Thursday, November 24, 2011

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் என்னைப்பார்த்து பாடிய பொண்ணு

நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒரு பெண்காதலித்தாள் ஆனால் அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அவளைப்பற்றிய பதிவுதான் இது. ஏற்கனவே இந்தப்பதிவை என் தளத்தில் எழுதியுள்ளேன்.நான் புதிய பதிவராக இருந்த போது எழுதியது.அப்போது எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாக போடலாம் என்று எண்ணியபோது இந்தப்பதிவு கண்ணில் பட்டது எனவே இதை மீள் பதிவாகத்தருகின்றேன்...

எனக்கு முதல் காதல் என் பாடசாலைக்காலத்தில் வந்தது.அதற்கு பிறகு காதல் என்பதை பற்றி நான் சிந்திப்பது இல்லை சொல்லப்போனால் காதல் என்ற சொல்லே எனக்கு மறந்து விட்டது எனலாம்.இந்த காலப்பகுதியில் என்னை ஒரு பெண்காதலித்தாள் (அவளுக்கு அது முதல் காதலாக இருந்திருக்களாம்). அவளைப்பற்றிய பதிவு இது.அவளது பெயர் தனுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நான் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி அழகான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய வாழ்க்கை.

நகரத்து வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம் குறிப்பாக கிணற்றில் குளிப்பது என்ற ஒன்று நம்மிடையே மறந்து போகின்ற விடயமாக மாறியுள்ளது .என்னதான் குளியல் அறைகளில் குளித்தாலும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா.நீச்சல் தாடாகத்தில் நீந்துகின்ற போது ஊரில்ஆற்றில் நீந்துவதற்கு ஈடாகாது.மாலை வேளைகளில் அயலவர்களுடன் மரநிழலில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருப்பது.இப்படி எத்தனை சின்னச்சின்ன சந்தோசங்களை நாம் நகரவாழ்க்கையில் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்


எனது சித்தப்பாவின் வீட்டிற்கு போன முதல் நாள் தனுஜா எனக்கு அறிமுகமானாள்.எனது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்)நண்பருடைய மனைவியின் தங்கைதான் தனுஜா அவர்கள் குடும்பத்துடன் எனது சித்தப்பாவின் காணியில் இருந்த இன்னும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள்.பெருப்பாலும் தனுஜாவின் குடுப்பம் சித்தப்பாவீட்டில் தான் இருப்பார்கள் சிலவேளை எல்லோறும் ஒன்றாகவே சமைத்து உண்பார்கள்.அவள் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் நான் பார்த்தால் வேறுபக்கம் பார்ப்பது போல பாவனை செய்வாள்.எனக்கு ஒரு சந்தேகம் இவள் ஏன் என்னைப் பார்க்கின்றாள். 

தனுஜா பேரழகி என்று சொல்ல முடியாவிடாலும் ஒருமுறை பார்த்தாள் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகு.ஒரு நாள் என்னிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் .நான் ராஜ் என்றேன் அதற்கு அவள் முழுப்பெயர் என்னவென்றாள் நான் ராஜ்தான் என்று சொன்னேன்(ராஜ் என்றே எல்லோறும் அழைப்பதால் எனது முழுப்பெயர் எனக்கே மறந்து போச்சு ஹி.ஹி.ஹி.ஹி)அடுத்த நாள் ஒரு பேப்பரை என்னிடம் தந்து(சுடர் ஒளி வார இதழ் என நினைக்கின்றேன்)வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.நான் அதை வாங்கிப்பார்த்த போது அதில் I Love you  என்று எழுதப்பட்டிருந்தது.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பேப்பரை தூக்கி போடுவிட்டு நான் பேசாமல் போய்விட்டேன்.அடுத்தநாள் என்னிடம் தயங்கி தயங்கி வந்தாள் ராஜ் நான் நேத்து தந்ததுக்கு என்ன பதில் என்றாள்.உடனே நான் என்ன சொல்லுறது என்னை உங்களுக்கு ஒரு கிழமையாகத்தான் தெரியும். அதற்குள் காதல் என்றாள் என்னால் நம்பமுடியவில்லை என்னால் உங்களை காதலிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டேன்.அவளைப்பார்க்க பாவமாக இருந்தாலும் பொதுவாக எனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவது என் பழக்கம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை பேசாமல் போய்விட்டாள்.அதற்கு பிறகு சித்தப்பாவீட்டிற்கு வருவாள்.நான் அவள் வந்தாள் வெளியில் போய்விடுவேன். 

பிறகு சித்தியை மாமி(அத்தைஎன்றும்) அண்ணியை அக்கா என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.இது பற்றி ஒரு நாள் அண்ணி என்னிடம் கேட்டார் என்ன ராஜ் தனுஜா இப்படி கூப்பிடுறாள் என்றார் .அண்ணி என்னிடம் அப்படி கேட்டதற்கு காரணம் உள்ளது எனது சித்தப்பாவின் பிள்ளைகள் எல்லோறும் திருமணம் செய்தும் தொழில் நிமித்தமாகவும்  வேறு இடத்தில் இருக்கிறார்கள்.ஒரு அண்ணா மட்டுமே சித்தப்பாவுடன் இருக்கிறார் அவரும் திருமணம் முடித்துவிட்டார்.அண்ணி அப்படி கேட்டதும் நான் சொன்னேன் கண்ணன் அண்ணாவை(சித்தப்பாவின் மகன்) இரண்டாவது திருமணம் செய்யப்போறாள் போல உங்கள் பதவி காலி என்றேன்.அதற்கு அண்ணி ராஜ் ஜோக் அடிக்காமல் சொல்லு என்றார்.

பிறகு நான் அண்ணியிடம் சொன்னேன் என்னை லவ் பன்னுவதாக தனுஜா சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி பேசி(திட்டி)அனுப்பிவிட்டேன் .அதுதான் அவள் சித்தியை மாமி என்றும் உங்களை அக்கா என்றும் கூப்பிடுறாள் போல என்றேன்.அண்ணி சிரித்துக்கொண்டே போய்விடார். அதற்கு பிறகு அண்ணா,அண்ணி,சித்தி சித்தப்பா எல்லோறுக்கும் என்னை கலாய்ப்பதுதான் வேலை.

இதற்கு இடையில் வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த தனுஜாவின் அண்ணன் வந்து இருந்தான்.அவன் என்னுடன் நல்ல நண்பனாகிவிட்டான். ஆனால் தனுஜா என்னை விடுவதாக இல்லை கவிதைகள் எழுதுவதும் என்னால் உங்களை மறக்க முடியாது ராஜ் அப்படி இப்படினு என்னிடம் சொல்லுவாள் அவளை பார்க்க பாவமாக இருக்கும். 

சித்தப்பாவீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பன் (நான் சித்தப்பாவீட்டிற்கு போயிருந்த போது நல்ல நண்பனாகி விட்டான்).தனுஜா குடும்பம் சித்தப்பாவின் காணியில் வசிக்க வந்ததில் இருந்து தனுஜாவை ஒருதலையாக காதலித்து வருகின்றானாம். அவனுக்கு தனுஜா என்னைகாதலிப்பது தெரிந்ததும் என்னிடம் கேட்டான். ராஜ் தனுஜாவை நான் லவ் பண்ணுறன் அவள் உங்களை லவ் பன்னுகின்றாள் என்றான் அதற்கு நான் சொன்னேன் டேய் அவள்தாண்டா என்னை லவ் பண்ணுறாள் நான் லவ் பண்ணலை அத்துடன் நான் சித்தப்பாவீட்ட வந்திருக்கேன் பிறகு எனது ஊருக்கு போய்விடுவன்.நீதான் இங்க இருக்கிற எனவே நீ தாராளமாக லவ் பண்ணு என்றேன். 

அனால் தனுஜா அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை.சொல்லப்போனால் தனுஜா என்னை விடுகிறமாதிரி இல்லை. அப்போது நான் நினைத்துக்கொண்டேன் பொண்ணுங்க நாங்களாக தேடிப்போய் காதலித்தாள் பந்தா பன்னுவார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவனை பிடித்து விட்டால் எவ்வளவு இறங்கி வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டேன்
யாரடி நீ மோகினி படத்தில் தனுசை ஓரு தலையாக காதலிக்கும் சரன்யா மோகனிடம் இருந்து தப்பிக்க தனுஸ் ஓடுவாரே அப்படி இருந்தது என் நிலமை




 தனுஜா ஒரு நாள் என்னிடம் கேட்டாள் ஏன் ராஜ் என்னை லவ் பண்ண மாட்டேன் என்கிறீங்க சொல்லுங்க என்றாள்.நான் உடனே பெரிய ஹீரோ கணக்கா அப்படி இல்லை தனுஜா எனக்கு காதல் பிடிக்காது அப்படி இப்படினு அவுத்து விட்டேன்.அதற்கு அவள் என்றைக்காவது நீங்கள் என்னை லவ் பண்ணுவீங்க என்றாள்.நான் சொன்னேன் உங்களை ஒருத்தன் லவ் பண்ணுறான் தானே(பக்கத்து வீட்டு நண்பன்) ஏன் அவனை நீங்க லவ் பண்ணலாம்தானே என்றேன்.அதற்கு அவள் காதல் எப்ப யார்மேல வரும் என்று சொல்லிட்டு வருவதில்லை என்னை தன்னால் மறக்க முடியாது என்று சொன்னாள் (நிறைய சினிமாப்படம் பார்ப்பாள் போல).

தனுஜாவின் காதலை நான் ஏற்றுக்கொள்ளாதற்கு பிரதான காரணம் அப்போது காதல் பற்றி சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை(இப்பவும் அப்படித்தான்) அதைவிட எனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதலின் வலி மனதில் இருந்ததால்(அப்போது இருந்தது இப்ப இல்லை)



மற்றது அவள் தனது காதலை சொன்ன போது அவளது அண்ணனை எனக்கு தெரிந்திருக்காவிட்டாலும் பிறகு நல்ல நண்பன் ஆகிவிட்டான் இந்த உலகில் எனக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னால் முதலில் நான் கூறுவது நண்பர்களின் தங்கச்சியை(சகோதரி) காதலிப்பது இப்படி பட்டவர்களை எனக்கு பிடிக்காது.எனவே தனுஜாவின் காதலை ஏற்றுக்கொள்ளாதற்கு இதுவும் ஒருகாரணம்.



மற்றது தனுஜாவை ஒருதலையாக காதலித்த நண்பனின் காதல் ஏன் என்றாள் ஒரு தலைக்காதலின் வலி எனக்கு நன்றாக தெரியும்.

இப்படி சில காரணங்களால் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை


ஆனாலும் அவளை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.பிறகு நான் சித்தப்பா வீட்டில் இருந்து வரும் போது அவளிடம் போய்ட்டு வாறன் என்று சொன்ன போது அவள் அழுது விட்டாள்.எப்பவும் உங்களை என்னால் மறக்க முடியாது ராஜ் என்றாள்.கடைசிவரை அவளது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு நான் சித்தப்பாவின் வீட்டில் இருந்து வந்து விட்டேன்.நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலைகளால் இப்போது சித்தி ,சித்தப்பா,அண்ணா அண்ணி எல்லோறும் வேற ஊரில் வசிக்கின்றார்கள். இப்ப தனுஜாவின் குடுப்பம் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மீள் பதிவு
படங்களில் இருப்பது-தூத்துக்குடி,மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்த கருவாப் பையா கருவாப் பையா பாட்டு புகழ் நடிகை கார்த்திகா
படங்கள்-கூகுள்

************************************************************************************************************
தவறுக்கு வருந்துகின்றேன்-
மன்னிக்கவேண்டும் நண்பர்களே நான் முன்பு
எழுதிவெளியிட்ட என் 100வது பதிவான. சச்சின், கலீஸ் பிரட்மனுடன் ஒப்பிடலாமா?

என்ற பதிவு.இன்று மீண்டும் பல நண்பர்களின் டாஷ்போட்டில் தோன்றியதால் பலர் அதற்கு கமண்ட் போட்டு கேட்டு இருந்தார்கள்..



இன்று என் தளத்தை எடிட்டிங் செய்யும் போது ரீட் மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்டிங் செய்யும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதனால்தான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் அந்தப்பதிவு மீண்டும் தோன்றியிருக்கு என்று நினைக்கின்றேன் தவறுக்கு வருந்துகின்றேன் நண்பர்களே.....

தவறுதலாக மீண்டும் அந்தப்பதிவு பப்ளிஸ் ஆனதுக்கு மன்னிக்கவும்

************************************************************************************************************




Post Comment

34 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் இதயம்

பால கணேஷ் said...

நண்பனுக்கு தன் தங்கையை மணம் செய்வித்து மகிழ்ந்த நண்பர்கள் உண்டு ராஜ். (பழகியதால், அவன் கேரக்டர் முழுமையாகத் தெரியும் என்பதால்) உங்கள் மனம் ஏற்காததற்கு அது காரணமல்ல. முதல் காதலின் வடு போகாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்று நினைத்து பார்க்க இனிய நிகழ்வாக இருந்தாலும் அன்று வலியுடன் இருந்திருக்கும் என்று புரிகிறது. பகிர்வுக்கு நன்றி ராஜ்.

அம்பலத்தார் said...

ஐயையோ அனுஜா ஒருதலை ராகம் பாடிட்டாங்களா?

அம்பலத்தார் said...

ஐயா எனக்கொரு டவுட்டு அவங்களுக்கு தாடி வளர்க்கமுடியாதே. சோகத்தை எப்படி வெளிக்காட்டினாங்க

Unknown said...

அருமையான பதிவு இப்போ அந்த பொண்ணு எங்கேயோ? போய் தேடி கண்டுபிடியுங்க பாஸ் ஆரம்பத்தில் அனைத்து பதிவும் வாசித்திருந்தேன் எங்கே இதை தவறவிட்டேனா தெரியவில்லை.

Anonymous said...

நீங்கள் எடுத்த முடிவு சரிதான் ................

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
நண்பனுக்கு தன் தங்கையை மணம் செய்வித்து மகிழ்ந்த நண்பர்கள் உண்டு ராஜ். (பழகியதால், அவன் கேரக்டர் முழுமையாகத் தெரியும் என்பதால்) உங்கள் மனம் ஏற்காததற்கு அது காரணமல்ல. முதல் காதலின் வடு போகாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்று நினைத்து பார்க்க இனிய நிகழ்வாக இருந்தாலும் அன்று வலியுடன் இருந்திருக்கும் என்று புரிகிறது. பகிர்வுக்கு நன்றி ராஜ்////

நீங்கள் சொல்வது சரிதான் பாஸ் பலர் சந்தோசமாக இருக்கின்றார்கள் தான் ஆனால் எனக்கு ஏன்னோ இது பிடிக்கவில்லை சின்ன வயதில் இருந்தே அதிகமாக நான் பெண்சகோதரங்கள் உள்ள நண்பர்கள் வீட்டில் எல்லாம் பழகுகின்றவன் அவர்களை எல்லாம் சகோதரிகளாகத்தான் நினைக்கத்தோன்றும்....

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா நியாபகம் வருதே நியாபகம் வருதே பாட்டை பாடுங்க பார்ப்போம் ஹி ஹி...

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ஐயையோ அனுஜா ஒருதலை ராகம் பாடிட்டாங்களா?/////

அம்பலத்தார் நான் தனுஜா என்று குறிப்பிட்டுள்ளேன் நீங்க அனுஜா என்கிறீங்க பாக்கிறவங்க இதுவேற ஒன்னு என்று நினைக்கப்போறாங்க....ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ஐயா எனக்கொரு டவுட்டு அவங்களுக்கு தாடி வளர்க்கமுடியாதே. சோகத்தை எப்படி வெளிக்காட்டினாங்க
/////

அவங்க முகங்களில் தெரியும் சோகம் பார்க்கவே பாவமாக இருக்கும்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
அருமையான பதிவு இப்போ அந்த பொண்ணு எங்கேயோ? போய் தேடி கண்டுபிடியுங்க பாஸ் ஆரம்பத்தில் அனைத்து பதிவும் வாசித்திருந்தேன் எங்கே இதை தவறவிட்டேனா தெரியவில்லை////

ஹி.ஹி.ஹி.ஹி.அந்தப்பொண்ணு இப்ப எங்க இருக்கோ யாருக்குத்தெரியும்..

இது நான் பதிவெழுத வந்த புதிதில் நாலாவதோ ஜந்தாவது பதிவாக எழுதினது பாஸ் அப்ப தலைப்பு வேற குடுத்திருந்தேன்...

K.s.s.Rajh said...

@
எனக்கு பிடித்தவை கூறியது...
நீங்கள் எடுத்த முடிவு சரிதான் ..............////

நன்றி பாஸ் உங்கள் தளத்திற்கு கண்டிபாக வருகின்றேன்

Unknown said...

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அன்பரே! அது புனிதமானது!
பதிவு நன்று!

த ம ஓ 5

புலவர் சா இராமாநுசம்

Mohamed Faaique said...

பாஸ்... உண்மைய சொல்லுங்க.. பிகரு நல்ல இருந்திருக்காது,... அப்டிதானே.... ஹி..ஹீ

Anonymous said...

நீங்கள் எடுத்த முடிவு சரிதான் ...-:)

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அன்பரே! அது புனிதமானது!
பதிவு நன்று!

த ம ஓ 5

புலவர் சா இராமாநுசம்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@Mohamed Faaique
////பாஸ்... உண்மைய சொல்லுங்க.. பிகரு நல்ல இருந்திருக்காது,... அப்டிதானே.... ஹி..ஹீ/////

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஏன் என்று கேட்குறீங்களா உங்களின் இந்தக்கமண்ட என் தளத்திற்கு வந்த 4000வது கமண்ட்....

ஓரு நடிகையின் படம் போட்டு இருக்கேன் பாருங்க அவங்க மாதிரிதான் கிட்ட தட்ட நீங்களே இப்ப முடிவு பண்ணுங்க...ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
நீங்கள் எடுத்த முடிவு சரிதான் ...-:////

நன்றி பாஸ்

சென்னை பித்தன் said...

மறுத்த காதலாயினும் மறந்த காதல் அல்ல!

ரைட்டர் நட்சத்திரா said...

பாவம் ங்கோ அந்த பொண்ணு

Mathuran said...

யோவ்... நண்பனின் தங்கையை காதலிக்கக்கூடாது என்று யார் சொன்னது. அதில என்ன தவறு இருக்கிறது. ஏனென்றால் அந்த பெண்ணும் உங்களை காதலித்திருக்கிறாள் உங்களுக்கும் அவள் பெண் என்ற எண்ணத்தை தவிர வேறேதும் இல்லை. அப்படியிருக்கும்போது காதலிப்பது தவறில்லை

Yoga.S. said...

எல்லோரும் பாராட்டுகிறார்கள், நீங்கள் எடுத்த முடிவு சரி என்று!முதலிலேயே அடிபட்டதால் தான் நீங்கள் உங்களைக் காதலித்த இந்தப் பெண்ணை தவிர்த்திருக்கிறீர்கள்.உண்மையில் பொதுவாகவே சொல்லுவார்கள்,நீ காதலிக்கும் பெண்ணை விட,உன்னைக் காதலிக்கும் பெண் உகந்தவள் என்று!ஒரே கிழமையில் உங்களைக் காதலிப்பதாக "அந்தப் பெண்"சொன்னதால்,உங்கள் மனதில் சந்தேகம் குடிபுகுந்து கொண்டதோ?பெண்கள் ஒருகணப் பார்வையிலேயே ஒரு ஆணை எடைபோட்டு விடுவார்கள்,தம்பி!!!!

KANA VARO said...

நம்பலாமா?

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கார்த்தி கேயனி கூறியது...
பாவம் ங்கோ அந்த பொண்ணு////

ஓவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொறு பீலிங்

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
யோவ்... நண்பனின் தங்கையை காதலிக்கக்கூடாது என்று யார் சொன்னது. அதில என்ன தவறு இருக்கிறது. ஏனென்றால் அந்த பெண்ணும் உங்களை காதலித்திருக்கிறாள் உங்களுக்கும் அவள் பெண் என்ற எண்ணத்தை தவிர வேறேதும் இல்லை. அப்படியிருக்கும்போது காதலிப்பது தவறில்லை////

எனக்கு என்மோ இது பிடிப்பது இல்லை பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
எல்லோரும் பாராட்டுகிறார்கள், நீங்கள் எடுத்த முடிவு சரி என்று!முதலிலேயே அடிபட்டதால் தான் நீங்கள் உங்களைக் காதலித்த இந்தப் பெண்ணை தவிர்த்திருக்கிறீர்கள்.உண்மையில் பொதுவாகவே சொல்லுவார்கள்,நீ காதலிக்கும் பெண்ணை விட,உன்னைக் காதலிக்கும் பெண் உகந்தவள் என்று!ஒரே கிழமையில் உங்களைக் காதலிப்பதாக "அந்தப் பெண்"சொன்னதால்,உங்கள் மனதில் சந்தேகம் குடிபுகுந்து கொண்டதோ?பெண்கள் ஒருகணப் பார்வையிலேயே ஒரு ஆணை எடைபோட்டு விடுவார்கள்,தம்பி!/////

ஆம் பாஸ் நீங்கள் சொல்வது சரிதான்

K.s.s.Rajh said...

@KANA VARO

////
நம்பலாமா?
////

நம்பலாம்

பாலா said...

என்ன நண்பரே கல்யாண ஆசை வந்திடுச்சா? பழைய நினைவுகளை மீண்டும் அசை போட ஆரம்பித்திருக்கிறீர்களே?... சரி சரி நடத்துங்க.

மாய உலகம் said...

உங்கள் முடிவு சரியானதே நண்பரே...

Yoga.S. said...

KANA VARO கூறியது...

நம்பலாமா?////நம்புங்கோ!நல்ல பொடியன்,லண்டனில பாருங்கோ!(பொம்பிளை)

அம்பாளடியாள் said...

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள் சகோ .இனி அதிகமா வரதட்சணைக் கொடுமை என்று கவிபாட முடியாது .நாடு
றொம்பவே முன்னேறிக்கொண்டு போகின்றபடியால் .அருமை!..தொடர வாழ்த்துக்கள் சகோ ..

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails