Monday, January 23, 2012

காதலிப்பவர்கள் போடும் மொக்கைகள்.காதலில் விழுந்த நண்பர்களின் மொக்கைகளால் பதிவராக மாறிய பதிவர்

இந்த காதலில் விழுந்தவங்க இருக்காங்களே அதாங்க காதலிச்சுகிட்டு இருப்பவங்க அவங்க காதல் என்கிற போர்வையில் போடும் மொக்கைகள் தாங்க முடியாது.அதுவும் ரொம்ப நெருங்கின நம்ம ப்ரண்ஸ் காதலில் விழுந்திட்டாங்கனா அவனுங்க பண்ணும் இம்சை தாங்காது பாவம் நம்மள மாதிரி அப்பாவி ப்ரண்டுகள்.

என் நண்பர்களில்(சின்ன வயதில் இருந்து இன்றுவரை நட்பாக இருக்கும் பசங்க)நான் உட்பட ஒரு சிலரை தவிர ஏனையோர் காதலில் விழுந்துவிட்டாங்க?நானும் இன்னும் ஒன்று இரண்டு பேரும் தான் காதலிப்பது இல்லை என்ற குறிகோளில் இருக்கோம்(ஏற்கனவே நொந்து நூலாகி தற்போது காதலிப்பதில் இருந்து ரிட்டேர் ஆகிட்டோம் அவ்வ்வ்வ்)..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


நம்ம காதலில் விழுந்த பசங்கள் போடும் காதல் மொக்கைகள் பற்றிதான் இன்றைய பதிவு.நான் பதிவராக மாறியதுக்கும் அவன்களின் மொக்கைக்கு என்ன சம்மந்தம் என்று நினைக்கிறீங்களா தொடர்ந்து படியுங்கள் புரியும்.

இப்படித்தான் என் நண்பன் ஒருவன் இருக்கான் அவன் எனக்குத்தெரிய பல பிகருகளை டாவடிச்சு எல்லாம் புட்டுகிச்சு. இப்ப கடைசியா ஒரு பொண்ணை லவ்வுகின்றான். இவன் ஒரு நாள் என்னிடம் சொன்னான்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ராஜ் உன் தங்கைச்சி வார கிழமை அவள் ஊருக்கு வரச்சொனாள் நான் போயிட்டு அடுத்த கிழமைதான் வருவேன்.

நான் - எனக்கு ஏதுடா தங்கச்சி அம்மா அப்பாவுக்கு நாங்க இரண்டு பசங்க மட்டும்தாணேடா?

அவன் -ஹி.ஹி.ஹி.ஹி ரமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வைத் தான் உன் தங்கச்சி என்று சொன்னேன் நான் லவ் பண்ணிற பொண்ணு உனக்கு தங்கச்சி தானே?

நான்-ஏண்டா நீ லவ் பண்ணுற பொண்ணுங்க எல்லாம் எனக்கு தங்கைச்சினா ஊர் உலகத்தில இருக்குற எல்லாப்பொண்ணுமே எனக்கு தங்கைச்சிதானேடா.ஆமா இப்ப தங்கைச்சி நம்பர் 10,ஜை பாக்க போறீயா இல்லை நம்பர் 12 பாக்க போறீயா என்று கேட்டேன்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
அதோட பையன் கப் சிப் என்று ஆகிட்டான் போடா உன்கிட்ட போயி நான் சொன்னேன் பாரு என்ற இந்த காதல் உண்மைக்காதலடா?

நான் -ஏன்டா இதைத்தானே போன வருசமும் இன்னும் ஒரு பிகரை பார்த்து சொன்ன?
அவன் -அது போன வருசம் இது இந்த வரும்சம்

நான் -வெளங்கிடும்.
இதே நண்பனும்,நானும் இன்னும் ஒரு நண்பனும் ஒரே ரூமில் தங்கியிருந்து படித்துக்கொண்டு இருந்த காலப்பகுதி
ரூமில் இரண்டு கட்டில்தான் இருந்தது ஒன்று டபுள் சைஸ் பெரிய கட்டில் ஒன்று சிங்கில் சைஸ் சின்ன கட்டில் ஒரு கட்டிலில் முதல் சொன்ன நண்பன் தூங்குவான்.மற்றய கட்டியில் நானும் மற்ற நண்பனும் தூங்குவோம்.

நான் வலைத்தளம் ஆரம்பித்தது இவனுங்களின் இம்சையினால்தான் நம்ம முடிகின்றதா?எப்படி என்று சொல்கின்றேன் கேளுங்க.
முதலாவதாக சொன்ன நண்பன் அவன் லவ்வர் ரமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)விடம் இரவிரவாக பேசுவான் அப்படி என்னதான் பேசுவானோ அது அவனுக்குத்தான் வெளிச்சம்.சில நேரங்களில் போனை கோல் பண்ணி பேசிக்கொண்டு இருக்கும் போது இவன் மெளனமாகிவிடுவான். நானும் ஆரம்பத்தில் நினைச்சேன் அட அந்தப்பொண்ணு பேசுது போல அதுதான் இவன் கேட்டுக்கொண்டு இருக்கான் என்று.

ஆனால் அப்பறம் தான் தெரிந்தது அந்த பொண்ணும் இவன் மெளனமானது மெளனமாகிவிடுமாம்.ஏண்டா இந்த கொலை வெறி என்று கேட்டேன் அதாவது மெளன மொழிகளை பறிமாறிக்கொள்கின்றார்களாம்.அதுக்கு ஏண்டா போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது மெளன மொழி பரிமாறுறீங்க வீனா காசு தானே நாசமாகுது என்றேன்.அதுக்கு அவன் சொல்கின்றான் லவ்வருக்காக போனில் கொஞ்ச காசு செலவாகினால் என்ன? அவள் யார் என்னவள் தானே என்றான்.(ஏண்டா சொல்ல மாட்ட நீ உழைத்தால் தான் பணத்தின் அருமை புரியும் உங்க அப்பாதானே கஸ்டப்பட்டு உழைக்கின்றார்)

ஆனால் மற்ற நண்பன் அப்பதான் பிகரை உஷார் பண்ணிக்கொண்டு இருந்தான்.எனவே அவனும் இரவிரவாக மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருபான்.பக்கத்தில் படுத்திருந்து இவனுங்க இரண்டு பேரும் இரவிரவாக மெசேஜ் டைப்பண்ணிக்கொண்டு இருப்பான்க. போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துக்கொண்டு டிக்கிடிக் டிக்கிடிக் என்ற போன்ல டைப்பண்ணிக்கொண்டே இருப்பான்கள்.அமைதியான இரவுப்பொழுதில் அந்த சத்தம் தூக்கத்தை குழப்பிவிடும் ஏண்டா தூங்க விடுங்கடா நீங்க மெசேஜ் டைப்பண்ணுற சத்ததில் என் தூக்கம் குழம்புது.சரி இரவில் மெசேஜ் டைப்பண்ணுறீங்களே ஒரு டச் மொடல்(மாடல்)போனா வேண்டிவைங்கடா ஏண்டா அடுத்தவன் நித்திரையை குழப்புறீங்க என்றால்.உனக்கு என்ன மச்சி காதலை பற்றி தெரியும் நீயும் ஒரு பெண்ணை லவ் பண்ணி பார் உனக்கு புரியும் என்று ரைமிங்கா பேசுவான்கள்

இவங்க மேல மட்டும்தான் எனக்கு லவ் வருது.ஹி.ஹி.ஹி.ஹி
இப்படி இவனுங்க இம்சை தாங்க முடியாமல் நான் என்ன செய்வேன் என்றால்! இவனுங்க மெசேஜ் டைப்பண்ணும் சத்தம் ஓயும் வரை இரவில் நெட்டில் உலாவுவேன் அப்ப எதேர்ச்சையாக ஒரு பதிவரின் கிரிக்கெட் பதிவுகள் கண்ணில் பட்டது. அதைவாசிக்கும் போது அவரது தீவிர வாசகனாகிவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு தோணியது ஏன் நானும் ஒரு தளம் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த நான் அறிந்த கிரிக்கெட் தகவல்களை எழுதலாமே! என்று நினைத்துதான் என் தளத்தை உருவாக்கினேன். அப்படி உருவாக்கின போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போதுதான் நண்பர்களின் இம்சையால் இரவில் நெட்டில் உலாவ வெளிக்கிட்டதனால் தானே இந்த ஜடியா தோன்றியது என்று ”நண்பர்கள்” என்றே பெயரை வைத்துவிட்டேன்.

அதுக்கு பிறகு இரவில் இவனுங்க மெசேஜ் டைப்பண்ண தொடங்கினால் நான் பதிவெழுத தொடங்கிவிடுவேன்.இப்படி ஆரம்பத்தில் இரவில் எழுதி காலையில் பதிவை சரிபார்த்து வெளியிடுவேன்.ஆனால் ஆரம்பத்தில் யாரும் இல்லாத கடையில் டீ ஆத்தும் நிலைமைதான்.நண்பர்களும் கிண்டல் பண்ணுவாங்க ஏண்டா ராஜ் உனக்கு ஏன் இந்த வேலை இரவிரவாக எழுதி எவன் உன் தளத்தை படிக்கின்றான் என்று.

இப்படி ஒரு 35 பதிவுகள் எழுதினேன் அதுவரை என் தளம் பெரிதாக பலராலும் படிக்கப்படவில்லை.பேசாமல் தளத்தை மூடிவிட்டு போய்விடுவோமா?என்று நினைத்த போதுதான்.நான் பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஒரு முறை எங்கள் பாடசாலைக்கு வந்திருந்த போது அவரை சந்தித்து இருந்தேன். சரி இதை ஒரு பதிவாக எழுதிவிட்டு இத்துடன் பதிவுலகைவிட்டு போய்விடுவோம் என்று நினைத்து அது பற்றி ஒரு பதிவை எழுதினேன். அந்த பதிவிற்கு நண்பர் பாலாவின் பக்கங்கள் பாலா அண்ணாவும்,நம்ம பதிவர் நிரூபன் அவர்களும் கமண்ட் போட்டு இருந்தார்கள்.
இருவரின் கமண்டும் எனக்கு மிகுந்த உட்சாகத்தை தந்தது எனவே முரளிதரன் பற்றி அவரது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ஒரு குறும் தொடரை எழுதினேன்.அந்த தொடருக்கு பிறகு என் தளத்தில் ஒரளவு வாசகர்கள் வரவு அதிகரித்தது.

இதனால் தொடர்ந்து சில பதிவுகள் எழுதினேன் அதுக்கு பிறகு ”மறக்க முடியாத பாடசாலை நாட்கள்” என்ற தலைப்பில் பாடசாலை வாழ்க்கையில் எனக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்பட்ட காதலை தொடராக எழுதினேன். நான் எதிர்பார்க்காத வரவேற்பையும் பல வாசகர்களையும்,பல நண்பர்களையும் அள்ளித்தந்த தொடர் அது.விகடனில் கூட அந்த பதிவால் என் தளம் குட் ப்ளாக்காக தெரிவானது.

எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கு எனது அந்த தொடரில் ஒரு பகுதியில் தமிழ் மணத்தில் 6 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது.அப்போது காட்டான் மாம்ஸ் பகிரங்கமாக ஒரு கோரிக்கைவைத்தார் நண்பர்களே யாராவது இந்த பதிவுக்கு இன்னும் ஒரு ஓட்டுப்போடுங்கள் தமிழ் மணம் முகப்பு பக்கத்தில் இந்த பதிவு வரட்டும்.இதனால் இன்னும் பலரை சென்று சேரும் என்று எனக்கு அப்ப எல்லாம் தமிழ் மணத்தில் 7 ஓட்டு வந்தால் அது வாசகர் பரிந்துரை பகுதியில் வரும் என்பது கூட தெரியாது.அப்ப நினைத்தேன் ஏன் காட்டான் மாம்ஸ் இன்னும் ஒரு ஓட்டு போட சொல்லி எல்லோறிடமும் கேட்கின்றார் என்று.அதுக்கு பிறகுதான் எனக்குத்தெரியும் 7 ஓட்டு விழுந்தால் வாசகர் பரிந்துரை பகுதியில் வரும் என்று. தமிழ் மணத்தில் வாசகர் பரிந்துரை பகுதியில் வந்த என் முதல் பதிவு அதுதான்.அந்த வகையில் என் தளத்துக்கு வந்த கமண்ட்களில் காட்டான் மாம்ஸ் போட்ட அந்த இன்னும் ஒரு ஓட்டு போடுங்கள் என்ற கமண்ஸை என்னால் என்றும் மறக்க முடியாது.எல்லாம் அந்த தொடருக்கே சமர்ப்பணம்.

இந்த தொடரில் தான் எனக்கு கோகுல் மனதில் கோகுல்,சண்முகன்,காட்டான் மாம்ஸ்,தனிமரம் நேசன் அண்ணா,கந்தசாமி,ஆகுலன்,மதுரன்,அப்பறம் நம்ம துஷியந்தன் என்கிற துஷி.ஜடியாமணி,இவர்களுடன் இன்னும் பல நண்பர்களும் அறிமுகம் ஆனார்கள்.

அதுக்கு பிறகு ஏனைய பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். எல்லோறின் ஊக்கமும் ஆதரவினாலும் தான் இன்று என் தளத்திற்கு ஓரளவு வாசகர்கள் வருகின்றார்கள்.ஆனால் நான் சொன்னேன் அல்லாவா நம்ம நண்பர்கள் போடும் காதல் மொக்கைகளால் தான் நான் தளம் ஆரம்பித்தேன். என்று அவர்கள் இன்றுவரை என் தளத்தை பல வாசகர்கள் படிக்கின்றார்கள் நானும் ஒரு பதிவர் என்றால் நம்ம மாட்டாங்கள். போட உனக்கு வேற வேலையில்லை என்பார்கள்.ஹி.ஹி.ஹி.ஹி.......ஆனாலும் பாசக்கார பசங்க.

ஆனாலும் எனக்கு ஒரு கவலை அந்த முதலாவது நண்பனுடன் ஒரு பிரச்சனைக்கு பின் பெரிதாக நல்லுறவு இல்லை சம்பிரதாயத்துக்கு மட்டுமே பேசிக்கொள்வோம்.அனாலும் நண்பன் நண்பன் தானே பின்ன 15 வருட நட்புகளில் பிரச்சனை வரலாம் அதுக்காக அவன் நண்பன் இல்லை என்று அர்த்தம் இல்லைதானே.அவன் புரிந்துகொள்வான் என்று நினைக்கின்றன்.

என்ன நண்பர்களே எப்படி நான் பதிவு எழுத வந்த கதை.எனவே உங்கள் பதிவுகளும் பலரால் படிக்கப்படவில்லை என்று கவலை அடையாமல் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளும் ஒரு நாள் பலரால் படிக்கப்படும்.
அதைவிட உங்களால் முடிந்தவரை சக பதிவர்களை ஊக்குவியுங்கள். அவர்களின் எழுத்துக்களை பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி விமர்சிக்கவேண்டிய இடத்தில் விமர்சித்து. அவர்களின் எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்குங்கள்.பல புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்.நல்ல பதிவுகளை வரவேற்போம்.எனவே புதிதாக வரும் பதிவர்கள் மனம் தளராமல் எழுதுங்கள். நாங்கள் இருக்கோம் உங்களை ஊக்குவிக்க! இதை படிக்கும் புதிதாக பதிவெழுத வந்தவர்கள் உங்கள் பதிவுகள் பலரை சென்று சேரவேண்டும் என்றுவிரும்பினால். என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்க்க என்னால் முடிந்தவற்றை செய்யகின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
எம்மால் முடிந்தவரை புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்
*********************************************************************************
நான் எழுதிய முத்தையா முரளிதரன் பற்றிய பதிவினை படிக்க இங்கே கிளிக்-
முரளி பற்றிய தொடரினை முழுமையாக படிக்க இங்கே கிளிக்-தொடர்

என் தளத்திற்கு பல வாசகர்களையும் பல நண்பர்களையும் அள்ளித்தந்த தொடரை படிக்க இங்கே கிளிக்-மறக்க முடியாத பாடசாலை நாட்கள்

குறிப்பு-இடையில் நான் டொமைன் நேம் மாத்தியதால் இந்த தொடர்களுக்கு திரட்டிகளில் கிடைத்த ஓட்டுக்கள் தெரியாது.அதைவிட நான் அப்போது புதிய பதிவராக இருந்ததனால் பதிவுகளில் எழுத்துப்பிழைகள்(அதுஇப்பவும் தான் இருக்கும்)பந்தி பிரித்து எழுதுதாமை,பதிவுகள் சீராக அழகாக இல்லாமை இப்படி சில தவறுகள் இந்த தொடர்களில் இருக்கலாம் எனவே மன்னித்து அருளுங்கள்
*********************************************************************************

Post Comment

52 comments:

முத்தரசு said...

"நண்பர்கள்" - இது தான் பின்னணியா!

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வழமைபோல நான் வந்துட்டேன் என்ன கமெண்ட் போடனுனுதான் தெரியல்லே. ஆனா பதி உலகில் படிப்படியா முன்னேறிய விபரம் நல்லா சொல்லி இருக்கே. வாழ்த்துகள்.

முத்தரசு said...

//இவங்க மேல மட்டும் தான் லவ் வருது ஹிஹி ஹி//

பயபுள்ளைக்கு ஆசையை பாரு...வாழ்த்துக்கள் வந்தா சரி

தனிமரம் said...

வணக்கம் ராச்!(கிஸ்ராஜ்) நலம்தானே.
பதிவுலகில் நீங்கள் சாதிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கு.

இந்த நண்பர்களின் மொக்கை இம்சை இருக்கே சொல்லி மாளாது. அவர்கள் பிகருக்காக பஸ்தரிப்பு நிலையத்திலும் ,பூங்காக்களிலும், காத்திருந்து நொந்து போன காலங்கள் எனக்கும் அதிகம் உண்டு. அப்போது எல்லாம் ஜாலியா சொல்வார்கள் எனக்காக இதையும் செய்ய மாட்டீயா என்று இப்போது சிலர் குடித்தனத்தில் இணைந்துவிட்டார்கள் நினைக்கும் போது மனதுக்குள் சந்தோஸம். 

தனிமரம் said...

அந்த 7 ஓட்டுடன் தான் நானும் உங்களை நாடிவந்தேன். காட்டான் தான் உங்கள் திறமையை எனக்கும் தெரிந்து கொள்வதற்கு லிங்கு கொடுத்தார். அதன் பின்பு எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்கள் பட்டியலில் ராச்சுக்கு ஒரு தனியிடமே உண்டு.புதியவர்களை ஊக்கிவிப்போம் அதுதான் என் விருப்பமும்!

rajamelaiyur said...

//நானும் இன்னும் ஒன்று இரண்டு பேரும் தான் காதலிப்பது இல்லை என்ற குறிகோளில் இருக்கோம்(ஏற்கனவே நொந்து நூலாகி தற்போது காதலிப்பதில் இருந்து ரிட்டேர் ஆகிட்டோம் அவ்வ்வ்வ்)..
//

உண்மைய ஒத்துகிட்ட நீங்க பெரிய ஆளுதான் ...

தனிமரம் said...

காதலின் மொக்கையுடன் உங்களின் பதிவுலக வரவையும்  சேர்த்து சொல்லிய விதம் பிடித்திருக்கு.ஆமா இந்த ரமா சகோதரமொழி நங்கையா? ஒரு டவுட்டு ஹீ ஹீ

நிரூபன் said...

வணக்கம் மச்சான்சார்,
நல்லா இருக்கிறீங்களா?
கடந்து வந்த பாதையினை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.

என்னது...போனை வைச்சு டிக் டிக் என்று தட்டியா பதிவெழுத வைச்சிருக்காங்க.

நினைவுகளை மீட்டியது மட்டுமன்றி ஏனைய நண்பர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் எனும் நல் மனப்பாங்கினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நன்றி.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!நல்ல சுவையாக இருந்தது.எப்போதுமே மீள் நினைவுகள் சுவையாகவே இருக்கின்றன! நீங்களோ, நானோ விதிவிலக்கல்ல!அந்த நண்பர் மீண்டும் புரிந்து கொண்டு நட்பைத் தொடர்வார் என நினைக்கிறேன்,தொடரவேண்டும் என்பது ஒரு வேண்டுகோளாக.....................( நிரூபனுக்கு ஒரு கமெண்ட், நீங்கள் பரவாயில்லை!2.)

சென்னை பித்தன் said...

பதிவு ஆரம்பித்த காரணம் நல்லாருக்கு. எப்படியோ ஒரு நல்ல பதிவர் கிடைத்தார்.

K.s.s.Rajh said...

@மனசாட்சி

ஹா.ஹா.ஹா.ஹா.....

K.s.s.Rajh said...

@ Lakshmi கூறியது...
ராஜ் வழமைபோல நான் வந்துட்டேன் என்ன கமெண்ட் போடனுனுதான் தெரியல்லே. ஆனா பதி உலகில் படிப்படியா முன்னேறிய விபரம் நல்லா சொல்லி இருக்கே. வாழ்த்துகள்.////

வாங்க மேடம் உங்களைப்போல பெரியவர்கள் என் பதிவுகளை படிப்பதே எனக்கு பல கருத்துரைகளுக்கு சமம்

பெரியவர்களின் ஆசி என்றும் எனக்குத்தேவை

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@ மனசாட்சி கூறியது...
//இவங்க மேல மட்டும் தான் லவ் வருது ஹிஹி ஹி//

பயபுள்ளைக்கு ஆசையை பாரு...வாழ்த்துக்கள் வந்தா சரி
////

ஹி.ஹி.ஹி.ஹி.. நன்றி தல

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
வணக்கம் ராச்!(கிஸ்ராஜ்) நலம்தானே.
பதிவுலகில் நீங்கள் சாதிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கு.

இந்த நண்பர்களின் மொக்கை இம்சை இருக்கே சொல்லி மாளாது. அவர்கள் பிகருக்காக பஸ்தரிப்பு நிலையத்திலும் ,பூங்காக்களிலும், காத்திருந்து நொந்து போன காலங்கள் எனக்கும் அதிகம் உண்டு. அப்போது எல்லாம் ஜாலியா சொல்வார்கள் எனக்காக இதையும் செய்ய மாட்டீயா என்று இப்போது சிலர் குடித்தனத்தில் இணைந்துவிட்டார்கள் நினைக்கும் போது மனதுக்குள் சந்தோஸம்.
////

வாங்க பாஸ் ஆமா நான் இன்னும் பதிவுலகில் பயணிக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கு.

அண்ணனுக்கும் நிறைய அனுபவம் இருக்கு போல நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
அந்த 7 ஓட்டுடன் தான் நானும் உங்களை நாடிவந்தேன். காட்டான் தான் உங்கள் திறமையை எனக்கும் தெரிந்து கொள்வதற்கு லிங்கு கொடுத்தார். அதன் பின்பு எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்கள் பட்டியலில் ராச்சுக்கு ஒரு தனியிடமே உண்டு.புதியவர்களை ஊக்கிவிப்போம் அதுதான் என் விருப்பமும்!
////

ஆம் பாஸ் எங்களால் முடிந்த வரை புதிய பதிவர்களை ஊக்குவிப்போம்

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//நானும் இன்னும் ஒன்று இரண்டு பேரும் தான் காதலிப்பது இல்லை என்ற குறிகோளில் இருக்கோம்(ஏற்கனவே நொந்து நூலாகி தற்போது காதலிப்பதில் இருந்து ரிட்டேர் ஆகிட்டோம் அவ்வ்வ்வ்)..
//

உண்மைய ஒத்துகிட்ட நீங்க பெரிய ஆளுதான் ..////

ஹி.ஹி.ஹி.ஹி அரசியலில் இதெல்லாம் சகஜம் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
காதலின் மொக்கையுடன் உங்களின் பதிவுலக வரவையும் சேர்த்து சொல்லிய விதம் பிடித்திருக்கு.ஆமா இந்த ரமா சகோதரமொழி நங்கையா? ஒரு டவுட்டு ஹீ ஹீ
////

அண்ணனுக்கு சகோதர மொழி நங்கைகளில் ஒரு இது போல அவ்வ்வ்வ்

இல்லை பாஸ் இது நம்மூர் பொண்ணு

ரமா பதிவுக்காக நான் வைத்த பெயர் அவள் உண்மையான பெயர் வேற

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான்சார்,
நல்லா இருக்கிறீங்களா?
கடந்து வந்த பாதையினை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.

என்னது...போனை வைச்சு டிக் டிக் என்று தட்டியா பதிவெழுத வைச்சிருக்காங்க.

நினைவுகளை மீட்டியது மட்டுமன்றி ஏனைய நண்பர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் எனும் நல் மனப்பாங்கினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நன்றி.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!நல்ல சுவையாக இருந்தது.எப்போதுமே மீள் நினைவுகள் சுவையாகவே இருக்கின்றன! நீங்களோ, நானோ விதிவிலக்கல்ல!அந்த நண்பர் மீண்டும் புரிந்து கொண்டு நட்பைத் தொடர்வார் என நினைக்கிறேன்,தொடரவேண்டும் என்பது ஒரு வேண்டுகோளாக.....................( நிரூபனுக்கு ஒரு கமெண்ட், நீங்கள் பரவாயில்லை!2.)
////

நன்றி ஜயா

////( நிரூபனுக்கு ஒரு கமெண்ட், நீங்கள் பரவாயில்லை!2.)////
ஆமா நிரூபன் பாஸ்க்கு என்ன கமண்ட் போட்டு இருக்கீங்க எனக்கு புரியவில்லை

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
பதிவு ஆரம்பித்த காரணம் நல்லாருக்கு. எப்படியோ ஒரு நல்ல பதிவர் கிடைத்தார்////

நன்றி ஜயா

சசிகுமார் said...

கல்யாணத்துக்கு பிறகும் மௌனமாகவே இருந்துட போகிறார் சொல்லுங்க உங்க நண்பர் கிட்ட....

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது, காதலிப்போரைப் பார்க்க ராஜ்க்கு புகைப் புகையாப்போகுது போல:)))... மோர் குடிச்சுப் பாருங்கோவன்:)).. நிரூபனுக்கும் கொஞ்சம் கொடுங்கோ... ஹையோ இனியும் இங்கின நிற்கமாட்டேன் சாமீஈஈஈஈஈ:)).

முற்றும் அறிந்த அதிரா said...

எமது பதிவை, ஒருவர் படித்தாலே வெற்றிதான், அதிலும் ஒரு பின்னூட்டம் கிடைத்தால் மாபெரும் வெற்றி:)).

Yoga.S. said...

K.s.s.Rajh கூறியது...ஆமா நிரூபன் பாஸ்க்கு என்ன கமண்ட் போட்டு இருக்கீங்க எனக்கு புரியவில்லை.////Yoga.S.FR said...
வணக்கம் நிரூபன்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்!படம் பார்க்கும் மனோநிலை இல்லை.பின்னர் பார்ப்போம்!////நிரூபன் said.......இன்னைக்கு பதிவு போட்ட டைம்மிங் மிஸ்ட் ஆகிடுச்சு.
எல்லோரும் ஆப்பிசில் வேலையில் மும்முரமாக ஈடுபடும் டைம்மில பதிவை ரிலீஸ் செஞ்சிட்டேன்.////கவலை வேண்டாம் வெட்டிப்பசங்க நாம இருக்கமே????ஹ!ஹ!ஹா!!!!!§§§புரியலை?????

Yoga.S. said...

இவங்க மேல மட்டும் தான் எனக்கு லவ் வருது,ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!////கொஞ்சம் வயசான மாதிரி இருக்கே,பரவாயில்லையா?????கேட்டுப்போட்டு,இந்தப்பக்கம் "தள்ளி" விடுங்கோ!

Unknown said...

உயிர் கொடுப்பான் தொட நண்பண் என்பது போல வலைத் தொடங்க
உதவினர் போலும்! வாழ்க!அவர்கள்!

சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said...

இவங்க மேல மட்டும் தான் எனக்கு லவ் வருது,ஹி!ஹி!ஹி!ஹி!ஹி//

அவ்வ்வ்வவ்வ்வ் அப்போ ஹன்சிகா அசின் திரிஷா அனுஷ்கா இவங்க கதி என்னாகிறது....??

K.s.s.Rajh said...

@சசிகுமார்
ஹா.ஹா.ஹா.ஹா.நன்றி பாஸ் சொல்கின்றேன்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
என்னாது, காதலிப்போரைப் பார்க்க ராஜ்க்கு புகைப் புகையாப்போகுது போல:)))... மோர் குடிச்சுப் பாருங்கோவன்:)).. நிரூபனுக்கும் கொஞ்சம் கொடுங்கோ... ஹையோ இனியும் இங்கின நிற்கமாட்டேன் சாமீஈஈஈஈஈ:)).
////

ஹி.ஹி.ஹி.ஹி மோர் குடிச்சாலும் சரிவருது இல்லை அக்கா

அக்கா ஏன் நிரூபன் பாஸ்யையும் காதலிப்பவர்களை கண்டால் புகைவரும் பட்டியலில் சேர்க்கிறீங்க அவரும் அப்படியா அவ்வ்வ்

இப்படிக்கு
கோத்துவுடுவோர்
சங்கம்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
எமது பதிவை, ஒருவர் படித்தாலே வெற்றிதான், அதிலும் ஒரு பின்னூட்டம் கிடைத்தால் மாபெரும் வெற்றி:))///
அதுவும் சரிதான் நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
K.s.s.Rajh கூறியது...ஆமா நிரூபன் பாஸ்க்கு என்ன கமண்ட் போட்டு இருக்கீங்க எனக்கு புரியவில்லை.////Yoga.S.FR said...
வணக்கம் நிரூபன்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்!படம் பார்க்கும் மனோநிலை இல்லை.பின்னர் பார்ப்போம்!////நிரூபன் said.......இன்னைக்கு பதிவு போட்ட டைம்மிங் மிஸ்ட் ஆகிடுச்சு.
எல்லோரும் ஆப்பிசில் வேலையில் மும்முரமாக ஈடுபடும் டைம்மில பதிவை ரிலீஸ் செஞ்சிட்டேன்.////கவலை வேண்டாம் வெட்டிப்பசங்க நாம இருக்கமே????ஹ!ஹ!ஹா!!!!!§§§புரியலை?????
////

ஹா.ஹா.ஹா.ஹா. இப்ப புரிஞ்சுடுச்சி ஜயா அவ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
இவங்க மேல மட்டும் தான் எனக்கு லவ் வருது,ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!////கொஞ்சம் வயசான மாதிரி இருக்கே,பரவாயில்லையா?????கேட்டுப்போட்டு,இந்தப்பக்கம் "தள்ளி" விடுங்கோ!////

என்னது வயசான மாதிரி தெரியுதான் சரன்யா மோகனுக்கு என் வயசுதான்...

பெரியவர்களுக்குத்தான் செங்கோவி பாஸ் உருவாக்கின பத்மினி ரசிகர் மன்றம் இருக்கே எனவே சரன்யா ரசிகர் மன்றம் சின்னப் பசங்களுக்குத்தான் அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ புலவர் சா இராமாநுசம் கூறியது...
உயிர் கொடுப்பான் தொட நண்பண் என்பது போல வலைத் தொடங்க
உதவினர் போலும்! வாழ்க!அவர்கள்!

சா இராமாநுசம்
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
இவங்க மேல மட்டும் தான் எனக்கு லவ் வருது,ஹி!ஹி!ஹி!ஹி!ஹி//

அவ்வ்வ்வவ்வ்வ் அப்போ ஹன்சிகா அசின் திரிஷா அனுஷ்கா இவங்க கதி என்னாகிறது....?////

வாங்க பாஸ் என்ன கொஞ்ச நாளாக பதிவுலகப்பக்கம் ஆளைக்காணாம் நான் கூட இன்று யோசித்தேன் எங்க காணாம் என்று இதோ வந்திட்டீங்க

த்ரிஷா கூட என்னைக்கு வாழ்ந்தம் பாஸ் த்ரிஷா இல்லைனா திவ்யா திவ்யா இல்லைனா சரன்யா என்று போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்
ஹி.ஹி.ஹி.ஹி...........

Mohamed Faaique said...

பதிவுலகம் பல விசித்திரமான பதிவர்களை சந்தித்திருக்கிறது. நீங்கள் ஒன்றும் விசித்திரமானவர் அல்ல.. (அப்புறம் மறந்துடுச்சே)

Anonymous said...

'பதிவுலகில் இது வரை நான்'....நல்லாயிருந்தது...மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்....

K said...

அட, அந்த இரண்டு நண்பர்களும் டொக்கு டொக்கெண்டு டைப் பண்ணி கடைசியில் ஒரு நல்ல பதிவரை உருவாக்கிவிட்டார்களே!

மச்சான் சார், உங்களிடம் ஒருகேள்வி், எனக்கு தலைகீழாக நின்றாலும் கிரிக்கெட்டில் இன்ஸ்ட்ரெஸ்ட் வருகுதில்லை! இதுக்கு ஏதாவது குளுசை இருக்கோ?

K.s.s.Rajh said...

@Mohamed Faaique
//// Mohamed Faaique கூறியது...
பதிவுலகம் பல விசித்திரமான பதிவர்களை சந்தித்திருக்கிறது. நீங்கள் ஒன்றும் விசித்திரமானவர் அல்ல.. (அப்புறம் மறந்துடுச்சே)
////

எனக்கும் மறந்திடுச்சி பாஸ் வரலதானே விட்டுடுவோம்.ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
'பதிவுலகில் இது வரை நான்'....நல்லாயிருந்தது...மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்....
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
அட, அந்த இரண்டு நண்பர்களும் டொக்கு டொக்கெண்டு டைப் பண்ணி கடைசியில் ஒரு நல்ல பதிவரை உருவாக்கிவிட்டார்களே!

மச்சான் சார், உங்களிடம் ஒருகேள்வி், எனக்கு தலைகீழாக நின்றாலும் கிரிக்கெட்டில் இன்ஸ்ட்ரெஸ்ட் வருகுதில்லை! இதுக்கு ஏதாவது குளுசை இருக்கோ?
////

கிரிக்கெட்டில் இன்ஸ்ட்ரெஸ்ட் வராட்டி என்ன பாஸ் விடுங்க

இல்லை கிரிக்கெட்டில் இன்ஸ்ட்ரெஸ்ட் வரத்தான் வேனும் என்றால் பொண்ணுங்க விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை பாருங்களேன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெண்கள் அணிகளில் சூப்பர் பிகருகள் எல்லாம் விளையாடும்.கண்டிப்பாக இன்ரெஸ்ட் வரும்.ஹி.ஹி.ஹி.ஹி....

பி.அமல்ராஜ் said...

வணக்கம் ராஜ்.. வாழ்கையில் நம்ம நண்பர்கள் பல இடங்களில் நமக்கு திருப்பு முனையாக அமைந்து விடுகிறார்கள். அந்த திருப்பு முனை நல்லதாக இருந்தால் அந்த நண்பன் நல்ல நண்பன் என்கிறோம். இவ்வளவு ஒரு பெரிய விடயம் உங்கள் நண்பர்களாலேயே தொடங்கப்பட்டது என்பது மிகவும் சந்தோசமான விடயம்.

மற்றும் புதிய பதிவர்களை நிற்சயமாக ஊக்குவிக்க வேண்டும். அதுவும் அது உங்களை போன்ற மூத்த பதிவர்களின் கடமை என்று கூட சொல்லலாம். இல்லையா??? உங்கள் எழுத்து தொடர எனது வாழ்த்துக்கள் பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ! நன்றி!

MaduraiGovindaraj said...

//போனில் இருவரும் மவுனம் இது புதுசா இருக்கே //

\\புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் //

நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நல்ல எழுத்தாளரை பதிவரை
உண்டாக்கிய அந்த காதல் மொக்கை நண்பர்களுக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 11

ஹாலிவுட்ரசிகன் said...

பழைய நினைவுகளை மீட்டி ஒரு நல்ல பதிவை தந்திருக்கீங்க. நன்றி.

தமிழ்மணத்தில் 7ஓட்டு கிடைத்தால் வாசகர் பரிந்துரை பகுதியில் வரும் என்பது இன்று தான் தெரியவந்தது.

K.s.s.Rajh said...

@பி.அமல்ராஜ்

நன்றி பாஸ்

நான் ஒன்றும் மூத்த பதிவர் இல்லை பாஸ் நானும் பதிவுலகிற்கு புதியவன் தான் ஏதோ நம்மால் முடிந்தவரை புதிதாக வருபவர்களை ஊக்குவிப்போம்

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ! நன்றி!
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கோவிந்தராஜ்,மதுரை. கூறியது...
//போனில் இருவரும் மவுனம் இது புதுசா இருக்கே //

\\புது பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் //

நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
////

போனில் மெளனத்தைவிட செம மொக்கை போடுவார்கள் பாஸ்
தாங்க முடியாது

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
நல்ல எழுத்தாளரை பதிவரை
உண்டாக்கிய அந்த காதல் மொக்கை நண்பர்களுக்கு
மனமார்ந்த நன்றி
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ஹாலிவுட்ரசிகன் கூறியது...
பழைய நினைவுகளை மீட்டி ஒரு நல்ல பதிவை தந்திருக்கீங்க. நன்றி.

தமிழ்மணத்தில் 7ஓட்டு கிடைத்தால் வாசகர் பரிந்துரை பகுதியில் வரும் என்பது இன்று தான் தெரியவந்தது.
////

மிக்க மகிழ்ச்சி பாஸ் என் அனுபவப் பகிர்வின் மூலம் உங்களுக்கு இந்த விடயம் தெரிய வந்ததுக்கு

நன்றி பாஸ்

Athisaya said...

காதலிக்கறவங்க கடலை போட்டுட்டு அப்பறம் எதுவுமே வேணான்ணு ஓரமா இருக்கற நம்ம கிட்ட வந்து ஓட்ட சீன் இருக்கே...அத கேக்கிறதுக்கு சாகலாம்.
அருமையான விளக்கம்.நான் பதிவுலகிற்கு இப்போது தான் அறிமுகம்.எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்குமா??தேவையில்லாம இதுக்க வந்டமா என்றெல்லாம் அப்பப்ப நினைத்ததுண்டு.ஆனால் பதிலிற்குரிய கருத்திடல்கள் தான் குளுக்கோஸ் மாதிரி.ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன்.
நன்றி தங்கள் பகிர்விற்கு.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails