Saturday, November 19, 2011

மஞ்சனத்து மரத்துகட்ட மைய வைச்சு மயக்கிப்புட்ட(ஒரு காதல் கடிதம்)


நான் சில பதிவுகளில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதல்களை சாடியுள்ளதை படித்திருப்பீர்கள்.என் நண்பன் ஒருவன் கேட்டான் நீ இப்படி காதலை சாடுகின்றாய் உனக்கு காதலைப்பற்றி என்ன தெரியும்.ஓரு காதல் கடிதம் எழுத முடியுமா?என்று சவால் விட்டான்
நமக்கு சவாலை சந்திப்பது ரொம்ம புடிக்கும் என்பதால் சரி காதல் கடிதம் எழுதலாம் என்று களத்தில் இறங்கினேன்.....இரவிரவாக சிந்தித்தும் கடிதம் எழுத வரவேயில்லை எனவே ஆனந்தம் படத்தில் மளிகைக்கடைக்காரரிடம் காதல் கவிதை எழுத சொல்லும் போது அவர் மளிகை கடையில் உள்ள பொருற்களை வைத்து கவிதை எழுதுவார் தானே

அன்பே நீ ஒரு மல்லி உன் அம்மாதான் எனக்கு வில்லி
நீ ஒரு பருப்பு என் மேல காட்டாத வெறுப்பு
எனவே நானும் இப்படி எதாவது கடிதம் எழுதி சவாலில் ஜெயிப்போம் என்று நினைத்து எழுதத்தொடங்கினேன் சரி அவர் மளிகைக்கடையை வைத்து கவிதை எழுதினார் நான் நம்ம பதிவுலகத்தை வைத்து கடிதம்எழுதுகின்றேன்

முஸ்கி-பதிவர்கள் இல்லாத வாசகர்களே மன்னிக்கவேண்டும் இதில் நம்ம பதிவுலக நண்பர்களை வைத்து ஒரு மொக்கை போட நினைத்தேன்.எனவே நீங்கள் ஒன்னும் புரியாட்டி கோவிக்கவேண்டாம் அடுத்து ஒரு சிறந்த பதிவைத்தருகின்றேன்.

முஸ்கி-இது முழுதும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமாவது புண்பட்டது என்று சம்மந்தபப்ட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்.

அன்புள்ள
மானே தேனே மாம்பழமே,செல்லமே...
மொய்க்கு மொய் என்று பதிவுலக அரசியல் தெரியாத புதிய பதிவர் போல என் மன உன்னை நாடிவந்தது.நீயோ பதிவை படித்தும் ஓட்டு,கமண்ட் போடாத 
பதிவர்கள் போல என் பார்வையை கண்டும் காணாது நின்றாய்


எப்படியும் பிரபல பதிவராக வேண்டும் நினைக்கும் புதிய பதிவர் போல உன்மனதில் இடம் பிடிக்க துடித்தேன் ஓரு நாள் புன்னகையை வீசி சென்றாய் என் தளத்தில் முதலாவது கமண்ட் போட்டு அதற்கு பிறகு என் தளத்திற்கு வராமல் விட்ட பதிவர் போல.உன் புன்னகையும் ஆகிவிடுமோ என்று நினைத்தேன்

ஆனாலும் நீ என்னை ஏமாற்றவில்லை என் தளத்தை நீங்களும் வாசிக்கலாம் என்ற பகுதியில் தன் தளத்தில் இணைத்து என் எழுத்திற்கு முதன் முதலில்அங்கிகாரம் வழங்கிய பாலாவின் பக்கங்கள் பாலா அண்ணன் போல நீயும் அங்கிகாரம் தந்தாய் புன்னகையால்.
பதிவைஎழுதிவிட்டுஅதை பிரபலபடுத்த வழிதெரியாமல் நான் திண்டாடிய போது அலோசனை தரவந்த நிரூபன் பாஸ் போல உன் மேலான காதலை வெளிக்காட்டிவிட்டு தவித்த போது எனக்கு யாரும் உதவிக்கு வரவில்லை

என் எழுத்துக்களை தன் காத்திரமான கருத்துக்கள் மூலம்ஊக்குவிக்கும் தனிமரம் அண்ணன் போல தனியாக தவித்த என் காதலுக்கு 
நீ வீசிய புன்னகை துணையானது காதலுடன் தவித்தேன் .உன் அப்பனை சந்தக்க துடித்தேன் பதிவுலக காட்டான் மாமா போல பாசமாக உன் அப்பனும் இருப்பான் என்று நினைத்தேன்

உன் அப்பனோ பதிவர்களின் பதிவுகளை காப்பி அடித்துவிட்டுபதிவர்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இணையதளங்கள் போல என்னை பார்த்துவிட்டும் பார்க்காதது போல சென்றான் எவண்டி உன்ன பெத்தான் கையில் கிடைத்தால் செத்தான் என்று பாட நான் என்ன சிம்புவா இல்லையே.


மாப்ளை பகிர்வுக்கு நன்றி என்று பாசமுடன் சொல்லும் விக்கி அண்ணன் போல.உன்னை நான் பார்த்துக்கு..பார்வைக்கு நன்றி என்றுசொல்லமாட்டாயா என்று ஏங்கினேன் ஆனால் நீயோ தன் பதிவுகளில் சிபி அண்ணனை கலாய்க்கும் நாஞ்சில் மனோ அண்ணன் போல என் காதலையும் கலாய்த்தாய்

ஆனாலும் ஒரு நாள் உன்னுடன் நேரடியாக பேசவந்தேன் அப்போது அஞ்சலியின் வயது 20+++++++++ என்று நான் சொன்னதும் முறைத்த செங்கோவி அண்ணன் போல நீ முறைத்தாய். பதிவில் நான் எதாவது கேள்வி கேட்டு பதிவு போட்டால் முதல் ஆளாக வந்து பதில் சொல்லி என்னை ஊக்குவிக்கும் கவிதை வீதி செளந்தர் அண்ணன் மனசு ஏன் உனக்கு வரவில்லை.காரணம் என் காதல் உனக்கு புரியவில்லை.நானும் ரைட்டு என்று கருன் அண்ணன் ஸ்டைலில் சொல்லிவிட்டு வந்தேன்

பதிவு எழுதுவேன் யாருக்கும் ஓட்டும் கமண்டும் போடமாட்டேன்
என்று அடம்பிடிக்கும் சில பதிவர்களை போல நானும் என்றும் நீ காதலித்தாலும் இல்லை என்றாலும் நான் காதலிப்பேன்.ஆனாலும் மனதுக்குள் ஓரு பயம் தேவயாணியை காதலித்த துஷியின் காதல் போல என் காதல் கனவாகப்போய்விடுமோ அதற்கு முன் நானே மைந்தன் சிவா ஹன்சிகாவை ஓட்டவடைக்கு விட்டுக்கொடுத்த மாதிரி நானும் யாருக்கும் விட்டுக்கொடுக்கதாயார்.ஏன் என்றால் காட்டான் மாமாவின் மகளின் சுயம்பரத்தில் கலந்து கொள்ள போகின்றேன் அங்கே அவரது மருமகன்கள் லிஸ்டில் நானும் இருக்கின்றேன்....ஹன்சிகாவின் பாவாடையை கொடுத்து மதுரனை ஹன்சிகாவின் போட்டியில் இருந்து விலக்கிய ஜடியாமணியின் ஜடியாவை பின்பற்றி நீயும் என்னை உன்னிடம் இருந்து விலக்க நினைத்தாய் அதற்கு முன் பதிவுலகில் பல இடங்களில் கருத்துக்களால் மோதுபட்டாலும் நட்பில் விரிசல் வராத கந்தசாமி உடனான நட்பு போல என் காதலில் விரிசல் வராமல் நானே விலகிக்கொள்கின்றேன்.

நன்றி
காதலுடன்
காதலன்


முஸ்கி-அண்ணன்களே உங்களை கலாய்க்க வேண்டும் என்று இந்தப்பதிவை எழுதவில்லை மொக்கை போட மேட்டர் ஒன்றும் சிக்கவில்லை எனவே அண்ணன்கள் என்ற உரிமையில் எழுதினேன் தவறு எனின் தயவு கூர்ந்து மன்னிக்கவும் .நீங்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகளை நீக்கிவிடுகின்றேன்.
ஹி.ஹி.ஹி.ஹி...........


படங்கள்-கூகுள்

Post Comment

67 comments:

Mohamed Faaique said...

பதிவர்களோட உங்களுக்கு என்னங்க இவ்ளோ கோவம்??? செம வாங்கு வாங்கி இருக்கீங்க...????

(ஹி..ஹி... பிரச்சனைய இருவாக்குரது மட்டும்தான் நம்ம வேல.. வரட்டா.....)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
பதிவர்களோட உங்களுக்கு என்னங்க இவ்ளோ கோவம்??? செம வாங்கு வாங்கி இருக்கீங்க...????

(ஹி..ஹி... பிரச்சனைய இருவாக்குரது மட்டும்தான் நம்ம வேல.. வரட்டா.....////

பாஸ் நீங்க என்ன இப்படி கோத்துவிடுறீங்க....ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
ரைட்டு///

நன்றி பாஸ்

தனிமரம் said...

பதிவாளர்களை வைத்து ஒரு காதல் கதகளியே ஆடியிருக்கின்றீங்க பாஸ்! ஆமா சொல்லாத காதல் நம்ம துசியா! ஹீ ஹீ

தனிமரம் said...

மைந்தன் சிவா விட்டுக் கொடுத்துவிட்டு விசில் அடிக்க பதிவுலகையே விட்டு ஓடிவிட்டார் ஓடிப்போன காதலி மாதிரி!ஹீ ஹீ

தனிமரம் said...

சி.பி யை நாரடித்தாலும் மனோவின் நட்பு மிக இறுக்கம் இருவருக்கும். இந்தக்காதல் காலமெல்லாம் காதல் வாழம் போல மனோவும் சி.பியும் !

தனிமரம் said...

சி.பி யை நாரடித்தாலும் மனோவின் நட்பு மிக இறுக்கம் இருவருக்கும். இந்தக்காதல் காலமெல்லாம் காதல் வாழம் போல மனோவும் சி.பியும் !

தனிமரம் said...

கந்தசாமித் தாத்தாவுடன் மோதுவது கருத்துக்காக விலகுவது காதலே நிம்மதி என்பதற்காக என்று சொல்லலாம் என்றாலும் பாவம் இந்தக் கால காதல் ஐடியாமணிக்குப் போடனும் ஒரு காதல் fm ஒரு பாடல் கவிதை வீதியுடன் ஒரு நாளும் இல்லை மோதல் இது நண்பர்கள் காதல் என்று ! 

Unknown said...

மாப்ள சூப்பருய்யா....ஜாலிலோ ஜிம்கானா!

தனிமரம் said...

வித்தியாசமான சிந்தனையில் சிரிக்கவும் சிந்திக்கவும்(பதிவு எழுதுவேன் ஓட்டும் கமெண்டும் போடமாட்டன்) தந்திருக்கின்றது இந்தப்பதிவு . வாழ்த்துக்கள் சகோ!

முற்றும் அறிந்த அதிரா said...

அழகான கடிதம்.... காதலியும் புளொக்கும் ஒன்றென ஒப்பிட்டுவிட்டீங்கள்?:)))...

K.s.s.Rajh said...

@தனிமரம்
@
பதிவாளர்களை வைத்து ஒரு காதல் கதகளியே ஆடியிருக்கின்றீங்க பாஸ்! ஆமா சொல்லாத காதல் நம்ம துசியா! ஹீ ஹீ/////ஏன்ணே அவரே ராஜகுமாரன் மேல் கடுப்பா இருக்கார் நீங்க வேற கோத்துவிடுறீங்க..ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மைந்தன் சிவா விட்டுக் கொடுத்துவிட்டு விசில் அடிக்க பதிவுலகையே விட்டு ஓடிவிட்டார் ஓடிப்போன காதலி மாதிரி!ஹீ ஹீ

/////

ஆமா மைந்து இப்ப வேற ஒரு பிகரில் பிசியாக இருக்கார் அதான் அமலா பால் கூட

K.s.s.Rajh said...

@
@தனிமரம் கூறியது...
சி.பி யை நாரடித்தாலும் மனோவின் நட்பு மிக இறுக்கம் இருவருக்கும். இந்தக்காதல் காலமெல்லாம் காதல் வாழம் போல மனோவும் சி.பியும்////

ஆமா பாஸ் சி.பி அண்ணும் மனோ அண்ணன் எவ்வளவு கலாய்தாலும் தாங்கிறார் ரொம்பவும் ஆழமான நட்பு

K.s.s.Rajh said...

@
@தனிமரம் கூறியது...
சி.பி யை நாரடித்தாலும் மனோவின் நட்பு மிக இறுக்கம் இருவருக்கும். இந்தக்காதல் காலமெல்லாம் காதல் வாழம் போல மனோவும் சி.பியும்////

ஆமா பாஸ் சி.பி அண்ணும் மனோ அண்ணன் எவ்வளவு கலாய்தாலும் தாங்கிறார் ரொம்பவும் ஆழமான நட்பு

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கந்தசாமித் தாத்தாவுடன் மோதுவது கருத்துக்காக விலகுவது காதலே நிம்மதி என்பதற்காக என்று சொல்லலாம் என்றாலும் பாவம் இந்தக் கால காதல் ஐடியாமணிக்குப் போடனும் ஒரு காதல் fm ஒரு பாடல் கவிதை வீதியுடன் ஒரு நாளும் இல்லை மோதல் இது நண்பர்கள் காதல் என்று !////

நல்லா அடுக்கு மொழியில் பேசுறீங்க டி.ஆர் படம் பாத்திங்களா....ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
மாப்ள சூப்பருய்யா....ஜாலிலோ ஜிம்கானா////

வாங்க பாஸ்.....

///ஜாலிலோ ஜிம்கானா///இது என்ன பாஸ் கெட்டவார்தையில் திட்டுறீங்களா.....ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வித்தியாசமான சிந்தனையில் சிரிக்கவும் சிந்திக்கவும்(பதிவு எழுதுவேன் ஓட்டும் கமெண்டும் போடமாட்டன்) தந்திருக்கின்றது இந்தப்பதிவு . வாழ்த்துக்கள் சகோ////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
அழகான கடிதம்.... காதலியும் புளொக்கும் ஒன்றென ஒப்பிட்டுவிட்டீங்கள்?:))).////

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி மேடம்.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்......

ஓசூர் ராஜன் said...

நண்பரின் கற்பனையைப் பார்த்தால், சினிமாவுக்கு கதை எழுதும் ஆசை அடிமனதில் உள்ளதுபோல் தெரியுது!

M.R said...

ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .

த.ம 4

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி, மொக்கை போட ஒன்னும் கிடைக்கலைன்னா அண்ணன்கள் நாங்களாய்யா அவளா ஸாரி அவலா கிடைச்சொம் மெல்லுறதுக்கு, எட்றா எட்றா அந்த வீச்சருவாளை எட்றா வண்டியை....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் கூறியது...
மாப்ள சூப்பருய்யா....ஜாலிலோ ஜிம்கானா!//

இன்னைக்கு சனிகிழமை, நீ மப்புல இருக்குறது தெரியுதுடி....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படவா... எங்கிருக்கான் பாரு...


எனக்கும் ஒரு நகல் எடுத்து கொடு கேட்கலாம்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

20 + தெரியும் அது என்ன

20++++++++++++++

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசங்களே இங்கு பதிவர்களை பிரபலபடுத்துகிறது. இதில் நகைச்சுவைக்காக, கிண்டலடிக்க, கலாய்க்க, மொக்கைப்போட பிரபதிவர்களின் பெயரை பயன்படுத்தும்போது மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை..

ஆனால் அதன் மூலம் அந்த பதிவர்களின் மனதளவில் புண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பதிவை பொருத்த வரை அத்தனைப்பதிவர்களும் சிரித்துவிட்டேச் செல்வார்கள்...


பதிவுக்கு ஒரு வாழ்த்துக்கள்...

ராஜி said...

உங்க மொக்கை நல்லா இருக்கு சகோ. எல்லா பதிவரையும் பழிவாங்கியாச்சா?

K.s.s.Rajh said...

@ஓசூர் ராஜன்
////
நண்பரின் கற்பனையைப் பார்த்தால், சினிமாவுக்கு கதை எழுதும் ஆசை அடிமனதில் உள்ளதுபோல் தெரியுது////

நமக்கு அவ்வளவு பெரிய ஆசை எல்லாம் இல்லை பாஸ்

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .

த.ம-4////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
அடப்பாவி, மொக்கை போட ஒன்னும் கிடைக்கலைன்னா அண்ணன்கள் நாங்களாய்யா அவளா ஸாரி அவலா கிடைச்சொம் மெல்லுறதுக்கு, எட்றா எட்றா அந்த வீச்சருவாளை எட்றா வண்டியை./////

ஹி.ஹி.ஹி.ஹி ஏன்ணே என்ன வண்டி ஆட்டோவா அனுப்பபோறீங்க அவ்........

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
விக்கியுலகம் கூறியது...
மாப்ள சூப்பருய்யா....ஜாலிலோ ஜிம்கானா!//

இன்னைக்கு சனிகிழமை, நீ மப்புல இருக்குறது தெரியுதுடி...////

ஓ அப்ப ஜாலிலோ ஜிம்கானா அதான் அர்தமா?ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
படவா... எங்கிருக்கான் பாரு...


எனக்கும் ஒரு நகல் எடுத்து கொடு கேட்கலாம்..////

ஹி.ஹி.ஹி.ஹி.............

K.s.s.Rajh said...

////
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
20 + தெரியும் அது என்ன

20++++++++++++++////

அது அஞ்சலி வயசு பாஸ்
அட நீங்கவேற கூட 6+ கூட்டிட்டிங்க இதுக்கும் செங்கோவி பாஸ் காண்டாக போறார்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
வித்தியாசங்களே இங்கு பதிவர்களை பிரபலபடுத்துகிறது. இதில் நகைச்சுவைக்காக, கிண்டலடிக்க, கலாய்க்க, மொக்கைப்போட பிரபதிவர்களின் பெயரை பயன்படுத்தும்போது மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை..

ஆனால் அதன் மூலம் அந்த பதிவர்களின் மனதளவில் புண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பதிவை பொருத்த வரை அத்தனைப்பதிவர்களும் சிரித்துவிட்டேச் செல்வார்கள்...


பதிவுக்கு ஒரு வாழ்த்துக்கள்..////

நன்றி பாஸ் சும்மா ஒரு கேட்டை போட்டு வைச்சன் எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
உங்க மொக்கை நல்லா இருக்கு சகோ. எல்லா பதிவரையும் பழிவாங்கியாச்சா?////

ஹா.ஹா.ஹா.ஹா.அப்படி இல்லை சகோ

நன்றி

Anonymous said...

ஹீ ஹீ செம காமெடி... டீ குடிக்க எப்டி பண்ணு ஜோடியோ.. அப்பிடி ஒவ்வொரு பதிவரும் தேவை மச்சான்!(நீங்க ஏன் இந்த ஏர்டெல் பாட்டையும் மாத்தி பதிவர்களுக்காக ஒரு பாட்டு எழுத கூடாது?)

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
பதிவர்கள வைச்சு கலக்கல் காதல் கடிதம் எழுதி இருக்கீங்க.. ஆனா நீ அரசன நம்பி புருசன கைவிட்ட மாதிரி என்ர பொட்டைய நினைச்சு அவள கைவிடுறாய் ஜாக்கிருத..!! ஹி ஹி

Unknown said...

நல்ல நகைச்சுவை!
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

K said...

ஹா ஹா ஹா மச்சான் சார் சார், செம காமெடி பதிவு! ஒவ்வொரு பதிவர்களின் இயல்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அசத்தலாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

K said...

அப்புறம் நான் மதுரனுக்கு, ஹன்சிகாவின் பாவாடை கொடுத்த சம்பவத்தின் 90 ம் நாள் நினைவுதினம் இன்றாகும்! ( இதுக்கெல்லாமா நினைவு தினம் கொண்டாடுவாய்ங்க? )

ஹி ஹி ஹி ஹி பொருத்தமான நாளில், பொருத்தமாக நினைவூட்டியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

ராஜ் உங்க இந்தகாமெடி பதிவுபார்த்துட்டு சக பதிவர்கள் ரசித்து சிரிச்சுகிட்டேதான் போவாங்க.கோவப்படனும்னு நினைச்சாகூட முடியாது.

Anonymous said...

ஹிஹி ரொம்ம நன்னா இருக்கு பாஸு))

Yoga.S. said...

சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

சென்னை பித்தன் said...

இது,இதுதான் ரியல் கலக்கல்!

கோகுல் said...

மச்சி கலக்கிட்டிங்க போங்க,
செம,செம செம

K.s.s.Rajh said...

@மொக்கராசு மாமா
////
ஹீ ஹீ செம காமெடி... டீ குடிக்க எப்டி பண்ணு ஜோடியோ.. அப்பிடி ஒவ்வொரு பதிவரும் தேவை மச்சான்!(நீங்க ஏன் இந்த ஏர்டெல் பாட்டையும் மாத்தி பதிவர்களுக்காக ஒரு பாட்டு எழுத கூடாது?////

நன்றி பாஸ் எனக்கும் இந்த பாட்டின் மேல் ஒரு இதுதான் எடுத்து குடுத்திருகீங்க பதிவு போட்டுட்டா போச்சி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி!
பதிவர்கள வைச்சு கலக்கல் காதல் கடிதம் எழுதி இருக்கீங்க.. ஆனா நீ அரசன நம்பி புருசன கைவிட்ட மாதிரி என்ர பொட்டைய நினைச்சு அவள கைவிடுறாய் ஜாக்கிருத..!! ஹி ஹி....///

எல்லாம் ஒரு நம்பிக்கைதான் மாம்ஸ் உங்கள் மகள் இல்லாட்டி இன்னும் ஒன்றை பாக்கிறதுதானே....ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
நல்ல நகைச்சுவை!
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹா ஹா ஹா மச்சான் சார் சார், செம காமெடி பதிவு! ஒவ்வொரு பதிவர்களின் இயல்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அசத்தலாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்////

உங்களைவிடவா மச்சான் சார்.
நன்றி நன்றி

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹா ஹா ஹா மச்சான் சார் சார், செம காமெடி பதிவு! ஒவ்வொரு பதிவர்களின் இயல்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, அசத்தலாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்////

உங்களைவிடவா மச்சான் சார்.
நன்றி நன்றி

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
அப்புறம் நான் மதுரனுக்கு, ஹன்சிகாவின் பாவாடை கொடுத்த சம்பவத்தின் 90 ம் நாள் நினைவுதினம் இன்றாகும்! ( இதுக்கெல்லாமா நினைவு தினம் கொண்டாடுவாய்ங்க? )

ஹி ஹி ஹி ஹி பொருத்தமான நாளில், பொருத்தமாக நினைவூட்டியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!///

என்ன அப்படி கேட்டுபுட்டீங்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் அது

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்////

வணக்கம் ஜயா வாங்க

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ராஜ் உங்க இந்தகாமெடி பதிவுபார்த்துட்டு சக பதிவர்கள் ரசித்து சிரிச்சுகிட்டேதான் போவாங்க.கோவப்படனும்னு நினைச்சாகூட முடியாது////

சும்மா ஒரு கேட்டை போட்டன் மேடம் இல்லை என்றால் நம்ம அண்ணன்கள் குழம்ப மாட்டாங்க ஆனால் வேற யாரும் குழம்பிட கூடாது இல்லையா அதான் ஓரு கேட்டை போட்டு வைச்சேன்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ஹிஹி ரொம்ம நன்னா இருக்கு பாஸு)///

வாங்க கந்து நீண்ட நாளுக்குப்பிறகு குழந்தை குட்டி எல்லாம் நலமா?

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
இது,இதுதான் ரியல் கலக்கல்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
மச்சி கலக்கிட்டிங்க போங்க,
செம,செம செம////

நன்றி பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவு எழுத மேட்டர் கிடைக்கலையா எடு அருவாள, எல்லா பதிவர்கள் தலையையும் சீவு.... பாஸ் நகைச்சுவையாய் இருந்தது உங்கள் பதிவு. இன்னும் கலக்குங்க....


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

சம்பத்குமார் said...

கலக்குங்க நண்பரே..

சுதா SJ said...

ஆஹா இப்படி எல்லா பதிவரினதும் மடியில் கையை வச்சுட்டியே ராஜ்.. அவ்வ்

சுதா SJ said...

செம ஜோக்கு குவியல் நண்பா...
ரெம்ப சிரிச்சேன்.... ரியலி எஞ்சாய்

K.s.s.Rajh said...

@தமிழ்வாசி - Prakash
////
தமிழ்வாசி - Prakash கூறியது...
பதிவு எழுத மேட்டர் கிடைக்கலையா எடு அருவாள, எல்லா பதிவர்கள் தலையையும் சீவு.... பாஸ் நகைச்சுவையாய் இருந்தது உங்கள் பதிவு. இன்னும் கலக்குங்க.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சம்பத் குமார் கூறியது...
கலக்குங்க நண்பரே////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ஆஹா இப்படி எல்லா பதிவரினதும் மடியில் கையை வச்சுட்டியே ராஜ்.. அவ்.அவ்////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி....................

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
செம ஜோக்கு குவியல் நண்பா...
ரெம்ப சிரிச்சேன்.... ரியலி எஞ்சாய்////

நன்றி மச்சி

இராஜராஜேஸ்வரி said...

பதிவுலகை வைத்து
பகிர்ந்த அருமையான
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

”தளிர் சுரேஷ்” said...

பதிவர்களை வைத்து ஒரு காதல்கடிதம்! அருமை! சூப்பர் மொக்கை!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails