Thursday, July 21, 2011

2000மாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.கங்குலிக்கு கெளரவம்.100வது சதம் அடிப்பாரா சச்சின்

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பம் ஆவதால் அது பற்றி ஒரு பதிவு எழுத நினைத்ததால் முரளிதரன் பற்றிய தொடர்பதிவுக்கு சின்ன இடைவேளை





இன்று லோர்ட்ஸில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சர்வதேச அளவில் 2000-மாவது டெஸ்ட் போட்டியாகும். முதல் டெஸ்ட் போட்டி 1887-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அவுஸ்ரேலியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதால் இந்தத் தொடர் டிராவில் முடிந்தது.

இன்றைய போட்டி இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான் 100வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இருநாடுகளைச் சேர்ந்த முன்னாள் கேப்டன்கள், வீரர்கள் ஆகியோர் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களால் கெளரவிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து மைதானத்தில் முன்னாள் கேப்டன்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னாள் கேப்டன்கள் ரவி சாஸ்திரி, செளரவ் கங்குலி, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள் இயன் போத்தம், பொப் வில்லிஸ், நசார் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி 1932-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
இந்திய அணியின் நிகர் இல்லாத தலைசிறந்த கேப்டன் கங்குலி


2000மாவது டெஸ்ட்டில் இந்தியா,இங்கிலாந்து அணிகளின்முன்னால் கேப்டன்களை கெளரவிக்கப்படுவது மிகுந்தவரேவற்கத்தக்க விடயம்.அதுவும் இந்தியாவுக்கு அதிக டெஸ்ட்வெற்றிகளை. பெற்றுக் கொடுத்த கங்குலி 2000 மாவது டெஸ்ட் போட்டியில் கெளரவிக்கப்படுவதற்கு தகுதியானவர் தான்.
 (49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமைதாங்கிய கங்குலி 21 
டெஸ்ட்போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்)


அமைதி அமைதி நான் சாதனைக்காக விளையாடவில்லை இந்திய அணியின் வெற்றிக்காகவே விளையாடுகின்றேன்


இந்தனை வரலாறு சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டியில் சச்சின் 100வது சதம் அடிப்பாரா என்று இன்னும் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது சச்சின் இதுவரைமொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 99 சதங்கள் அடித்துள்ளார்(டெஸ்ட்=51,ஒருநாள் போட்டி=48)எனவே இந்த போட்டியில் சச்சின் சதம் அடிக்கும் பட்சத்தில் அவரது சாதனை மேலும் சிறப்பு பெரும் ஆனால் வரலாற்று புகழ்மிக்க இந்த லோர்ட்ஸ் மைதானத்தில் சச்சின் ஒரு அரைச்சதம் கூட இதுவரை அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அவரது அதிகபட்ச ஸ்கோர் 37 ஒட்டங்கள்தான்.


சச்சின் 2011 உலக்கோப்பை போட்டிகளின் போதே100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது சச்சினால் அடிக்கமுடியவில்லை.அப்போது பாகிஸ்தானுடன் அரை இறுதிப்போட்டியி சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க, பாகிஸ்தான் கேப்டன் அப்ரடி சச்சினை 100வது சதத்தை எடுக்கவிடமாட்டோம் என்றார்.அவர் சொன்னமாதிரியே சச்சினை 100 சதம் அடிக்கவிடவில்லை.தற்போது இந்தப்போட்டியிலும் சச்சினை 100வது சதம் அடிக்கவிடமாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஸ்ரோரஸ்சும் கூறி இருக்கின்றார் பொருத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.


அணிகளை பொருத்தவரை இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் வாய்ந்தவையாக வே இருக்கின்றன.எனவே
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும் மோதும் ஆட்டம் என்பதால் மிகுந்த பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.


யுவராஜ்சிங் உலக்கோப்பை தொடர் நாயகன்,இங்கிலாந்தின் வில்லன் ஆனால் இந்தப்போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா
சோமர்செட் பயிற்சி ஆட்டத்தில் சச்சின், திராவிட், லக்ஸ்மன், கம்பீர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பந்துவீச்சிலும் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய பெளலர்களால் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் இடம்பெறாததால். சச்சின், லக்ஸ்மன், ராவிட் ஆகியோரையே இந்திய அணி நம்பியுள்ளது இவர்கள்சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அது அணியின் ரன் உயர்வுக்கு முக்கியப் பங்கு வகிக்கும். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க பலமான தொடக்க வீரர்கள் தேவை என்றாலும், சேவாக் இடம்பெறாததால், கம்பீருடன், அனுபவமில்லாத அபினவ் முகுந்த் தொடக்க வீரராக களமிறங்குகிறார்
ரெய்னா மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் மூன்று அரைசதங்களை விளாசியதோடு, சோமர்செட் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்தார்.ஆனாலும் எனக்கு ரெய்னாவில் நம்பிக்கை இல்லை ரெய்னாவை விட யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக நல்ல அனுபவம் உள்ளவீரர் எனவே யுவராஜ் சிங் விளையாடினால் இந்திய அணிக்கு கூடுதல் பலம்.



பெளலிங்கில் சகீர்கான் அணிக்கு திரும்பியுள்ளது பலம். சகீர்கான்-இஷாந்த் சர்மா கூட்டணி வேகப்பந்து வீச்சில் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷாந்த் சர்மா மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. 


மூன்றாவது பந்துவீச்சாளராக முனாப் படேல் அல்லது பிரவீண் குமார் இருவரில் யார் அணியில் இடம்பெறுவர் என்பது போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே முடிவு செய்யப்படும்.


சகீர்கான் இங்கிலாந்தில் இருமுறை விளையாடி மொத்தம் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும் ஸ்ரோரஸ்சை 5 முறையும், குக்கை 3 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சை ஹர்பஜன்-அமித் மிஸ்ரா கூட்டணி கவனிக்கிறது.


இங்கிலாந்து பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரோரஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 78 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களையும் குவித்தார். இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக 
விளையாடி ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோல் அலைஸ்டார் குக், ஜொனாதன் டிராட் ஆகியோரும் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் குக்-டிராட் ஜோடி ஆட்டமிழக்காமல் 329 ரன்களை குவித்தது. கடைசியாக நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டியில் குக் 5 சதங்களையும், டிராட் 3 சதங்களையும் விளாசியுள்ளனர். இதனால் இவர்கள் இந்திய அணிக்கு கடும்
சவாலாக இருப்பார்கள்

குக் என்னும் அற்புதமான துடுப்பாட்டவீரர் .இந்தியஅணிக்கு வில்லன்


பீட்டர்சன் மோசமாக விளையாடி வந்தாலும், இந்தியாவுக்கு எதிராக அவர் எப்போதுமே சிறப்பாக விளையாடி வந்துள்ளார். இயன் பெல், மோர்கன், மட் பிரையர் ஆகியோர் பின்வரிசையில் பலம் சேர்க்கின்றனர்.


பெளலிங்கைப் பொறுத்தவரையில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் டிரம்லெட் ,கிரேம் ஸ்வான்.ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார்கள். கடைசியாக விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது. அதற்கு இவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.


ஆண்டர்சனின் ஸ்விங் பெளலிங் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இதேபோல் டிரம்லெட் உலகின் எந்தவொரு மைதானத்திலும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள முடியாத வகையில் பவுன்சர்களை வீசக்கூடிய ஆற்றல்பெற்றவர். சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார்.


எனவே இந்தப்போடியில் வெல்லப்போவது இந்தியாவா இங்கிலாந்தா,சச்சின் 100வது சதம் அடிப்பாரா
பொருத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.


எனக்கு சச்சினை பெரிதாக பிடிப்பது இல்லை ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவரது 100வது சதத்தை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன்.
சச்சின் 100வது சதம் அடிக்க நண்பர்கள் வலைப்பதிவு சார்பாகவும் அவரது ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்


அப்படியே உங்க வேலையையும் கொஞ்சம் பாருங்களேன் அதான் கருத்துரையை சொல்லிவிட்டு போங்க

Post Comment

4 comments:

ம.தி.சுதா said...

எதிர் பார்ப்புடன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

பாலா said...

இந்த ஆட்டத்தில் சச்சின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் (எப்பவும் எதிர்பார்ப்பதுதானே?). கங்குலிக்கு கவுரவம் அளிப்பது மிகப்பொருத்தம்.

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔ சொன்னது…
எதிர் பார்ப்புடன்.

நன்றி சகோ எனக்கும் சச்சினைபிடிக்காவிட்டாலும் ஒரு கிரிகெட் ரசிகனாக நானும் எதிர்பார்க்கின்றேன்

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது
எதிர்பார்க்கிறேன் (எப்பவும் எதிர்பார்ப்பதுதானே?).
நன்றி நண்பரே..எதிர்பார்ப்போம் என்ன நடக்க போகின்றது என்று

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails