Friday, July 08, 2011

மீண்டும் ஒரு கவிதை உனக்காக.(By-K.s.s.Rajh)


என் கிறுக்கள்கள் எனக்கு கவிதை,
என் கவிதையின் உயிர் நாடி நீதான்
இதை உன்னிடம் சொன்னபோது
என்னை கிறுக்கன் என்றாய்.


உன்கண்களுக்குள் மறைந்து போன
இந்த கிறுக்கனின் கிறுக்கள்களை
நீ என்றும் உணரப்போவது இல்லை
இது உன் தவறு இல்லை என் தவறுதான்
என்னிடம் இருந்து நீ தொலைந்து போய் பலகாலம் ஆகிவிட்டது
மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும் 
தேடிக்கொண்டிருக்கும் கிறுக்கன் நான்













உலகில் தோற்ற காதல்கள்தான் காவியமாகியுள்ளது
இப்படி சொல்லி என் மனதை தேற்றிக்கொள்கின்றேன்.


நமக்கு இடையிலான நம் மெளனயுத்தத்தில்
நான் தோற்றுப்போனாலும்
என்றும் உன் நினைவில் நான் வாழ்வேன்
இதை உன்னால் மறுக்கமுடியாது.


மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
அதில் உன்மடியில் தவழும் குழந்தையாக வேண்டும்
அப்போதாவது உன் அன்பு கிடைக்கும் அல்லவா.

 மறக்காமல் உங்கள் கருத்துரைகளை சொல்லிவிட்டு போங்க நண்பர்களே

Post Comment

3 comments:

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

அழகான கவிதைவரிகள்

K.s.s.Rajh said...

நன்றி சகோதரி

ஆமினா said...

ரொம்ப பீல் பண்ணி எழுதுயிருக்கீங்க போல....

காதல் தோல்விபட்ட அடுத்த நொடியே ஒருவன் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது

வாழ்த்துகள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails