதலையாக காதலித்த நண்பனின் காதல் ஏன் என்றாள் ஒரு தலைக்காதலின் வலி எனக்கு நன்றாக தெரியும்.

இப்படி சில காரணங்களால் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை


ஆனாலும் அவளை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.பிறகு நான் சித்தப்பா வீட்டில் இருந்து வரும் போது அவளிடம் போய்ட்டு வாறன் என்று சொன்ன போது அவள் அழுது விட்டாள்.எப்பவும் உங்களை என்னால் மறக்க முடியாது ராஜ் என்றாள்.கடைசிவரை அவளது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு நான் சித்தப்பாவின் வீட்டில் இருந்து வந்து விட்டேன்.நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலைகளால் இப்போது சித்தி ,சித்தப்பா,அண்ணா அண்ணி எல்லோறும் வேற ஊரில் வசிக்கின்றார்கள். இப்ப தனுஜாவின் குடுப்பம் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மீள் பதிவு
படங்களில் இருப்பது-தூத்துக்குடி,மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்த கருவாப் பையா கருவாப் பையா பாட்டு புகழ் நடிகை கார்த்திகா
படங்கள்-கூகுள்

************************************************************************************************************
தவறுக்கு வருந்துகின்றேன்-
மன்னிக்கவேண்டும் நண்பர்களே நான் முன்பு
எழுதிவெளியிட்ட என் 100வது பதிவான. சச்சின், கலீஸ் பிரட்மனுடன் ஒப்பிடலாமா?

என்ற பதிவு.இன்று மீண்டும் பல நண்பர்களின் டாஷ்போட்டில் தோன்றியதால் பலர் அதற்கு கமண்ட் போட்டு கேட்டு இருந்தார்கள்..



இன்று என் தளத்தை எடிட்டிங் செய்யும் போது ரீட் மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்டிங் செய்யும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதனால்தான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் அந்தப்பதிவு மீண்டும் தோன்றியிருக்கு என்று நினைக்கின்றேன் தவறுக்கு வருந்துகின்றேன் நண்பர்களே.....

தவறுதலாக மீண்டும் அந்தப்பதிவு பப்ளிஸ் ஆனதுக்கு மன்னிக்கவும்

************************************************************************************************************




Post Comment

Wednesday, November 16, 2011

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா பாடலும் என் நண்பனும்

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா இந்தப்பாடல் ஓரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடலில் சில்க் ஸ்மிதாவின் நடனம் அந்தக்காலத்தில் பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கும்...தலைமுறைகளை தாண்டிய ஹிட் பாடல்.இந்தப்படம் வெளிவந்த போது நான் பிறக்ககூட இல்லை.

Post Comment

Monday, November 14, 2011

என்றும் நினைவில் நிற்கும் ஓரு நண்பியும் நானும்

என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர்,பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் .தற்போது என் வலைப்பதிவை படித்து பல பொண்ணுங்க என்னுடன் நண்பர்களாகிவிட்டார்கள் அது வேற கதை



Post Comment

Friday, October 28, 2011

காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டா?

காதல் என்பது என்ன?அது ஓரு அற்புதமான உணர்வு..ஓரு தடைவைதான் காதல் வரும்..என்பது எல்லாம் காதலர்கள்..சொல்லும் .சுத்தப்பொய்...


Post Comment

Saturday, October 22, 2011

(பகுதி-5)எனக்குப்பிடித்த பெண்கள்

நிறைவுப்பகுதி
முன்னைய பகுதிகளை வாசிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

41)கல்பனா சாவ்லா

Post Comment

Thursday, October 13, 2011

நண்பர்களிடம் சில கேள்விகள்.. எனக்கு ஒரு சந்தேகம்...

இன்று ஒரு வித்தியாசமான பதிவு(அதை படிச்சிட்டு நாங்க சொல்லனும் என்று திட்டுவது புரிகின்றது..ஹி.ஹி.ஹி.ஹி..)

என்னிடம் சில கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்க நண்பர்களே?

சில கேள்விகள்

கேள்வி 1-பொதுவா பொண்ணுங்க ஒரு பையன் நல்ல மாதிரிகதைத்தால் உடனே ஏன் அண்ணா போட்டு கூப்பிடுகின்றார்கள்?

Post Comment

Thursday, October 06, 2011

என்றும் அன்புடன்.....................


நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.

Post Comment

Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்

Post Comment

Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails