Friday, September 09, 2011

கேவலம்.... tamilcnn.com,newyarl.com,kusumbu.com தளங்களின் வண்டவாளம் என் பதிவை காப்பி அடித்துவிட்டன

வணக்கம்
நான் எழுதிய பதிவை http://tamilcnn.com/http://newyarl.com /,kusumbu.com இந்த இனைய தளங்கள்அனுமதி இன்றி காப்பி(copy)செய்து தங்களின் தளத்தில் வெளியிட்டுள்ளன.ஒரு கிரிக்கெட் பதிவையோ இல்லை ஒரு பிரயோசனமான பதிவையோ காப்பி பன்னி இருந்தால் ஒரளவு ஏற்றுக்கொள்ளாம்.ஆனால் நாங்கள் பதிவர்களுக்கு இடையில் கலாய்ப்பதற்கு எழுதிய (கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு.கிசு. இந்தப்பதிவை கொஞ்சமும் அறிவு இல்லாமல் மண்டையில் மூளை இல்லாமல் காப்பி செய்து தங்கள் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்....அறிவு ஜீவிகளே இது சினிமா கிசு.கிசு என்று நினைத்து காப்பிசெய்த உங்கள் மூளையை முதலில் சலைவை செய்யுங்கள்..இது பதிவர்கள் எங்களுக்கு இடையில் காலாய்க்க எழுதிய காமடிப்பதிவு..



இந்த மூன்று இனையதளத்திற்கும்...தகவல் அனுப்பி இதுவரை எந்த பதிலும் வரவில்லை அத்தோடு அவர்கள் தங்கள் தளத்தில் இருந்து நீக்கவும் இல்லை..
அவர்கள் எனது பதிவை காப்பி செய்து வெளியிட்ட லிங் இங்கே

  1. http://tamilcnn.com/moreartical.php?newsid=5324&cat=india&sel=current&subcat=11
  2. http://newyarl.com/fullview.php?id=NDY1NA%3D%3D
  3. http://kusumbu.com/cinimaread_more.php?newsid=MjcyMA==

இந்த இனையதள நிர்வாகிகளே சிலவேளை இது உங்களுக்கு தெரியாமல் உங்கள் தளத்தின் செய்தி வெளியிடுபவர் வெளியிட்டு இருக்கலாம்..ஆனால் உங்களுக்கு தெரியப்படுத்தியும் ஏன் இதுவரை நீக்கவில்லை..
அப்படி நீங்கள் நீக்கும் பட்சத்தில் நானும் நீங்கள் காப்பி செய்தது பற்றிய இந்தப்பதிவை நீக்கிவிடுகின்றேன்..

உங்கள் தளத்தில் சிறந்த செய்தி வெளியிடுபவர்களாக பார்த்து வேலைக்கு வையுங்கள் இல்லை என்றால் அவர்கள் ஏனைய தளங்களில் இருந்து காப்பி செய்து வெளியிட்டால் அது உங்கள் தளத்திற்குதான் அவமானம்,

தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் உங்களின் செய்தி சேகரிபாளனாக வேலைசெய்யத்தயார்.அதை விட்டு விட்டு என் பதிவுகளை காப்பி செய்யவேண்டாம் என்பதைனை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வலைப்பதிவு எழுதும் எங்களை நம்பித்தான் உங்கள் இனைய தளம் இருக்கின்றது என்றால் பிறகு என்ன ம......................க்கு....அந்த இனைய தளம்.

உங்களுடன் நாங்கள் போட்டி போட வருகின்றோமா இல்லையே .அதைவிட எங்கள் பதிவை காப்பி அடித்துதான் நீங்கள் இனையதளம் நடத்தவேண்டிய எந்ததேவையும் உங்களுக்கு இல்லை எனவே தயவு செய்து என்னைப்போன்ற வலைப்பதிவாளர்களின் பதிவுகளை காப்பி செய்வதை நிறுத்துங்கள் இது தாழ்மையான உருக்கமான வேண்டுகோள்.

நீங்கள் மலை என்றால் நாங்கள் பதிவர்கள் சின்ன மணல் கும்பி எனவே உங்களுடன் போட்டி போட்டு சண்டையிட எங்களால் முடியாது ஆனால் எனது பதிவை நீங்கள் காப்பி அடித்தீர்கள் சரி நன்றி என்று ஒருவார்த்தையாவது சொல்லி என்தளத்தின் முகவரியை குறிப்பிட்டீர்களா இல்லையே............இதில் என்ன காமடி என்ரால் கொப்பி செய்பவர்களின் குட்டு வெளிப்பட இடைக்கிடையே பதிவில் இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு என்று வார்த்தைகளை செருகினேன்..ஆனால் காப்பிசெய்த உங்கள் தளத்தின் புண்ணியவான்கள் அந்தவசனத்தைகூட காப்பிசெய்து போட்டு இருக்கின்றார்கள்...இப்படி பட்ட முட்டாள் செய்தி எடிட்டர்கள் உங்கள் தளத்திற்கு தேவையா...பேசாமல் எனக்கு அந்தவேலையைத்தாருங்கள் உங்கள் தளத்திற்கு நல்ல கட்டுரைகளை எழுதித்தருகின்றேன்.

தயவு கூர்ந்து காப்பிசெய்த எனது பதிவை உங்கள் தளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள்.எனது மனநிலையில் இருந்து சிந்தித்து நீக்குவீர்கள் என்று எதிர்பாக்கின்றேன்....இது எனது குரல் மட்டும் இல்லை இனையதளங்களால் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகின்ற ஓட்டு மொத்த வலைப்பதிவாளர்களின் குரல்..

நீங்கள் காப்பி அடித்த எனது பதிவை நீக்கும் பட்சத்தில் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி...அப்படி நீங்கள் நீக்கினால் நானும் நீங்கள் காப்பி அடித்தது பற்றிய இந்தப்பதிவை நீக்கிவிடுகின்றேன்

அன்புடன்
உங்கள் பெருந்தன்மையை எதிர்பார்த்து காத்து இருக்கும் ஒரு சாதாரண வலைப்பதிவாளன்




பிந்திய குறிப்பு--இப்போது இந்த தளத்திலும் http://kusumbu.com/cinimaread_more.php?newsid=MjcyMA== என் பதிவு காப்பி செய்யப்பட்டுள்ளது

எனது பதிவு என்தளத்தில்

காப்பி அடித்த http://tamilcnn.com/தளத்தில்
இந்தப்படத்திலொ பாருங்க நான் எனது பதிவில் வெள்ளை நிரத்தால் எழுதிய இது ராஜ்சின் நண்பர்கள் வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவு என்ற சொல்தெரிகின்றது.எனது பதிவில் தெரியாது காரணம் இப்படி காப்பி செய்பவர்கள்  மூளையில்லாமல் காப்பி செய்வார்கள் என்றுதான் எனது பதிவில் வெள்ளை எழுத்தில் அந்த வசனத்தை வைத்தேன்


காப்பி அடித்தhttp://newyarl.com தளத்தில்


Post Comment

27 comments:

Anonymous said...

ஹஹஹா இவை தான் நம் தமிழ் ஊடகங்களின் வண்டவாளம்...உந்த ஊடகம் நடத்துகிற நிர்வாகியின் மண்டையை கலட்டி பார்க்க வேண்டும் ஏதாவது இருக்கு தானா எண்டு

Anonymous said...

https://www.facebook.com/TamilCNN?sk=wall

அம்பாளடியாள் said...

கேவலமான விசயம்.இந்தத் தவறை செய்பவர்கள் தயவு செய்து
ஒன்றை உணரவேண்டும் .ஒரு படைப்பாளி இந்த ஆக்கத்தை
எழுதும்போது மனதில் எத்தனை கற்பனைகளோடு பல சிரமங்களுக்கு
மத்தியில் இதனை எழுதியிருப்பார்.(யாரோ பெத்த பிள்ளைக்கு நான்தான்
அப்பன் என்போதுபோல் உள்ளது இச் செயல்) . .நன்றி சகோ பகிர்வுக்கு .....

M (Real Santhanam Fanz) said...

உங்கள் பதிவு மட்டுமல்ல, நிருபனின் பதிவு, ஜீயின் பதிவு உள்பட நிறையவே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. சினிமாவ மட்டும்தான் காப்பி அடிக்கறாங்கன்னு பாத்தா, சினிமா சம்பந்தமா நாம போடுற பதிவுகலயுமில்ல காப்பி அடிக்கறாங்க, அந்த அறிவு ஜீவி இந்த பதிவையும் காப்பியடிக்காம இருக்கணும்.

M (Real Santhanam Fanz) said...

சக பதிவர்களே, கள்ள ஒட்டு போட்டாவது இந்த பதிவ பிரபலப்படுத்துங்கப்பா, நெறைய பேருக்கு போய்ச்சேரட்டும்...

K.s.s.Rajh said...

அன்பான நண்பர்களே எனது பதிவுமட்டும் இல்லை நண்பர் நிரூபன் உட்பட பல நண்பர்களின் பதிவுகளை மேலே சொன்ன இணையதளங்கள் காப்பி அடித்துள்ளன.....அவர்களுக்கு அதை நீக்கும் படி செய்தி அனுபியுள்ளோம் என்ன செய்கின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்போம்.....தயவு செய்து ஓட்டுக்களைப்போட்டு இந்தப்பதிவை பிரபல்யமாக்குங்கள் இது எனது குரலாக மட்டும் இல்லை ஓட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட அனைத்து பதிவர்களின் குரல்..........

செங்கோவி said...

ஆ..கொதித்துக் கிளம்பிவிட்டார் எங்கள் முத்த அரசன்...தள நிர்வாகிகளே, உடனே அந்தப் பதிவை நீக்குங்கள்..இல்லையேல், கிஸ் ராஜா உங்களுக்கு 100 முத்தம் கொடுத்து விடுவார்..ஜாக்ரதை.

செங்கோவி said...

நிரூவுல இருந்து எல்லாரும் அழுது முடிச்சாச்சு..இவரு இப்போ வந்து, புரட்சி பண்றாரு..தூங்கும்யா.

தனிமரம் said...

இந்தச் செயல் கண்டிக்கப்படவேண்டும் நண்பனே!

சுதா SJ said...

மிக மிக கண்டனத்துக்கு உரியது இச்செயல். மேலே ஒருவர் சொன்னது போல் அடுத்தவ் பிள்ளைக்கு நான்தான் அப்பா என்று சொல்லுவது போல் உள்ளது .

சுதா SJ said...

இங்கே திருடனாய் பார்த்து திருந்தினால் ஒழியே....
என்ன ஜென்மங்களோ....................

யாழவன் said...

மானம் கெட்ட இணையங்கள் இவர்கள். இவர்களது இணையம் முழுக்க இருப்பது புரட்டு தான்

காந்தி பனங்கூர் said...

ஆமாம் ராஜ், உங்கள் பதிவை படித்துவிட்டு tamilcnn.com ஐ போய் பார்த்தேன், என் பதிவும் இந்த இணையத்தளத்தில் காபி அடிக்கப்பட்டுள்ளன. என் பதிவின் லிங்க் http://panangoor.blogspot.com/2011/09/blog-post_3810.html, என் பதிவை காபி அடித்த இணையதளம் லிங்க் http://tamilcnn.com/moreartical.php?newsid=5335&cat=india&sel=current&subcat=10. பதிவர்களே பரவாயில்லை போல இணையதளத்துக்கு.

kobiraj said...

இவர்களுக்கு வெட்கம் ரோசம் மானம் எதுவும் இல்லையா ?

Anonymous said...

43448 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

இது கூட இந்தத் தளங்கள் விடும் ரீலுதான் நண்பர்களே

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நானும் கந்துவும் நேற்று மெயில் அனுப்பிக் கேட்டிருந்தோம்,
முதலில் பதிவினை நீக்க மாட்டோம்,
நீங்கள் சுயமாக இப் பதிவினை எழுதியதற்கு ஆதாரம் ஏதும் இருக்கா என்று கேட்டார்கள்..

அப்புறம் ஒரு மாதிரிப் புரிய வைத்து பதிவினை நீக்க வைத்திட்டம்.

rajamelaiyur said...

சில நாட்களுக்கு முன் ciniicon என்ற இணையதளம் என் பதிவை காப்பி அடித்தது

K.s.s.Rajh said...

நாம என்னதான் செய்தாலும் சிலர் திருந்தவே மாட்டாங்க...இந்தப்பதிவை வாசிக்கு அனைத்து இனையதளங்களின் நிர்வாகிகளே..உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் எங்களைப்போன்ற வலைப்பதிவாளர்களின் பதிவுகளை காப்பி செய்ய வேண்டாம் அப்படி காப்பி செய்துவிட்டீர்கள் என்றால் நன்றி என்றாவது ஒருவார்த்தையை எங்களுக்கு போட்டு விடுங்கள் ஒவ்வொறு பதிவிலும் எங்களின் நிறைய உழைப்பு இருக்கின்றது தயவு செய்து இதை கவனத்தில் எடுக்கவும்.

M.R said...

ஆமாம் நண்பரே அதில் கீழ் காணும் வரியும் உள்ளது

இது ராஜ்சின் நண்பர்கள் வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவு


உங்கள் பெயரை போட்டே பதிவிட்டுள்ளார்கள்

சக்தி கல்வி மையம் said...

இது கண்டிக்கத்தக்கது..

Anonymous said...

இதுதான் காப்பியடிக்கறதோட உச்சம் போல!!

நண்பரே உங்களுக்கு ஒரு ஐடியா..

நீங்க உங்க பதிவு எழுதி முடிச்சதும், கீழே

நன்றி ராஜ் இன் நண்பர்கள் ப்ளாக்ஸ்பாட்.காம் என்று போட்டுவிடுங்கள்

அதையும் சேர்த்தே பதித்திடுவார்கள்..

Mathuran said...

என்னத்த சொல்லுறது
அதான் நீங்களே சொல்லீட்டிங்களே கேவலம் எண்டு.. இவங்களை திருத்த முடியாது.. சொரனை கெட்ட ஜென்மங்கள்

குறையொன்றுமில்லை. said...

ஐயோ என்னஜன்மங்கள். இன்னும் யாரு யாரு பதிவெல்லாம் காப்பி பண்ணிருக்காங்களோ?

K.s.s.Rajh said...

M.R சொன்னது…
ஆமாம் நண்பரே அதில் கீழ் காணும் வரியும் உள்ளது

இது ராஜ்சின் நண்பர்கள் வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவு


உங்கள் பெயரை போட்டே பதிவிட்டுள்ளார்கள்///

அந்த வரிகள் நான் என் பதிவில் எழுதி வெள்ளைக்கலரில் மறைத்துவைத்திருந்தேன் இப்படி காப்பி பன்னுபவர்கள் மாட்ட மங்குனி இனையதளங்கள் அதை கவனிக்காமல் காப்பி செய்து போட்டு இருக்குதுகள்...என் பதிவை செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்..இவங்களை என்ன செய்வது நண்பா

K.s.s.Rajh said...

///
ஷீ-நிசி கூறியது...
இதுதான் காப்பியடிக்கறதோட உச்சம் போல!!

நண்பரே உங்களுக்கு ஒரு ஐடியா..

நீங்க உங்க பதிவு எழுதி முடிச்சதும், கீழே

நன்றி ராஜ் இன் நண்பர்கள் ப்ளாக்ஸ்பாட்.காம் என்று போட்டுவிடுங்கள்

அதையும் சேர்த்தே பதித்திடுவார்கள்///
அப்படி இடையில் நான் சொருகிய வரியான இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்று போட்டு இருந்தேன் மங்குனி தளங்கள் அதை கவனிக்காமல் காப்பி செய்து போட்டு இருக்குதுகள் பாருங்கள்

Riyas said...

உங்களுடைய பதிவையும் காப்பியடிச்சிட்டாங்களா.. அப்போ நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டிங்கன்னு சொல்லுங்க,,

நிறைய தளங்கள் காப்பி பேஸ்டிலேயே காலத்தை ஓட்டுகின்றன,,

பிரணவன் said...

சகா இவர்கள் எல்லாம் பிறர் உழைப்பில் புகழ் தேடுகின்றனர். . .பாவம் சுய சிந்தனை இல்லாதவர்கள். . .

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails